-
21st June 2014, 03:04 PM
#3481
Junior Member
Newbie Hubber
தமிழ் திரையுலகை ஆண்ட இசை திலகம். ஐம்பதுகளின் நால்வர் அணி சுப்பராமன்-ஜி.ராமநாதன்-கே.வீ.மகாதேவன்-ஏ.எம்.ராஜா தமிழ் இசைக்கு புது பாதை போட்ட trend setters .இவர்களை முன்னோடியாக கொண்டே ரெட்டையர் பல புது வித சோதனை முயற்சிகளில் ஈடு பட்டு அற்புத பாடல்களை தந்தனர். திரை இசை திலகம் கே.வீ.மகாதேவன் ,folk -classic இணைவில் புது பாதை போட்டவர்.(ஆரபியின் ஏரி கரை)
கே.வீ.மகாதேவன் அவர்களின் நினைவு நாள்.
Last edited by Gopal.s; 21st June 2014 at 05:17 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st June 2014 03:04 PM
# ADS
Circuit advertisement
-
21st June 2014, 04:50 PM
#3482
Junior Member
Newbie Hubber
திரை இசை திலகம் கே. வீ. மகாதேவன்-
தமிழ்,தெலுங்கு இரண்டு film industries கொண்டாடும் நபர்.
folk (மக்களை பெற்ற மகராசி ,குமுதம்) ,குத்து (வண்ணக்கிளி),classical based folk (முதலாளி), light classical (பாவை விளக்கு) ,ghazal(தொழிலாளி) ,classical (திருவிளையாடல்,சங்கராபரணம்) எல்லாவற்றிற்கும் trend -setter (50 களில் இருந்து).இவரை தன் குரு என்று சொல்லி கொண்டாடினார் மெல்லிசை மன்னர்(அவர் குரு என்று அழைதத மற்றையோர் ராம மூர்த்தி, சுப்பையா நாயுடு,நவஷாத்).
இவருடன் நடிகர் திலகம் பயணம் கூண்டு கிளி(1954 )யில் தொடங்கி, சிம்ம சொப்பனத்தில் (1984)முடிவுற்றது. இவர் மக்களை பெற்ற மகராசி, படிக்காத மேதை,பாவை விளக்கு,எல்லாம் உனக்காக,வளர்பிறை,வடிவுக்கு வளைகாப்பு,இருவர் உள்ளம்,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம,அன்னை இல்லம்,நவராத்திரி(100 வது NT படம்),செல்வம்,பேசும் தெய்வம்,பாலாடை,தில்லானா மோகனாம்பாள்,விளையாட்டு பிள்ளை,வியட்நாம் வீடு,எதிரொலி,அருணோதயம்,குலமா குணமா,வசந்த மாளிகை,எங்கள் தங்க ராஜா,சத்தியம்,உத்தமன்,சிம்ம சொப்பனம் என்ற சமூக படங்களுக்கும் , சம்பூர்ண ராமாயணம்,திருவிளையாடல்,மகாகவி காளிதாஸ்,சரஸ்வதி சபதம்,கந்தன் கருணை,திருவருட்செல்வர்,திருமால் பெருமை,ஹரி சந்திரா என்ற புராண படங்களுக்கும் நடிகர் திலகத்துக்காக கொடுத்துள்ளார்.
1963 , 1966 இரண்டு ஆண்டுகளில் NT க்காக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் ஆவார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st June 2014, 04:51 PM
#3483
Junior Member
Newbie Hubber
கே.வீ.மகாதேவன் சாரிடம் உள்ள சிறப்பம்சங்கள்-
1) 95 % பாடல்களில், இந்திய பாரம்பரிய இசை கருவிகளை மட்டுமே உபயோக படுத்தி உள்ளார்.
2)90 % பாடல்கள் பாட்டு எழுதி இசை அமைக்க பெற்றவை. கண்ணதாசன் வார்த்தைகளில், ஒரு கட்டுரை எழுதி கொடுத்தாலும் இசை அமைக்கும் வல்லமை கொண்டவர்.
3) எடுத்து கொண்ட படத்துக்கு உரிய இசையை கொடுப்பார். இவரா அவரா என்றெல்லாம் பார்த்து இசையமைக்கும் வழக்கம் அறவே இல்லை.
4) improvised மியூசிக் கொடுத்திருக்கிறாரே தவிர , assembled arrangements பாணியில் பண்ணியதே இல்லை.சில ஹிந்தி பாடல்களை உபயோக படுத்தி இருந்தாலும்,பெரும்பாலும் அசலானவை. ஸ்பானிஷில் கொஞ்சம்,arabian இல் கொஞ்சம் என்று உருவியதே கிடையாது.
5) இவர் ஸ்டைல், இந்திய -வெஸ்டேர்ன் பாணி action படங்களுக்கு ஒத்து வராது. மற்ற படி எல்லா படங்களுக்கும் பொருந்துவார்.
6) இவர் 69 இல் இருந்து 80 வரை தெலுங்கில் பிஸி ஆக இருந்ததால் தமிழில் ஆர்வம் காட்டவில்லை.
என்னை கவர்ந்த பாடல்கள்-
சமூக படங்களில்-
சிட்டு குருவி சிட்டு குருவி, மணப்பாறை, போறவளே, ஆகா நம் ஆசை,ஏரி கரையின் மேலே , சீவி முடிச்சு,ஒரே ஒரு ஊரிலே,படித்ததினால்,ஆயிரம் கண் போதாது, வண்ண தமிழ்,காவியமா,ஆத்திலே தண்ணி வர,மாட்டுகார வேலா,வண்டி உருண்டோட,சித்தாடை கட்டிக்கிட்டு, மாமா மாமா மாமா,கல்யாணம்,கல்லிலே,என்னை விட்டு, மியாவ் மியாவ்,ஒருத்தி ஒருவனை,மெல்ல மெல்ல அருகில்,தட்டு தடுமாறி,கண்ணுக்குள்ளே,சிரித்து சிரித்து, ஹலோ ஹலோ,காட்டு ராணி, காட்டுக்குள்ளே,கட்டான,மலரும் கொடியும்,கங்கை கரை,கடவுள் மனிதனாக, யாரடி வந்தார்,காலம் என்னும் நதியினிலே, ராதே, இரவுக்கு ஆயிரம்,பகலிலே, உன்னை சொல்லி, கள்ள மலர், மயக்கம் எனது, தூங்காத கண்ணென்று(நிறைய பேர் லிஸ்டில் தமிழின் நம்பர் one ),பூந்தோட்ட, சின்னஞ்சிறிய,குங்குமம்,பறவைகள்,கண்ணெதிரே, இதய வீணை,கண்ணே கண்ணே, புத்தி சிகாமணி,நதிஎங்கே,அழகு சிரிக்கின்றது,ஏனழுதாய், பசுமை நிறைந்த, புத்தன் வந்த,தாழம் பூவே,பனி படர்ந்த,வாடை காற்றம்மா,மடி மீது,நடையா,எண்ணிரண்டு,மஞ்சள் முகமே,உன்னையறிந்தால்,சீட்டுக்கட்டு,வெள்ளிநிலா ,ஆண்ட வன், என்ன கொடுப்பாய்,கன்னத்தில் என்னடி, ஒரே முறைதான், நவராத்திரி, இரவினில், சொல்லவா,போட்டது,
ராஜாதி ராஜ மகா,அவளா சொன்னால்,என்னடி,ஒன்றா இரண்டா,எனக்காகவா,பட்டாடை,எங்கே ஆஹா எங்கே,அழகு தெய்வம்,நான் அனுப்புவது,இதய ஊஞ்சல்,பத்து மாதம்,பிள்ளை செல்வமே,நலம்தானா,மறைந்திருந்து,பாண்டியன் நானிருக்க,மழை முத்து ,கேளம்மா,உனக்கும் எனக்கும்,என்றும்,நல்ல நல்ல,எவரிடத்தும்,காதல் எந்தன் ,என்னம்மா,எலந்த பயம், அலேக்,மெல்ல,,மாறியது,சந்திப்போமா,காலமிது,சிரி ப்பேன ்,ஒரு பக்கம்,பூ வைத்த,நெஞ்சம் உண்டு,கடவுள் ஏன்,நீல நிறம்,ஆசையிருக்கு,பாலக்காட்டு,உன்கண்ணில்,தொட் டால், டிக் டிக்,பதினாறு வயதினிலே,ஏன் ஏன் ஏன் ,குடிமகனே,மயக்கம் என்ன,இரண்டு மனம,யாருக்காக,கல்யாண ஆசை,இரவுக்கும் பகலுக்கும்.
