-
24th June 2014, 06:23 PM
#891
Senior Member
Senior Hubber
//பாடகர்கள்: K.j.யேசுதாஸ், b.s.சசிரேகா;// நல்ல பாட்டு பாலா சார்.. ரேடியோவில் கேட்டு க் கேட்டு மனனம் ஆன பாட்டு..ஆமா படத்துல யாராக்கும் பாடியிருப்பாங்க..
-
24th June 2014 06:23 PM
# ADS
Circuit advertisement
-
24th June 2014, 06:45 PM
#892
Senior Member
Diamond Hubber
பாலா சார்,
அருமையான எல்லோருக்கும் பிடித்த படலை மீண்டும் நினைவு படுத்தி உள்ளீர்கள். அப்போது இந்தப் பாடல் செம ஹிட்.
இதே படத்தில் சுசீலாவின் கண்ணீர் சிந்த வைக்கும் அருமையான பாடல் ஒன்று உண்டு
சந்தோஷமாக வாழ்ந்த தன் அக்காள் இறந்து போகிறாள். அந்தக் குடும்பத்தை சுமக்க வேண்டிய பாரம் அவள் தங்கை மேல் விழுகிறது. அவளுக்கும் சின்னவள் பருவ வயது காரணமாக காதல் கனவு கண்டு தூக்கத்தில் சிரிக்கிறாள். தூக்கமே வராமல் தவிக்கும் பாரத்தை சுமக்கும் தங்கை தன் செல்லத் தங்கையை மடியில் கிடத்தி மனம் வெதும்பி தவிக்கையில் இந்தப் பாடல்.
10 மாதத்தில் தாய் சுமக்கும் பாரத்திலிருந்து விடுபட்டாள். தந்தை தான் இருக்கும் வரை குடும்ப பாரத்தை சுமந்தான். அக்காளின் கணவன் நல்லவன். ஆனால் அக்காள் இறந்தபின் அவனுக்கு எது வேலை? இனி குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு தங்கையுடையதுதானே!
சோகத்தை சுசீலாவின் குரல் என்னமாய் பிரதிபலிக்கிறது?
தங்கையாக சுமித்ரா குடும்ப பாரத்தை சுமப்பார் என்று நினைவு. சின்ன வயதில் பார்த்தது. முத்துராமன், நந்திதா போஸ் இருப்பார்கள் என்றும் நினைக்கிறேன்.
சோகம் பிழியும் படம்.
பாடலைப் பார்ப்போம்.
கற்பனையில் மிதந்தபடி
கனவுகள் வளர்ந்தபடி
கண்ணுறங்கும் பருவக்கொடி
சிரிக்கிறாள்
இவள் காவலுக்கு நின்ற கொடி
கண்ணுறக்கம் மறந்தபடி
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
தாயாரின் சுமை எல்லாம்
ஐயிரண்டு மாதம் வரை
தந்தையின் சுமை எல்லாம்
தான் இருந்த காலம் வரை
மன்னவன் சுமையெல்லாம்
மூத்தவள் வாழ்ந்தவரை
சின்னவள் சுமைகளெல்லாம்
எத்தனை காலம் வரை
தொட்டு தொட்டு எத்தனையோ
தொல்லைகள் வந்ததம்மா
கட்டுப்பட்டு அத்தனைக்கும்
கன்னிமனம் நின்றதம்மா
பட்டவரை போதுமென்று படைத்தவன் விடுவானோ
இல்லை இல்லை என்றவன் நினைப்பானோ
கற்பனையில் மிதந்தபடி
கனவுகள் வளர்ந்தபடி
கண்ணுறங்கும் பருவக்கொடி
சிரிக்கிறாள்
இவள் காவலுக்கு நின்ற கொடி
கண்ணுறக்கம் மறந்தபடி
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
கண்ணீரில் நனைந்தபடி துடிக்கிறாள்
Last edited by vasudevan31355; 24th June 2014 at 06:50 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
24th June 2014, 07:13 PM
#893
Senior Member
Veteran Hubber

Originally Posted by
gkrishna
(கார்த்திக் சார் பாஷையில் சொல்வது என்றால் 5000 சிவாஜி )
ஏவிஎம் ராஜன்,
ரொம்ப அநியாயம். இந்த வார்த்தையை நான் சொல்லவேயில்லை. இதே திரியில் வேறு யாரோ சொன்னதை நானும் படித்தேன்.
-
24th June 2014, 07:22 PM
#894
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார், & பாலா சார்,
ஒரு குடும்பத்தின் கதை படத்தில் இடம்பெற்ற அருமையான இரண்டு பாடல்களை ஆளுக்கொன்றாக அலசித் தள்ளிவிட்டீர்கள். இவைகளைக் கேட்டு / பார்த்து பல ஆண்டுகளாகி விட்டன. நம்ம சேனல்கள் தான் கடிவாளம் கட்டிய குதிரைகளாக இருக்கின்றனரே.
அபூர்வ பாடல்களை அலசிய இருவருக்கும் நன்றி.
டியர் சின்னக்கண்ணன்,
அழகன் முருகனிடம் பாடல் விவரிப்பு நன்றாக உள்ளது. தேவிகாவை நினைவுபடுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு, விஜயாவை மட்டும் நினைவுபடுத்தலாமாக்கும். அதுசரி, அந்தப்பாடலில் விஜயாவை யார் பார்த்தது. கண்கள் முழுக்க விஜயலட்சுமி மீதுதான் மொய்த்திருந்தன.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th June 2014, 07:34 PM
#895

Originally Posted by
mr_karthik
ரொம்ப அநியாயம். இந்த வார்த்தையை நான் சொல்லவேயில்லை. இதே திரியில் வேறு யாரோ சொன்னதை நானும் படித்தேன்.
sorry karthik sir
நமது இந்த திரியில் நீங்கள் சொன்னது போல் நானும் படித்த நினவு
தயவு செய்து உங்களை hurt செய்ததாக நினைத்து விடாதீர்கள்
ஒரு குடும்பத்தின் கதை
இந்த படத்தில் இன்னொரு பாட்டும் ஒன்னு நினவு உண்டு சார்
பாலாவின் குரலில் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் பாடல்
ஒரு குடும்பத்தின் கதை இது
அன்பு கரங்களால் வரைந்தது
பாட்டுக்கு நடுவில் பாலாவின் ச்வீட் குரலில் ஒரு விடுகதை வரும்
மனிதனுக்கு எத்தனை கண்கள்
இரண்டு
இல்லை 23
என்ற பாடலும் மிக நன்றாக இருக்கும்
-
24th June 2014, 07:47 PM
#896
5000 சிவாஜி என்பது பார்த்தசாரதி சார் சொன்னது
49வது பக்கத்தில் இருக்கிறது
மன்னிக்கவும் கார்த்திக் சார்
-
24th June 2014, 07:49 PM
#897
Junior Member
Platinum Hubber
அழகன் முருகனிடம் பாடல் விவரிப்பு நன்றாக உள்ளது. தேவிகாவை நினைவுபடுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு, விஜயாவை மட்டும் நினைவுபடுத்தலாமாக்கும். அதுசரி, அந்தப்பாடலில் விஜயாவை யார் பார்த்தது. கண்கள் முழுக்க விஜயலட்சுமி மீதுதான் மொய்த்திருந்தன
100% -you are correct karthik sir
-
24th June 2014, 07:59 PM
#898
Senior Member
Veteran Hubber
டியர் கிருஷ்ணாஜி,
இருளும் ஒளியும் படத்தைப்பற்றிய நியாயமான விமர்சனம். சுமார் படமானாலும் பாடல்களால் பிடித்திருந்தது. இருவேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட வாணிஸ்ரீ (செல்லப்பெயர் என்ன வாணுவா, இப்படி பெயர் வைப்பதைவிட வாணிஸ்ரீ என்றே சொல்லிவிட்டுப்போகலாம்) ரொம்ப மெனக்கெட்டிருப்பார். அந்த வருடம் சிறந்த நடிப்புக்காக பரிசெல்லாம் வாங்கினார், இந்தப்படத்துக்காக.
-
24th June 2014, 08:06 PM
#899
Senior Member
Veteran Hubber
டியர் வினோத் சார்,
காசேதான் கடவுளடா படத்தின் இரண்டு பாடல்களின் வீடியோவை உடனே அளித்து சிறப்பு சேர்த்ததற்கு மிக்க நன்றி.
-
24th June 2014, 08:20 PM
#900
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
மகராஜா வந்தான்
என் வாசல் தேடி
மழை மேகம் போலே
மலர் என்னை நாடி
சொந்தம் பந்தம் இன்பம் துன்பம்
எல்லாமே உன்னால்தானய்யா
சுசீலா பின்னும் இந்தப் பாடலும் 'ஒரு குடும்பத்தின் கதை' படத்தில்தானே சார்?
அருமையான மெலடி.
Bookmarks