Page 255 of 400 FirstFirst ... 155205245253254255256257265305355 ... LastLast
Results 2,541 to 2,550 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2541
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    இன்றைய ஸ்பெஷலில் 'அம்மா என்றால் அன்பு' என்று படித்தவுடன், இது 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் பாடிய பாடல்தான் என்று நினைத்து நான்கூட ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் படித்தேன். சிலவரிகள் படித்தபின்னர்தான் இது வேற அம்மா என்று தெரிந்தது.

    உண்மையில் இதுநாள் வரையில் எனக்குத்தெரியாத தகவல் இது. இப்பாடலை இப்போதுதான் முதல்முறையாக கேட்கிறேன். ஏன் படத்தில் இடம்பெறவில்லை?. இடம்பெற்றால் தன்பாடலுக்கு மவுசு குறைய வாய்ப்புண்டு என்பது 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களின் கண்டிஷனா?.

    அரிய தகவலுடன் கூடிய அற்புதப் பதிவு...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2542
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    இன்றைய ஸ்பெஷல் (41)


    இப்போது இன்றைய ஸ்பெஷலாக ஒலிக்கும் பாடல். 'இதிலென்ன ஸ்பெஷல்?... கேட்டுப் புளித்துப் போன பாடல்தானே' என்று யாரோ புலம்புவது போல் என் காதுகளுக்கு கேட்கிறது.

    கண்டிப்பாக ஸ்பெஷல்தான்.

    சில பேருக்கு தெரிந்திருக்கலாம். பல பேர் அறிய வாய்ப்பில்லை.

    இந்தப் பாடலை நமது டி.எம்.சௌந்தரராஜன் அவர்களும் பாடி இருப்பதுத்தான் இன்றைய ஸ்பெஷலாக வருகிறது.

    எம்ஜிஆர் அவர்களுக்காக பதிவு செய்யப்பட்ட பாடல். ஆனால் படத்தில் இப்பாடல் வராமல் ஜெயா பாடும் பாடல் காட்சியே இடம் பெற்றது.
    வாசு சார்
    பாராட்ட வார்த்தைகளே இல்லை
    என்ன ஒரு தகவல்
    உண்மையில் நான் முதல் முறையாக கேட்கிறேன்
    பாடகர் திலகம் பாடி
    உங்கள் அர்பணிப்பு வேண்டாம் உபசார வார்த்தைகள்
    gkrishna

  4. #2543
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் கிருஷ்ணாஜி,

    70-களில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இயங்கிய சில முக்கிய மேடை மெல்லிசைக்குழுக்கள் பற்றிய விவரங்களை தந்து கடந்த கால நினைவுகளை உசுப்பிவிட்டீர்கள். நீங்கள் சொன்னதுபோல அப்போது சேனல்கள், குறுந்தகடுகள் போன்றவை இல்லாததால் இம்மாதிரி மெல்லிசைக் குழுக்களுக்கு நல்ல வரவேற்பு. இவைகளோடு ஜேசுதாஸ்-சுஜாதா மெல்லிசைக் கச்சேரிகளும் அப்போது களைகட்டின.

    ஏ.வி.ரமணன் குழுவுக்கு அப்போது நல்ல வரவேற்பு. அதை வைத்துத்தான் மன்மத லீலையில் 'நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி' பாட மெல்லிசை மன்னர் வாய்ப்பளித்தார்.

    ரமணன் பிற்காலத்தில் 'தமிழ்த்தாத்தா' என்ற டாக்குமென்ட்ரி சீரியலில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யராக நடித்தார். வேடப்போருத்தம் கனகச்சிதம். இந்த ரோலுக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டவர், மறைந்த ரகுவரன் அவர்கள்...
    கார்த்திக் சார்
    இறுதியில் ஒரு தகவல் தந்து உள்ளீர்கள் பாருங்கள் அது தான் சூப்பர்
    gkrishna

  5. #2544
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    கார்த்திக் சார்
    இறுதியில் ஒரு தகவல் தந்து உள்ளீர்கள் பாருங்கள் அது தான் சூப்பர்
    yaa yaa yaa yaa
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2545
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ/ ராகவேந்திரன் சார்/ கிருஷ்ணா சார்/ கார்த்திக் சார் மற்றும் ராஜேஷ் சார்,

    ஒரு மிக முக்கியமான பாடலைத் தருகிறேன். அமர்க்களம். ஈஸ்வரி பற்றி எழுதிவிட்டு ஒரு வித்தியாச பாடலைத் தராமல் போனால் எப்படி? நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். நம் அருமை நண்பர்களும்தான்.



    1968 -இல் வெளிவந்த 'நீயும் நானும்' ரவிச்சந்திரன், ராஜஸ்ரீ நடித்து வெளி வந்த படம். இசை எம்.எஸ். விஸ்வநாதன். இந்தக் கிராதகி இப்படத்தில் பாடிய ஒரு கதி கலங்க வைக்கும் பாடல். கார்த்திக் சார் கண்டிப்பாகக் கேட்டிருக்கக் கூடும்.

    ஐயோ! ஐயோ! கேட்கிறேன்... கேட்கிறேன்... கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

    ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா
    உருவைக் கொஞ்சம் மாற்றட்டுமா
    பிள்ளை மனசு பெரிய வயசு
    கண்ணால் உலகம் காட்டட்டுமா

    டவுன்லோட் செய்து கண்டிப்பாக கேட்டுப் பாருங்கள். இரவு தூங்கினா மாதிரிதான்.

    http://raagwap.com/download-220780/O...um-Naanum.html
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2546
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கிருஷ்ணா சார்!

    ஏ..வி.ரமணன் பதிவு அருமை. நான் கடலூர்காரன் ஆனதால் இங்கெல்லாம் லோக்கல் மெல்லிசைக் குழுக்களே அதிகம். ஆனால் கடலூர் பஸ் ஸ்டாண்ட் மாரியம்மன் கோவில் செடல் உற்சவ திருவிழாவிற்கு வருடாவருடம் ராட்சஸி வந்து மேடைக் கச்சேரி செய்து அமர்க்களப்படுத்தி விட்டுப் போய் விடுவார். 'ராஜபார்ட் ரங்கதுரை' உஷா நந்தினி மாதிரி மொத வரிசையில் நான் இருப்பேன் ஒவ்வொரு வருடமும். சும்மாவா வெறி பிடித்தது?

    'ஆட்டக் கடிச்சான்... மாட்டக் கடிச்சான்', 'நான் ரோமாபுரி ராணி'

    அப்படின்னு தொடையைத் தட்டி ராட்சஸி ஆரம்பிக்கும் போது கடலூரே சும்மா குலுங்கும் இரவு ஒரு மணிக்கு.

    ஆஹா! இப்போது அப்படி ஒரே ஒரு வாய்ப்புக் கிட்டாதா?
    வாசு சார்

    திருநெல்வேலியிலும் இந்த கொட்டம் உண்டு .
    வருடா வருடம் நெல்லையப்பர் காந்திமதி கேள்விப்பட்டு இருப்பீர்கள் கோயில் தேர் திரு விழாவின் போது அரசு பொருட் காட்சி நடைபெறும் .
    அதே நேரத்தில் குற்றாலம் சீசன் வேறு எல்லாம் சேர்ந்து ஒரு திருவிழா கூட்டம் தான் .

    தினசரி இரவு மேடை கச்சேரி, நாடகம் .உள்ளூர் வித்வான்கள் 'நெல்லை musiano ஆடர் கலை அரசன் பிரபாகர்' குழு ,ஜேசுதாஸ் எதிரொலி நெல்லை வாசுதேவன் குழு ,கண்டசாலா சீர்காழி எதிரொலி ஓவியர் வண்ண முத்து குழு, திருச்சி லோகநாதன் எதிரொலி நெல்லை கணபதி
    இதற்கு நடுவில் மதுரை சோமு புகழ் தண்ணி வண்டி பாலு (இவருக்கு கூஜா நிறைய வடிசாராயம் வேண்டும் அப்ப தான் தொண்டையே திறக்கும் ஒரே பாட்டு மருத மலை மாமணியே திருப்பி திருப்பி பாடுவார் once மோர் கேட்க அவரோட அல்லக்கை 10 பேர் எல்லோருக்கும் தலைக்கு 10 ரூபாய்).

    நடுவில் ஒரு நாள் சிலோன் லைலா இன்ப நடனம் (வயது வந்தவர்களுக்கு மட்டும் ஆனால் உள்ளே உட்கார்ந்து இருக்கிறவன் எல்லாம் தாளி நாளைக்கு போற கேஸ் ஆக இருக்கும் தனியாக ஒரு விசில் சத்தம் கேட்கும்.அது யாருன்னு பார்த்தீங்கன எங்க ஊர் சிவன் கோயில் பட்டர் தலையில் துண்டு கட்டி பெரிய தலைபா கொண்டு முகத்தை மறைத்து கொண்டு இருப்பார்.)

    வைரம் கிருஷ்ணமுர்த்தி நாடகம்,நாடக காவலர் மனோகர் இன் சிசு பாலன்,இலங்கேஸ்வரன்,sv ராமதாஸ் இன் கில்லெர் நரசிம்ஹன் ,
    ராதாவின் ரத்த கண்ணீர்,விவேகா பைன் ஆர்ட்ஸ் சோவின் 'சம்பவாமி யுகே யுகே,என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ',தில்லை ராகவனின் நாடகங்கள்,நம்ம தாலாட்டு ராஜபாண்டியன் ,சிவசூரியன் கரிகொல்ராஜ் nsk குழு நாடகங்கள்

    இறுதி நாள் மெல்லிசை மன்னர் ஈஸ்வரி குழுவினர் தலைமையில் நட்சத்திர இரவு விடிய விடிய ஒரே கொண்டாட்டம் தான். ராட்சசி ஒரு கச்சேரியில் 'இளமை நிரந்த உலகம் இருக்கு' பாடல் பாடும் போது ஆடிய ஆட்டம் இருக்கே இன்னொருதரா இருந்தா ஆனை கால் வியாதி வந்து இருக்கும்.
    கமல் ஆரம்ப காலத்தில் நிறைய தடவை வந்து டான்ஸ் எல்லாம் ஆடி இருக்கார். ஒரு தடவை அவர் ஆட மறுத்து அதனால் ரசிகர்கள் எல்லாம் கல்லை தூக்கி எறிந்து அவர் பதிலுக்கு 'நான் இனிமேல் திருநெல்வேலி பக்கமே வரமாட்டேன் ' என்று கூறி பாதியிலே நிகழ்சிகள் தடைபட்டது கூட உண்டு

    எல்லாம் முடிந்து காலை 4 மணிக்கு நெல்லை dwaraka lodge என்று ஒன்று உண்டு .அங்கே தான் ஸ்டே. மறுநாள் மதியம் 1 மணிக்கு நெல்லை சேது லிங்க் எக்ஸ்பிரஸ் ஒன்று நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் இல் இருந்து கிளம்பி மறு நாள் காலை 10 மணிக்கு தான் சென்னை வரும் நாங்கள் கொஞ்சம் 10 பேர் tirunelveli ரயில்வே ஸ்டேஷன் சென்று அவர்களை எல்லாம் வழி அனுப்பி, கொஞ்சம் பணக்கார பசங்க வழிநடைக்கு செலவுக்கு பணம் எல்லாம் கொடுப்பாங்க (துணை நடிகைகளுக்கு மட்டும்) மீண்டும் அடுத்த நிகழ்ச்சிக்கு காத்து இருப்போம்

    'என்ன சுகம் என்ன சுகம் '



    gkrishna

  8. #2547
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கிருஷ்ணாஜி,

    தங்களின் 'மலரும் நினைவுகள்' அருமையோ அருமை, சுவையோ சுவை. நாங்களும் திருநெல்வேலி திருவிழா திடலில் இருப்பதாய் உணர்ந்தோம்.

    நீங்கள் சொன்ன நாடக சபாக்களெல்லாம் வெளியூர் போகும்போது மட்டும்தான் கோயில் திருவிழாக்களில் நாடகம் நடத்துவார்கள். சென்னையில் சபாக்களுக்கு மட்டும்தான். இதற்காக ஹைகோர்ட் ராஜாஅண்ணாமலை மன்றம், மைலாப்பூர் மியூசிக்அகாடமி, தி.நகர் வாணிமகால், திருவல்லிக்கேணி என.கே.டி.கலாமண்டபம் என்று நாங்கள் படையெடுக்க வேண்டும். ஆனால் எப்படியும் வருஷா வருஷம் பொருட்காட்சியில் இவர்கள் நாடகம் நடக்கும். தலைவரின் தங்கப்பதக்கம் கூட பொருட்காட்சியில் நடந்து இருக்கிறது.

    நடிகர் அசோகனின் 'தர்மத்தின் கண்கள்' என்ற நாடகத்தின்போது, வசனத்தின் நடுவே அசோகன் ஏதோ தகாத வார்த்தை பேசியதற்காக கல்லெறி கூட வாங்கினார். சிலோன் லைலா ஒருமுறை ஆபாச நடனம் ஆடினார் என்பதால் அவருடைய ஆட்டத்துக்கு பொருட்காட்சியில் போலீஸ் அனுமதி கிடையாது. சி.ஐ.டி. சகுந்தலா, வெண்ணிற ஆடை நிர்மலா போன்றவர்களின் நடந்களும் நடந்திருக்கிறது.

    பொருட்காட்சியின் இன்னொருபக்கம் வெள்ளை ஸ்க்ரீன் கட்டி, தியேட்டர்களில் போணியாகாத சில குப்பைப்படங்கள் தினம் ஒன்றாக திரையிடப்படும். இப்போது சென்னை பொருட்காட்சி எப்படியென்று தெரியவில்லை. மிஸ் பண்ணுகிறோம்...

  9. #2548
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    அருமை... அடிமைப் பெண் திரைப்படத்தில் பதிவு செய்யப் பட்டு படத்தில் இடம் பெறாத இந்தப் பாடலைப் போல் ஏராளமான பாடல்கள் உள்ளன. படகோட்டி திரைப்படத்திலும் ஒரு பாடல் படத்தில் இடம் பெறவில்லை. ஏ.எல்.ராகவன் எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடல், பருவ கால ஏட்டினிலே என்று துவங்கும். நம்முடைய நடிகர் திலகம் நடித்த படங்களிலும் கூட இது போன்று சில பாடல்கள் படத்தில் இடம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளன.

    இன்னும் சொல்லப் போனால் இதைப் பற்றியே ஒரு மினி தொடர் தாங்களே தொடங்கலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2549
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆஹா நீயும் நானும் ஒரே படத்தில் இன்றைக்கு இரண்டு பாடல்கள்.... யாரடி வந்தார் மற்றும் ஊஞ்சல் கட்டி ஆடட்டுமா... இரண்டுமே எப்போது கேட்டாலும் புதுமையாக மிளிருபவை. இவையன்றி ரவி பாடுவதாக வரும் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் மற்றும் யாரடி வந்தார் இவையும் உண்டு
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2550
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    மிஸ் பண்ணுகிறோம்...
    உண்மை கார்த்திக் சார்
    கொஞ்சம் அல்ல நிறைய மிஸ் பண்ணுகிறோம் அல்லது பண்ணி விட்டோம் .

    நீங்கள் தலைவர் என்றவுடன் நினைவுக்கு வருகிறது

    1977-78 மக்கள் திலகம் அன்றைய முதல்வர் அவர் தலைமையில் பாளையங்கோட்டையில் பிரமாண்டமான நட்சத்திர இரவு.
    நெல்லை ஜங்ஷன் பொருட்காட்சி மைதானம் அவ்வளவு பெரியது இல்லை என்பதால் பாளையங்கோட்டை ஜான் 'ஸ் காலேஜ் மைதானம் தான் பெரியது என்பதால் அங்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

    அப்போது கமல் ரஜினி போன்றோர் எல்லோரும் வளரும் கலைஞர்கள்.அவர்கள் எல்லாம் வந்தார்களா என்று நினைவும் இல்லை இரண்டாவது அவர்கள் எல்லோரும் நாடக நடிகர்கள் அல்ல .எனவே எல்லோருக்கும் பேசுவது அல்லது எதாவது பாடுவது என்றே பொழுதை போக்கி கொண்டு இருந்தார்கள். மேஜர் அவர்கள் ஒரு நாடகம் போட்டார் .சுமாராக இருந்தது. அந்த நட்சத்ர இரவு highlight என்னவென்றால் தலைவரின் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் .வெளுத்து கட்டி விட்டார் . குரல்வளை நொறுங்கி முகம் எல்லாம் உணர்ச்சி குவியல் ஆகி இறுதியில் பௌத்த பிட்சுவின் காலடியில் தன தலை சாய்த்து அப்படியே விழுந்து விட்டார். தலைவரின் உணர்ச்சி மயமான நடிப்பை பாராட்டி அடுத்த நாள் தினத்தந்தி மாலை முரசு தினமலர் எல்லாம் ஒரே நடிகர் திலகம் மக்கள் திலகம் புகை படங்களாக நிரம்பி வழிந்தன

    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •