-
24th June 2014, 04:27 PM
#881
Senior Member
Devoted Hubber
-
24th June 2014 04:27 PM
# ADS
Circuit advertisement
-
24th June 2014, 05:21 PM
#882
இருளும் ஒளியும் 1971
புட்டண்ணா கனகல் டைரக்ட் செய்த படம் .இவர் நிறைய கன்னட படம் டைரக்ட் செய்து உள்ளார்
பாரதி ராஜா இவர்ட்ட அச்சிச்டன்ட் டைரக்டர் ஆக வேலை செய்தார் என்பார்கள் .
ஈஸ்ட்மேன் கலர் படம்
(கார்த்திக் சார் பாஷையில் சொல்வது என்றால் 5000 சிவாஜி )
ஏவிஎம் ராஜன்,முத்துராமன்,வாணிஸ்ரீ (டபுள் ரோல்),நாகேஷ்,
ரங்கராவ்,நாகையா நடித்து வெளி வந்தது
ஒரு வாணிஸ்ரீ கொஞ்சம் மாடர்ன் டைப் .எல்லா ஆண்களையும் தன வலையில் விழ வைக்கிற டைப். முத்துராமன் இவரை நம்பி வீணா போய் தற்கொலை செய்து கொள்வார் .இதனால் ஏவிஎம் ராஜன் இந்த வாணிஸ்ரீ மீது வெறுப்பு கொள்வார். இதே நேரத்தில் அவருக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்வார்கள். அந்த பெண் இன்னொரு வாணிஸ்ரீ
ரொம்பவும் அடக்கம் ஏவிஎம் ராஜனுக்கு குழப்பம்.
இறுதியில் வழக்கம் போல் மாடர்ன் டைப் வாணிஸ்ரீ செத்து போவர் என்று நினைக்கிறன் .
மாமா இசை musical ஹிட் வீணை எல்லா பாடல்களிலும் கொஞ்சி விளையாடும்
பாட்டு எல்லாம் ரொம்ப ச்வீட் ஆக இருக்கும்
1. ஹே ஹே mr ப்ரம்ஹச்சரி ஹே ஹே ஒரிஜினல் பிரமஹச்சரி
நான் கட்டிக்கொண்டு பாடினால் உன்னை ஒட்டிக்கொண்டு பாடினால்
நாளை முதல் சம்சாரி ஹோ i am வெரி சாரி
(எங்கள் தங்க ராஜா - சாமியிலும் சாமி இது ஊமை சாமி பாட்டை நினவு படுத்தும் )
2. வானிலே மண்ணிலே வளியிலே ஒளியிலே
எல்லாம் நீ தானம்மா செல்வம் நீ தனம்மா
உன் மார்பிலே என்னை சீரட்டம்மா
உன் மடியிலே என்னை தலாட்டம்மா .. அம்மா
(சுசீலா excellant ஹம்மிங் உடன் )
இந்த பாட்டின் முதல் வரியை கண்ணதாசன் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் இருந்து சுட்டது என்று நா காமராசன் ஒரு அரங்கத்தில் கூறியது
நாவுக்கரசரின் தேவாரம்
"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமும் ஆய் இன்மையும் ஆய்
கோனாகி யான் எனது என்று அவர் அவர்ஐ
கூதாட்டுவானக்கி நின்றே என் சொல்லி வாழ்த்துவனே "
3. திருமகள் தேடி வந்தாள் - சுசீலா ஒரு தடவையும்
மற்றும் பாலா ஒரு தடவையும் (அருமையான மெலடி )
இந்த பாடலின் இணை இசை ரொம்ப அருமையாக
பாடல் வரிகளை சாப்பிடாமல் அடங்கியே வரும்
இது பாலாவின் மெலடி வித் excellant ஹம்மிங்
திருமகள் தேடி வந்தாள் ஆ.ஆஆஆ
என்தன் இதயத்தில் குடி புகுந்தாள் ஆஆ ஆஆஆ
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ
திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ.
திருமகள் தேடி வந்தாள்
ஆஆ..... ஆஆஆ
மஞ்சள் தந்தவள் விசாலாட்சி நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி எங்கள் குடும்பத்தில் தேவியுன் அரசாட்சி
திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ
திருமகள் தேடி வந்தாள்
ஆஹாஹா அ ஆஹாஹா ஆஹஹஹா ஹ ஹாஆஆஆ (ஹம்மிங் by ப.வசந்தா or சுசீலா )
இந்த சரணத்தில்
பாலாவின் "கனிவாய் " என்று நிறுத்தி பாடும் அழகு
திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
தென் திருப்பழனியின் தேன் குடங்கள்
கனிவாய் மொழிதரும் வாசகங்கள் - என்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
திருமகள் தேடி வந்தாள்
சுசீலா மெலடி - புதுமனை புகு விழாவின் போது
(வாணிஸ்ரீயின் பாந்தமான நடிப்பு )
(சுற்றிவர குமரி ருக்மணி தெலுகு நிர்மலம்மா என்று கும்மி அடித்து
இருப்பார்கள் அதிலும் ஒரு சரணத்திற்கு முன் குமரி ருக்மணியிடம்
நிர்மலம்மா வாணிஸ்ரீ யை காண்பித்து அவர் அழகை வர்ணிக்கும்
முக குறிப்பு உடனே குமரி ருக்மணியின் பூரிப்பு - நல்ல காட்சியமைப்பு
திருமகள் தேடி வந்தாள்
இன்று புது மனை குடி புகுந்தாள்
குலமகள் குங்குமத்தில்
தேவி கோயில் கொண்டாட வந்தாள்
தேவி கோயில் கொண்டாட வந்தாள்
வடதிசை காவல் விசாலாட்சி
இங்கு தென் திசை காவல் மீனாட்சி
மேல் திசை காவல் காமாட்சி
எங்கள் கீழ் திசை காவலில் அரசாட்சி
திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
தென் திருப்பழனியின் தேன் குடங்கள்
இல்லத்தில் என்றும் நிறைந்து இருக்க
எங்கள் உள்ளத்தில் புன்னகை மலர்ந்து இருக்க
மங்கல மங்கையர் குங்குமமும்
அவர் மஞ்சளும் தாலியும் மனையறமும்
பொங்கி நலம் பெற அருள் புரிவார்
எங்கள் புது மனை வாழ்வில் வளம் தருவாள்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th June 2014, 05:22 PM
#883
Senior Member
Devoted Hubber
நெஞ்சம் மறப்பதில்லை..
பாடலில் சுசிலாவின் குரல், ஒரு பெண்ணின் ஏக்கத்தை, அன்பின் தவிப்பை நுட்பமாக வெளிப்படுத்தும். பெண் நூறு சதவீதம் உணர்வுகளால் நிரம்பியவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, பாடலின் துவக்கதிலும், ‘நெஞ்சம் மறப்பதில்லை…’ என்ற வரியை தொடர்ந்தும் வருகிற அந்த ஹம்மிங், அய்யோ… வாய்ப்பே இல்ல.. No chance.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th June 2014, 05:32 PM
#884
Senior Member
Senior Hubber
இருளும் ஒளியும் சில மாதம் முன்பு தான் பார்த்தேன்..அவ்வளவாய் வாணி சுவாரஸ்யமாய் இல்லை..மிக்க ஏமாற்றம்..கடைசியில் கெட்ட வாணி பொசுக்கென்று செத் போவதும்.. பாடல்கள் குட்.. நினைவு படுத்தியமைக்கு நன்றி கிருஷ்ணா சார்..
பாலா சார்.. நெஞ்சம் மறப்பதில்லை என்று தேவிகாவெல்லாம் நினைவு படுத்தக் கூடாது..பாப்பா பாவம் (அடியேன் தான்)
-
24th June 2014, 05:39 PM
#885
Senior Member
Senior Hubber
என்னுள் கலந்த கானங்கள் 5
அருளும் அணியாய் முறுவல் முகத்தில்
..அணையாச் சுடராய் மிளிர்ந்தே ஒளிரும்
புருவம் வளைந்தே அழகாய் விரிந்தே
..புவனம் த்னையே சிரித்தே மயக்கும்
சிறுவன் எனவே நினைத்தால் மிகவும்
..சிறப்பாய்த் தகப்பன் குறையை அகற்றும்
குருவே முருகா உனையே பணிந்தேன்
..கொடுப்பாய் பணிவும் அறிவும் அறமும்..
ஹை..எஸ்.. முருகன் பாட்டுத் தான்..ஆனால் பாடுவது சுசீலா என்ற இசைக் குயில் ப்ளஸ் கண்ண தாசன்..
ம்ம் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பாடல்..பட்த்தில் கே.ஆர்.வி என நினைவு பஞ்சவர்ணக் கிளி இன் ப்ளாக் அண்ட் ஒயிட்..
முருகன் மேல் ஆசைப் பட்ட் அந்தப் பொண் என்ன்ன்னு பாடறா.. பன்னிரண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை...
*
சத்தியம் சிவம் சுந்தரம் ஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ...
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...
**
முருகா டச் பண்ணினவுடன் இன்னும் அழகாய்டறாளாம்.. நைஸ் இல்லியோ..
பின்ன வாரேன்
-
24th June 2014, 05:52 PM
#886
Senior Member
Devoted Hubber
வாணிஸ்ரீ , தேவிகாவையும் நினைவு படுத்தாமல் ஒரு சாகவரம் பெற்ற பாடல் . அன்றும் , இன்றும் , என்றும்
Can any one upload Video of this song.
படம்: ஒரு குடும்பத்தின் கதை - 1975;
இசை: ஷங்கர் கணேஷ்;
பாடல் வரிகள்:- வாலி;
பாடகர்கள்: K.J.யேசுதாஸ், B.S.சசிரேகா;
மலை சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா.. துணை நீயல்லவா
அன்பு கீதம் நாம் பாடும் நாள் அல்லவா
ஈரேழு ஜன்மதின் பந்தம் இது - ஒரு
இழை கூட பிரியாத சொந்தம் இது
தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது -எந்தன்
திருவீதி வழி தேடி தேர் வந்தது
தொடும் உறவானது தொடர் கதையானது
இந்த நாதம் கலையாத இசையானது (மலை)
பனி தூங்கும் மலரே உன் மடி என்பது - இரு
கனி தூங்கும் தேன் திராக்ஷை கொடி என்பது
நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது - அதில்
நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
விழி சிரிக்கின்றது.. கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது
-
24th June 2014, 05:55 PM
#887
Senior Member
Diamond Hubber
சின்னக் கண்ணன் சார்,
உங்க 'லத்து' கிருஷ்ணா சாரை ரொம்பவே பாதிச்சுடுத்து போல. சிலாகிக்கிறார்.
இன்னும் நீங்க வச்சி இருக்குற பட்டப் பெயரையெல்லாம் கேட்டா என்ன ஆவாரோ!
ஆமாம்! வாணிஸ்ரீக்கு என்ன 'வானு'வா?
-
24th June 2014, 06:00 PM
#888
Senior Member
Diamond Hubber
சின்னக்கண்ணன் சார்
ரசிச்சேன் ரொம்ப.
அழகன் முருகனிடம் ஆசை வச்சவங்க கூட கம்மி
ஆனா அந்தப் பாட்டு மேல ஆசை வச்சவங்க அதிகம்.
ரொம்ப அழகா துவனி அழகா முடிச்சிறிக்கீங்க.
'பின்ன வாரேன்' (நன்னாயிட்டு)
வழி பார்த்திருப்பேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th June 2014, 06:15 PM
#889
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,

நாலே வரியில் இவ்வளவு ஸ்வீட்டா ஷார்ப்பா இருளும் ஒளியும் பற்றி எழுதி விமர்சனம் பண்ணிட்டீங்களே! (அதுக்கு மேல அதுல ஒன்னும் இல்ல)
ஆனா பாடல்களை ஒத்துக்கணும்.
மாமா நல்லா ஒத்துழைச்சி இருப்பார்.
'ஹே ஹே மிஸ்டர் பிரம்மச்சாரி' முடிந்தவுடன் டடடங் டடங் பேஸ் கிடார் இன்னும் கொஞ்சம் வராதான்னு இருக்கும். எனக்கு ரொம்ப பிடித்த இடம் அது.
ஆனால் வாணிஸ்ரீ 'you know ... you know' ன்னு ரொம்ப ஓவர். தாங்க முடியாது. அந்த குருவிக் கூட்டுத் தலையை விடவே மாட்டார்.
பூசணிக்காய் வெடிச்சு விடும் பாருங்க முற்றிப் போய். அது மாதிரி நம் நடிப்புச் சுடர் முகம் எப்ப சைடில கிருதாவுக்குப் பக்கத்துல அகலமாகி வெடிச்ச்சுடுமோன்னு பயமா இருக்கும். (புதுக்கோட்டைகாரங்களுக்கு அப்படித்தான் கன்னம் உப்பி இருக்குமாம். காதல் மன்னன், ராஜன் என்று)
அவர் எல்லாப் படத்திலேயும் ஒன்னு இழுப்பார்.. எ...ன்..ன... சொ...ல்..ற...? யப்பா!
எல்லாமே இருள் ஒளி மாமா.
Last edited by vasudevan31355; 24th June 2014 at 06:22 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
24th June 2014, 06:21 PM
#890
Senior Member
Senior Hubber
//ஆனால் வாணிஸ்ரீ 'you know ... you know' ன்னு ரொம்ப ஓவர். தாங்க முடியாது. அந்த குருவிக் கூட்டுத் தலையை விடவே மாட்டார்.// அட ஆமாம் வாசு சார்.. அந்தத் தலை ரொம்பவ்வே இரிடேட் பண்ணும்..வாணுன்னு சொல்லலாம் தான்..
நன்றி தங்கள் பாராட்டுக்கு.. நிறைய எழுதணும்..பார்க்கறேன்
Bookmarks