Page 133 of 400 FirstFirst ... 3383123131132133134135143183233 ... LastLast
Results 1,321 to 1,330 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1321
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரே,

    இப்போது சென்னை வந்தாலும் ,மெல்லிசை மன்னர் வீட்டுக்கு கூட்டி செல்வேன்.குடும்ப நண்பர். எங்கள் குடியிருப்பில் அவர், அவரது பெண்ணுடன் 6 மாதம் தங்கியிருந்த போது (இதய சிகிச்சை முடிந்து),தினமும் மொட்டை மாடியில் அரட்டை அடிப்பேன். ராமமூர்த்தி உடனும் பழக்கம் உண்டு.

    எனக்கு யாரும் உயர்வு தாழ்வு இல்லை பாஸ். வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு.எம்.எஸ்.வீ இடமே சொல்லியுள்ளேன். டி.கே.ஆருடன் பிரிந்து இசையுலகுக்கே துரோகம் இழைத்து விட்டீர்கள் என்று.

    தாரை,தம்பட்டை நம் ஆதிதமிழர்களின் பெருமை.அவைகளை வைத்து ஒருவர் சிறந்த பாடல்களை கொடுத்து வெற்றி பெற்றது பெரும் குற்றமா என்ன?அது சரி ,இரண்டே வாத்தியங்களை வைத்து இனிய கானத்தை பற்றி சிலாகித்து இரு நாட்களும் தாண்டாத நிலையில் .......ஹூம்... ட்ரம்ஸ்,கிடார் வந்தால்தான் பாட்டா?ஹென்றி டானியல் ,ஜோசப் கிருஷ்ணாவிற்கு இப்படி ஒரு ரசிகர்.

    பக்கம் 6 இல் பதிவு 53 இல் கனவில் நடந்ததோ குறித்துள்ளேன்.

    குயிலாக,வெண்ணிலா- என் கூற்றை மெய்ப்பிப்பது போல, எஸ்.வீ (Vinodh),வாலியின் பழைய பதிவை(#1305) போட்டுமா சந்தேகம்?நான் ஆதாரமில்லாமல் எழுதுவதே இல்லை .
    Last edited by Gopal.s; 4th July 2014 at 07:50 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1322
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தர்மாவதி/மதுவந்தி.

    அப்படியே கண்ணை மூடி கொள்ளுங்கள்.தனிமை. இனிமை. இப்போது சிம்ரனை லோ -ஹிப் ஜீனில் மேலே அரை முடிச்சு டாப்புடன் கற்பனை செய்து சல்லாபியுங்கள்.அதுதான் தர்மாவதியும் ,மதுவந்தியும் தரும் சிருங்காரத்துடன் கூடிய இத உணர்வுடன் தியான நிலையை உணர செய்யும் மதுர மந்திரம்.

    தர்மாவதி ஒரு மேளகர்த்தா சம்பூர்ணம். மதுவந்தி அதன் ஜன்ய ராக அத்தை மகள்.தர்மாவதி notes கிரக பேதம் செய்யப் பட்டால் சக்ரவாகம்,சரசாங்கி(உள்ளத்தில்) கிடைக்கும்.,

    அந்த படம் காதலிக்க நேரமில்லைக்கு இணையான நகைச் சுவை படம். அதே கண்கள் ஜோடி.வழக்கம் போல ஸ்ரீதர் படமென்றாலே ஸ்பெஷல் கவனிப்பு தரும் மெல்லிசை மன்னர் ,அவரின் உதவியாளர்(சக்ரவர்த்தி) படத்திலும் விளையாடி இருந்தார்.அதில் special pick of special lot என்று தேர்ந்தெடுப்பது" காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ "(ரவி-காஞ்சனா என் இரண்டாவது பிரிய ரவி ஜோடி ரவி-பாரதிக்கு அடுத்து.