புராண,சரித்திர, படங்கள்-
நான் சொல்லியா தெரிய வேண்டும்? திருவிளையாடல் முதல் ஆதி பராசக்தி வரை.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st June 2014, 05:30 PM
#3484
Senior Member
Senior Hubber
கோபால், நீங்க எழுதாம விட்டுப் போயிடணுமின்னு நெனச்சாலும் முடியலை பாருங்க - இதுவும் உங்ககிட்ட எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. திரை இசை திலகம் பற்றிய பதிவுகளும் வழக்கம்போல அருமை!!! தொடருங்க.
-
21st June 2014, 05:50 PM
#3485
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalnayak
கோபால், நீங்க எழுதாம விட்டுப் போயிடணுமின்னு நெனச்சாலும் முடியலை பாருங்க - இதுவும் உங்ககிட்ட எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. திரை இசை திலகம் பற்றிய பதிவுகளும் வழக்கம்போல அருமை!!! தொடருங்க.
I also fall in line with Kalnayak sir. Your come back posting on KVM is really superb and we always remember him for his association with NT and other music directors (who affectionately called him "mama" with utmost respect). I await a nostalgia on KVM in your style of writing that would help embed the contributions of KVM in the minds of generations to come.
dear ravi, raghul and CK please stage your comebacks too in the untouched areas of NT in your impeccable styles. Now this thread has to usher a new era of greenery with life rains through your writings.
Last edited by sivajisenthil; 21st June 2014 at 06:14 PM.
-
21st June 2014, 08:20 PM
#3486
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivajisenthil
I also fall in line with Kalnayak sir. Your come back posting on KVM is really superb and we always remember him for his association with NT and other music directors (who affectionately called him "mama" with utmost respect). I await a nostalgia on KVM in your style of writing that would help embed the contributions of KVM in the minds of generations to come.
dear ravi, raghul and CK please stage your comebacks too in the untouched areas of NT in your impeccable styles. Now this thread has to usher a new era of greenery with life rains through your writings.
Dear Sir,
Gopal Sireye poruththavarai there is no going and coming back...he is 365 days man in form ever !
Avar oru Gaada Specialist with Text Book Perfection !
RKS
-
21st June 2014, 08:41 PM
#3487
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st June 2014, 08:46 PM
#3488
Junior Member
Veteran Hubber

CONGRATULATIONS KUMARESHAN SIR !
YOUR POSITION AS GENERAL SECRETARY - ALL INDIA VIKRAM PRABHU FANS WELFARE ASSOCIATION IS BIG MOTIVATION FOR MANY !
ATLEAST NOW, SOMEONE WHO IS MORE DYNAMIC & CAN MAKE THINGS HAPPEN THE WAY IT HAS TO HAPPEN HAS ARRIVED !
CONGRATS ONCE AGAIN !
