-
23rd June 2014, 10:59 AM
#731
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
மியூசிக் மன்னர் தானா சார்
மன்னரே தான் சார்.
வாணியின் "சபலம் சலனம் மயக்கம்" பாடலில் பைத்தியம் சார் எனக்கு.
என்னைவிட ராகவேந்திரன் சாருக்கு.
Last edited by vasudevan31355; 23rd June 2014 at 12:06 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
23rd June 2014 10:59 AM
# ADS
Circuit advertisement
-
23rd June 2014, 10:59 AM
#732
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
10 நிமஷம் சார்
சின்ன வேலையை முடிச்சுட்டு வந்துடறேன் ப்ளீஸ்
தாரளமாக சார். பொறுமையாய் வாருகள். அவசரம் வேண்டாம்.
-
23rd June 2014, 11:05 AM
#733
பேரும் புகழும் கரெக்ட் சார்
மஞ்சள் முகமே வருக படம் கொஞ்சம் விரசம் கலந்த படம் என்று நினவு
சத்ய பிரியாவை கொஞ்சம் உரிசுருப்பங்க
பாட்டு நினைவுக்கு வரலே
அந்த ய.விஜய ஒரு பாட்டு ஒன்னு கிடார் எல்லாம் வைச்சுக்கிட்டு
வாணி குரலில்
"அண்ட காக்கை பறக்குதடி ஷோக்க
ஒன்னும் தெரியதா பாப்பா அவ கண்ணாலே போட்டாளம் தாப்பா "
என்று வரும் அந்த படம் என்ன படம் சார்
-
23rd June 2014, 11:11 AM
#734
Senior Member
Diamond Hubber
கண்ணகி, மாதவி, பார்கவி, அருந்ததி என்று அய்யர் படுக்கையில் புலம்ப,
அவர் தர்மபத்தினி
'ஏன்னா! பகவான் நாமமாவே சொல்லிண்டு இருக்கேளே!'
என்பார். ரகளை.
-
23rd June 2014, 11:16 AM
#735
ஆசை 60 நாள்
விஜயகுமார் ஸ்ரீவித்யா
துரை direction
அந்த படத்தில் தானே இந்த பாடல்
"அண்ட காக்கை பறக்குதடி ஷோக்க
ஒன்னும் தெரியதா பாப்பா அவ கண்ணாலே போட்டாளம் தாப்பா "
-
23rd June 2014, 11:23 AM
#736
Senior Member
Diamond Hubber
'மஞ்சள் முகமே வருக' படம் கொஞ்சம் இல்ல சார்.... அதுக்கு மேலேயே சொல்லலாம்.
விஷயம் தெரியாம பக்கத்து வீட்டுக்காரம்மா எங்க வீட்டில சொல்லிட்டு என்னை கூப்பிட்டுட்டு போயிட்டாங்க. பக்குன்னு பத்திக்குற வயசு வேற. ஒன்னும் புரியல. மஞ்சள்ன்னு டைட்டில் இருக்கவே மகாலஷ்மி படம் வரும்னு நினைச்சுட்டாங்க போல் இருக்கு.
உள்ளே போய் பார்த்தா மஞ்சள் இல்ல. நீலம். அதுவும் ரொம்ப நீளம். பக்கத்து வீட்டுக்காரம்மா இப்படி திரும்பு இப்படி திரும்பு என்று ஆப்பரேடர் ரூம் பக்கம் என் கழுத்தைப் பிடித்துத் திருப்பியது நன்றாக நினைவிருக்கிறது. (பாவம்! அவுங்களும் எத்தனை முறைதான் கழுத்தைப் பிடித்து திருப்புவாங்க!)
அதைவிட சத்யப்ரியா மிக நன்றாக நினைவிருக்கிறது.
Last edited by vasudevan31355; 23rd June 2014 at 12:09 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
23rd June 2014, 11:33 AM
#737
Senior Member
Veteran Hubber
டியர் கிருஷ்ணாஜி,
'அவர்கள்' படத்தில் இடம்பெற்ற 'அங்கும் இங்கும் பாதை உண்டு' பாடல் பற்றிய பதிவும், அதற்க்கான சிச்சுவேஷன் விளக்கமும் நன்றாக இருந்தன. (மன்மத லீலைக்கிடையே பதித்ததற்காக வருத்தம் ஏன்?. எல்லாப்பாடல்களையும் அலசுவதர்க்க்காகத்தானே இந்த திரி?).
இப்பாடல் பற்றி ஒரு விசேஷம் உண்டு. பலர் பலமுறை சொன்னதுதான். நானும்கூட ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில், மேடையிலேயே பாலச்சந்தர் சிச்சுவேஷன் சொல்லி, மேடையிலேயே கவிஞர் பாடல் இயற்றி, மேடையிலேயே மெல்லிசை மன்னர் மெட்டமைத்து, மேடையிலேயே எஸ்.பி.பி. பாடி அசத்திய பாடல் இது. பாடல் மிகச்சிறப்பாக அமைந்ததால், பாராட்டுவதற்கு பதிலாக 'இவர்கள் முன்கூட்டியே எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டு வந்துவிட்டு இப்போதுதான் புதிதாக செய்வதுபோல நடிக்கிறார்கள்' என்று பலர் சொன்னார்களாம்.
இப்படத்தின் மேலும் இரண்டு அருமையான பாடல்களான
'இப்படியோர் தாலாட்டு பாடவா, அதில்
அப்படியே என் கதையை கூறவா'
பாடலையும்
'ஜூனியர்... ஜூனியர்....
இருமனம் கொஞ்சும் திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்'
பாடலையும் அலசுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்...
-
23rd June 2014, 11:36 AM
#738
-
23rd June 2014, 11:40 AM
#739
1977 இல் முத்துராமன் ஜெயசித்ரா,அபர்ண நடித்து
s p முத்துராமன் டைரக்டர்
ஆளுக்கொரு ஆசை
கொஞ்சம் காமெடி கலந்த படம் ஈஸ்ட்மேன் கலர்
ஓரளவ ஓடிச்சுன்னு நினவு
இளையராஜா மியூசிக்
budget பத்மனபான் போல் வரும்
கொஞ்சம் ஜெயசித்ரா குண்டு ஜெயசித்ரவ மாறி கொண்டு இருந்த நேரம்
ஜேசுதாஸ் சுசீலா பேஸ் வாய்ஸ் சாங்
இளையராஜாவின் கிடார் கொஞ்சும்
இதய மழையில் நனைந்த கிளிகள்
புதிய நதியில் குளித்து குளித்து எழ வேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள் உறவினில் பெற வேண்டும்
காதல் வரச்சொல்ல கால்கள் தடை சொல்ல
மௌனம் பிறக்கிறது
காவலோ வேலியோ யாரைத் தடுக்கிறது
ஏதோ புரியுது ஏதோ தெரியுது இன்பம் எழுகிறது
ஏக்கமோ தூக்கமோ கண்கள் தவிக்கிறது
மலர்ந்த நேரமே மயங்கத் தோன்றுமா
உணர்ந்த பின்னரே உறங்கத் தோன்றுமா
இதய மழையில் நனைந்த கிளிகள்
புதிய நதியில் குளித்து குளித்து எழ வேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள் உறவினில் பெற வேண்டும்
மாறன் அரண்மணை மாடம் இரண்டிலும் தீபம் எரிவதென்ன
மாலையோ காலையோ மயக்கம் வருவதென்ன
வாசல் பளிங்குகள் ஆசை வெளிச்சத்தில் கோலம் இடுவதென்ன
வாடையோ தென்றலோ வசந்தம் தருவதென்ன
கனிந்த உள்ளமே இணைந்து கொண்டது
இருந்த நாணமே மறைந்து நின்றது
2. வாணி ஏக்க குரலில் ஒரு பாடல்
அபர்ணாவுக்கு
அந்த பாட்டை கேட்டு முத்துராமன் ஜெயசித்ராவுக்கு மூடு கிளம்பற மாதிரி
"மஞ்சள் அரைக்கும் போது மதில் ஏறி பார்த்த மச்சான்
பக்கத்தில் வந்தால் என்ன சொந்தம் காண
பல நாளா தூக்கம் இல்ல ஏக்கம் தீராதோ
உதடெல்லாம் செக்க செவக்க
வெத்தலைய போட்டுக்கொண்டேன்
வாங்கத்தான் ஆளைக்காணோமே
தங்கம் போல் மேனி எங்கும்
ஜவ்வாது பூசி வெச்சேன்
தழுவத்தான் நேரம் வரலியே
ஆளுக்கொரு ஆசை வெச்சு
அவரவர பிரிசும்வேச்சு
ஏக்கத்தை பங்கு வெச்சானே
தேகத்தில் வேகம் வெச்சு
வேகத்தில் போதை வெச்சு
விளையாடும் ஆள காணேனே
3.சௌந்தராஜன் குரலில் அசரீரி பாடல்
"கணக்கு பார்த்து காதல் வந்தது
கட்சிதமா ஜோடி சேர்ந்தது
ஒன்னும் ஒன்னும் ரண்டு "
இந்த படத்தில் ஒரு காமெடி நினவு உண்டு சார்
முத்துராமன் லீவு போட்டு ஜெயசித்ரவை ஆபீச்ல வந்து அவங்களையும் லீவ் போட்டு ஒரு மஜா பண்ணனும் நினைச்சு ஆனால் அவங்க 3 நாள் விலகு விலகு
-
23rd June 2014, 11:41 AM
#740
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
ஆசை 60 நாள்
விஜயகுமார் ஸ்ரீவித்யா
துரை direction
அந்த படத்தில் தானே இந்த பாடல்
"அண்ட காக்கை பறக்குதடி ஷோக்க
ஒன்னும் தெரியதா பாப்பா அவ கண்ணாலே போட்டாளம் தாப்பா "
சார் எனக்கும் ஞாபகம் இருக்கு. நினைவுக்கு வரல்ல. யோசிப்போம்.
Bookmarks