-
30th June 2014, 03:19 AM
#3731
Junior Member
Newbie Hubber
முரளி,
Closed Thread
Page 305 of 305 FirstFirst Previous ... 205255295303304305
Results 3,041 to 3,049 of 3049
Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor
எங்கள் வேண்டுகோளை ஏற்று 305 பக்கங்களை கடந்த இந்த திரியை பாகம்-13 ஆக அறிவித்து, அடுத்த திரியை பாகம்-14 ஆக தொடங்க வேண்டும். தயவு செய்து administrator களிடம் பேசி,நல்ல முடிவை சொல்லுங்கள். தொடங்கி வைக்க போவது நம் super star ரவிகிரண் சூர்யா தான்.
-
30th June 2014 03:19 AM
# ADS
Circuit advertisement
-
30th June 2014, 03:58 AM
#3732
Junior Member
Veteran Hubber
அன்பு ரவி. படித்தபேதைகளை விடபடிக்காத மேதைகளே இத்திருநாட்டுக்கு மகத்தான சேவை செய்து மக்கள் மனதில் நிரந்தர இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளனர். பெருந்தலைவர் காமராஜரும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் நம் வாழ்வில் கண்கூடாக வாழ்ந்து மறைந்த படிக்காத மேதைகளே. உங்கள் எழுத்துநடை மெருகேறி இத்திரியின் மாதிரி எழுத்துச்சித்தராக திரிந்தமைக்கு (மாற்றம் கண்டமைக்கு) மனம்நிறைந்த அதிரி புதிரி வாழ்த்துக்கள்
Last edited by sivajisenthil; 30th June 2014 at 04:21 AM.
-
30th June 2014, 07:12 AM
#3733
Senior Member
Devoted Hubber
அன்பு நண்பர் ரவி
படிக்காத மேதை பதிவு அசத்தலாக எழுதியுள்ளீர்கள்
கட்டத்துக்கு கட்டம் ரசித்து அனுபவித்தது எழுத்தில் தெரிகிறது
உங்கள் எழுத்திலும் மெருகேற்றம் தெரிகிறது
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
-
30th June 2014, 08:08 AM
#3734
Senior Member
Devoted Hubber

Originally Posted by
g94127302
ஒரு சின்ன வேண்டுகோள் - மிகவும் நேரம் எடுத்துகொண்டு ரங்கனை எனக்கு முடிந்த அளவில் அலங்காரம் செய்திருக்கிறேன் - பிழைகள் அதிகம் இருக்காது என்றும் நம்புகிறேன் - தயவு செய்து சற்றே டைம் space கொடுத்து மற்ற பதிவுகள் இங்கு வந்தால் என்
பதிவை ஒருவராவது முழுமையாக படித்திருப்பார் என்று எண்ணி எனது அடுத்த முயற்ச்சியில் இறங்குவேன் - நன்றி
முழுமையாக படித்தேன் ரவி
படிக்காத மேதை பதிவு அசத்தலாக எழுதியுள்ளீர்கள்
திருத்தும் ஒவ்வாருவரையும் தன்னால் தான் திருந்துகிறார்கள் என்று சொல்லாமல் - மாமா வின் குழந்தைகள் எல்லோருமே கெட்டவர்கள் அல்ல என்று சொல்லும் அந்த பரந்தன்மை யாருக்கு வரும்?
வேறு ஒரு நடிகர் நடித்திருந்தால் தன்னால்தான் திருந்தியதாக காட்சி அமைக்க கேட்டிருப்பார்
Last edited by sivaa; 1st July 2014 at 08:16 AM.
-
30th June 2014, 08:32 AM
#3735
Junior Member
Seasoned Hubber
Dear Ravi Sir,
Padikaatha Methai is a gem of a movie , your writing makes us to watch the gem once again, marked positive change , superb sir
-
30th June 2014, 08:45 AM
#3736
Junior Member
Seasoned Hubber
Dr.Sivva sir
[QUOTE=sivaa;1143966]முழுமையாக படித்தேன் ரவி
படிக்காத மேதை பதிவு அசத்தலாக எழுதியுள்ளீர்கள்
இப்படியான சில எழுத்துப்பிழைகள் பெரிய குறை அல்ல
ஆனால் தவிர்க்க பாருங்கள்
சிவா சார் - ரங்கனை முழுமையாக புரிந்துகொண்டதற்கு மிகவும் நன்றி - தவறுகள் இருக்கும் , இருக்கவேண்டும் - இவ்வளவு பெரிய பதிவுகள் போடுவதில் சில தவறுகள் வருவது மிகவும் இயற்க்கை அப்படிப்பட்ட தெரிந்த தவறுகள் பதிவுகளை மேலும் அழகு படுத்தும் - மேலும் இது ஒரு தமிழ் பள்ளியறை அல்ல - தவறுகள் வராமல் composition எழுதி கொண்டிருக்க ---- என் தவறுகளை justify பண்ணுவதாக நினைக்கவேண்டாம் - நீங்கள் சுட்டி காட்டிய பகுதிகள் தவறானவை அல்ல - கனவை கட்ட வேண்டும் என்றுதான் எழுதிள்ளேன் - காட்டவேண்டும் என்று எழுத நினைக்கவில்லை - கனவை ஒரு வீடு மாதிரி நினைத்து கட்டவேண்டும் என்று எழுதிள்ளேன் -
தமிழில் வேர் +ஒருவர் = வேரோருவர் என்றும் வரும் அல்லது வேறு +ஒருவர் = வேறோருவர் என்றும் வரும் - அர்த்தம் இரண்டும் ஒன்றையே தருமாயில் எதற்கு நம்மை குழப்பிக்கொள்ள வேண்டும் -
மீண்டும் உங்கள் பதில் பதிவுக்கு என் நன்றி
-
30th June 2014, 11:15 AM
#3737
Junior Member
Veteran Hubber
நடிகர்திலகத்தின் புகழார்வலர்கள் அனைவரும் முனைவர்களே!
இத்திரியில் பதிவிடும் அனைத்து அன்புநண்பர்களுமே நல்ல படிப்பறிவும் பண்பும் பகுத்தறிவும் மிக்கவர்களே.
அறிவுசார் கருத்துமோதல்கள் அவ்வப்போது தலைதூக் கினாலும் அவை அனைத்துமே காகித அம்புகளாக நடிகர்திலகத்தின் காலடியிலேயே விழுந்துவிடுகின்றன. இவ்வளவு நல்ல படைப்புக்கள் பதிவாளர்களுக்கும் நன்மை பயக்க என் மனதில் தோன்றும் சிறு கருத்து. விதைக்கிறேன்.
இப்பதிவுகளை நாம் திரியின் வாயிலாக முறைப்படுத்தி அடிப்படை ஆவணங்களாக (Resource Material) மின்னணு சேமிப்பில் வைக்கவேண்டும். பதிவாளர்கள் தங்கள் பதிவுத்தர அடிப்படையில் அவற்றை உரிய பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பித்து எம்.பில் அல்லது முனைவர் பட்டம் பெற சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று பரிசீலிக்கலாமே! SRM SIVAJIGANESAN INSTITUTE OF FILM TECHNOLOGY, CHENNAI வாயிலாக நாம் ஏன் நம் படைப்புக்களை பட்டங்களாக மாற்றக்கூடாது? கோபால்சார், ரவி,CK..RKS..ராகுல் மற்றும் பம்மலார், முரளி,வாசு, கார்த்திக், ராகவேந்திரா...பட்டைதீட்டப்பட்ட படைப்புக்களைக் கண்ணுறும்போது ..... சிந்திக்கலாமே!
Last edited by sivajisenthil; 30th June 2014 at 12:12 PM.
-
30th June 2014, 11:24 AM
#3738
Junior Member
Seasoned Hubber
திரியின் அனைத்து நண்பர்களுக்கும் வந்தனம் & ஒரு வேண்டுகோளும் கூட : பல சுறாவளி புயல்களை தாண்டி , பல சொல்ல முடியாத இன்னல்களையும் தாண்டி , இந்த திரி இன்று முடிவடையும் தருவாயில் உள்ளது - கூடியவிரைவில் புதிய பாகத்தில் சந்திக்க இருக்கிறோம் - சிலரை இழந்தோம் , சிலரை புதியதாக பெற்றோம் - சிலரை மீண்டும் பெற்றோம் - ஆனால் மனதளவில் NT யை பிடிக்காதவர்களே இந்த உலகில் இருக்க முடியாது - இந்த திரிக்கு வராவிட்டாலும் அவர்கள் மனது ரங்கனை போல ஒரு ஈகோ இல்லாத ஒன்று - NT யின் என்றுமே விசுவாசிகள் - அவர்களும் வரவேண்டும் என்று முயற்சி எடுத்துகொள்வோம் - அதே சமயத்தில் இங்கு பதிவுகள் போடுபவர்களையும் தங்க வைத்து கொள்ள எல்லா முயற்ச்சிகளையும் எடுத்து கொள்வோம் -நம்மிடம் இருக்கும் சில குணங்களையும் , கொள்கைகளையும் சற்றே Introspect செய்து கொண்டால் , நமது அடுத்த திரி இன்னும் பிரகாசமாக எரியும் என்பதில் கடுகளவிலும் சந்தேகம் இல்லை - மாற்றிக்கொள்ள வேண்டிய கொள்கைகள் :
1. There is a saying - while counting the trees , don't forget to see the wood ----
நாம் செய்யும் மிக பெரிய தவறு இது - contents நன்றாக இல்லையா , அவை மற்றவர்களுக்கு புண்படும் படியாக உள்ளதா - தவறுகளை இந்த திரியில் சுட்டி காட்டலாம் - அதை விடுத்து -- "ர" போட்டு இருக்க கூடாது , "ற " தான் போட்டிருக்க வேண்டும் என்று சிறுபிள்ளை தனமாக , ஒரு தமிழ் ஆசிரியர் போல இங்கு பாடம் எடுத்து கொண்டிருந்தால் , பதிவுகள் போடும் சிலரும் ஓடி போய் விடுவார்கள் - இங்கு தமிழ் literature பண்ணி பட்டம் பெற வரவில்லை - ஒரு ஆத்ம திருப்தி - நம் தலைவனின் புகழ் பாட இந்த திரி ஒரு பாலமாக இருப்பதில் ஒரு பெரிய மகிழ்ச்சி - அவ்வளவே - இந்த சின்ன எழுத்து பிழைகளை அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு PM அனுப்புங்கள் - அவர் முன்னேற்றத்தில் உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்குமானால் - அதை விடுத்து பொது திரியில் எழுத்து பிழைகளை எடுத்து சொல்லி அவரை discourage பண்ணாதிர்கள் - அவரின் வேகம் குறைய நீங்கள் தான் காரணமாக இருப்பீர்கள்!!!
2. ஒருவர் உழைத்து இருக்கிறாரர் என்று நீங்கள் உணர்ந்தால் அவரை மனதார பாராட்டுங்கள் - பாராட்டுவதால் உங்கள் இடத்தை அவரால் என்றுமே அடைய முடியாது - அவர் தனி , நீங்கள் தனி - காசா , பணமா - ஒருவரை மனதார புகழவும் , வாழ்த்தவும் ?? - இப்படி சொல்வதனால் "அந்த நபர் பிறர் என்றுமே புகழவேண்டும் என்ற நோக்கில் தான் பதிவுகள் போடுவார்" என்று முடிவு கட்டி விடாதீர்கள் - பாராட்டுக்கு என்றுமே இருமுனை உள்ளது - உங்களுக்கு பல மடங்காக திரும்பி வரும் - என்றுமே அது உங்களுக்கு லாபத்தைத்தான் தரும் - இப்படி பரஸ்பர நம்பிக்கையுடன் , விசுவாசத்துடனும் உழைத்தால் வெகு விரைவில் திரி 15, 16 , 17 என்று திறந்து கொண்டே இருப்போம்
3. ஒருவர் மாதிரி ஒருவர் நினைப்பதில்லை , பேசுவதில்லை , நடப்பதில்லை - இப்படி இருக்கையில் எப்படி ஒரே தரத்தில் எழுத முடியும் ? விஷ்ணு சஹஸ்ரநாமம் - MS பாடினால் நன்றாக இருக்கும் - ஆனால் MS பாடினால் மட்டுமே நான் ரசிப்பேன் என்று சொன்னால் என்ன நியாயம் ? - எல்லாரையும் வரவேற்ப்போம் - தவறுகளை அவர்கள் மனது நோகாத வகையில் எடுத்து சொல்வோம் - PM மூலமாக .
4. Constructive Criticism is a must - அதை சொல்லும் விதம் , அதில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் இவைகளில் பெரும் மாற்றம் தேவை
5. தவறுகளை குறைந்தது 500 பதிவுகள் அல்லது 1000 பதிவுகள் போட்டவர்கள் தான் எடுத்து சொல்ல உரிமை உடையவர்கள் என்று நினைப்பது தவறு - இதற்க்கு தேவையான ஒரே qualification : சொல்லும் விதம்
RKS மிகவும் திறமை சாலி - NT யின் புகழுக்காகவும் , உண்மையான செய்திகளுக்காகவும் நேரம் காலம் தெரியாமல் உழைப்பவர் - தவறு யார் செய்திருந்தாலும் கவலை படாமல் தட்டி கேட்பவர் - காற்றை விட வேகமாக பதிவுகளை போடக்கூடிய வரம் பெற்றவர் - இவர் புதிய திரியை துவங்கி வைத்தால் , என்னை விட சந்தோஷம் பட கூடியவர்கள் யாருமே இருக்க முடியாது
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th June 2014, 11:43 AM
#3739
Senior Member
Senior Hubber
Ravi:
Excellent and detailed analysis on Rangan (Padikkadha Medhai), one of his top 10 best performances.
Kudos and request more such analyses.
Regards,
R. Parthasarathy
-
30th June 2014, 12:00 PM
#3740
Senior Member
Seasoned Hubber
டியர் ரவி சார்,
படிக்கும்போதே கண்ணீர் வரவழைக்கும் அருமையான படிக்காத மேதை பதிவு.
மிகவும் சிரமப்பட்டு காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களை அலசியிருக்கிறீர்கள். நன்றி.
ரங்காராவிற்கு ஈடுகொடுத்து நடிகர்திலகத்தைத் தவிர வேறு யாரும் ரங்கன் பாத்திரத்தைச் செய்திருக்கமுடியாது.
Bookmarks