    சிவந்த மண்ணுக்கு போட்டியாக வர வேண்டிய படம் சற்று முந்தி கொண்டது. பிரம்மாண்டமாக ,technical ஆக rich என்ற வகையில் நன்கு உருவானதாக இருந்தாலும் ,திரைக் கதையமைப்பில் சறுக்கி சற்றே போர் அடிக்கும் மறுபாதி. மூன்று கிளைமாக்ஸ் இழுவை வேறு.பாவம் அந்த பாடகர் சற்றே சுயமரியாதை கொண்ட ஆண் .(யாரை நம்பி நான் பிறந்தேன் ரகம்) .நடிகர்திலகம் மற்றவர் சுயத்தை மதிப்பதால் அவரிடம் செல்லும். ஆனால் பிறரிடம்? பொண்ணு கல்யாணம் முடிந்து வந்து பாடுறேன் என்றவரிடம் தேவையில்லை என்று வளர்ந்து வரும் இளம் பாடகருக்கு வாய்ப்பு.ஆனால் சோதனை .அந்த இளைஞருக்கு டைபாய்டு ஜுரம். முது பாடகருக்கு ஒரு வாரம் காத்திருக்க முடியாதவர்கள்,இளம் பாடகருக்கு ஒரு மாதம் காத்திருந்து ரெகார்ட் செய்த புலமை பித்த-மகாதேவ - பால -சுசிலா இணைவு இனிமை. "ஆயிரம் நிலவே வா"(பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்.தென்றலெனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் -ஆஹா) நல்ல படமாக்கம். lead pair chemistry நன்கு அமைந்த பாடல்.

    பாலச்சந்தரின் மிக சிறந்த படமாக முதல் தேர்வு என்னுடையது இதுதான். தமிழில் வந்த மிக சிறந்த நகைசுவை சித்திரம்.situational ,dialogue ,slapstick அத்தனை வகை காமெடி,technical perfection ,editing marvel ,தேர்ந்த நடிப்பு இவைகளுடன் மிக சிறந்த இசையமைப்பு. டெலிபோனில் தற்செயலான இணைப்பு,ரசமான கிளு-கிளுப்பு சமாசாரமானவுடன் வரும் பாடல்." ஹலோ my dear wrong number ".எம்.எஸ்.வீ க்கு ஜே .

    தர்மாவதி/மதுவந்தி பிற பாடல்கள்.


    நந்தா என் நிலா- நந்தா என் நிலா.
    என்னுள்ளில் ஏதோ ஏங்கும் ஏக்கம் -ரோசாப்பூ ரவிக்கைகாரி.
    மீண்டும் மீண்டும் வா- விக்ரம்.
    தத்தித்தோம் -அழகன்.
    ஒட்டகத்தை கட்டிக்கோ- ஜென்டில் மேன் .
    உசிலம் பட்டி பெண் குட்டி- ஜென்டில் மேன் .
    கொஞ்சி கொஞ்சி அலைகளாட-வீரா.
    கனா காணும் காலங்கள்- 7 G ,rainbow colony .
    Last edited by Gopal.s; 4th July 2014 at 07:02 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #1323
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வகுளாபரணம்.

    ஒரு நண்பர் வீட்டுக்கு செல்கிறீர்கள். உற்சாகமான நண்பர்.(என்னை போல என்று வைத்து கொள்ளுங்கள்)போன உடனே வாசலில் வந்து அமர்க்களமான வரவேற்பு கொடுத்து ,கடகடவென உற்சாகமாக விஷயங்களை சரளமாக நினைவு கூர்ந்து பேச ஆரபித்தால் உங்கள் மனதில் ஒரு இனம் புரியா உற்சாக எழுச்சி வருமே?உங்கள் மூட் அடுத்த சில நாட்களுக்கு உச்சத்தில் இருக்கும் சந்திப்பாக அமையும். அப்படி ஒரு இன்பத்தை அளிக்க வல்ல ராகம் வகுளாபரணம்.

    இதுவும் சம்பூர்ண மேளகர்த்தா (14 வது)."நி" மாறுபட்டால் மாயா மாளவ கௌளை யாகவும்,"க" மாறுபட்டால் தோடியாகவும் தோற்றம் தரும் ராகம். இதற்க்கு ஜன்ய ராக உறவினர்கள் ரொம்ப அபூர்வம். ஒரே நெருங்கிய உறவு வசந்த பைரவி.

