-
30th July 2014, 05:05 PM
#2691
Junior Member
Regular Hubber
வினோத் சார்,
நெல்லையில் தற்போது ராயல் டாக்கீஸ்,பாலஸ்-டி-வேல்ஸ்,பார்வதி
டாக்கீஸ் ஆகியவை இல்லை.ஸ்ரீ ரத்னா டாக்கீஸ்,பாப்புலர் டாக்கீஸ்(கணேஷ்
என்ற பெயரில்)ஆகியவை உள்ளன.
கோபு
-
30th July 2014 05:05 PM
# ADS
Circuit advertisement
-
30th July 2014, 06:25 PM
#2692
Senior Member
Diamond Hubber

Originally Posted by
mr_karthik
அப்படி தேன்மழை படத்தில் டி.கே.ராமமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை, பி.பி.எஸ்ஸின் 'கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்' உள்பட.
கார்த்திக் ஜி.. PBS and PS duet "கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்" எங்களுக்கும் காலம் வரும் படத்தில் இல்லையோ ?
-
30th July 2014, 06:27 PM
#2693
Junior Member
Newbie Hubber

Originally Posted by
madhu
கார்த்திக் ஜி.. PBS and PS duet "கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்" எங்களுக்கும் காலம் வரும் படத்தில் இல்லையோ ?
Yes.Madhu.You are correct.
-
30th July 2014, 06:28 PM
#2694
Junior Member
Newbie Hubber
-
30th July 2014, 06:39 PM
#2695
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
'
இசையரசியின் இந்தப்பாடலைப்போல இன்னொரு அருமையான பாடல், 'மணப்பந்தல்' படத்தில், விஸ்வநாதன் வெளியில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருக்கும்போது ராமமூர்த்தி மட்டும் ட்யூன் போட்ட (சில நண்பர்களை எதையெல்லாம் சொல்லி மகிழ்விக்க வேண்டியுள்ளது) இசையரசி அருமையாகப்பாடிய ஹிட் ஸாங்.
அய்யய்யோ ,
இது அபாண்டம். நான் அப்படியெல்லாம் சொன்னால் மகிழ கூடியவனா என்ன?ராமண்ணாவிடம் கெஞ்சி கூத்தாடி ஜி.ராமநாதனிடம் இருந்து வாய்ப்பை பறிப்பது முதல், ராமமூர்த்தி போட்ட டியுனை ராமண்ணா விற்கு ஹார்மோனியத்தில் வாசித்து காட்டி , அவ்வப்போது நிரவலாக இரவில் பிள்ளைகள் கேட்டால் பயந்தலரும் கர்ண கடூரமான குரலில் பாட்டை சொல்லி, பதிவின் போது ரெண்டு மூங்கில் குச்சியை கையில் வைத்து , துரு துரு வென்று இருப்பவரை போய் ,வெத்திலை போட்டு கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பார் என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.
-
30th July 2014, 06:40 PM
#2696
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
எம். பி. ஸ்ரீநிவாசன் இசையமைத்த பாடல்கள் என்றாலே தனிச் சிறப்பு உண்டு. ஒன்று கூட சோடை போனதில்லை. குறிப்பாக தாகம் படத்தில் இந்தப் பாடல் சென்னை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது. எம்.பி.எஸ்.வானொலிக் கலைஞர் என்பதாலோ என்னவோ சிலோன் ரேடியோவை நம் வானொலி நிலையம் முந்திக் கொண்டது. முத்துராமன் குரலும் இடையே ஒலிக்கும் இப்பாடல் மிகச் சிறப்பாக இருக்கும் காரணம் அதில் அவ்வப்போது இடம் பெறும் கோரஸ் குரல்கள். வீணையிசை நாதஸ்வரம் எல்லாம் சேர்ந்து நம்மை பரவசமூட்டும்.
நீண்ட நாட்களுக்குப் பின் தாகம் திரைப்படத்திலிருந்து வானம் நமது தந்தை பாடலைக் கேட்போமா..
இதே படத்தில் இடம் பெற்ற "உருகிடும் வேளையிலும்" பாட்டை எங்கேயும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஜேசுதாஸின் விருத்தத்தைத் தொடர்ந்து எஸ்.ஜானகி பாடியிருப்பார். ஒரு பழைய திரியில் இந்த லிங்க் கிடைத்தது.
http://www.tfmpage.com/cgi-bin/strea...td/urugidum.rm
-
30th July 2014, 07:25 PM
#2697
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
ஆனால் 'உடலுக்கு உயிர்க் காவல்' எரிச்சலாக வரும். அசோகன் பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு படுத்துவார். கஷ்டம்டா சாமி.
இந்த ஆள் எந்தப்பாட்டைத்தான் உருப்படியாகச் செய்தார்.
எத்தனை நல்ல பாடல்கள் இவரிடம் போய் சீரழிவை சந்தித்தன என்று பெரிய பட்டியலே போடலாம்...
-
30th July 2014, 07:44 PM
#2698
Junior Member
Newbie Hubber
ஹிந்தோளம் .
உங்கள் அத்தை பெண் ,நீங்கள் வருவதறிந்து ,ஒளிந்து கொண்டு கொண்டு விளையாட்டு காட்டுகிறாள். நீங்கள் அவளிருக்குமிடம் தெரிந்து,பின்னால் சென்று ,காதை திருகி குதூகலிக்கிறீர்கள். அப்போது உங்கள் மனம் படும் இன்ப பாட்டை ராகமாக்கினால் ,அதுவே ஹிந்தோளம்.ஆரம்பம் முதல் உற்சாகமாய் களை கட்டும் ராகம்.
ரிஷப ,பஞ்சமம் இல்லாத ஐந்து சுரம் கொண்ட (ஸ க ம த நி ஸ , ஸ நி த ம க ஸ ) கொண்ட சுலப சமதள ராகம்.இது pentatonic scale என்பதால் ,இந்த ராகத்தின் சாயல் கொண்ட இசை ,சீனா,இந்தோனேசியா முதல் பல நாட்டு பாடல்களில் நான் கண்டதுண்டு.(மோகனமும் அப்படியே). வெஸ்டேர்ன் முதல் நமது பண்டைய பண்கள் வரை இந்த சாயல் கொண்ட ராகங்கள் உண்டு.இதன் மூலம் நட பைரவியா ,அனும தோடியா என்று இன்றும் பட்டி மன்றம் உண்டு.ஹிந்துஸ்தானி மால் கௌன்ஸ் இதன் சகோதரன்.
சிறு வயதில் ராமர் சம்பந்த பட்ட எந்த பண்டிகை வந்தாலும் ,ஒரு கால் மணி நேரம் ஒரே பாடலுக்கு போய் விடும். கொஞ்சம் கடுப்பாகவே இருந்தாலும் போக போக இந்த நீ(ஈ ஈ ஈ ஈ )ண்ட பாடலில் சுவை காண ஆரம்பித்தேன். லவகுசா என்ற படத்தில் "ஜகம் புகழும் புண்ய கதை "(நடுவில் வேறு ராகங்களும் வரும்).
அடுத்த வீட்டு பெண் என்ற அஞ்சலியின் நகைச்சுவை சூப்பர் ஹிட் படம். அவர் கணவர் ஆதி நாராயண ராவ் கொடுத்த பல சூப்பர் ஹிட் பாடல்கள். மூலம் என்னவோ கல்யாணம் பண்ணியும் பிரும்மசாரி பட playback knot தான் என்றாலும் ஜாலிதான்.அதில் டி.ஆர் .ராமசந்திரன் (தங்கவேலு குரலுடன்) பாட்டு வாத்யாருடன் மோதும் சின்ன பாட்டு. பாட்டு வாத்யார் அவசரத்தில் கவிகளும் கண் பாடி விடுவார். படோசன் இதன் remake ."கண்களும் கவி பாடுதே"
அப்போது தெலுங்கு பட வாசனையில் நிறைய தமிழ் படங்கள்.சென்னை ராஜதானி பொட்டி ஸ்ரீராமுலுவினால் பிரியாத காலம்.சில classic பாடல்கள் ராவ் களினால் சுசீலா குரலில் வளம் பெறும் .அப்படி என்னை கவர்ந்த இளம் சுசீலா குரல் பாடல் "அழைக்காதே நினைக்காதே".
இந்த ராகத்தில் மற்ற பாடல்கள்.
ராஜ சேகரா மோடி செய்யலாகுமா,ராஜ தந்த்ரி நீயடா
என்னை விட்டு ஓடி போக முடியுமா- குமுதம்.
மழை கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்- கர்ணன்.
மனமே முருகனின் மயில் வாகனம்- M .S .பிள்ளை.
சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம்.
பொத்தி வச்ச மல்லிக மொட்டு -மண் வாசனை.
மார்கழி பூவே மார்கழி பூவே- மே மாதம்.
-
30th July 2014, 08:00 PM
#2699
Senior Member
Diamond Hubber
ஹிந்தோளம் ஒரு மென்மையான ராகம். அத்தை பெண் காதைக் கூட மிருதுவாகத்தான் திருகணும்...
"பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்.. அதில் பஞ்சமம் கலந்தால் சுருதி பேதம்" அப்படின்னு ஒரு சுசீலா பாட்டு கூட இருக்கு இல்லையா ?
மலேஷியா வாசுதேவன் குரலை மாற்றி சி.எஸ்.ஜெயராமன் மாதிரி பாடிய "ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே" பாட்டும் "சின்னப்பூவே மெல்லப் பேசு" படத்தில் வரும் "என்னடா காதல் இது" பாட்டும் கூட இதன் சாயல்தானே... Spb & ஜானகி சங்கராபரணத்தில் ( படத்தின் பேர்தான் ) பாடிய "சாமஜவரகமனா" சரிதானா ?.
பஜரே கோபாலம் என்ற பாடலைக் கேட்டுக்கொண்டு கண்ணை மூடினால் கோபால் வந்து இன்னும் விஷயங்கள் சொல்லுவாரோ ?
-
30th July 2014, 09:01 PM
#2700
Senior Member
Seasoned Hubber
இந்தப் பாடல் ஹிந்தோளம் தானே
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks