-
15th July 2014, 12:35 PM
#1831
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
இது பற்றி ஏதாவது தகவல் உண்டா . இதை பற்றி இந்த திரியில் கேள்வி கேட்கலாமா
பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க
கண்ணான கண்ணே பயம் வேண்டாம்
-
15th July 2014 12:35 PM
# ADS
Circuit advertisement
-
15th July 2014, 12:35 PM
#1832
உமாவும் நடித்திருப்பார்கள்.
வா இந்த பக்கம் உமா பின்னாட்களில் பின்னணி குரல் பேசுபவராக இருந்தார் என்றும் அவருடைய கணவர் கூட திரைப்படத்துறையில் பணி புரிபவர் என்றும் நினைவு
-
15th July 2014, 12:37 PM
#1833

Originally Posted by
vasudevan31355
'வாடியம்மா பொன் மகளே'
ஈஸ்வரி டைப்பில் சுசீலாம்மா புகுந்து விளையாடுவார்கள்.
இந்த பாட்டு விடியோ அல்லது ஆடியோ லிங்க் இருந்தால் கொஞ்சம்
சேர்த்து விடுங்கள் வாசு சார்
-
15th July 2014, 12:55 PM
#1834
நடு இரவில் 1970



நடு இரவில் 1970 (சில வலைப்பூவில் 1966 என்று குறிப்பிட்டு உள்ளனர்)
வீணை s பாலச்சந்தர் இயக்கம்
மேஜர் சுந்தர்ராஜன்,சௌகார் ஜானகி,பண்டரி பாய், கோபாலகிருஷ்ணன்,v s ராகவன்,சோ,மாலி,சதன்,S.N.லக்ஷ்மி,வீணை எஸ் பாலச்சந்தர்
நடித்து வெளி வந்த கருப்பு வெள்ளை
அதிர்ச்சியூட்டும் முடிச்சுகள் இருந்தாலும் ரசிகர்களை மறுமுறை திரையரங்கத்திற்கு வரவழைக்கவும் படத்தின் வியாபர மதிப்பைக் கூட்டவும் கவர்ச்சி நடனங்களும் வலுவில் திணிக்கப்பட்ட பாடல், சண்டைக் காட்சிகளும் இருக்கும். அப்படியானக் காலக் கட்டத்தில் கவர்ச்சி நடனமோ , சண்டைக் காட்சிகளோ இல்லாமல் கதைக்கு தேவையான வெறும் இரண்டு பாடல்களுடன் வெளிவந்த படம் தான்
'நடு இரவில்'. `And then there were None (1945)` ஆங்கில படத்தின் ஈர்ப்பு
இந்த படத்தில் நம் பிரேம் ஆனந்த்(திரிசூலம்) நடித்த ஒரு நினவு
யாராவது உறுதி செய்தால் நன்று
இது தான் எஸ் பாலச்சந்தரின் இறுதி படம் இதற்கு பிறகு அவர் எதுவும் படம் எடுத்தாரா என்று நினைவு இல்லை
நல்ல suspense thriller
மேஜர் சுந்தரராஜனும் பண்டரி பாயும் கணவன் மனைவி .குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டு தனியாக வாழ்வார்கள்
பண்டரி பாய் மன நோயாளி .மேஜர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு ரத்த புற்றுநோய். இன்னும் சிறிது நாட்களில் இறந்து விடுவார்
என்ற நிலையில் அவருடைய டாக்டர் ஆல் (s.balachander) உறவினர்கள் எல்லோரும் வரவழைக்கபடுவார்கள்.
யாருமே இல்லாமல் பியானாவில் தானாகவே இசை வாசிக்கப்படுதல், காற்றடித்து திரைச்சீலைகள் நகர்ந்து நிழலுருவங்கள் தெரிவது
என திகிலுடன் வந்திருக்கும் உறவினர்களுக்கு மாளிகை வாழ்வு ஆரம்பிக்கின்றது
ஒவ்வொருவாராக கொலை செய்யபடுவார்கள். கொலை செய்வது யார் .
இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பங்கள் போல் ஏதும் இல்லா காலக் கட்டங்களில் இருப்பதை வைத்து ஒரு நிறைவான படத்தைக் கொடுத்த வீணை எஸ்.பாலசந்தர் தமிழில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்
சௌகார் ஜானகி பியானோ முன்னே அமர்ந்து கொண்டு வரும் ஒரு பாடல்
சுசீலாவின் குரலில் .
மேஜர் சுந்தர் கட்டிலில் படுத்து இருப்பார் .
வில்லன் சௌகாரை கத்தியால் குத்துவதற்கு பின்னாலே நிற்பான்
கண் கட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்
அந்த காவியத்தில் சோகம் எனும் ஓவியம் கண்டேன்
வாடி போன முகத்திலே வனப்பு மாறவில்லை
வளர்மதி உன் பொன்னொலிஉம் இன்னும் தீரவில்லை
ஓடி போன காலம் உன்னை திரும்பி பார்கவில்லை
தேடி வந்த மங்கை என்னை திரும்பி பாரம்மா
கண் கட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்
அந்த காவியத்தில் சோகம் எனும் ஓவியம் கண்டேன்
எண்ணி எண்ணி நெஞ்சினிலே எத்தனை நாள் நொந்தாய்
என்னவெல்லாம் கனவுகளை இதயத்திலே கண்டாய்
மண் மாதா மடி மீது மன்னர் தம் சேயும் முன்னே
மாபாவம் செய்தவரை மன்னிப்பாய் அம்மா
கண் கட்டும் ஜாடையிலே காவியம் கண்டேன்
அந்த காவியத்தில் சோகம் எனும் ஓவியம் கண்டேன்
ராட்சசியின் குரலில்
2.நாலு பக்கம் ஏரி
நடுவினிலே தீவு
தீவுக்குள் ராஜா
ராஜக்கொரு ராணி
வாசு சார்
இந்த பாடல்களை கொஞ்சம் அலசுங்களேன் ப்ளீஸ்
-
15th July 2014, 01:09 PM
#1835
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
அருமை!
நடுப்பகலில் பயமுறுத்தி விட்டீர்கள். குலை நடுங்க வைத்த படம்.
மதியம் வேலைக்குப் போய் மோட்டார்களை எல்லாம் அலசி விட்டு வந்து விடுகிறேன். நாளை பாடலை அலசுவோம்.
-
15th July 2014, 02:52 PM
#1836
Senior Member
Senior Hubber

