-
22nd June 2014, 10:52 PM
#711
Senior Member
Seasoned Hubber
உழைக்கும் கரங்கள் திரைப்படத்திற்காக தான் எழுதிய கந்தனுக்கு மாலையிட்டாள் பாடலுக்கு மெல்லிசை மன்னர் போட்ட பல மெட்டுக்களில் ஒன்று தனக்கு மிகவும் பிடித்ததாகவும் அந்த மெட்டில் அந்தப் பாட்டு பதிவாக வேண்டும் என்று தான் மிகவும் விரும்பியதாகவும் இன்று நடைபெற்ற எம்எஸ்விடைம்ஸ் காம் விழாவில் கவிஞர் முத்துலிங்கம் கூறினார். இறுதியில் அந்த மெட்டில் வேறொரு பாடல் இடம் பெற்று தமிழ்த்திரையுலகின் மிகப் பிரபலமான பாடலாக அமைந்தது எனக் கூறினார்.
அந்த மெட்டு ....
நாதமெனும் கோவிலிலே
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
22nd June 2014 10:52 PM
# ADS
Circuit advertisement
-
22nd June 2014, 10:54 PM
#712
Senior Member
Senior Hubber
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது..எப்போதோ கேட்ட் பாடல்.. நன்றி வாசு சார்..சாரதா முத்துராமன் காம்பினேஷன் அறியாத ஒன்று..
-
22nd June 2014, 10:56 PM
#713
Senior Member
Senior Hubber
//இறுதியில் அந்த மெட்டில் வேறொரு பாடல் இடம் பெற்று தமிழ்த்திரையுலகின் மிகப் பிரபலமான பாடலாக அமைந்தது எனக் கூறினார்.
அந்த மெட்டு ....
நாதமெனும் கோவிலிலே // ராகவேந்தர் சார் இது நான் அறியாத ஒன்று..வாவ்..
கந்தனுக்கு மாலையிட்டாளும் நல்ல பாட்டு..
-
23rd June 2014, 08:47 AM
#714
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (11)
இன்றும் ஒரு அபூர்வ பாடல்
'மெல்லிசை மாமணி' குமார் அவர்களின் இசையில் மனதை மயிலிறகால் வருடும் ஒரு கிராமத்துப் பின்னணி பாடல். இனிமை என்றால் அப்படி ஒரு இனிமை.

'ஜானகி' சபதம் (1976) படத்தில். (ஆர்.சாந்தாவின் தயாரிப்பில் 'அவினாசி' மணி எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் கே.ஆர்.விஜயா, நிர்மலா, மனோரமா நடித்திருந்தனர்)
பழுத்த அனுபவம் மிக்க டி.எம்.எஸ், சுசீலா இளசுகளுக்காக இணைந்து பாடிய இனிமையான ராகம் கொண்ட பாடல்.
மாஸ்டர் சேகரும், ரோஜாரமணியும் கிராமத்து காதலர்களாக வயல் வரப்புகளில் ஆடிப்பாடும் காதல் டூயட்.
பால்ய வயது சேகர் பருவ வயது சேகராக அடி எடுத்து வைத்த சமயத்தில் (இதே வருடத்தில்தான் ஸ்ரீதரின் 'ஓ..மஞ்சு' திரைப்படத்தில் 'மாஸ்டர்' சேகர் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார் என்று நினைக்கிறேன். கவிதாவும் இதில்தான் அறிமுகம்) அதே போல குழந்தையாக இருந்த ரோஜாரமணி 'பருவகாலம்' எய்திய 'வயசுப்பொண்ணு' ஆன சமயத்தில் இருவரையும் ஜோடி சேர்த்து எடுத்த பாடல்.
ஜோடி பொருத்தமாக இருப்பது போலவும் தோன்றுகிறது. இல்லாதது மாதிரியும் தெரிகிறது. சேகரை சின்னப் பையனாகவே பார்த்து பழக்கப்பட்டு விட்டதால் இப்பாடலில் வாலிபனாக பார்க்க ஒத்துவரவில்லை.(கவரிமானில் பரவாயில்லை) ரோஜாரமணி வழக்கம் போல். சேகர் கொஞ்சம் துறுதுறு. ஹீரோயின் அமைதி காக்கிறார்.
சேகருக்கு டி.எம்.எஸ்.வாய்ஸ். பொருந்தவே இல்லை. (இந்தக் காலக் கட்டத்தில் 'இளைஞர்களுக்கு பாடலா.... கூப்பிடு பாலாவை' என்றுதானே சொல்வார்கள்!) குமாருக்கு என்ன ஆயிற்று? 'பாடகர் திலகம்' எவ்வளவோ இளமையாக பாட முயன்றும் சேகருக்கு எடுபடவில்லை. ஆனால் இனிமையாக பாடி சௌந்தரராஜன் ஈடுகட்டி விடுகிறார்.
சுசீலா ஒரே வார்த்தையில் சொன்னால் அற்புதம்.
ஒரு தடவை கேளுங்கள். 'பரவாயில்லை' என்று சொல்லுவீர்கள். இரண்டு முறை கேட்டால் 'அருமை' என்று சொல்வீர்கள். குமாரின் அருமையான மெட்டில் அப்படியே நம் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகிறது இப்பாடல்.
எப்போதுமே இப்பாடலை 'நெனச்சா இனிக்குது'.
உன்னை நெனச்சா இனிக்குது (புல்லாங்குழல் இசை மறக்க முடியாதது)
அள்ளி அணைச்சா மணக்குது
ரொம்ப சுகமா இருக்குது
கண்ணே என் ராஜாத்தி
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
ரொம்ப சுகமா இருக்குது
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
கண்ணே ராஜாவே
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
(வயலின் கலக்கல்)
முல்லைப்பூ மல்லிப்பூ
முத்துப்பூ பிச்சிப்பூ
முன்னாலே வந்தாடுது
உள்ளாடும் ரோஜாப்பூ
உள்ளூர உள்ளூர
சந்தோஷ நீராடுது
முல்லைப்பூ மல்லிப்பூ
முத்துப்பூ பிச்சிப்பூ
முன்னாலே வந்தாடுது
முள்ளாடும் ரோஜாப்பூ
உள்ளூர உள்ளூர
சந்தோஷ நீராடுது
சிவப்பானது மாம்பழக் கன்னம்
உனக்காகவே மின்னுது இன்னும்
சிவப்பானது மாம்பழக் கன்னம்
உனக்காகவே மின்னுது இன்னும்
கொஞ்சம் வா
கொஞ்ச வா
முன்னம் வா
பின்ன வா
வாடியம்மா இனியென்ன வெட்கம்
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
சந்தனம் குங்குமம் மங்களம் கங்கணம் ('கங்கணம்' சுசீலா உச்சரிப்பு டாப்)
எப்போது நான் பார்ப்பது
சம்சாரம் கொண்டாட
பஞ்சாங்கம் நான் பார்ப்பேன்
அப்போது நீ கேட்பது
இனி நான் உன்னைப் பிரிவதுமில்லை
பிரிந்தால் உயிர் வாழ்வதும் இல்லை
இனி நான் உன்னைப் பிரிவதுமில்லை
பிரிந்தால் உயிர் வாழ்வதும் இல்லை
கொட்டட்டும் மேளங்கள்
கொஞ்சட்டும் உள்ளங்கள்
மனசுக்குள் விழுந்தது மாலை
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
ரொம்ப சுகமா இருக்குது
கண்ணே என் ராஜாத்தி
உன்னை நெனச்சா இனிக்குது (அஹ்ஹா)
அள்ளி அணைச்சா மணக்குது]
(இந்தப் படத்தில் 'இளமைக் கோயில் ஒன்று... இரண்டே தீபங்கள்' என்ற காலத்தை வென்ற பாடல் உண்டு. அது பற்றி பின்னால் வ(த)ருகிறேன்)
Last edited by vasudevan31355; 23rd June 2014 at 09:20 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
23rd June 2014, 09:55 AM
#715
வாசு சார்/முரளி சார்/கார்த்தி சார்/தமிழருவி ck சார்/கோபால் சார்/வேந்தர் சார்/வினோத் சார்
(பொதுக்கூட்டம் நினைவிற்கு வருகிறது )
சொந்த வேலையாக ஒரு நாள் ஊரில் இல்லை . ஜோலி முடித்து வந்தால்
இங்கே சொலியெ எல்லோரும் பெருககிட்டங்க
மன்மத லீலைக்கு இவ்வளுவு (தீபம் படத்தில் சுருளி மனோரமாவிடம் சொல்வது போல் ) போஸ்ட் . எல்லாம் செம கலக்கல்
பாருங்க நம்ம வேந்தர் சார் வந்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட் ராத்திரி மெகா டிவியில் பார்த்த msv ப்ரோக்ராம் பற்றி கொடுத்துட்டு போறார்
இந்த நேரத்தில் திரு கார்த்திக் அவர்களிடம் மன்மத லீலை போஸ்ட்க்கு நடுவில் பாலசந்தர் இன் அவர்கள் படத்தில் இருந்து "அங்கும் இங்கும் பாதை கண்டு " பாடல் பற்றி ஒரு போஸ்ட் போட்டுட்டேன் . திரு கார்த்திக் என்னை ஷமிக்கணும் (நடிகர் திலகத்தின் படத்திற்கு மற்றுஒரு NT படமே போட்டியாக வருவது போல் )
வாசு சார் உங்கள் மழை மேகம் 1977
எ.எஸ் பிரகாசம் டைரக்டர் .
சாரதா அம்மா சொந்த படம்
முத்துராம் ஒரு ஜோடி . வெள்ளை சாரதா
நம்ம ஸ்ரீகாந்த் ஜோடி கருப்பு சாரதா (அவங்கள் தான் மழை மேகம் )
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
(நீங்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் வாணி ராணி ஜாடையில்
"முல்லை பூ பல்லக்கு போவது எங்கே honey மூன் முன் போகும் பாதை எங்கே " பாடலை நினவு படுத்தும்
இந்த படத்தில் இன்னொரு பாடல் நினவு உண்டு
"ஜானகி " குரலில் உடன் சௌந்தரராஜன் என்று நிநேகிறேன்
"சொக்கு போடி போட்டனாம் மச்சான் மச்சான்
சொன்னபடி கேட்க தானே வைச்சான் வைச்சான் "
ஒரு மாதிரி ஜோதியில் வந்து கலந்துட்டேன்
இன்னும் ஜானகி சபதம் பற்றி எழுதணும்
நிறைய சோலி இருக்கே 24 மணி நேரம் காண மாட்டேங்குது
-
23rd June 2014, 10:09 AM
#716
Senior Member
Diamond Hubber
வணக்கம்.
வாருங்கள் கிருஷ்ணா சார். 'மன்மத லீலை' முடிந்ததா?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd June 2014, 10:17 AM
#717
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்
மழை மேகத்தில் இன்னொரு பாடல். 'ஒரு கோடி சுகம் வந்தது' ஜானகி ஏ.எல்.ராகவன் இணைவில்.
நன்றாகவே இருக்கும்.
நீங்கள் போட்ட
'சொக்கு பொடி'யில் மாட்டிகிட்டேன். கரெக்ட்.
-
23rd June 2014, 10:21 AM
#718
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
வாசு சார் உங்கள் மழை மேகம் 1977
எ.எஸ் பிரகாசம் டைரக்டர் .
சாரதா அம்மா சொந்த படம்
முத்துராம் ஒரு ஜோடி . வெள்ளை சாரதா
நம்ம ஸ்ரீகாந்த் ஜோடி கருப்பு சாரதா (அவங்கள் தான் மழை மேகம் )
கிருஷ்ணா சார்
நிஜமாகவே புள்ளி விவரப்
சார் நீங்கள். ரொம்ப சாக்கிரதையாய் இருக்கணும் உங்ககிட்டே.
-
23rd June 2014, 10:21 AM
#719
மன்மத லீலை அதுக்குள்ளே முடிஞ்சுருமா
இன்னும் இருக்கே
மது வீட்டிற்கு அருகில் அருந்ததி (ஜெயா விஜய) வீடு மாறி குடி வருவது
ரேகா (ஹலம்) ஜப்பான் பையன்ஐ விட்டு டென்னிஸ் பால் போட்டு
அதுதானா என்று விசாரிக்க சொல்வது
ஜப்பான் பையன்
"என்ன அதுதானா .தெருவில் எல்லோரும் கசமுசானு பேசிக்கிறாங்க "
ரேகா "எல்லோரும் பேசிக்கிறாங்களா அப்ப சரிதான் "
"என்ன சரி தான். என்னன்னு தான் சொல்லுங்களேன் "
"அது எல்லாம் உனக்கு தெரியாது நீ சின்ன பையன் "
"விபச்சாரினா எனக்கு தெரியாதுனா நினசீங்க ஆமா விபச்சாரின என்ன அர்த்தம் "
"அட பாவி சரி சரி இதுக்கு மேலே நீ தெரிஞ்சுக்க வேணாம் "
அன்று காலை மாடியில் அருந்ததி exercise செய்வது கமல் அதை வேடிக்கை பார்ப்பது பார்த்து கையை ஆட்டுவது உடனே அருந்ததி
அத்தான் என்று அழைப்பது
அன்று இரவில் மது வீட்டு கொலுவிற்கு அருந்ததி வருவது
வந்து "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்" பாடலை பாடுவது
அப்போது கமல் திடீர் என்று வருவது
வந்தவுடன் அருந்ததி "அத்தான் என்ன அத்தான்" என்று பாடுவது
தெரு பெண்கள் எல்லோரும் சிரிப்பது
உடனே அருந்ததி வசனம்
"நான் பாடியதை கேட்ட சிரிச்சாங்க
இந்த தெருவில் எல்லா ஆண்களும் எனக்கு பழக்கம் .
ஆனால் ஒருத்தரை தவிர என்கிட்டே இந்த கிண்டல் வேண்டாம் "
அதை கேட்டு ரேகா மாடியில் கமலிடம்
(அப்போது கமல் கையில் mad என்ற magazine இருக்கும் - பாலச்சந்தர் technique )
"இன்னைக்கு கொலுவிற்கு எதிர் வீடு பெண் வந்தாள் ரொம்ப அசிங்கம் "
"எ னக்கே அசிங்கமாயிருக்கே உனக்கு இருக்காத " ??
"வந்தவள் ஒரு விஷயம் சொன்ன சிவா சிவா "
"என்ன விஷயம் "
"இந்த தெருவில் எல்லா ஆண்களும் எனக்கு பழக்கம் .
ஆனால் ஒருத்தரை தவிர சிவா சிவா "
"சிவா சிவா " இது கமல்
"அந்த ஒருத்தர் யாராயிருக்கும் சிவா சிவா அதை தெரிஞ்சுகலனே
எனக்கு மண்டையே வெடிச்சுரும் போல இருக்கே " - ரேகா
"எனக்கே மண்டை வெடிச்சுரும் போல இருக்கே உனக்கு இருக்காதா" -கமல்
"ஆ ஆ அந்த எதிர் வீடு கிருஷ்ணமுர்த்தி யாதான் இருக்கும் சுத்த கஞ்சன் கஞ்சன் " கமல்
ரேகா விஸ்வரூபம் எடுப்பது
கமல் "தப்பு தப்பா சொல்றேன் நான் தான் அந்த கஞ்சன் "
அப்ப மெல்லிசை மன்னரின் BGM chorus ஹம்மிங் அண்ட் தபேல
-
23rd June 2014, 10:23 AM
#720
vasu sir
"ஒரு கோடி சுகம் " அந்த பாட்டு first நைட் பாட்டு என்று நினவு
கரெக்ட் ஆ சார்
Bookmarks