-
20th June 2014, 05:08 PM
#601
Senior Member
Senior Hubber
சரி சரி..எனக்குக் காலில் அடிபட்ட காரணத்தினால் இப்போது மறுபடிஒரு மீள் பதிவு(ஹிஹி..புதிதா எழுதலை எனில் நொண்டிச்சாக்கு)
*
பாட்டுப் பேச வா - 4
*-****************************
ஒன்று என்றால் தனி..இரண்டு என்றால் ஜோடி.. மூன்று அதற்கு மேல் என்றால் என்னவாம்..
*
ஒரு குட்டிக் கவிதை (?!!)
*
நிலவெனும் நல்லாள் மெல்ல
.. நேர்படச் சிரித்து நிற்க
கலகல வென்ற ஓசை
..காதிலே தேனாய்ப் பாய
களவினை மனத்தில் தாங்கி
…கண்களைத் தார கைகள்
வளமுடன் சிமிட்டிப் பார்க்க
…வானிலிக் காட்சி அன்றோ...
*
மூன்றுக்கு மேல் என்றால் கூட்டம் தானே.. ம்ம் கரெக்ட்..கூட்டம் என்ற பாடல்கள் இருக்கிறதா என நினைத்தால் என் மனதில் வந்தது இரண்டு பாடல்கள் தான்.. ஆனால் தேடினால் கூட்டம் கூட்டமாய்க் கொட்டுகிறது பாடல்கள்- திரையிசைப் பாடல்கள்..
*
முதலில் மனதில் வந்தது ஒருஜொள் பாட்டு.. அது சரி ஜொள் என்றால் என்னவாம்..
ஜொள்ளெனப் பட்டது யாதெனில் யாதொன்றும்
வன்மை இலாத செயல்!
அப்படின்னு யாரோ சொல்லியிருக்காங்க..
*
அவன் துறு துறு இளைஞன்.. பின் என்ன…அவன் தொடர்வது இளம் பெண்களை.. என்ன பாடுகிறான்..
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
பாதம் முதல் கூந்தல் வரை
பால் வடியும் கிளிகள் என
பாதம் முதல் கூந்தல் வரை
பால் வடியும் கிளிகள் என
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
*
ம்ம் சிவாஜி ப்ளஸ் ஜெயலலிதா அண்ட் கோ.. நல்ல வேகப் பாடல்..
*
கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆடத் துணிந்து வந்தவரோ.. – இதுவும் மனதில் வந்தது..
*
ஒட்டுக்க எல்லாப் பெண்களையும் பார்த்துப் பாடினால் ஜொள் என்று சொல்லலாம்..ஆனால் தன் காதலியைப் பார்க்கும் போது இந்த ஆளுக்கு என்ன ஆகுது.. நட்சத்திரக் கூட்டம் லாம் வந்து அவன்கிட்ட மொய்க்குதாம்..கொஞ்சம் ஓவர் தான் இல்லை..
*
ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
*
அப்புறம் தேடினால் வைரமுத்து அதிசயப்பட்ட பாடல்..
பூவிற்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..(உண்மை தான்)
*
பாகம் பிரித்துதான் பக்குவமாய் உண்டிடும்
காகம் கருத்தை அறி..
*
கரெக்ட் தானே ..காக்கை என்ன செய்யறது.. ஏதாவது இரை கிடைத்தால் சிலோன் ரேடியோவில் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வது போல தனது அப்பா அம்மா அப்பத்தா சித்தப்பா சித்தி பெரியம்மா மாமி என எல்லாரையும் கூவி அழைத்து ஒற்றுமையாய் உண்ணும் (ம்ம் என் கையில் இருக்கும் சாக்லேட் உங்களுக்குத் தரமாட்டேன் )
*
இந்தப் பாட்டும் அஃதே..
*
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் அந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த ப் பாருங்க அதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்க..
*
அவர் சூப்பர் ஸ்டார்..அவரே இயந்திரமாய் நடிக்கிறார்..ஸோ என்ன பண்ணலாம்.. ரோபோக்கும் கூட்டமாம்..
ஆட்டோ ஆட்டோக்காரா - யே
ஆட்டோமேட்டிக் காரா
கூட்டம் கூட்டம் பாரு - உன்
ஆட்டோக்ராப்க்கா
*
ஏதாவது தப்பு நடந்தா மக்கள் கூட்டமே தண்டிக்கும் என்பது ஜன நாயக மரபு.. இந்தப் பொண்ணு என்ன சொல்றா..
கேட்டு ப் பார் கேட்டுப் பார்
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு பாவை என்னோடு
கேட்டகேள்விக்கு பதிலில்லை என்றால்
கூட்டம் பார்த்து கும்பிடு போடு..
ம்ம் நல்ல பாட்டு..
*
அந்தக்காலத்தில மருதகாசி என்ன சொல்றார்..
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா
குள்ள்நரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா
நல்லாத் தான் இருக்கு.. பட் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் பார்ப்போமே..
*
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது - அதை
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
*
இன்றளவுக்கும் உண்மை தானே..
*
அழகா வானத்தில பறவைகள் சென்ற் கொண்டிருக்கின்றன.. ஹலோ.. அப்படின்னு நாம கீழ இருந்து கூப்பிட்டா அதுக்குக் கேக்குமா என்ன..அதுக்குக் கேக்கும்னு நினைக்கறது தப்புதான்..அப்படி நினைச்சா – அதை எதுக்கு இந்தக் கவிஞர் கம்பேர் பண்ணியிருக்கார்..
*
அழைப்பதை கானல் நீராய், அறியாது பறவை கூட்டம்
தொடுவானம் போலே காதல், அழகான மாய தோற்றம்
*
ஸ்வர்ணலதா பாடின பாட்டு .. நான்கேட்டதில்லை..கேட்கணும்..
*
இன்னொரு அழகான டூயட்ல கொழுக் மொழுக் ஹீரோ கொஞ்சம் ஷார்ட்டான ஹீரோயினோட திடீர்னு ஒரு அழகான பாட்டுபாடிடுவாரு படத்துல..
*
தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி தேகமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன
இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
*
மிலிட்டரில்லருந்து ஹீரோ லிவுல ஊருக்கு வர்ற்ச்சே நடுவில் நண்பர்களோட ஆடறார்..என்ன தான் பெரிய மேஜர் போஸ்ட்ல இருந்தாலும்.. தன்னடக்கம் ஜாஸ்தி.. தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் என்னவா வர்ணிக்கிறார்?
*
குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம்
பல்லே பல்லே பட்டு தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலை தோட்டம்
*
*
பட்டாம் பூச்சிக் கூட்டமும், நண்பர் கூட்டமும் இன்னும் இருபாடல்களில்..
உந்தன் வார்த்தையில் எந்தன் கவிதைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஹோ
உந்தன் கண்களில் எந்தன் பார்வைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஹோ
ஒரு பட்டாம்பூச்சி கூட்டம்
என்னை என்னை மெல்ல மிரட்டுதே மிரட்டுதே
ஒரு சூறாவளிக்காற்று வந்து வந்து குடை பிடிக்குதே
ஓ...ஓ... ஹோ இதுதானோ காதல் கலவரம்
ஓ...ஓ... ஹோ உனக்குள்ளே என்ன நிலவரம்
ஓ...ஓ... ஹோ
*
பானுப்ரியா அகலக் கண்களோட ஆடும் நடனம்..
*
அகப்பட்ட இடம் தொட்டு கோவில் கட்ட நினைக்கிற
நண்பர் கூட்டம் இங்கே
நண்பர் கூட்டம் இங்கே
அட நான்முகன் தலையிலே போட்டது பொய் எழுத்து
நான் ரசிகனின் நெற்றியில் இடுவது கை எழுத்து
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க
நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்
*
கடைசியா (அப்பாடா முடிச்சுட்டான்யா..) ஒரு அழகானபாட்டோட இன்னிக்கு செஷன் கம்ப்ளீட் பண்ணலாமா..
*
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
*
வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
*
கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
*
ம்ம் இப்படி நிறைய பாட்டுக் கூட்டம் இங்கிருந்தாலும் கொஞ்சம் மிஸ் ஆகியிருக்கும்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th June 2014 05:08 PM
# ADS
Circuit advertisement
-
20th June 2014, 05:31 PM
#602
கார்த்திக் சார்
உங்கள் மன்மத லீலைக்கு காத்து இருக்கிறோம்
உலக உரிமை உங்களுக்கு தான்
நிழல் நிஜமாகிறது பற்றி நீங்களும் கொஞ்சம் எழுதுங்க சார்
நிச்சமயாக உங்கள் கருத்துகளில் ஒரு professionalisam இருக்கும்
சின்ன கண்ணன் சார்
எப்படி சார் பாடல்களை கோர்கீர்கள்
அசோகனின்
"சிந்திய முத்துகளை எண்ணவோ எண்ணிய முத்துகளை கோர்கவோ "
நினைவிற்கு வருகிறது
-
20th June 2014, 05:36 PM
#603
Senior Member
Veteran Hubber
'கூட்டம்' பற்றிய இன்னொரு பாட்டு ( தலைவர் படத்தில்)
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
நிலைமாறி ஆடும் இந்த அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர்மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்
'என் மகன்' ராஜா...
Last edited by mr_karthik; 20th June 2014 at 06:29 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th June 2014, 05:42 PM
#604
கார்த்திக் சார்
(அந்த 7 நாட்கள் பாக்யராஜ் பாணியில் )
நான் வாத்து
-
20th June 2014, 06:09 PM
#605
ck சார்
நிழல் நிஜமாகிறது
உழக்கு சுமி கிட்ட கமல் என்ன திட்டு வாங்குவார் (பொடியன் பொடியன் )
கமல் அப்போது தான் வளர்ந்து வந்து கொண்டு இருந்த நேரம்
அந்த படத்தை rerelease இல் ஒரு தடவை 1990 கால கட்டம் என்று நினைக்கிறன் . தியேட்டரில் கமல் fans சுமியை இன்னது தான் இல்லை வாயில் வந்தபடி எல்லாம் போட்டு தாளித்து விட்டார்கள்
-
20th June 2014, 06:41 PM
#606
Senior Member
Veteran Hubber

Originally Posted by
gkrishna
ck சார்
நிழல் நிஜமாகிறது
உழக்கு சுமி கிட்ட கமல் என்ன திட்டு வாங்குவார் (பொடியன் பொடியன் )
கமல் அப்போது தான் வளர்ந்து வந்து கொண்டு இருந்த நேரம்
அந்த படத்தை rerelease இல் ஒரு தடவை 1990 கால கட்டம் என்று நினைக்கிறன் . தியேட்டரில் கமல் fans சுமியை இன்னது தான் இல்லை வாயில் வந்தபடி எல்லாம் போட்டு தாளித்து விட்டார்கள்
அதுதான் ரசிகர்களின் 'நிழலை நிஜமென்று' நம்பும் தவறான மனோபாவம். சுமித்ரா என்ன செய்வார். கேரக்டர் அப்படி.
இவ்வளவு ஏன்?. அந்தமான் காதலியில் இத்துனூண்டு பேபி இந்திராவும், இமயத்தில் தம்மாத்தூண்டு மீராவும் நம் தலைவர் நடிகர்திலகத்தை திட்டுவதை விடவா சுமித்ரா எல்லாம் திட்டி விட்டார்?. (அப்பாடா, நானும் தலைவரை அவ்வப்போது இங்கு நினைவு கூர்கிறேன்)
-
20th June 2014, 06:53 PM
#607
Junior Member
Newbie Hubber
கிருஷ்ணாஜி,
பாலச்சந்தரின் எனது இரு கண்களான நிழல் நிஜமாகிறது,மன்மத லீலை(karthik) இரண்டையும் பறி கொடுத்து சோகத்தில் திளைக்கிறேன்.
என்னால் மறக்க முடியாத இரு படங்கள்.(பிடித்த அல்ல மிக மிக பிடித்த)
மன்மத லீலை- மிட்லண்ட் தியேட்டரில் முதல் நாள் முதல் ஷோ. பின் வரிசையாக கமலா ,மிட்லண்ட் என்று பத்து நாட்கள் தொடர்ச்சியாக பார்த்ததும் இன்றி ,நண்பர்களிடம் ஒரு வரி வசனமோ,ரீ.ரெகார்டிங் கூட விடாமல் இந்த படத்தை பற்றியே ஒரு மாத பேச்சு. தமிழில் வந்ததிலேயே மிக மிக புத்திசாலிதனமான நகைசுவை கிளுகிளுப்பு.
கமலா தியேட்டரில் ஒரு எத்திராஜ் பெண் வந்து டிக்கெட் வேண்ட இருவருக்கும் அருகருகே சீட் கொடுத்த பிளாக் மகராஜனுக்கு நன்றி.முதல் முறை ஒரு அந்நிய பெண்ணுடன் சினிமா அனுபவம்.(பதினாறு வயதினிலே).படத்தின் நடுவே அந்த பெண் காலால் இடிக்க,காலை தள்ளி கொண்டேன். பிறகு இஸ் ...இஸ் என்று சிக்னல் கொடுத்து கையை எடுத்து தன் மேல் வைக்க.... படம் பார்ப்பதில் இடைஞ்சலா என்று கடுப்புதான் வந்தது.கையை உதறி எடுத்து கொண்டேன்.(முதல் அனுபவம் பாருங்கள்.இரண்டு ,மூன்றாவதை எழுதினால் moderator வந்து தூக்கி விடுவார்.
நிழல் நிஜமாகிறது- மாலை காட்சிக்கு நாங்கள் 30 பேர் பிளாக் புக்கிங் . எங்கள் ஏ.சி. டெக் கல்லூரியில் 50% வட இந்தியர்கள் என்பதால் ஹோலி கொண்டாடும் வழக்கம் உண்டு.(1978 என்று நினைவு)அந்த ஹோலி எல்லை மீறி ,ஹாஸ்டல் எதிரே இருந்த எங்கள் கல்லூரி staff quarters சென்று எனக்கு பிடித்த ஒரு பெண்ணுக்கு (பெயர் வேண்டாமே) பொட்டு வைக்கும் உரிமையை எடுத்து அத்து மீற , நிழல்கள் நிஜமாகிறது அன்று இரவு.(குழி குழியா இருக்கே,இட்லி தட்டா, இங்க பாருங்க செருப்பும் இல்லை ஷுவும் இல்லை ஒரு ரெண்டுங்கெட்டான்)மறுநாள் நிலைமை விபரீதம் .வார்டன் விசாரணைக்கு வந்து விட, அந்த பெண் சிவப்பா ,உயரமா,அழகா,தொங்கு மீசை வாலிபனொருவன் என்று போட்டு கொடுத்து விட (பாட்ஷாவில் அடித்தவருக்கு டாக்டர் செர்டிபிகேட் மாதிரி இருக்கில்லே?)பிறகென்ன ,கல்லூரியில் இருந்தா ,விடுதியில் இருந்தா எப்படி தூக்குவது என்று வார்டன் ,டெபுடி இருவரும் சீட்டு குலுக்கி போட்டு ,நல்ல வேளை ,விடுதியில் இருந்து மட்டும் மூன்று மாத வெளியேற்றம். அவதி.
-
20th June 2014, 07:28 PM
#608
Senior Member
Veteran Hubber
டியர் கோபால்,
நிழல் நிஜமாகிறது, மன்மத லீலை இரண்டிலும் கே.வி.மகாதேவனோ, டி.கே.ராமமூர்த்தியோ இல்லையே, அப்படியிருக்க பறிகொடுத்ததில் ஏன் இவ்வளவு சோகம்.
இவ்விரண்டு படங்களைப்பற்றிய தங்கள் சொந்த அனுபவம் வெகு ஜோர். எத்திராஜ் மாணவியைப் பற்றி நீங்கள் சொன்னதை நம்பிட்டோம். தங்கள் பதிவு மன்மத லீலைக்கு நல்ல முன்னோட்டம். நானும் குளுகுளு மிட்லண்டில்தான் பார்த்தேன். வஞ்சனையில்லாமல் ஏ.சி.போடும் நல்ல தியேட்டர். முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தால் கூட உறுத்தாத தியேட்டர். தற்போது பாழடைந்து கிடப்பதாக ராகவேந்தர் சொன்னார்.
எப்போதும் நினைக்கும் பைத்தியக்கார, பேராசை நினைப்பு.., 'திடீர்னு காலசக்கரம் அப்படியே 50 வருடம் பின்னோக்கி சுழன்று, இறந்தவர்கள் எல்லாம் திரும்பவும் வந்தால் என்ன?'
-
20th June 2014, 07:34 PM
#609
Junior Member
Newbie Hubber
50 களின் சிறந்த படங்கள்.(கோபால் விருப்பம்)
1951- ஓர் இரவு,சம்சாரம்,பாதாள பைரவி,மர்ம யோகி.
1952-பராசக்தி.
1953-ஒவ்வையார்.,தேவதாஸ்,மனம் போல் மாங்கல்யம்.
1954-அந்த நாள்,எதிர்பாராதது,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,கூண்டுக்கிளி,தூக்கு தூக்கி,மனோகரா,ரத்த கண்ணீர்,ராஜி என் கண்மணி,மலை கள்ளன்.
1955-மிஸ்ஸியம்மா,முதல் தேதி.
1956-அமர தீபம்,நானே ராஜா,பெண்ணின் பெருமை,ரங்கூன் ராதா,ராஜா ராணி.
1957- புதையல்,மக்களை பெற்ற மகராசி,மாயா பஜார்.
1958-அன்னையின் ஆணை,உத்தம புத்திரன்,சபாஷ் மீனா,வஞ்சி கோட்டை வாலிபன்,நாடோடி மன்னன்.
1959-கல்யாண பரிசு,பாக பிரிவினை,வீர பாண்டிய கட்ட பொம்மன்,சிவகங்கை சீமை.
1960-அடுத்த வீட்டு பெண்,இரும்பு திரை,களத்தூர் கண்ணம்மா,படிக்காத மேதை,தெய்வ பிறவி ,பாதை தெரியுது பார்.
50 களின் மிக சிறந்த பத்து.
1)அந்த நாள்.
2)பராசக்தி.
3)மிஸ்ஸியம்மா.
4)ரங்கூன் ராதா.
5)பாக பிரிவினை.
6)மலை கள்ளன்.
7)தேவதாஸ்.
8)உத்தம புத்திரன்.
9)வீர பாண்டிய கட்ட பொம்மன்.
10)ரத்த கண்ணீர்.
Last edited by Gopal.s; 20th June 2014 at 09:01 PM.
-
20th June 2014, 07:59 PM
#610
Junior Member
Newbie Hubber
1960 களின் சிறந்த படங்கள்(Gopal Choice).
1961 -பாவ மன்னிப்பு,பாச மலர்,பாலும் பழமும்,கப்பலோட்டிய தமிழன்.
1962- அன்னை,ஆலய மணி,காத்திருந்த கண்கள்,சாரதா,சுமைதாங்கி,நெஞ்சில் ஓர் ஆலயம்,பலே பாண்டியா,படித்தால் மட்டும் போதுமா,பாசம்.
1963-இருவர் உள்ளம்,பார் மகளே பார்,பெரிய இடத்து பெண்,மணியோசை,கற்பகம்.
1964-கர்ணன்,ஆண்டவன் கட்டளை,கை கொடுத்த தெய்வம்,புதிய பறவை,கருப்பு பணம்,சர்வர் சுந்தரம்,பொம்மை,காதலிக்க நேரமில்லை,படகோட்டி.
1965-திருவிளையாடல்,எங்க வீட்டு பிள்ளை,ஆயிரத்தில் ஒருவன்,ஆசை முகம்,என்னதான் முடிவு,குழந்தையும் தெய்வமும்,வாழ்க்கை படகு,வெண்ணிற ஆடை,ஹலோ மிஸ்டர் ஜமிந்தார் ,நாணல்,நீர்க்குமிழி,உன்னை போல் ஒருவன்.இதய கமலம்.
1966- செல்வம்,தாயே உனக்காக,மோட்டார் சுந்தரம் பிள்ளை, ராமு,மெட்ராஸ் டு பாண்டிச்சேரி,மேஜர் சந்திரகாந்த்,யாருக்காக அழுதான்,வல்லவன் ஒருவன்.அன்பே வா.
1967-ஊட்டி வரை உறவு,இரு மலர்கள்,திருவருட்செல்வர்,நான்,பட்டணத்தில் பூதம், பாமா விஜயம்,ஆலயம்,சாது மிரண்டால்,கண் கண்ட தெய்வம்,அதே கண்கள்,மாய மோதிரம்.
1968-தில்லானா மோகனாம்பாள்,உயர்ந்த மனிதன்,கலாட்டா கல்யாணம்,குடியிருந்த கோயில்,எதிர் நீச்சல்,குழந்தைக்காக ,சக்கரம்,பணமா பாசமா,ஜீவநாம்சம்.
1969-தெய்வ மகன்,சிவந்த மண்,காவல் தெய்வம்,அடிமை பெண்,வா ராஜா வா,பூவா தலையா,இரு கோடுகள்,சாந்தி நிலையம்,துலாபாரம்,மன்னிப்பு,
1970-பாதுகாப்பு,வியட்நாம் வீடு,எங்கிருந்தோ வந்தாள் ,காவிய தலைவி,காலம் வெல்லும்,நடு இரவில்,நம்ம குழந்தைகள்,மாட்டுகார வேலன்.
மிக சிறந்த முதல் பத்து.
1)தில்லானா மோகனாம்பாள்
2)புதிய பறவை.
3)திருவிளையாடல்,
4)பாச மலர்.
5)நெஞ்சில் ஓர் ஆலயம்
6)காதலிக்க நேரமில்லை.
7)பாமா விஜயம்.
8)அன்பே வா
9)எங்க வீட்டு பிள்ளை.
10)வியட்நாம் வீடு.
Last edited by Gopal.s; 20th June 2014 at 09:02 PM.
Bookmarks