Page 293 of 402 FirstFirst ... 193243283291292293294295303343393 ... LastLast
Results 2,921 to 2,930 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

  1. #2921
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy -Thiru Ilango - Net

    எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ...



    நமக்குத் தெரிந்த ஒருவரது பெயரைச் சொன்னாலோ அல்லது ஒருவரைப் பற்றிய நினைவு வந்தாலோ நமக்கென்று பழக்கமான அவரது முகம் நினைவினில் வந்து நிழலாடும். எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ... நினைவுக்கு வருவது ” நான் ஆணையிட்டால்” என்று சவுக்கை சுழற்றும் “எங்க வீட்டுப் பிள்ளை” எம்ஜிஆர் தான். அந்தப் படம் வந்தபோது (1965) நான் பள்ளி மாணவன். தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாது. எம்ஜிஆர் ரசிகன். அவ்வளவுதான். அந்த படத்தை பார்த்த பின்னர் , கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டு மாட்டுக் கொட்டகையில் கயிற்றை சவுக்குபோல் முறுக்கி ” நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் “ என்று பாடிய சந்தோஷமான நாட்கள் இனி வராது.

    எனது பள்ளிப் பருவத்தில் நான் எம்ஜிஆர் ரசிகன். அதற்காக அவரது படங்களே கதி என்று இருந்தவன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. படிப்பில் கோட்டை விட்டதில்லை. எம்ஜிஆர் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். இருந்தாலும் எனக்கு எம்ஜிஆர் – சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றே நான் நினைத்தேன். நான் மட்டுமல்ல நிறையபேர் அப்படித்தான் நினைத்தார்கள்.. அப்பொழுதெல்லாம் சினிமா என்றால் நைட்ஷோதான். எம்ஜிஆர் படங்கள் தவிர வேறு பார்ப்பதில்லை. அப்புறம் கல்லூரிக்குச் சென்ற பின்னர்தான் மற்றவர்கள் நடித்த படங்களைப் பார்த்தேன்.

    எங்கள் அம்மாவின் கிராமத்திலும் சரி, அப்பாவின் கிராமத்திலும் சரி உறவினர்கள் அனைவருமே அப்போது திமுக அனுதாபிகள். இயல்பாகவே நானும் திமுக அனுதாபியாகப் போனேன். ( இப்போது எந்த கட்சி அனுதாபியும் கிடையாது ) கூடவே எம்ஜிஆர் படங்களை காணும் ஆர்வம்.. நாங்கள் குடியிருந்த சிந்தாமணி பகுதியில் ” திராவிடப் பண்ணை” என்று புத்தக பதிப்பாளர் வீடும், பதிப்பகமும் இருந்தது. இதன் உரிமையாளர் பண்ணை முத்துக் கிருஷ்ணன். அறிஞர் அண்ணா புத்தகங்களை வெளியிட்டதற்காக அபராதமும் சிறைத் தண்டனையும் பெற்றவர். அவருடன் எனது அப்பாவிற்கும், சித்தப்பாவிற்கும் நல்ல பழக்கம். அவருடைய வீட்டிற்கு திமுகவின் அப்போதைய முக்கிய தலைவர்கள் வருவார்கள். அப்போது அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன், மதியழகன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோரை நேரில் பார்த்து இருக்கிறேன். எம்ஜிஆர் இங்கு வந்ததில்லை. அவர் திருச்சி வந்தால் ஆஸ்பி ஹோட்டலுக்கு சென்று விடுவார். எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆசை இருந்தாலும் சந்தர்ப்பம் அமையவில்லை

    அறிஞர் அண்ணா மறைந்த பிறகு கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது திருச்சியில் 1970 இல் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ( இப்போது அண்ணா ஸ்டேடியம் ) நடந்தது. மாநில சுயாட்சி கோஷம் எழுப்பப்பட்டது அங்குதான். அப்போது திருச்சியில் நடக்கும் திமுகவின் எந்த நிகழ்ச்சியானாலும், சிந்தாமணியில் உள்ள் அண்ணா சிலையிலிருந்துதான் தொடங்குவார்கள். அப்படியே இந்த மாநாட்டிற்கும் இந்த அண்ணா சிலையிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. மாலைவேளை என்பதால் அந்தபகுதி முழுவதும் விளக்குகள் மயம். ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் தேர் போன்று அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் தலைவர்கள். எம்ஜிஆர் நடுநாயகமாக இருந்தார். கூட்டம் எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் அந்த ரதத்துடனேயே சென்றது. அவர்களில் நானும் ஒருவன். அப்போதுதான் எம்ஜிஆரை முதன் முதல் பார்த்தேன். கொஞ்சதூரம் சென்றுவிட்டு நேரில் பார்த்த திருப்தியில் பாதியிலேயே வந்துவிட்டேன்.

    அடுத்து அந்த மாநாட்டிற்கு நானும் சென்று இருந்தேன். மாநாட்டு மேடையில் அப்போது ஒருவர் முழங்கிக் கொண்டு இருந்தார். திடீரென்று மாநாட்டு பந்தல் முன்பு ஒரே சலசலப்பு. மைக் முன்பு பேசிக் கொண்டு இருந்தவர் நிறுத்தி விட்டார். ” எம்ஜிஆர் எம்ஜிஆர் ‘ என்று கத்தினார்கள். கூடவே வாழ்க, வாழ்க என்று கோஷம். அப்போதுதான் மேடைக்கு வந்தார் எம்ஜிஆர். இதுமாதிரி கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று மேடைக்கு வருவதுதான் எம்ஜிஆர் ஸ்டைல். கூடவே ஜெயலலிதா. மாநாட்டில் நடக்கவிருக்கும் காவிரி தந்த கலைச்செல்வி நாடகத்திற்காக வந்து இருந்தார்.




    அதன்பிறகு கட்சியில் எவ்வளவோ மாற்றங்கள். அரசியலில் நண்பர்களிடையே பூசல். அதிமுக பிறந்தது. எம்ஜிஆர் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சிக் கட்டிலுக்கு வரவே முடியவில்லை. எம்ஜிஆர் ரசிகனாக இருந்தாலும் நான் அவர் கட்சியில் உறுப்பினராக சேர்ந்ததில்லை.திமுக அனுதாபியாகவே இருந்தேன். இப்போது நான் எந்த கட்சி அனுதாபியும் இல்லை. ஆனாலும் நான் இப்போதும் எம்ஜிஆர் ரசிகன்தான். மனதை உற்சாகப் படுத்திக் கொள்ள எம்ஜிஆர் படப் பாடல்கள்தான .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2922
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    “தர்மம் தலைகாக்கும்!
    தக்க சமயத்தில் உயிர்காக்கும்!
    கூட இருந்தே குழிபறித்தாலும்
    கொடுத்தது காத்து நிற்கும்! – செய்த
    தர்மம் தலைகாக்கும்!

    மலைபோல வரும் சோதனை யாவும்
    பனிபோல் நீங்கிவடும்! – நம்மை
    வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
    வணங்கிட வைத்துவிடும் – செய்த
    தர்மம் தலைகாக்கும்!

    அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
    ஆனந்தப் பூந்தோப்பு! – வாழ்வில்
    நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
    நான்குமறைத் தீர்ப்பு!”

    இப்பாடல் வரிகளைப் பார்த்தோம்!

    எம்.ஜி.ஆர் என்ற நடிகருக்காக, எந்தக் கவிஞர் இப்படிப்பட்ட இதயப்பூர்வமான பாடல் வரிகளைப் படைத்தார்கள்?

    எண்ணிப் பாருங்கள்!

    எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த இயக்கம் 1967 – ஆம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், அந்த இயக்கம் எம்.ஜி.ஆர் என்ற பெறற்கரிய சக்தியால் 1971 – ஆம் ஆண்டு பெரும் வெற்றி பெற்றது.

    1972 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்; தி.மு.கழகம் எனும் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், அவர் பின்னால் அளப்பரிய மக்கள் சக்தி திரண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அவரால் உருவாயிற்று.

    திண்டுக்கல் பாராளுமன்ற இதைத்தேர்தலில் அவர் காட்டிய இரட்டை விரல் சின்னமாம் இரட்டை இலைச் சின்னம் மகத்தான வெற்றி கண்டது.

    இப்படிப் படிப்படியாக எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிகளைக் கண்டல்லவா மற்ற கவிஞர்கள், அவரது படப்பாடல்களில் அவரது புகழைக் கலந்து எழுதினார்கள்.

    ஆனால், கவியரசர் கண்ணதாசனோ, திராவிட இயக்கத்தில் தான் இருந்தபோது எழுதிய பாடல்களோடு, வசனங்களோடு, எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையை மட்டும், தான் தேசீய இயக்கத்தில் பயணித்தபோதும் மாற்றிக் கொள்ளவில்லையே!

    அங்கேதானே அந்தக் கவிஞர் தனித்துவத்தோடு இன்று நம் மனங்களில் நிற்கிறார்.

    இந்தப் பாடலில்,

    “தர்மம் தலைகாக்கும்!
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்!”

    என்ற வரிகள்,

    எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் எத்தைனை முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன?

    கால் எலும்பு முறிந்தபோது, எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டபோது, அமெரிக்காவில் புருக்ளீன் மருத்துவமனையில் இருந்தபோது….

    இப்படி எத்தனையோ முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன!

    “கூட இருந்தே குழி பறித்தாலும்
    கொடுத்தது காத்து நிற்கும்!”

    இந்த வரிகளும் உயிர் பெற்றெழுந்த உயர் வரிகள்தானே!

    மலைபோல எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனைகள் எத்தனையோ? அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது… அதுபோன்ற பல சோதனைகள்! அவையெல்லாம் பனிபோல் விலகியதை நாமும் கண்டோம்!

    அவரை வீழ்த்த நினைத்தோர்! அரசியலை விட்டே விரட்ட நினைத்தோர், அவரது வாசலில் நின்று வணங்கி பதவிகள் பெற்று உயர்ந்த பல கதைகள் இந்த உலகிற்கே தெரியுமே! அவரது தர்மம் அவரை என்றுமே காத்து நின்றது.

    அள்ளிக்கொடுத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர் நெஞ்சம், என்றும் ஆனந்தப் பூந்தோட்டமாகவே புன்னகை பூத்து நின்றது. வாழ்வில் நல்லவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல… எந்த நல்லவரும் கெடுவதில்லை.

    இது நான்கு வேதங்களின் தீர்ப்பு!… என்று கவிவேந்தர் கண்ணதாசன் சொல்லிய வாக்கு என்றுமே பலிக்கும்… தேவ வாக்காகும்.

    இதுவரையிலும் நாம் பார்த்த, கண்ணதாசன் பாடல்கள் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த, பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும் ஆகிய மூன்று திரைப்படங்களும் ஒரே சமயத்தில் சென்னை மாநகரத்தில் ஒன்பது திரையரங்குகளில், சென்னை நகரில் சிறந்த படங்கள்’ என்ற தலைப்பில், ‘எம்ஜியார் பிக்சர்ஸ் வெளியீடு’ எனும் பெயரில் ஓடி வசூலைக் குவித்த சாதனைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

    தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இம்மூன்று படங்களும் ஒரே நேரத்தில் ஓடி ஒப்பற்ற சாதனைகள்படைத்தன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

    இன்றைய நிலையில், தமிழ்க் திரையுலக வரலாற்றை, நடிகர்களின் நிலைமைகளை நினைத்து பார்த்தால்தான், வசூல் சக்கரவர்த்தி, நிருந்திய சக்கரவர்த்தி என்ற பெயர் எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமே என்ற உண்மைகளை உணரமுடியும்.

    COURTESY - Dr MGR NOOLAGAM

  4. #2923
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    MELLISAI MANNAR MSV'S SUPER TITLE MUSIC FROM SIRITHU VAZHA VENDUM - 1974


  5. Likes ainefal liked this post
  6. #2924
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    The hindu
    1965-ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படமும் சில மாதங்களுக்கும் முன் மறு வெளியீடு செய்யப்பட்டது.

    திவ்யா ஃபிலிம்ஸ் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தைவெளியிட்டனர். பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமும் சிறப்பாக ஓடி, நூறு நாட்களை இப்போது வெற்றிகரமாகக் கடந்துள்ளது.

    இன்று நடிக்கும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்பட வெளியீட்டைப் போலவே, எம்ஜிஆர் ரசிகர்கள் இந்த 100 நாள் விழாவைப் பார்த்தனர். படப்பெட்டியை எழும்பூரில் இருக்கும் ஒரு அம்மன் கோவிலில் வைத்து சிறப்புப் பூஜை செய்து, பின் அதை அரங்கிற்கு எடுத்துச் சென்றனர். இதோடு, எம்ஜிஆரின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம், பட்டாசு என இந்த நூறாவது நாள் ஒரு திருவிழாவைப் போல ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

  7. #2925
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. Thanks ainefal thanked for this post
    Likes ainefal liked this post
  9. #2926
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2927
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Dear Sailesh and other MGR fans,

    ADMK is now the ruling party in TN. AO is not running by itself and it is a forced run, that too just 2 shows a day from 2 theatres. Why was AO lifted from almost all movie halls in TN within 1 week of re-release? This forced run doesn't do any justification to MGR - an actor, a successful politician and a 3-time CM.

    I am sure Chockalingam must have incurred loss. Better luck next time.

    Regards

  11. #2928
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Mr.tacinema
    Your statement is baseless .Replying to your posting will create unnecessary issues and comparison.Mr .Chokkalingam is only one person who knows about the gain or loss and he will know entire episode of AO.

  12. #2929
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by tacinema View Post
    Dear Sailesh and other MGR fans,

    ADMK is now the ruling party in TN. AO is not running by itself and it is a forced run, that too just 2 shows a day from 2 theatres. Why was AO lifted from almost all movie halls in TN within 1 week of re-release? This forced run doesn't do any justification to MGR - an actor, a successful politician and a 3-time CM.

    I am sure Chockalingam must have incurred loss. Better luck next time.

    Regards
    Dear Tacinema,

    It is highly irrelevant on this topic at this point in time. Moreover, Why AO was lifted ..not lifted etc., has to be answered by 1) Distributor 2) Theater owners 3) Release Owners and not Mr.Sailesh and Other MGR fans.

    The Forced run or on its own run - be it justifies (or) not justifies let it not be our botheration. And, Neither MGR nor other legends, do not need any justification because the films enacted by the lead actors getting screened even now, be it is one theater or half theater, one show or half a show, is one ample proof of pudding that it is justified (or) not when many new films bites dust.

    What are we going to do if Mr. Chockalingam incurs loss (or) what is Mr.Chockalingam going to do if he incurs profit? Both have same result ! He is the person who is going to experience the result. Let us not feel happy about both the situations of Chockalingam. We pay money and see the film for our entertainment. Let us stop our commitment with that ! The rest let the stake holders take care.

    Let us not get into unwanted, provoking opinions.

    Thanks and Regards
    RKS

  13. Likes kalnayak liked this post
  14. #2930
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by tacinema View Post
    Dear Sailesh and other MGR fans,


    Regards
    Those who created unwanted criticism and false statement and who cannot tolerate the victory of AO should come in original name.
    In the meanwhile, I request the Administrator of this hub may cancel the I.D. of such elements. Please.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •