-
2nd July 2014, 05:57 PM
#1271
Senior Member
Veteran Hubber
டியர் கிருஷ்ணாஜி,
எந்தன் தேவியின் பாடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
(பொன்மகள் வந்தாள்) படப்பாடல் விளக்கம் நன்றாக உள்ளது.
படமும் நல்ல அருமையான படம்.
சாந்தியில் இப்படத்தின் பேனர் பட்டிக்காடா பட்டணமா படத்தில் இடம்பெறும். ('ஏண்டா, சாந்தி தியேட்டரை எனக்கே காட்டறியா?' - அப்பாடா தலைவர் தரிசனமும் பண்ணியாச்சு).
-
2nd July 2014 05:57 PM
# ADS
Circuit advertisement
-
2nd July 2014, 05:59 PM
#1272
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
மகனே நீ வாழ்க ஒரு குடும்பச் சித்திரம்.
இன்றைய ஸ்பெஷலுக்காக இதில் ஒரு பாடலை அலச முடிவு செய்திருந்தேன். நீங்களும் இப்போது டாண் என்று ஒரு பாடலைக் களமிறக்கி விட்டீர்கள்.
அந்தப் பாடல் இப்போது வேண்டாம்.
ஆரம்பம் சுகமானது
ஆனந்தமானது யார் யாரோ
எங்கேயோ ஏததோ விதமானது
என்று சுசீலா பாடல் ஒன்று நன்றாகவே இருக்கும்.
அதே சுசீலாவின் இன்னொரு பாடல் அருமை
எத்தனை முகமோ உனக்கு
தினம் எத்தனை குணமோ எனக்கு
அத்தனையும் பழம் கணக்கு
இன்று சமரசமானது வழக்கு.
லஷ்மி ஜெய்சங்கரிடம் அறிவுரை சொல்வது போலப் பாடுவார்.
இதுவும் ஒரு அபூர்வப் பாடல்தான்.
Last edited by vasudevan31355; 2nd July 2014 at 06:01 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
2nd July 2014, 06:06 PM
#1273
வாசு சார்
1969-70 கால கட்டத்தில் இந்த மாதிரி ஒரே டைட்டில்
மகனே நீ வாழ்க
பெண்ணே நீ வாழ்க
பெண்ணை வாழ விடுங்கள்
-
2nd July 2014, 06:11 PM
#1274
Senior Member
Diamond Hubber
மிக்க நன்றி கார்த்திக் சார்.
நான் 'கண்ணே பாப்பா' வில் ஒரு பாடலைத் தர நீங்கள் 'கண்ணே பாப்பா' பாடலை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.
இன்றைய ஸ்பெஷலில் நாளை அந்தப் பாடலை எடுக்கலாம் என்றுதான் அதனுடைய தொடர்ச்சி நாளை என்று எழுதி இருந்தேன்.
இப்போது நீங்கள் அந்தப் பாடலை அழகாக நினைவு கூர்ந்து விட்டீர்கள். நன்றி!
இப்பாடலில் முதலாவது சரணத்திற்கு முன்னாள் பல்லவியுடன் சேர்ந்து சில வரிகள் வரும்
பனித்துளி ஒன்று
சிப்பியில் விழுந்து
வந்தது முத்து
அது மன்னவன் சொத்து
கண்ணதாசன் மனிதனின் பிறப்பையே இந்த நான்கு வரிகளில் விளக்கி விட்டார்.
இந்த வரிகளை ஆழமாக யோசித்துக் கிண்டினால் விஷயம் புதையல் புதையலாக வரும்.
ஆனால் கண்ணதாசனின் அசாத்திய திறமையை மட்டுமே நாம் கருத்தில் கொள்வோம்.
'சங்கம நதியும் கடலும் என்றும் பிரிவதில்லை கண்ணே'
என்று சொல்லி அடுத்த வரியைப் பாடுவார் பாருங்கள்
'சந்தித்த கண்கள் நன்றி சொல்லாமல் நடந்தன ஏன் கண்ணே?'
(குற்றாலத்தில் கண்களாலேயே கைது செய்து ஒரு குழந்தையை கொடுத்தவன் நன்றியில்லாமல் ஓடி விட்டானே!)
என்னவோ நம் உறவுக்காரப் பெண் வாழ்க்கையைப் பறி கொடுத்தது போன்று நம் கண்கள் குளமாகும் சார்.
Last edited by vasudevan31355; 2nd July 2014 at 06:26 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
2nd July 2014, 06:12 PM
#1275
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
வாசு சார்
1969-70 கால கட்டத்தில் இந்த மாதிரி ஒரே டைட்டில்
மகனே நீ வாழ்க
பெண்ணே நீ வாழ்க
பெண்ணை வாழ விடுங்கள்
அப்புறமாக மகராசி நீ வாழ்க
ராஜா நீ வாழ்க
இன்னும் இருக்கா?
-
2nd July 2014, 06:19 PM
#1276
1976-77 கால கட்டத்தில்
முன்னூறு நாள் னு ஒரு படம் நினைவு சார் . போஸ்டரில ஒரு பெரிய A போட்டு இருக்கும் .
தேவிகா husband தேவதாஸ் இயக்கம் னு நினவு
இப்ப கூட தொலை காட்சியில் தேவிகா பொண்ணு கனகவுக்கும்
இவருக்கும் சண்டை வந்து அதை ஒரு எபிசொட் ஓட்டினார்கள்
தேங்காய் ,ஸ்ரீகாந்த் நடித்து வந்த படம்
ஒரு நல்ல tms பாட்டு ஒன்று உண்டு
தேங்காய் பாடி கொண்டு வருவார்
"உங்கள் முதுகை பாருங்கள் " என்று வரும்
எதாவது நினவு உண்டா
-
2nd July 2014, 06:21 PM
#1277
வாசு சார்
கண்ணதாசன் ஒரு ஆய்வு எழுதணும் சார் நீங்க
நாங்க எல்லாம் அதை படிக்கணும்
என்னமா பாடலை துவைச்சு தொங்க விடுறீங்க
-
2nd July 2014, 06:24 PM
#1278
Senior Member
Diamond Hubber
கார்த்திக் சார்,
நீங்கள் குறிப்பிட்டது போல கண்ணே பாப்பா படத்தில் ஆண்குரல் பாடல் எதுவும் இல்லைதான். கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்க.
ஆனால் எல்.ஆர்.ஈஸ்வரி (அப்பா! இன்று மட்டுமாவது ஒருதடவை பெயரை எழுதுவோம்) பாடும் பாடல் ஒன்று
கிளப் டான்சராக வரும் மனோரமா ஆச்சி கிளப்பில் ஆலம், சகுந்தலா, ஜெயகுமாரி ரேஞ்சிற்கு ஒரு ஆட்டம் பாடிக் கொண்டே போடுவார். ஆச்சிக்கு குரல் கொடுத்தது ராட்சஸி. (தில்லானா மோகனாம்பாள் போல்)
காலத்தில் இது நல்ல காலம்
நேரத்தில் அடிக்கடி யோகம்
என் பாடு கொண்டாட்டம்
என் கையில் ஒரு லட்சம்
நான் இப்போது ராணியல்லவோ
வழக்கமான ராட்சஸியின் அலம்பல்கள் தவறாமல் உண்டு.
இது போல மனோரமா இன்னொரு படத்தில் கிளப்பில் தங்கவேலுவுடன் டான்சராக ஆடியிருப்பார். (மாடர்ன் தியேட்டர்ஸ் 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் 'கண்டாலும் கண்டேனே உன் போலே' என்ற சீர்காழி, ராட்சஸியின் செம கலக்கல் பாடலுக்கு)
-
2nd July 2014, 06:27 PM
#1279
பனித்துளி ஒன்று
சிப்பியில் விழுந்து
வந்தது முத்து
அது மன்னவன் சொத்து
இதை மாதிரி புலமை பித்தன் கூட தீபம் படத்தில் நினவு சார்
"முத்து சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து "
-
2nd July 2014, 06:27 PM
#1280
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
1976-77 கால கட்டத்தில்
முன்னூறு நாள் னு ஒரு படம் நினைவு சார் . போஸ்டரில ஒரு பெரிய A போட்டு இருக்கும் .
தேவிகா husband தேவதாஸ் இயக்கம் னு நினவு
இப்ப கூட தொலை காட்சியில் தேவிகா பொண்ணு கனகவுக்கும்
இவருக்கும் சண்டை வந்து அதை ஒரு எபிசொட் ஓட்டினார்கள்
தேங்காய் ,ஸ்ரீகாந்த் நடித்து வந்த படம்
ஒரு நல்ல tms பாட்டு ஒன்று உண்டு
தேங்காய் பாடி கொண்டு வருவார்
"உங்கள் முதுகை பாருங்கள் " என்று வரும்
எதாவது நினவு உண்டா
யோசிக்கறேன் சார்!
கஷ்டமான வாத்தியார் சார் நீங்கள்!
Bookmarks