ஜெய்சங்கர் - 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்' ஜோடியாக நடிக்க முக்தா சீனிவாசன் இயக்கிய அருமையான பொழுபோக்கு சித்திரம். வி.குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் அட்டகாசம்.
நல்லநாள் பார்க்கவோ
நேரம் பார்த்தே பூமாலை சூட
சம்மதம் கேட்கவோ
கைகள் மேலே பொன்மேனியாட
ஜெய்சங்கர் படத்தில் வந்த முதல் 'நல்ல நாள்' பாடல் இது. பின்னர்தான் 'இந்த நாள் நல்லநாள்' (ஆசீர்வாதம்), 'நாள் நல்லநாள்' (பணக்காரப்பெண்) ஆகிய பாடல்கள் வந்தன.
இன்னொரு டூயட்...
நீ ஆட ஆட அழகு நான் பாட பாட பழகு
செண்டாடு வந்தாடு என்னோடு நீயும் வா வா
சுசீலாவுக்கு தனிப்பாடல் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்' தங்கை சச்சுவை டீஸ் செய்து பாடும் பாடல்...
மயக்கத்தை தந்தவன் யாரடி
மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி
நீ சொல்லடி - கதை மாறாமலே
அருமையான பாடல்களுக்கு நடுவே ஒரு திருஷ்டி போட்டு 'வா வாத்யாரே ஊட்டாண்டே' எனக்கு அறவே பிடிக்காத, அதே சமயம் படத்தின் ஓட்டத்துக்கு பெரிதும் துணை புரிந்த பாடல்.
Bookmarks