    ஒரு தேர்தல் விதியை ,ஹிந்தி எதிர்ப்புக்கு ஈடாக மாற்றி எழுதிய ,நாட்டு பிரச்சினையாக மாற்ற பட்ட, நண்பர்களின் மோதல்.பாதிக்க பட்ட நடிகர்,தன் மனத் திடத்தால் சோதனை வென்று ,புத்துணர்ச்சியோடு மீண்டு ,ரசிகர்களை குதூகல படுத்திய படம்.மற்றும் பாடல்.வாலி வழக்கம் போல பல்லவியிலேயே கலக்கி விடுவார். எம்.எஸ்.வீ கேட்க வேண்டுமா... டி.எம்.எஸ்-பீ.எஸ்- அந்த கலக்கும் ஹம்மிங்.அந்த அரபியன் சாயல் கொண்ட interludes .கேட்ட உடனே பக்கென பிடித்து விடும் பாடல். "நினைத்தேன் வந்தாய் நூறு வயது".

    கேட்ட உடனே ஸ்தம்பித்து நிற்க வைத்த ஒரு நாட்டு புற குதிக்கும் பாடல்.பிறகுதான் இதன் இசையமைப்பு ஒரு புதுமுகம் என்று அறிமுகம். ராசா , ஏற்கெனெவே ஏ.எம்.ராஜா என்ற சீனியர் இருந்ததால் ஜூனியர் ஆக பொருள் பட இளைய ராஜாவாக அறிமுக படுத்திய பஞ்சு அருணாசலத்தால் நாமகரணம் செய்ய பட்டார்.மச்சானை பார்த்தீங்களா என்றாலும் ஒரு ஏங்கும் நெஞ்சின் ஓலத்தை மனதை கீறி சொன்ன "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை ".எனக்கு ஒரு ஆச்சர்யம்.முதிய ராஜா போலவே,இளைய ராஜாவும் டி.எம்.எஸ்,சுசிலா அவர்களுக்கு முன்னணி தராமல் சிறிய இடமே தந்து இருந்தார். சிறு சிறு உரசல்களை மனதில் கொண்டு ,முதிர்ச்சியற்ற அணுகுமுறையால் ,டி.ம்.எஸ்,பீ.சுசிலா,கண்ணதாசன் (பாலாஜி பட தீபத்திலேயே தவிர்க்க பட்டார் ),வைரமுத்து போன்றோர் படாத பாடு படுத்த பட்டனர் ராசாவால்.(புல்லடியில் ஒளிந்துள்ள பாம்பு போன்ற குணம்).ஆனால் சேர்த்து வைத்து ஆப்பு வைத்தனர் மணிரத்னமும்,பாலசந்தரும்.(ரோஜாவில் ரகுமானுடன் கரம் கோர்த்து)

    கொஞ்சம் பெரிய இடத்து பெண்,பட்டிக்காடா பட்டணமா சாயல் கொண்ட படம் காதல் இளவரசரின் உற்சாகத்தாலும்(வேட பொருத்தம் பூஜ்யம்) ,பஞ்சு-முத்து இணைவின் ரசாயனத்தாலும் ,உச்சத்தில் இருந்த ராஜாவின் மந்திரத்தாலும் 1982 இன் blockbuster ஆகி ,அதுவரை ஆரோக்யமாக மகேந்திரன்,ருத்ரைய்யா,பாரதிராஜா,பாலுமகேந்திரா தயவால் நடை போட ஆரம்பித்திருந்த தமிழ் பட உலகை, சீரழித்தது.ஆனாலும் இந்த பாடல் என்னை என்று கேட்டாலும் துள்ள வைக்கும் ."நேத்து ராத்திரி யம்மா ,தூக்கம் போச்சுது யம்மா"

    வகுளா பரணத்தில் மற்ற பாடல்கள்.

    கிண்ணத்தில் தேன் வடித்து - இளமை ஊஞ்சலாடுகிறது.
    ஓம் ஒரு தென்றல் புயலாகி- புதுமை பெண் .
    ஆறு அது ஆழம் இல்லை - முதல் வசந்தம்.
    நிற்கட்டுமா போகட்டுமா -பெரிய வீட்டு பண்ணகாரன்.
    Last edited by Gopal.s; 4th July 2014 at 06:58 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1324
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இசை ரசிகர்களுக்கு பிரியமான ஜோடியான இவர்கள் பிரிந்ததை பற்றி ,இவர்களுடன் பணி புரிந்த எம்.ஆர்.கே .ராஜு,பீ.பீ.எஸ். டி.எம்.எஸ்.,டி.கே.ராமமூர்த்தி,வாமனன் முதலோரிடம் சேர்த்த விவரங்கள்.




    1)ஜெனோவாவில் தனி இசை அமைத்த அந்த சிறுவனை பற்றி சுப்பராமன் சொன்னது. அந்த பயலுக்கு இசை பற்றி ஒண்ணுமே தெரியல்லே. ஆனா உன் கூச்ச குணத்தை ஈடு செய்யும் திறமை அவனுக்கு ஆள் பிடிக்கும் திறமை அதிகம்.நீ அவனை சேர்த்து கொள் என்று டி.கே.ஆரிடம் சொல்ல, என்.எஸ்.கே புண்ணியம் தேடினார் பணத்திலிருந்து இவர்களை இணைத்து.டி.கே.ஆர் படு கூச்ச சுபாவம் உள்ள திறமைசாலி.எம்.எஸ்.வீ கூச்ச நாச்சமே அற்ற காரியவாதி.பீ.ஆர்.ஒ .




    2)இந்த ஜோடியின் ராகம் சார்ந்த அத்தனை பாடல் இசைக்கும் டி.கே.ஆர் வயலின் மட்டுமே பொறுப்பு(99%) . தயாரிப்பாளர்களை வச படுத்துவது,அவர்களிடம் ராமமூர்த்தி தந்த ராகத்தை ஹார்மோனியம் கொண்டு வாசித்து அங்கீகாரம் பெறுவது இவையே எம்.எஸ்.வீ பொறுப்பு.பின்னணி இசை கோர்ப்பு எம்.எஸ்.வீ கையில்.




    3)நான் அவர்கள் இசையமைத்த பாடல்களின் நுட்பங்களை ராமமூர்த்தியிடம் விவாதிக்கும் போது ஒரு த்யாகராஜரை (இசை மும்மூர்த்திகளில் ஒருவர்)சந்திக்கும் உணர்வு ஏற்படும். விஸ்வநாதனிடம் விவாதிக்கும் போது நிழல்கள் படத்தில் சந்திர சேகரிடம் பீச்சில் பேசும் ஆள் நினைவே வரும்.



    4)ஆயிரம் காரணங்கள் சொல்ல பட்டாலும் ,உண்மை காரணம் கண்ணதாசன்.தன் படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ,கருப்பு பணம் படங்களுக்கு finance செய்யும் படி இரட்டையர்களை நிர்பந்திக்க ராமமூர்த்தி மறுத்துள்ளார்.இதன் காரணமாய் கோபம் கொண்ட கண்ணதாசன் விஸ்வநாதனுக்கு துர் போதனை செய்து இந்த ஜோடியை பிரிக்கும் புண்ணியத்தை செய்ததுடன் நிற்காமல், முடிவு பெறாமல் இருந்த சுமார் 26 படங்களை தன் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு மற்றும் தயாரிப்பாளர்களிடம் இருந்த பிடிப்பினால் விஸ்வநாதன் பெயருக்கு மாற்ற செய்தார்.(ராமமூர்த்திக்கு உழைக்க தெரியும்.இசை தெரியும்,படங்களின் பெயரோ,கணக்கோ,தயாரிப்பாளரையோ தெரியாது)இன்று வரை தான் இழந்தது என்ன என்று புரியாமல் ,கண்ணதாச துதி செய்கிறார் விஸ்வநாதன்.காற்று வீசும் திசையில் எல்லா திறமையாளர்களும் (ட்ரூப் ) இணைந்து ராமமூர்த்தியை தனிமை படுத்தினர்.



    5)ஆத்திரமடைந்த, கண்ணதாசனுக்கு எதிரான ஒரு பிரபலம் (பின்னாள் முதல்வர்), ராமமூர்த்தியை கூப்பிட்டனுப்பி ,சரி செய்ய முயல, ராமமூர்த்தி மறுத்து விட்டார்.(விஸ்வநாதனிடம் முப்பதாண்டு பேச்சு வார்த்தையே வைத்து கொள்ளவில்லை)உண்மை தமிழர்களுக்கு திறமை இருந்தாலும் பொழைக்க தெரியாத இளிச்சவாயர்கலாயிற்றே. முதல்வரான போது அழைப்பில் தன்னை சந்தித்த ராமமூர்த்தியிடம் சொன்னது பதினைந்து வருட முன் வந்திருந்தால் உங்கள் தலைவிதியும் ,தமிழ் பட இசையின் தலை விதியும் மாறி இருக்கும்.



    6)பீ.பீ.எஸ் க்கு ராமமூர்த்தியின் கண்டிப்பில் காட்டமுண்டு.(ஆனாலும் இசை ஞானத்தின் மேல் ஈர்ப்பு).சௌந்தர ராஜனோ டி.கே.ஆர் பக்தர். விஸ்வநாதன் 70களில் நெருங்கிய நண்பர்களிடம் மனம் திறந்தது ,பெரிய தவறு செய்து விட்டேன். நானும் கெட்டு ,என் குருநாதரையும் கெடுத்து விட்டேன்.



    7)நண்பரிடம்,குருநாதரிடம் பெருந்தன்மை காட்டாத எம்.எஸ்.வீ ,ஜூனியர் ஒருவருக்கு இசை சேவகம் செய்து ,பெயரில்லாமல் சிறு பொருள் ஈட்டி தன்னை சிறுமை படுத்தி கொண்டார்.



    8)இறுதியில் ஒன்று. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.



    9)எம்.எஸ்.வீ யின் இசையில் எனக்கும் ஈர்ப்புண்டு. மேற்கூறியவை ,என் மனமறிந்த ,உண்மை சரித்திரமேயன்றி,எந்த காழ்ப்புணர்வும் ,யார் மீதும் எனக்கில்லை.
    Last edited by Gopal.s; 4th July 2014 at 01:30 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #1325
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    First hand information. Proof from the people worked with them like mangal moorthy,M.R.K .Raju.


    • From: N.Chandrasekar (@ 141.209.34.125) on: Sat Dec 7 15:02:02 EST 2002

    i AM FOLLOWING FROM MY VERY EARLY YEARS TKR-MSV.MY COUSIN WAS 2ND ACCORDIAN TO SG.MANGALAMURTHY WHO WAS IN VR TROOP.
    I also know PL.Sriramulu &Diwakar and many others in VR troops.They are all praise for Ramu(TKR)&he so sole brain behind the entire Music in VR films.
    TKR composition continued even in films around 27
    in nos which was relesed after August 1965 but came in the name of MSV.This will be evident if you hear the BGmusic after these songs,starting from NEE to CHANDROODAYAM.But MSV with help of
    Kannadasan(who was in Congress at 1965) did played dirty trick and put his name in all 27 films.Unforunately TKR who is master musician is not good in presentation &didn't use his good relations with MGR.It is bad state affair of Tamil
    Film which did not use the great musician TKR
    (grand son of Malkotai Govindaswami Pillai,a
    Great Violnist in ealy 20th century &son of KrishnaPillai,violnist in Govinraju Pillai's Troop)
    Chandrasekar.N
    MountPleasant,Michigan


    • From: MRK Raju (@ 66.188.44.58) on: Tue Apr 15 15:22:42 EDT 2003

    I was a reccording assistant with CRS and then withTKR in VR troupe between 1947 to 1953.In mid 1949 MSV came to CRS to join his troup but CRS refused & it was TKR who took pity and forced CRS to take him.
    During those days CRS & TKR were very close &both had regards on each other.Genarally TKR will play the tunes in violin and CRS will approve and BGM swaras were mainly done by TKR.Though TKR was not named as asst.MD in titles he was next to CRS.When CRS died in 1951 TKR was shocked and before he could react MSV went in hurry to Banumathi &told he will compelete unfinished portion left by CRS,( it is different story that TKR had redo all MSV's tunes during BGM recording ,and ungrateful MSV did not include TKR name In title)
    CRS was totally unhappy about MSV signing for film GENNOVA since as per CRS ,MSV has no knowledce on musical composing and if CRS was alive for another month he would have sent him out.
    This is the reason why TKR was not keen to join wih MSV but NSK,ALS.GN Velumani &BS Ranga persuaded him to become a CO-MD.
    MSV knowing his shortcomings was very loyal to TKR.
    TKR will play tunes in violin and MSV will play the tunes to Producer/Directors and play back singers.All BGM swaras ,selection of instrument mix were by TKR and PRwork/showbusiness were by MSV.This was trend from1951 to August 1965.TKR was very poor in communication and in selling himself though his best MD in INDIA.
    Splilt came because of MSV's greedy/Kannadasan&CVSridhar"s enemity with TKR and not because of TKR's Alcholisim as mentioned by your Mr. Manisekaran.
    TKR , after 1960, started giving 1or2 tunes for selection to director because he is better judge of tunes and he will not give tunes for badly written lyrics(eg. Atamanathan's lyrics in film "Marakka MUdiyuma" which was latter written by "MK" ).TKR refused to change his tunes for film "Kadalikka Neramillai" as demanded by Sridhar.So Sridhar was unhappy with him .TKR refused to Finance for Kannadasan for his film "Karruppanam" and so he instigated MSV to spilit with TKR and promising to help him.He really helped him by applying his political pressure on all producers of 27 films for which tunes were compeleted and were under production to delete TKR"s name.This films were released between September 1965to1968,eg. "Chandrodayam".It is great loss to TKR from which he could not come out.
    MSV composed his first tune on his own,after "Gennova" in film "ANBEVAA",the last song and one for film Nadodi, His first full fledged music was in Balaji"s film Thangai in March 1967. This is the rason people thought he is the origanal in VR but which is totally wrong.This was evident from tunes composed after 1967.
    TKR is the MD and MSV is good PRO.
    Last edited by Gopal.s; 4th July 2014 at 10:45 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1326
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தின் மிக கேவலமான அரசியல் சூழ்நிலை,பொய் பிரச்சாரங்கள்,உண்மையான திறமை கொண்ட ,தன் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்திய திறமைசாலிகளை புறம் தள்ளி அவமதித்தது.

    இது வங்காளத்திலோ,மகாரஷ்டிராவிலோ,கர்நாடகாவிலோ,கேரளாவிலோ ,ஆந்திராவிலோ கற்பனையே செய்ய முடியாத ஒன்று.



    நம் திறமைசாலிகளை நாம் அற்ப அரசியலுக்கு ,பலி கொடுத்ததால் ,உலகமும் அவர்களை புறக்கணித்தது.



    பலியானவர்கள் நிறைய. அவர்கள் அனைவருக்கும் சேர்த்து நான் வடித்திருக்கும் கண்ணீர் துளிகள்.மற்ற படி நான் யாருக்கும் சொந்த காரனோ,இவர்கள் உப்பினால் வளர்ந்தவனோ அல்ல. என்னுடைய மனத்திற்கு சரியென்று படுவதை சொல்பவன்.செய்பவன்.



    உள்ளதை சொல்வேன்.சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #1327
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    COOL ...COOL GOPAL


  9. #1328
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    மெல்லிசை மன்னரின் இதுபோன்ற வைரங்களை வானொலிக்காரன்களும், தொலைக்காட்சிக்காரன்களும் இருட்டுக்குள் ஒளித்து வைத்து சதி பண்ணியதால்தானே தாரை, தப்பட்டைக்காரன்கலெல்லாம் பெரிய இசைக்கொம்பன்கள் என்று பேர் வாங்க முடிந்தது.
    ஐயா! யாரைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியல. யூகித்து அதையொட்டிய எனது அபிப்ராயங்களைச் சொல்வதற்கு முன், நீங்களாகவே யாரை இப்படிக் குறிப்பிடிருக்கிறீர்கள் என சொல்லிவிடவும். நன்றி.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. #1329
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இணைந்து இசையமைத்து வெவ்வேறு நிலைகளில் இருந்த படங்களில் திரு ராமமூர்த்தியின் முக்கிய பங்கு இருந்து தனி பெயரில் வெளியானவை.(இதில் இருந்த பாடல்களின் நுட்பங்களை ராமமூர்த்தியுடன் அலசி உறுதி செய்தது. )அசல் உண்மையான லிஸ்ட்.(என் கற்பனை சுத்தமாக இல்லை.ஆராய்ந்த பிறகே.)



    எங்க வீட்டு பெண்,பஞ்ச வர்ண கிளி, நீ, பூஜைக்கு வந்த மலர்,சரசா,,நீலவானம்,கலங்கரை விளக்கம்,குழந்தையும் தெய்வமும்,அன்பே வா,சந்திரோதயம்,சித்தி,கௌரி கல்யாணம்,கொடி மலர்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,நான் ஆணையிட்டால்,நாடோடி,நம்ம வீட்டு லட்சுமி,பறக்கும் பாவை,பவானி,பெற்றால்தான் பிள்ளையா,ராமு,. இன்னும் சில. இதில் முடிவு நிலை,நடு நிலை என்று இருந்த படங்களில் ஒன்றிரண்டு விஸ்வநாதனுடையாக இருக்க வாய்ப்புள்ளது .கேட்போர் அந்த தகரத்தை தரம் பிரிக்கலாம்.(வெட்கமில்லை -அன்பே வா,கடைசி-அன்பே வா கோரஸ் இதுதான் விஸ்வநாதன் பங்கு, நாடோடி- பாடும் குரலிங்கே இப்படி)

    என் கடைசி கூற்று.

    அவர்கள் சேர்ந்து இசையமைத்த படங்கள் மற்றும் சேர்ந்து அமைத்து விஸ்வநாதன் பெயரில் வந்த படங்கள் 127 என்று குறித்தால், அதில் 100 படங்கள் மிக மிக உன்னதம். 15 படங்கள் நல்ல இசை. 12 சுமார்.



    ராமமூர்த்தி தனியாக அமைத்தவை 16 படங்கள். அதில் எட்டு படங்கள் நல்ல படங்கள். 8 சுமார். (பாதிக்கு பாதி)



    விஸ்வநாதன் தனியே போட்டது ஒரு 800 இருக்கலாம். அதில் தங்கை முதல்,சிவந்த மண் வரை ஒரு 28 நல்ல வரிசை தேறுகிறது. சிவந்த மண் முதல் இன்று வரை ஒரு 20 நல்ல வரிசை தேறுகிறது.மீதி சுமார் முதல் படு குப்பை ரகங்கள்.



    முடிவு உங்கள் கையில்.
    Last edited by Gopal.s; 4th July 2014 at 12:49 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #1330
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    ராமமூர்த்தி நல்ல pro ஆக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அவருக்கு நல்ல pro. என்ன ஒன்று அவர் காலம் சென்ற பின் இதை செய்கிறீர்கள் . இரண்டு மூன்று விஷயங்கள் இடிக்கின்றன. நீங்கள் குறிப்பிட்ட லிஸ்டில் சில படங்களுக்கு பாடல்கள் எழுதியது வாலி. அன்பே வா, சந்திரோத்யம், குழந்தையும் தெய்வமும் முதலியன. அது போல அரசியல் ப்ரெஷர் என்று சொல்லுவது பெருந்தலைவரையும் பெரியவர் பக்தவத்சலத்தையும் அவமதிப்பதாகும். 1965 ல் பிரிவிற்கு பிறகு தொடங்கப்பட்ட பெற்றால்தான் பிள்ளையா நெஞ்சிருக்கும் வரை எப்படி tkr செய்திருக்க முடியும்?

    அன்புடன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •