Page 179 of 400 FirstFirst ... 79129169177178179180181189229279 ... LastLast
Results 1,781 to 1,790 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #1781
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இப்பாடல் கோபாலுக்கு அர்ப்பணம்



    முற்றிலும் வித்தியாசமான பாணியில் அமைக்கப் பட்ட இப்பாடல் எஸ்.ஜானகியின் குரல் வளத்திற்கு சரியான சவாலாகும். இப்பாடலைத் தரவேற்றியவர் இளையராஜாவின் ரசிகராயிருக்கக் கூடும். பின்னணி ஹம்மிங்குடன் துவங்குகிறது. சற்றுப் பின் இதே ஹம்மிங் மேண்டலின் மற்றும் கிடாரின் ஒலியில் இடம் பெற, பின்னர் உரையாடலுக்கும் பின் எஸ்.ஜானகியின் குரலுடன் பாடல் துவங்கும் போது நம்மை அறியாமல் நாம் அந்தக் காட்சிக்குள்ளாகவே போய் விடுகிறோம்.

    இப்படிப்பட்ட அருமையான பாடல் இப்படத்தில் ஹிட்டாகாமல் கண்ணா நீ எங்கே ஹிட்டானதை என்ன சொல்ல...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1782
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    adhe rusi kanda poonayil idhuvum miga chirandha paadal


  4. #1783
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சந்தனமிட்டு சதிராடும் சூப்பர் பாடல். பாடுவதற்கு சிரமமான பாடல்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1784
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மெலோடி என்ற வார்த்தைக்கு அர்த்தமாக இப்பாடலையும் சொல்லலாம்.



    உரிமை படத்தில் ஜேசுதாஸ் எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கும் இப்பாடலைக் கேட்டுக் கொண்டே உறங்கச் செல்வோம்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1785
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடக்கும் இளந்தென்றலை துணைக்கழைப்பதை கவியரசர் எழுதி படித்திருக்கிறோம். அதற்கு உருவம் கொடுத்தால் இப்படிப்பட்ட பாடல்களாய் வடிவம் பெறுமோ என எண்ணத் தோன்றும் மனதை மயக்கும் மதுர கானங்களின் அணிவகுப்பில் இதோ இளையராஜா காவிரியை நமக்கு துணைக்கு அனுப்புவதைக் கேளுங்கள்.. பாருங்கள்..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1786
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிந்து பைரவியின் சாயல் தெரிகிறது. என்ன ராகம் என்று கோபால் விளக்க வேண்டும். ஆனால் அதையெல்லாம் தாண்டி ஜானகியின் குரல் தங்களை பாதிக்கும் என்பது மட்டும் நிச்சயம்...

    வழிமேல் விழியாய் எதிர்பார்த்திருந்தேன் வருவாய் மாமுகிலே..

    அர்ச்சனைப் பூக்களில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மாணிக்கம்...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1787
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மெல்லிசை மன்னரின் மிகச் சிறப்பான பாடல்களையும் மீறி ஆராதனா யாதோன் கி பாராத் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கேரவன் படங்களின் மூலம் தமிழ்நாட்டிலும் குக்கிராமங்கள் வரையில் ஊடுருவிய ஹிந்தித் திரைப்படப் பாடல்களையும் படங்களையும் அவற்றின் தாக்கத்தையும் மீறி அவற்றிலிருந்து மக்களை வெளியே கொண்டு வர மிகப் பெரிய சக்தி தேவைப்பட்டது. அப்போதைய தமிழ் ரசிகர்கள் மனதில் இது ஒரு லேசாக வருத்தத்தையும் தரத் தொடங்கியது. அந்த நேரத்தில் தோன்றிய இளையராஜா என்னும் இசை சாம்ராஜ்ஜியம் இங்கிருந்த ஹிந்தி ஆக்கிரமிப்பைத் தகர்த்தெறிந்து ஹிந்தி உலகிலேயும் புகுந்து தன் தாக்கத்தை ஏற்படுத்தியது மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடிய விஷயமாகும்.

    அப்படிப்பட்ட சூழல் ஏற்படக் காரணமாக இருந்த இளையராஜாவின் பாடல்களில் ஒன்று தான் எஸ்.பி.ஷைலஜா அறிமுகமான பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் இடம் பெற்ற சோலைக்குயிலே..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1788
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    நான் மிக நீண்ட நாட்களாகக் கேட்க ஆவலாயிருக்கும் பாடல் கங்கா யமுனா காவிரி திரைப்படத்தில் எஸ்.பி.பாலா எஸ்.ஜானகி அட்டகாசமாய் கலக்கியிருக்கும் கவ்வாலிப் பாடல், உமர் கய்யாம் எழுதி வைத்த கவிதை பாடல்..

    இணையத்தில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. வேறொர் நண்பர் மூலமாக வெளிநாடுகளில் தேடச் சொல்லியிருக்கிறேன். அது விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும் இணையத்தில் கிடைத்தால் இணைப்புத் தர கேட்டுக் கொள்கிறேன். அது வரை கேட்டு மகிழலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1789
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1950 களில் ராமநாதனின் கற்பனை வளம் மிக்க சுத்த இசையால் மட்டுமே ஜீவித்திருந்த தமிழ் சினிமா, மெல்லிசை புரட்சியை துவக்கியது 1961 முதல் 1965 முடிய. ஹிந்தியில் சங்கர்-ஜெய்கிஷன்,எஸ்.டீ .பர்மன் ,நவுஷத்,மதன் மோகன்,ரோஷன்,சலில் சௌதரி ,கல்யாண்ஜி-ஆனந்த்ஜி,ஓ .பீ.நய்யார் என்ற இத்தனை பேர்களுக்கும் இணையாக சவால் விட்டு அகில இந்திய அளவில் best composers என்று பெயர் பெற்ற ஜோடி ராமமூர்த்தி-விஸ்வநாதன் இரட்டையர். பிரிவின் பிறகு ஓரளவு பெருங்காய பண்டமாக 1969 வரை தள்ளிய தமிழ் பட மெல்லிசை 1970 முதல் 1976 வரை களபிரர்களின் இருண்ட காலமானது.தன்னுடைய பிரத்யேக, எந்த பாணியையும் சாராமல் நம் கர்நாடக,கிராமிய இசை,இசை கருவிகளை மட்டும் நம்பி ,இரட்டையர்களுக்கு இணையாக 1960 முதல் 1972 வரை நமது இசையை காப்பாற்றி கொண்டிருந்த கே.வீ.மகாதேவன் முழுசாக தெலுங்குக்கு தாவி விட ,வறண்டு கிடந்த நிலத்தில் பாலையூற்றாய் நம் ராஜா.



    அவர் வந்த பிறகு ஹிந்தி இசையோ,இசையமைப்பாளர்களோ பேச படவே இல்லை.1976 முதல் 1992 வரை அவர் ராஜ்யமே. 1992 முதல் 2001 வரை அதை மேலெடுத்து சென்றவர் ,நான் திலீப் என்றே விளிக்க ஆசை படும் ரகுமான். அவரும் 2001 முதல் உலக மற்றும் ஹிந்தி படங்களுக்கு தாவி விட்டார்.



    இளைய ராஜாவின் முத்துக்களை நினைவு கூர்ந்த ராகவேந்தர் சாருக்கு நன்றிகள்.



    எதில் சாதித்தோம் ,எங்கே தவறினோம் என்று கணக்கு பார்ப்பது நாட்டுக்கும் ,வாழ்க்கைக்கும் அவசியமே.
    Last edited by Gopal.s; 15th July 2014 at 05:38 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #1790
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இளைய ராஜாவின் முத்துக்களை நினைவு கூர்ந்த ராகவேந்தர் சாருக்கு நன்றிகள்.
    வழிமொழிகிறேன் நானும்.. நன்றிகள் திரு ராகவேந்தர்! எம்.எஸ்.வி, ராஜாவைப் பற்றி நிறைய பேசலாம். நேரம் கிடைக்கும்போது எட்டிப் பார்க்கிறேன்.

    இப்போதைக்கு ஒன்றே ஒன்று. என்னை சிறார் வயதிலேயே வெகுவாக கவர்ந்த, இன்று வரை லயித்துக் கேட்கும் எம்.எஸ்.வியின் பாடல்கள் என வரும்போது "கங்கை யமுனை இன்றுதான் சங்கமம்" தனியிடம்தான். எவ்வளவு அழகான எளிதில் வசிகரிக்கும் மெட்டு. முதல் இரு அடிகள் ஒரே மாதிரி ராக அமைப்புடன் செல்ல, எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென "அங்கயற்கண் மங்கள நாயகி" என இன்னொரு திசையில் பயணிப்பது அதுவும் தாளக்கட்டை மாற்றாமலேயே.. யேசுதாசும் வாணிஜெயராமும் இரு வேறு வண்ணங்களாக மாறி எம்.எஸ்.வியின் ஓவியத்தை மெருகெற்றியிருப்பார்கள். காலம் தாண்டி நிற்கும் மெட்டு. வரிகளையே தேவையில்லை. சும்மாவே ஹம் செய்தாலே போதும்.. மனநிலை சாந்தப்படுத்தி ஆரோக்யமான நிலையை நோக்கி பயணிக்கும். காதல் ரசம் மெட்டிலும், வரிகளிலும் வழிந்தோடும். தமிழ்த் திரையிசையில் இன்பமான காதல்பாடல்களை தேர்ந்தெடுத்தால் கண்டிப்பாக இதையும் திணித்துவிடுவேன். எனது காலச் சக்கரத்தில் பசுமரத்தாணிபோல பதிந்துவிட்டப் பாடல். நான் எப்போதெல்லாம் அச்சக்கரத்தில் பின்னோக்கி பயணித்து நினைவுகளை அசைபோடுகிறேனோ, அப்போதெல்லாம் இப்பாடலும் மறக்காமல் ஒலிக்கிறது.



    ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் அழகு மேலோங்கி நிற்கும். ஸ்ரீவித்யாவிற்கு இந்தக் காலக் கட்டம் என நினைக்கிறென்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •