-
18th July 2014, 11:16 AM
#1991
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
'தோழன்' படத்தின்
'அலைபோலத் தென்றல் மலர் மீதிலே'
அற்புத பாடலைக் கேட்டு இன்புற்றேன்.
என்னிடம் இருந்த 'பேசும் படம்' இதழ்கள் சிலவற்றைப் புரட்டினேன். 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இதழில் நீங்கள் குறிப்பிட்டிருந்த 'தோழன்' படத்தின் விளம்பரம் கிடைத்தது.
இந்த அரிய ஆவணம் தங்களுக்காகவும், நம் அன்பு நண்பர்களுக்காகவும் இப்போது நம் திரியில்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th July 2014 11:16 AM
# ADS
Circuit advertisement
-
18th July 2014, 12:06 PM
#1992
அந்த வீட்டில் ஒரு கோவில்
ராதிகா சுதாகர் விஜயபாபு நடித்து இருக்கிறார்கள்
ஷங்கர் கணேஷ் இசை
இந்த படத்தின் கதை திரைகதை ஏதாவது தகவல் உண்டா வாசு சார்

பாடல்: ஆயிரம் ஜென்மங்கள்...ஆசைகள் ஊர்வலம்..
பின்னணி: பி.ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்
----------------------------------------------------------------------
பாடல்: நெஞ்சம்தானே கேட்கிறேன்
பின்னணி: கே.ஜே.ஜேசுதாஸ்
http://www.inbaminge.com/t/a/Antha%2...20Oru%20Kovil/
-
18th July 2014, 12:18 PM
#1993
Senior Member
Diamond Hubber
இல்லை கிருஷ்ணா சார்.
நானே இப்போதுதான் இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்.
-
18th July 2014, 12:30 PM
#1994


துணிவே தோழன் 1980
சிவகுமார் சத்யகல,கவர்ச்சி வில்லன் கே.கண்ணன் ஐயங்கார்
நடித்து வெளிவந்த
மாடர்ன் திடேர்ஸ் R சுந்தரம் இயக்கம்
இசை ராஜேஷ் (வல்லவன் வருகிறான் புகழ்)
ஜாலி ஆபிரகாம் சைலஜா குரல்களில்
'ராஜா உன்னை பார்தாலே போதும் '
-
18th July 2014, 12:35 PM
#1995

Originally Posted by
vasudevan31355
இல்லை கிருஷ்ணா சார்.
நானே இப்போதுதான் இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்.
jayachandran vani song nalla irukku
netru thaan ketten
பார்த்தால் கடையநல்லூர் சினி ஆர்ட்ஸ் M A காஜா படம் மாதிரி தெரியுது
-
18th July 2014, 12:36 PM
#1996
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
'வல்லவன் வருகிறான்' படத்தில் ஒரு அட்டகாசமான பாடல் ஒன்று ராஜேஷின் அட்டகாசமான மியூஸிக்கில்.
சும்மா பாலாவும், சசிரேகாவும் பின்னி எடுக்கிறார்கள்.
ராஜய்யா என் மேலே ஆசையா
கண்ணாலே பாரய்யா
சொன்னாலே கேளய்யா
அம்மம்மா ராஜம்மா
ராஜாத்தி கேளம்மா
ராஜாவைப் பாரம்மா
உனக்காக நானனம்மா
தட்டான் என்று நான் சொன்னால்
ஆயிரம் பொன்னல்லொ
அய்யா கையில் சாய்ந்தாலே
ஆனந்தம் உண்டல்லோ
மஞ்சள் ரதியும் நானானால்
மன்மதன் நானல்லோ
மழையும் காற்றும் சேர்ந்தாலே (நிஜமாகவே சும்மா ஜிலு ஜிலு என்று பாடுகிறார் பாலா)
ஜிலுஜிலு சுகமல்லோ
தாமரைப் பூப் போல் ஜொலித்தது
சந்தித்த போதே இழுத்தது
சாயந்திரம் வந்து விட்டால்
சரசம் நமக்குள்ளே
ராஜய்யா என் மேலே ஆசையா
கண்ணாலே பாரய்யா
சொன்னாலே கேளய்யா
அம்மம்மா ராஜம்மா
ராஜாத்தி கேளம்மா
ராஜாவைப் பாரம்மா
உனக்காக நானனம்மா
சித்திரம் போலே கண்ணாலே
சிரிக்கும் பெண்ணல்லோ
செவ்வந்திப் பூவின் இதழாலே
அழைக்கும் பெண்ணல்லோ
முத்திரை காட்டும் கையாலே
வளைக்கும் பெண்ணல்லோ
முகத்தை என்றும் ஆடையினால்
மறைக்கும் பெண்ணல்லோ
கண்ணுக்கு கண்ணே சுகம் சுகம்
ஆணுக்கு பொண்ணு பதம் பதம்
ஆசையெல்லாம் இருவருக்கே
ஆடடி ராஜாத்தி
ராஜய்யா என் மேலே ஆசையா
கண்ணாலே பாரய்யா
சொன்னாலே கேளய்யா
அம்மம்மா ராஜம்மா
ராஜாத்தி கேளம்மா
ராஜாவைப் பாரம்மா
உனக்காக நானனம்மா
பாலா பிரித்து மேய்கிறார். சசியும் நல்ல ஈடு. அருமையான பொருத்தம்.
இவர்கள் இணைந்து இன்னும் பல பாடல்களைப் பாடியிருக்கக் கூடாதா என்று ஏங்குகிறது மனம்.
நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
http://music.cooltoad.com/music/song...061&PHPSESSID=
கேட்டால் விடவே மாட்டீர்கள் கிருஷ்ணா சார். நான் பலமுறை கேட்டு மகிழ்ந்தாகி விட்டது. கேட்டு விட்டு சொல்லுங்கள். வீடியோவில் பாதிப் பாடலுடன் கட்டாகி விடுகிறது. ஆனால் ஆடியோவில் முழுப் பாட்டும் அருமையாக இருக்கிறது.
Last edited by vasudevan31355; 18th July 2014 at 12:51 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th July 2014, 01:33 PM
#1997
Senior Member
Veteran Hubber
மிகக்குறைந்த நாட்களில், அவ்வளவாக பிரபலமாகாத திரியில், 2,000 பதிவுகள் என்னும் சாதனையை நிகழ்த்த காரணமாயிருந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி.
விரைவில் இன்னும் பல புதிய சாதனைகளைத் தொடர வாழ்த்துக்கள்...
-
18th July 2014, 01:41 PM
#1998
Senior Member
Diamond Hubber
மௌனம் இங்கு நிம்மதி
மஞ்சம் ஒரு சந்நிதி
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக
பணத்துக்காக படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ஒலிக்கும் பாட்டு.
சுசீலாவின் குரலில் ஜெயசித்ரா உரர்ரென்று இருக்கும் சிவக்குமாரை தேற்ற முயற்சிக்கும் பாடல்.
-
18th July 2014, 01:46 PM
#1999
Senior Member
Veteran Hubber
ஸாரி, கோபால் சார்,
தங்களின் பஞ்சாமிர்தம் கதையைப் படித்தபின்தான் தோன்றுகிறது, ஜெய்குமாரியின் சோகக்கதையை பதித்து, பலரது கனவைக் கலைத்திருக்க வேண்டாமோ என்று.
(நண்பர் வினோத் அவர்களும் அந்தப் புகைப்படத்தை பதிக்காமல் இருந்திருக்கலாம்).
ராஜீவ்காந்தி கொலைசெய்யப்பட்டு சிதறுண்டு கிடக்கும் காட்சியைப் படமாகப்பார்த்த பின் அப்போது சிறுவயதினராக இருந்த ராகுலும் பிரியங்காவும் கூறினராம் "அந்தப்படத்தை எங்களிடம் காட்டாமல் இருந்திருக்கக் கூடாதா?. இதற்கு முன் எங்கள் தந்தையை நினைத்தால் அவரது அழகான சிரித்த முகம் நினைவு வரும். ஆனால் இப்போதோ அவரை நினைத்தால் அவர் உடல் சிதறுண்டு கிடக்கும் காட்சியே கண்ணில் தோன்றுகிறது".
இப்போது முடிவெடுத்து விட்டேன். இனி யாருடைய தற்கால நிலையையும் சொல்லி யாருடைய கனவையும் கலைக்கக்கூடாது என்று.
-
18th July 2014, 01:52 PM
#2000

Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா சார்,
'வல்லவன் வருகிறான்' படத்தில் ஒரு அட்டகாசமான பாடல் ஒன்று ராஜேஷின் அட்டகாசமான மியூஸிக்கில்.
சும்மா பாலாவும், சசிரேகாவும் பின்னி எடுக்கிறார்கள்.
அம்மம்மா ராஜம்மா
ராஜாத்தி கேளம்மா
ராஜாவைப் பாரம்மா
உனக்காக நானனம்மா
தட்டான் என்று நான் சொன்னால்
பாலா பிரித்து மேய்கிறார். சசியும் நல்ல ஈடு. அருமையான பொருத்தம்.
இவர்கள் இணைந்து இன்னும் பல பாடல்களைப் பாடியிருக்கக் கூடாதா என்று ஏங்குகிறது மனம்.
வாசு சார்
இந்த பாட்டு சிலோன் ரேடியோ ஹிட் சார்
பாலாவின் எல்லா இத்யாதிகளையும் இந்த பாட்டில் பார்க்கலாம்
திரியின் 200வது பக்கத்திற்கு வாழ்த்துகள்
நீங்கள் மென்மேலும் சாதனை புரிய எல்லாம் வல்ல அந்த 'சிவா'
பெருமானை வேண்டுகிறேன்
வாழ்க வளர்க
Bookmarks