Originally Posted by
rajeshkrv
yes .. she did few tamil movies but mainly in malayalam (paavam soga rolesa koduthu oru vazhi pannittanga )
beautiful composition by V.Dakshinamurthy PS with KJY
Ambika with Telugu actor Ramakrishna(actress Geethanjali's husband)
Rajesh,
Great going indeed!
BTW, is Geethanjali not Telugu Comedian Padmanabham's wife?
To my knowledge, two Telugu Comediennes marry Comedians - Relangi - started acting together with Girija (yes, lead lady of Manohara with NT) and eventually married her. Padmanabham followed suit - started acting together with Geethanjali and eventually married her. (they were lead pairs in Govulla Gobanna - original of En Annan, which was replicated in Tamil with Cho while Geetanjali acted again in the same role). Comedian turned character artiste Chalam married Oorvasi Saradha - this every body knows.
Regards,
R. Parthasarathy
-
15th July 2014, 03:20 PM
#1837

Originally Posted by
parthasarathy
Rajesh,
Great going indeed!
BTW, is Geethanjali not Telugu Comedian Padmanabham's wife?
To my knowledge, two Telugu Comediennes marry Comedians - Relangi - started acting together with Girija (yes, lead lady of Manohara with NT) and eventually married her. Padmanabham followed suit - started acting together with Geethanjali and eventually married her. (they were lead pairs in Govulla Gobanna - original of En Annan, which was replicated in Tamil with Cho while Geetanjali acted again in the same role). Comedian turned character artiste Chalam married Oorvasi Saradha - this every body knows.
Regards,
R. Parthasarathy
dear sarathi sir
http://timesofindia.indiatimes.com/a...819858783.cms?
here it is mentioned as actress geethanjali wife of actor ramakrishna
just for reference
-
15th July 2014, 05:33 PM
#1838

Originally Posted by
RAGHAVENDRA
நண்பர்களே,
நான் மிக நீண்ட நாட்களாகக் கேட்க ஆவலாயிருக்கும் பாடல் கங்கா யமுனா காவிரி திரைப்படத்தில் எஸ்.பி.பாலா எஸ்.ஜானகி அட்டகாசமாய் கலக்கியிருக்கும் கவ்வாலிப் பாடல், உமர் கய்யாம் எழுதி வைத்த கவிதை பாடல்..
இணையத்தில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. வேறொர் நண்பர் மூலமாக வெளிநாடுகளில் தேடச் சொல்லியிருக்கிறேன். அது விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும் இணையத்தில் கிடைத்தால் இணைப்புத் தர கேட்டுக் கொள்கிறேன். அது வரை கேட்டு மகிழலாம்.
இது தான் வேந்தர் சார்
உங்கள் பங்களிப்பை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை
நேற்று மதியம் முழுவதும் ஹப் கிடைக்கவில்லை .இரவு 11 மணிக்கு
நீங்கள் பதிவு போடுகிறீர்கள் என்றால் உங்கள் உழைப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை . அதிலும் அபூர்வமான பாடல்களை எடுத்து நீங்கள் போடும் ஒவ்வொரு பாடலும் 70 இறுதி 80 ஆரம்பம் கால கட்டங்களை நினவு கூர்கிறது.
ஒரு சிறு வேண்டுகோள் . சில பாடல்கள் படம் பெயர் தெரியாமல் தேடி கண்டு பிடிக்க வேண்டி உள்ளது . ஆகையால் அந்த படத்தின் பெயரை சேர்த்து போட்டால் கொஞ்சம் எளிதாக இருக்கும் . இது வேண்டுகோள் தான்
கங்கா யமுனா காவேரி 1978
ஜெய் ஸ்ரீதேவி ஜோடி
k.சொர்ணம் இயக்கம்
இன்னும் போஸ்டர் கூட நினைவில் உள்ளது சார்
நெல்லை லக்ஷ்மி ரிலீஸ்
-
15th July 2014, 07:35 PM
#1839
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார்,
உணர்ச்சிகள் பாடல் பற்றிய அலசல் மற்றும் விரிவாக்கம் மிகவும் அற்புதம். ராசலீலா மலையாளப்படத்தின் ரீமேக் என்றபோதிலும் முடிவு வித்தியாசமானது. ராசலீலாவில் கதாநாயகனை பண்ணையாரின் ஆட்கள் அடித்துக் கொல்வதுபோல முடிவிருக்கும். ஆனால் தமிழில் காம வசப்பட்ட நாயகன் பல இடங்களிலும் விலைமாதர்களிடம் கெட்டலைந்து சீரழிந்து சாவது போலிருக்கும். அவ்வாறு கெட்டலையும் காட்சிகள் சற்று ஓவராக அமைத்தால் 'ஏ' தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
அந்தக்காட்சிகளில் கமலைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கும். உணர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர் சீரழியும் காட்சிகள் அவர் மீது இரக்கத்தை வரவழைக்கும்.
கடற்கரையில் தனியே நிற்கும் படகிலிருந்து அவர் ‘வேலை முடிந்து’ வெளியே குதித்ததும் உள்ளேயிருந்து ஒரு விலைமகள் எழுந்து வரும் காட்சியிலும் சரி,
அடையாரில் ‘அந்த மாதிரி’ ஏரியாவின் குடிசைக்குள்ளிருந்து ஷுக்களை கையில் தூக்கியபடி வேகமாக வெளியேறும் காட்சியிலும் சரி,
பால்வினை (வி.டி.) நோயின் அறிகுறிகளாக அவர் உடம்பில் காணப்படும் வட்ட வட்டமான தழும்புகள் பற்றி ஸ்ரீவித்யா விசாரிக்கும்போதும் சரி,
ஆஸ்பத்திரியில் பால்வினை சிகிச்சைக்காக காத்திருக்கும்போது உள்ளே சிகிச்சை அளிக்கப்படுபவரின் அலறல் சத்தம் கேட்டு பயந்துபோய் சிகிச்சை பெறாமல் ஓடிவரும் காட்சியிலும் சரி
கமல் மீது பரிதாபமே ஏற்படும்.
விவரமறியா பருவத்தில் இளம் விதவையொருத்தியால் தூண்டப்பட்டு, குடிகாரி ஒருத்தியால் விசிறி விடப்பட்ட பருவகால உணர்ச்சிகள் கட்டுப்பாடில்லாமல் கொழுந்து விட்டு எரிந்ததால் வந்த வினை.
1976-ல் வெளியானபோது வண்ணாரப்பேட்டை பாண்டியன் தியேட்டரில் பார்த்தது. அப்புறம் பார்க்கவில்லை.
நல்ல பாடல் ஒன்றின் மூலம் பழைய நினைவுகளை ஊதிவிட்டீர்கள். மிக்க நன்றி...
-
15th July 2014, 07:52 PM
#1840
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார்,
பெருந்தலைவரின் பிறந்த நாளுக்கு பொருத்தமான ஒரு பாடலை, இணையத்தில் முதன்முறையாக தரவேற்றி அளித்துள்ளீர்கள். வரிகள் ஒவ்வொன்றும் பெருந்தலைவரை நினைவூட்டுகின்றன.
யாராலும் கண்டுகொள்ளப்படாத (ஓ... கோபால் இருக்கிறாரோ) சரி பெரும்பாலோரால் கண்டுகொள்ளப்படாத பாடலைத் தரவேற்றி தந்ததற்கு பாராட்டுக்கள், நன்றிகள்...
Bookmarks