-
30th July 2014, 09:10 PM
#2701
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
mr_karthik
இந்த ஆள் எந்தப்பாட்டைத்தான் உருப்படியாகச் செய்தார்.
எத்தனை நல்ல பாடல்கள் இவரிடம் போய் சீரழிவை சந்தித்தன என்று பெரிய பட்டியலே போடலாம்...
Manapandhal in telugu was Intiki deepam illale (Sarojadevi & EV saroja repeated their roles while NTR played Asokan's role and JAggayya played SSr's role)
here is the same song but by NTR .. what a difference between NTR & Asokan...
-
30th July 2014 09:10 PM
# ADS
Circuit advertisement
-
30th July 2014, 10:44 PM
#2702
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்,
மதியப் பணி இப்போதுதான் முடிந்தது. நல்ல பதிவுகளை தந்துள்ளீர்கள். நன்றி!
நம் ராஜாத்தி பாடக்கிக்கு வந்து விடுவோம்.
அதே 'என் கடமை' படத்தில் இன்னொரு அமர்க்களமான பாடல்.
'தேனோடும் தண்ணீரின் மீது
மீனோடு மீனாக ஆடு
செவ்வாழைக் கால்கள்
பொன்வண்டுக் கண்கள்
ஜில்லென்று நீராட ஆடு'
எவ்வளவு அழகாகப் பாடுகிறார். கோரஸ் அற்புதம். இசையும்தான். என் மனம் கவர்ந்த பாடல்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th July 2014, 10:49 PM
#2703
Senior Member
Diamond Hubber
இன்னொரு அற்புதமான பாடல் 'ஜிம்போ' படத்திலிருந்து. வெகு ஜோர். இளங்குருத்துக் குரல்.
'அவர் நினைவும் என் நினைவும் மாற்று ஒன்றாச்சு
ஜோருதான் ஜோரு நான் பார்த்து நின்றாச்சு'
இளமையான குரல். இளநீர் போல சுவை. தேன் லட்டுக் குரல்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th July 2014, 10:58 PM
#2704
Senior Member
Seasoned Hubber
Vasu ji,
AAm arumaiyana padalgal avar ninaivum, en nenju unnai agaladhuu my all time favourite
ippo kooda iphonela adhan kettukondirukkiren
-
30th July 2014, 11:03 PM
#2705
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
Vasu ji,
AAm arumaiyana padalgal avar ninaivum, en nenju unnai agaladhuu my all time favourite
ippo kooda iphonela adhan kettukondirukkiren
வாவ்...
-
30th July 2014, 11:04 PM
#2706
Senior Member
Diamond Hubber
naanum kettukitte padukkiren. G.N Rajesh sir.
-
30th July 2014, 11:24 PM
#2707
Senior Member
Seasoned Hubber
Good Night Vasu ji. Andha JAmuna paatu ketteengala.... Romba kashtamana paatu ... PS summa pattaya kelappiruppaanga
-
31st July 2014, 05:21 AM
#2708
Senior Member
Diamond Hubber
kandippa ketkiren rajesh sir.. athai vida enna velai? kettuttu soldren.
-
31st July 2014, 05:29 AM
#2709
Junior Member
Platinum Hubber
நினைவில் நின்ற பசுமையான பல பாடல்கள் - இது வரை கேட்டிராத பாடல்கள் என்று திரியில்'' விரும்பி கேட்டவை ''
''நினைவூட்டல் பாடல்கள் ''- என்று நண்பர்கள் பதிவிடும் பாடல்களும் அதற்கான விளக்கமும் , உடனுக்குடன்
கருத்துக்கள் பரிமாற்றம் - பாட்டுக்கு பாட்டு என்று புதுமையாக திரி செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது .
என்னுடைய இன்றைய துவக்க பாடல் - என்கடமை படத்தில் இடம் பெற்ற இந்த பாடல்
''மீனே மீனே மீனம்மா ''- இசை அரசியின் குரலும் - மெல்லிசை மன்னர்களின் இசையும் மனதை கொள்ளை கொண்ட
பாடல் .
-
31st July 2014, 05:32 AM
#2710
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (43)
சிறு வயது முதற்கொண்டே ஆச்சார அனுஷ்டானங்களில், தெய்வ பக்தியில் ஊறிப் போய் இருக்கும் ஒரு பிராமண குடும்பப் பெண் திருமணம் ஆனாலும் தாம்பத்யத்தில் நாட்டமில்லாமல் குழந்தை போல நடந்து கொண்டு அவள் கணவனை அவளை அறியாமலேயே இம்சிக்கிறாள். கணவன் ஆசையுடன் நெருங்கும் போதெல்லாம் நெருப்பாய்க் கொதிக்கிறாள். தீட்டு, பூஜை புனஸ்காரம் என்று தட்டிக் கழிக்கிறாள்.
இதே போல இளமை உணர்ச்சிகளுடன் கனவு காணும் இன்னொருத்தி தாம்பத்யத்தில் அதிக விருப்பமில்லாத ஒரு ஓவியனை மணந்து விரகதாபத்தில் தவிக்கிறாள்.
பாதிக்கப்பட்ட இரு ஜோடிகளில் அங்கே கணவனும், இங்கே ஓவியன் மனைவியும் தங்கள் விரகதாபத்தை இப்பாடலின் வழியே பரிதாபமாக வெளிப்படுத்துகிறார்கள். .

ஆச்சார மனைவி பாத்திரத்தில் சுமித்ராவும், அவள் அன்புக்கு எங்கும் கணவனாக கமலும், செக்ஸ் நாட்டமில்லாத ஓவியன் ரோலில் விஜயகுமாரும், விரகதாபத்தில் துடிக்கும் அவர் மனைவியாக 'படாபட்' ஜெயலட்சுமியும் நடித்த அழகான ஓவியம் இந்த 'மோகம் முப்பது வருஷம்'. ஆனந்த விகடனில் வெளியாகி லட்சக் கணக்கான வாசகர்கள் படித்துப் பாராட்டிய கதை.
இப்படத்தைப் பற்றி நான் எழுதுவதை விட கீழ்க்காணும் லிங்கை சொடுக்குங்கள். முழு விவரமும் கிடைக்கும்.
http://udhayamgold.wordpress.com/201...athu-varusham/
விஜயபாஸ்கரின் அற்புதமான இசையில் பாலாவும், வாணிஜெயராமும் மிக மிக அற்புதமாகப் பாடும் அபூர்வமான ஒரு பாடல். அவ்வளவு இனிமை. ஓர் ஆண்மகனின் விரகதாப வெளிப்பாடுகளை பாலாவைத் தவிர இவ்வளவு நளினமாக யாராலும் தர முடியுமா என்பது சந்தேகமே.
வாணி ஜெயராமும் அற்புதம்.
ராஜேஷ் கூறுவது போல் விரகதாபங்களை விரசமில்லாமல் கண்ணியமாய் வெளிப்படுத்தும் பாடல்.
மிக அதிகமாக என்னைக் கவர்ந்த மத்தியக் காலப் பாடல்களில் இது முக்கியமானது.

"ம்..சும்மா இருங்க தூக்கம் வருது ' (சுமித்ரா வெறுப்பு)
சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
காதல்... மோகம்... இன்பம் (கிளி ரிப்பீட்டு)
புண்ணியமா புருஷார்த்தமா
சீதையிடம் ராமன் காணாததா
தேவியரின் வாழ்வில் இல்லாததா
ராதையிடம் கண்ணன் நாடாததா
ராசலீலை என்ன கூடாததா
உலகில் ஒரு பாகம்
உறவு கொள்ளும் தாகம்
புண்ணியமா புருஷார்த்தமா
சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
சும்மா இரும்மா... don 't disturb me
அடடா... போய்த் தூங்கு (விஜயகுமாரின் நாடாமை பேச்சு)
என் மனதை நானேதான் சொல்வதா
ஏக்கமென்னவென்றே நான் சொல்வதா
ஓவியத்துப் பெண்மை உயிர் கொள்ளுமா
உறவு இல்லப் பெண்மை துயில் கொள்ளுமா
கூட்டறவு இன்பம்
கேட்டுப் பெறும் துன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா
சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
காதல்... மோகம்... இன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா
ஆண்மனது இங்கே அனல் கொண்டது
அந்தரங்கம் எல்லாம் யார் சொல்வது
பெண் மனது இங்கே தணல் கொண்டது
தேங்கி விட்ட நாணம் தடை கொண்டது
நீந்தி வரும் வெள்ளம்
தாங்கிப் பெறும் உள்ளம்
புண்ணியமா புருஷார்த்தமா.
ம்..
சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
காதல்... மோகம்... இன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா
ஹாங்...ஹூம். (பாலா சிணுங்கல்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks