நடிகர் மற்றும் மக்கள் திலகலுக்கு தனி திரியே இருக்கிறது. எனவே அவர்களுடைய படங்களின் பாடல்களை அவர்களுடைய திரியிலே பதிவு செய்வதால், அங்கே பதிவு செய்யாத / விமர்சிகதா பாடல்களை இங்கே பதிவு செய்யலாமே
பின்வரும் கடிதம் இன்று காலையில் நண்பர் திரு s b காந்தன் (ஜெர்ரி பட டைரக்டர் மற்றும் நடிகர் மௌலியின் சகோதரர் )
அவர்களிடம் இருந்து ஜிமெயில் மூலமாக வந்த ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்
கண்ணதாசன் ஒரு சகாப்தம்
திரைப்பாடல்களில் ஒருவரியிலேயே திரைக்கதையைச் சுருக்கித் தரும் திறமையும், வளமான சொல்லாட்சியும், வற்றாத கற்பனை ஊற்றும்.. கண்ணதாசன் ஒரு சகாப்தமாக வாழ்ந்தார்.
கதையின் நாயகன் ஓவராக செலவு செய்து மனைவி, மக்கள், உற்றார், உறவினர், தாய், சுற்றம் என்று வெறுத்து காசில்லாமல் கடனாளியாகி, வீட்டை விட்டே ஓடி விடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் பெண் அவனிடத்தில் ஆசை கொண்டு விரகதாபத்தில் பாடுகிறாள். அவன் தான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை என்று அவள் உறவுக்கு மறுத்து சாமியார் ரேஞ்சில் பதில் அளிக்கிறான். இறுதியில் கதாநாயகனைப் போல் தோற்றம் கொண்ட இன்னொருவன் கதாநாயகன் இடத்திற்கு வந்து அவன் கடனையெல்லாம் அடைத்து வாழ்க்கை வாழ்வதற்கே என்று கதாநாயகனுக்குப் புரிய வைக்கிறான் கண்ணியமாக.
இரு வேடங்களிலும் ராஜன். ராஜனின் நாடகக் குழுவால் நாடகமாக நடத்தப்பட்டு திரைப்படமானது.
'கல்யாணமாம் கல்யாணம்' என்ற சென்சாரின் வயற்றில் புளி கரைத்த பாடல் ஒன்று உண்டு
இந்தப் பாடலில்
'காலம் பார்த்து கர்ப்பத்துக்கு தடை விதிச்சாங்க' (சிவப்பு முக்கோணம் சுவர்களில் வரைந்த சமயம்) வரிகள் 'உற்பத்திக்கு தடை விதிச்சாங்க' என்று மாற்றப்பட்டது.
மனோரமா துக்ளக் ஜோடி. மனோரமா சினிமா பாட்டு பிரியை. தொட்டதற்கெல்லாம் சினிமாப் பாடல்கள் பாடி சோவை சித்ரவதை செய்வார். நம்மை அல்ல.
சைலஸ்ரீ என்ற அழகான கன்னட நடிகை ஒருவர் இருந்தார். அவர்தான் 'மாலை நேரத்து மயக்கம்' தந்தவர். அழகாக இருப்பார். அப்போது அவருக்கு ஆஷா என்று பெயர். 'பேசும்படம்' புத்தகத்தில் பார்த்திருக்கிறேன்.('வெண்ணிற ஆடை' படத்தில் மூர்த்தியுடன் 'அல்லிப் பந்தல் கால்கள் எடுத்து ஆட்டம் ஆடிட வா' என்று ராட்சஸி குரலில் அட்டகாசமாக ஆடுவாரே அவரேதான்)
ராஜன் வழக்கம் போல. ஆனால் இரு வேடங்கள்.
'அவனவன்' தலையெழுத்து என்ற பாடல் ஒன்றும் உண்டு. ராஜனுக்கு பாடகர் திலகம் பாடுவார். (பைத்தியக்கார தொனிப் பாடல்)
'மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்'
'மக்கு மாப்பிள்ளே!
என்று.
அப்புறம் மனோரமா பாடும் 'போகாதே அய்யா போகாதே' சங்கீதப் பாடல் கேட்டு சோ அழுவார். பதிலுக்கு வேறு பாடுவார். புதுக் கோட்டை ரங்கராஜன் என்பவர் சோவுக்கு பின்னணி கொடுத்ததாகப் படித்திருக்கிறேன்.
'உன்னை என்னால் திருத்த முடியாதம்மா'
கண்ணதாசனைப் பற்றி சொல்லவா வேணும்!
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசை. 'இது மாலை நேரத்து மயக்கம்' தந்து அந்த ஒரு பாடலில் எங்கேயோ போய் விட்டார்.
எப்படியோ 'தரிசனம்' பற்றி தெரிந்ததை சொல்லியாயிற்று.
Bookmarks