RKS
-
21st June 2014, 10:04 PM
#3489
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st June 2014, 10:24 PM
#3490
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
பட்டிக்காடா பட்டணமா அந்த ஜூன் 9 அன்று 35 நாட்களை நிறைவு செய்து அன்று வரை நடைபெற்ற 115 காட்சிகளும் ஹவுஸ் புஃல் ஆனது. 115 CHF [Continous House Full shows]. அதே நாளன்று நான் ஏன் பிறந்தேன் மதுரை தங்கத்தில் வெளியாகிறது. அடுத்த நாள் ஜூன் 10 அன்று பட்டிக்காடா பட்டணமாவிற்கு ஒரு acid test காத்துக் கொண்டிருந்தது. அது என்ன acid test?
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
அந்த நேரத்தில் வெற்றிகரமாக குறத்தி மகன் படம் ஓடிக் கொண்டிருந்ததை குறிப்பிட்டேன். மற்றொரு படம் அதே காலகட்டத்தில் அதே போல் வெற்றிகரமாக ஓடியது என்று சொன்னால் அது காசேதான் கடவுளடா ஆகும். அதே நேரத்தில் வெளியான நவநீத ரெட்டியாரின் புகுந்த வீடு சென்னையில் நன்றாக போனாலும் மதுரையில் பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. வெகு நாட்களுக்கு பின் ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் மீண்டும் பின்னணி பாடிய செந்தாமரையே செந்தேனிலவே என்ற பாடல் இந்த படத்தில் இடம் பெற்று பிரபலமானது. ஸ்ரீதேவியில் காசேதான் கடவுளடா வெளியானது. புகுந்த வீடு மீனாட்சியிலும் வந்தது. மே மாதம் இறுதியில் என்று நினைவு மீனாட்சியில் புகுந்த வீடு படம் மாற்றப்பட்டு எஸ்.பி. முத்துராமனின் முதல் படமான கனிமுத்துப் பாப்பா வெளியானது. ஹிந்தியில் சூப்பர் ஹிட் படமான Andaaz படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. ஷர்மீலீ இந்திப் படத்தின் மிக பிரபலமான Khilte Hain Gul Yahan பாடல் ராதையின் நெஞ்சமே என்று மாற, Andaaz படத்தின் Zindhaki Ek Safar காலங்களே காலங்களே என்று எஸ்பிபி குரலில் ஒலிக்க, Hai na bolo bolo அதே மெட்டில் மாமா சொல்லு சொல்லு என்றாக, இப்படி பல்வேறு கலவைகளின் சங்கமமாக வெளிவந்த கனிமுத்துப் பாப்பா வெற்றி பெற முடியாமல் போனது.
ஜூன் 9 அன்று நான் ஏன் பிறந்தேன் வெளியானது. இது கேஆர்விஜயாவின் சொந்தப் படம். Jeene Ki Raah என்ற இந்திப் படத்தின் தழுவல். என்ன காரணத்தினாலோ இது ரீமேக் படம் என்பதை வெளியில் சொல்லாமல் மறைத்தார்கள். விஜயாவைப் பொறுத்தவரை வேலாயுதன் அவர்களை மணந்த பின் நடிப்பதை நிறுத்தியிருந்த அவர் மீண்டும் மறு பிரவேசம் செய்த பிறகு நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த முதல் படம் 1969 அக்டோபரில் வெளியான பாலாஜியின் திருடன். அதற்கு முன் அவர் நடிகர் திலகத்தின் படத்தில் பணியாற்றியது 1968 பிப்ரவரியில் வெளியான திருமால் பெருமை படத்தில்தான். தங்கை, என் தம்பி, திருடன் என்று வரிசையாக பாலாஜியின் படங்களுக்கு பைனான்சியராக இருந்த வேலாயுதன் திருடன் திரைப்படத்தில் கேஆர் விஜயாவிற்கு தனியாக டைட்டில் கார்டு போடவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்டு பாலாஜியின் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதை நிறுத்தி விட்டார். பாலாஜி பிறகு சேது பிலிம்ஸ் மற்றும் கீழக்கரை யாசின் என்று போய் விட விஜயாவின் திரைப்பட career-ஐ steady செய்யும் பொறுப்பை வேலாயுதனே ஏற்றுக் கொண்டு பல பெயர்களில் தயாரிப்பு நிறுவனங்களை நடத்திக் கொண்டு வந்தார்.
1969 அக்டோபரில் வந்த திருடன் படத்திற்கு பின் பாலாஜியின் தயாரிப்பில் 1983-ம் ஆண்டு ஜனவரியில் வெளி வந்த நீதிபதி படத்தில்தான் மீண்டும் விஜயா இடம் பெற்றார். பாலாஜியின் தயாரிப்பில் நடிக்க 14 வருடங்கள் இடைவெளி விட்ட போதும் இருவரும் வேறு படங்களில் சேர்ந்து நடித்தார்கள். இன்னும் சொல்லப் போனால் 1975-ம் ஆண்டு மார்ச்சில் வெளி வந்த தயாரிப்பாளர் கேஆர்ஜியின் ஆயிரத்தில் ஒருத்தி திரைப்படத்தில் இருவரும் ஜோடியாகவே நடித்தார்கள்.
1970-ம் ஆண்டு நடிகர் திலகத்துடன் எதிரொலி, ராமன் எத்தனை ராமனடி, சொர்க்கம் என மூன்று படங்களில் ஜோடி சேர்ந்த விஜயா அதன் பின் 1971-ம் ஆண்டில் நடிகர் திலகத்தின் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. 1970 அக்டோபரில் சொர்கத்திற்கு பிறகு 1972-ல் ஆகஸ்டில் வெளியான தவப்புதல்வன் படத்தில்தான் சிவாஜியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார். அந்த 1970-ன் இறுதியில்தான் Jeene Ki Raah என்ற இந்திப்படத்தின் தமிழ் உரிமையை வேலாயுதன் வாங்கினார்.
1967 தீபாவளிக்கு வந்த விவசாயி படத்திற்கு பிறகு விஜயா எம்ஜிஆருடனும் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில்தான் 1971 ஜனவரியில் காமாட்சி ஏஜன்சீஸ் என்ற நிறுவனம் எம்ஜிஆரை வைத்து படம் தயாரிக்கப் போவதாக செய்தி வருகிறது. அந்த 1971 ஜனவரியிலேயே வேலாயுதன் அவர்களின் அலுவலகத்தில் வைத்தே பூஜை போடப்பட்டது. எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையமைப்பாளர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.ஆனால் அதன் பிறகு குறுக்கிட்ட 1971 பாராளுமன்ற சட்ட மன்ற பொது தேர்தல்களினால் இந்தப் படம் தயாரிப்பில் நீண்டு போனது. பெயரிடப்படாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு பிறகு அப்போது ஆனந்த விகடனில் தொடராக வந்துக் கொண்டிருந்த எம்ஜிஆரின் சுய சரிதை தொடரான நான் ஏன் பிறந்தேன் என்ற தலைப்பே சூட்டப்பட்டது.
நமது தொடரில் இதனையும் சொல்வதற்கு காரணம் நான் இந்த தொடரின் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தது போல பட்டிக்காடா பட்டணமாவிற்கு opposition படம் அதுவும் strong opposition என்ற முறையில் இந்தப் படம் எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் எங்கள் மதுரையில் தங்கத்தில் வெளியானது நான் ஏன் பிறந்தேன். பட்டிக்காடா பட்டணமா ஓடிக் கொண்டிருந்த சென்ட்ரல் சினிமாவிலிருந்து a stone's throw away என்பது போன்ற தூரத்தில்தான் தங்கம் அமைந்திருந்தது இந்த opposition பேச்சிற்கு வலு கூட்டியது.
(தொடரும்)
அன்புடன்
ஆதிராம்,
இந்த episode-லும் suspense உடைக்க முடியவில்லை. அடுத்த எபிஸோடில் சொல்கிறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks