Page 85 of 400 FirstFirst ... 3575838485868795135185 ... LastLast
Results 841 to 850 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #841
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னக் கண்ணன் சார்,

    தங்களின் (என்னுள் கலந்த கானங்கள் - 2) கவிதைகளில் தமிழ் கொஞ்சுகிறது.

    ராகம் தன்னை மூடி வைத்த
    வீணை அவள் சின்னம்

    அச்சோ! மீன்,வில்,புலி போன்று வீணை அவள் சின்னமாம். கொன்னுபுட்டார் போங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #842
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    பாலா சார், சின்னக்கண்ணன் சார், மற்றும் கிருஷ்ணாஜி

    பாடல் ஆய்வுகள் அனைத்தும் அருமை

    அசத்துங்கள்

  4. #843
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    1972-ல் ஜாம்பவான்களின் வெற்றிப்படங்களுக்கு நடுவே சாமான்யர்களின் வெற்றிப்படங்களும் கம்பீரமாக உலா வந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை புகுந்த வீடு, காசேதான் கடவுளடா, குறத்திமகன் (இது ஜாம்பவான்கள் லிஸ்டில் சேருமோ) ஆகியன.

    இவற்றில் முழுநீள நகைச்சுவைப்படமாக அருமையான பாடல்களுடன் அமைந்த படம் காசேதான் கடவுளடா. அதுவரை ஸ்ரீதரின் உதவியாளாராக இருந்த சித்ராலயா கோபு இப்படத்தின் மூலம் இயக்குனரானார். முத்துராமன், லட்சுமி, மனோரமா, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், சசிகுமார், மூர்த்தி, வாசு என பெரிய நட்சத்திரப் பட்டாளம். தேங்காய் சீனிவாசனின் படங்களில் சிறப்பான இடத்தைப்பிடித்த படம். மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்தும் தித்திக்கும் தேவாமிர்தமாக காதுகளில் பாய்ந்தன.

    'அவள் என்ன நினைத்தாள் அடிக்கடி சிரித்தாள்'

    'மெல்லப்பேசுங்கள் பிறர் கேட்கக்கூடாது' (இது பற்றி தனிப்பதிவு வருகிறது)

    இப்படத்தின் பெயர் சொன்னதுமே நினைவுக்கு வரும் பாடல் 'ஜம்புலிங்கமே ஜடாதரா'. இப்படி அனைத்துப்பாடல்களுமே அருமை.

    அன்றிருந்த கவர்ச்சி நடன நடிகைகளில் எனக்கு மிகவும் பிடித்தவர் ஜெய்குமாரி. கள்ளங்கபடமில்லாத அழகிய முகம், கவர்ச்சியான உடலமைப்பு, நளினமான நடன அசைவுகள் என மனத்தைக் கொள்ளை கொண்டவர். அவரோடு தேசிய நடிகர் சசிகுமார் இணைந்து நடித்த பாடல். சசிக்கு பாடல் கிடையாது. ஜெய்குமாரி பாடுவதை ரசிப்பதோடு சரி.

    பாடல் செட்டில் எடுக்கப்பட்டதல்ல, வெளிப்புறத்திலும் எடுக்கப்பட்டதல்ல. ஒரு பூங்காவில் எடுக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட நீச்சல் உடை என்று சொல்லக்கூடிய ஷார்ட்ஸ் அணிந்திருப்பார் ஜெய்குமாரி. சசியின் உடையும் அதுபோலவே.

    கவர்ச்சி நடிகைக்கான இப்பாடலை அதிசயமாக பி.சுசீலா பாடியிருந்தார். (இதற்கு மாறாக கதாநாயகிக்கான டூயட் பாடலை ஈஸ்வரி பாடியிருந்தார்).

    இன்று வந்த இந்த மயக்கம்
    என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
    பட்டுமேனி பந்துபோல துள்ள - நீ
    பக்கம் வந்து அள்ளவேண்டும் மெல்ல
    பட்டுமேனி பந்துபோல து...ள்.....ள - நீ
    பக்கம் வந்து அள்ளவேண்டும் மெ...ல்...ல...
    இன்று வந்த இந்த மயக்கம்
    என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா

    (மெல்லிசை மன்னரின் அருமையான இடையிசை... கிடார், ட்ரம்பெட், ப்ளூட் என்று அசத்தியிருப்பார்).

    எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம்
    அங்கங்கு தொட வேண்டும் கை பதமாக
    அங்கங்கள் முழுதும் தங்கங்கள் எழுதும்
    ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக

    (படத்தில் முதலிரண்டு வரிகள் மாற்றப்பட்டிருக்கும், சென்சார் பிரச்சினையால்)

    கையோடு பூவாட்டம் எடுத்து - உன்
    மெய்யோடு மெய்யாக அனைத்து
    அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து - அந்த
    ஆரம்ப பாடத்தை நடத்து
    ஆரம்ப பாடத்தை நடத்து

    (சென்சாரில் 'ஆனந்த கீதத்தை எழுது' என்று மாற்றப்பட்டிருக்கும்)

    இன்று வந்த இந்த மயக்கம்
    என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா

    (மீண்டும் ட்ரம்ஸ் மற்றும் வயலினில் வேகமான இடையிசை துவங்கி பின்னர், ப்ளூட்டில் வேகம் குறைந்து ஒலிக்கும்).

    தட்டாமல் திறக்கும் கேளாமல் கிடைக்கும்
    எந்நாளும் உனதல்லவோ என் இளநெஞ்சம்
    சொல்லாமல் துடிக்கும் துணைதேடி தவிக்கும்
    பெண்பாவை மனமல்லவோ உன் மலர் மஞ்சம்

    சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம் - இந்த
    சொர்க்கத்தை நீ தேடி வரலாம்
    முன்னூறு முத்தாரம் இடலாம் - அதில்
    என் பங்கு சரிபாதி எனலாம்
    என் பங்கு சரிபாதி எனலாம்

    இன்று வந்த இந்த மயக்கம்
    என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
    பட்டுமேனி பந்துபோல துள்ள - நீ
    பக்கம் வந்து அள்ளவேண்டும் மெல்ல
    பட்டுமேனி பந்துபோல து...ள்.....ள - நீ
    பக்கம் வந்து அள்ளவேண்டும் மெ...ல்...ல...
    இன்று வந்த இந்த மயக்கம்
    என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா

    மெல்லிசை மன்னரின் முத்திரை இசையுடன் பாடல் முடிவு பெறும்.

    இசைக்குயில் சுசீலா மிகப்பிரமாதமாகப் பாடி அசத்திய பாடல் இது. அன்றைய ஹோட்டல் ஜுக்-பாக்ஸ்களில் ஏராளமான காசை இளைஞர்களிடமிருந்து பறித்துக் கொடுத்த பாடல். படத்திலோ ஜெய்குமாரி கவர்ச்சி வழிய வழிய ஆடி அசத்திய பாடல். என்னுடைய 'சுசீலா விருப்பம்' பட்டியலில் முதல் இருபதுக்குள் வரும் பாடல்.

    நண்பர்களே.... வீடியோ ப்ளீஸ்......

  5. Likes chinnakkannan liked this post
  6. #844
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகத்திடம் என்னவொரு பவ்யம்!

    தானே உலகாகி (சுலீலாம்மா இந்த வார்த்தையை எடுக்கும் அழகு) தனக்குள்ளே தான் அடங்கி
    மானக் குலமாதர் மஞ்சள் முகம் காத்து

    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes chinnakkannan liked this post
  8. #845
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Karthik Sir

    namkkaga




    '

  9. #846
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னுள் கலந்த கானங்கள்..3

    மரபுப் பாடல்களில் கவிஞர் கண்ணதாசன் எப்போதுமே அசத்தல் தான்..

    எளிமைச் சொல்லாட்சி ஏற்றமிகு பொருளாட்சி
    ..எண்ணம் விளைத்திட்ட கற்பனையின் கண்காட்சி
    வலிமைத் தமிழாட்சி வண்ணமிகு வார்த்தைகளை
    ..வாகாய்த் தொடுத்திட்ட தோரணத்தின் எழிலாட்சி
    களிக்கும் மன்மதுவும் கண்டுவந்து போற்றுவதும்
    ..கவிஞர் தாம்நமக்கு வழங்கியசொல் தேனாட்சி
    பிழிந்தே சாறெடுத்து நம்மொழியில் சுவைகொடுத்து
    ...பேணிப் போற்றிவைத்த கண்ணதாசன் அரசாட்சி..

    (சரியா வந்திருககா தெரிலை..ஜஸ்ட் எழுதிப் பார்த்தேன் )

    ஸோ கவிஞரின் சொல்லாட்சி மிக்க இந்தப் பாடலில் படத்தில் தோற்றம் தரும் பத்மினியின் நடிப்பாட்சி..

    **

    நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
    மீனாட்சிஎன்ற பெயர் எனக்கு- கங்கை
    நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
    விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

    கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலைக் காஞ்சிதன்னில்
    காமாட்சி என்ற பெயர் எனக்கு- கொடும்
    கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
    கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

    ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும்
    அது நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும் - நிற்கும்
    ஊர் மாறிப்பேர் மாறி கரு மாறி உரு மாறி
    ஒன்றே ஓம் சக்தி என உரைக்கும்..

    **

    ஆதிபராசக்தியில் பல அழகிய பாடல்கள்..நிறையச் சொல்லலாம்..

    பின்ன வாரேன்
    Last edited by chinnakkannan; 24th June 2014 at 04:49 PM.

  10. #847
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //கையோடு பூவாட்டம் எடுத்து - உன்
    மெய்யோடு மெய்யாக அணைத்து // சமீபத்தில் (போனவாரம்) இந்தப் படத்தைப் பார்த்தேன்..அப்போதே உஙக்ள் நினைவு வந்தது கார்த்திக் சார்..
    தி.பெ. வீடியோவுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் வாசு சார்..ம்ம் எனக்கு விப்ர நாராயணரைத் தான் பிடிக்க்கும்

  11. #848
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கார்த்திக் சார்
    கண்ணிய பாடகி சுசீலாவின் குரல் இனிமை
    உங்கள் போஸ்ட்
    என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
    gkrishna

  12. #849
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கார்த்திக் சார்,

    'இன்று வந்த இந்த மயக்க'த்தை எழுதி இன்ப அதிர்ச்சி அளித்து விட்டீர்கள். என்னா ஒரு அலசல் அதுவும் இளமை கொப்பளிக்க கொப்பளிக்க! புகுந்து விளையாடி விட்டீர்கள். ஜெயகுமாரி என்னுடைய மனம் கவர்ந்த டான்சர். வழக்கம் போல உங்களுக்கு பிடித்த மாதிரியே. அப்புறம்தான் எல்லாம். (இனிமேல் ஆச்சரியமே படக்கூடாது போல!)

    (ஜெயகுமாரி பற்றி அப்புறம் விவரமாக வருகிறேன்)

    இனி தணிக்கைக் குழு இப்பாடலில் ஆட்சேபித்த வரிகளையும், பின் அவை மாற்றப்பட்டபின் வந்த வரிகளையும் இப்போது முழுதாகப் பார்க்கலாம்.


    'எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம்'

    என்ற வரிகள்

    'எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம்'

    என்றும்

    'அங்கங்கு தொட வேண்டும் கை பதமாக'

    வரிகள்

    'அங்கங்கு வர வேண்டும் என் நிழலாக'

    என்றும்

    'அங்கங்கள் முழுதும் தங்கங்கள் எழுதும்'

    வரிகள்

    'அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்'

    என்றும்

    'கையோடு பூவாட்டம் எடுத்து - என்னை
    நெஞ்சோடு நெஞ்சாக அணைத்து'

    வரிகள்

    'கையோடு பூவாட்டம் எடுத்து - என்னை
    மெய்யோடு மெய்யாக அணைத்து' (அதாவது உடம்போடு உடம்பாகவாம்)

    என்றும்

    'அஞ்சாறு கிண்ணங்கள் கொடுத்து
    அந்த ஆரம்பப் பாடத்தை நடத்து'

    வரிகள்

    'அஞ்சாறு கிண்ணங்கள் கொடுத்து
    நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது'

    என்றும் மாற்றப்பட்டது.

    அடுத்த பகுதி

    தட்டாமல் திறக்கும்
    கேளாமல் கொடுக்கும்
    எந்நாளும் உனதல்லவோ
    என் இளநெஞ்சம்

    துயிலாமல் இருக்கும்
    துணை தேடித் தவிக்கும்
    பெண்பாவை மனமல்லவோ
    உன் மலர் மஞ்சம்

    சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம் - இந்த
    சொர்க்கத்தை நீ தேடி வரலாம்
    முன்னூறு முத்தாரம் இடலாம் - அதில்
    என் பங்கு சரிபாதி எனலாம் - அதில்
    என் பங்கு சரிபாதி எனலாம்

    என்று வரும்.

    எனக்குத் தெரிந்தவற்றை இங்கு எழுதியுள்ளேன்.

    இன்னும் மாற்றங்கள் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. (இருந்தால் கிருஷ்ணாஜி விடவா போகிறார்)
    Last edited by vasudevan31355; 24th June 2014 at 01:30 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes chinnakkannan liked this post
  14. #850
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்..மாற்றாத வரிகளைத் தான் நான் கேட்டதாக நினைவு..ஆனால் விஸ்தாரமாக எழுதியிருப்பதைப் படிக்கும்போது..இங்கு வந்த இ ம என்னை எங்கெங்கோ கொண்டு செல்லுதய்யா

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •