-
31st July 2014, 03:32 PM
#1281
Junior Member
Diamond Hubber

Originally Posted by
MGR Roop
Video clip captured in Albert theatre on 101st day of Ayirathil Oruvan.
உண்மையான தமிழன், இந்தியன், மனிதன் ஆண்டவன், அசத்தல்.
-
31st July 2014 03:32 PM
# ADS
Circuit advertisement
-
31st July 2014, 04:21 PM
#1282
Junior Member
Diamond Hubber
கே.ஆர்.ராம்சிங், கம்பீர தோற்றம் கொண்டவர். "புயலுக்குப்பின்'' என்ற நாடகத்தில், ஒற்றைக்கால் சர்வாதிகாரியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.
பின்னர், "திருமழிசை ஆழ்வார்'' பக்தி நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் சென்னையில் தொடர்ந்து 400 நாட்கள் நடந்தது.
நாடகத்தில் புகழ் பெற்று விளங்கிய ராம்சிங்குக்கு, சினிமா வாய்ப்பு தேடி வந்தது.
1947-ல் ஜகன்னாத் புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம், "விஸ்வாமித்ரா'' என்ற படத்தை தயாரித்தது. கதாநாயகியாக, அன்றைய "கனவுக்கன்னி'' டி.ஆர்.ராஜகுமாரியும், கதாநாயகனாக ராம்சிங்கும் நடித்தனர். இப்படத்திற்கு பம்மல் சம்பந்த முதலியார் ("மனோகரா'' கதையை எழுதியவர்) வசனம் எழுதினார்.
தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது. இந்தியிலும் ராம்சிங்தான் கதாநாயகன். இப்படம் வெற்றி பெறவில்லை. எனவே, ராம்சிங் மீண்டும் நாடக உலகுக்கே திரும்ப வேண்டியதாயிற்று. "ஜீவன்'', "பிலோமினாள்'', "எதிர்பாராதது'' உள்பட பல நாடகங்களில் நடித்தார்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு, திரைப்படத்துறை மீண்டும் அழைத்தது.
டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் தயாரித்த "மின்னல் வீரன்'' திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தில், ரஞ்சன் கதாநாயகனாகவும், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா கதாநாயகியாகவும் நடித்தனர். "புயல்'' என்ற படத்திலும் வில்லனாக ராம்சிங் நடித்தார்.
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த "கன்னியின் காதலி'' படத்தில் வில்லனாக நடித்தார். அஞ்சலிதேவி, மாதுரிதேவி, எஸ்.ஏ.நடராஜன் நடித்த இப்படத்தில்தான், கவிஞர் கண்ணதாசன் முதன் முதலாக பாடல் எழுதினார்.
கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்த "விஜயகுமாரி'' படத்தில் ஒற்றைக்கால் மந்திரவாதியாக வில்லன் வேடத்தில் பிரமாதமாக நடித்தார், ராம்சிங்,
பிரபல இயக்குனர் கே.ராம்நாத் டைரக்ட் செய்த படம் இது.
1958-ல் எம்.ஜி.ஆர். பிரமாண்டமாக தயாரித்த "நாடோடி மன்னன்'' படத்தில், பானுமதியின் தந்தையாக மீண்டும் ஒற்றைக்காலுடன் நடித்தார். இந்தப்படம் அவருக்கு புகழ் தேடித்தந்தது.
இதன்பின், எம்.ஜி.ஆர் - சாவித்திரி நடித்த "மகாதேவி'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். எம்.ஜி.ஆரின் கண்களை குருடாக்குவது போலவும், பிறகு அவரை காப்பாற்றுவது போலவும் ராம்சிங் நடித்தது, ரசிகர்களைக் கவர்ந்தது.
சிவாஜி - ஜமுனா இணைந்து நடித்த "மருதநாட்டு வீரன்'' படத்தில், பி.எஸ்.வீரப்பாவும், ராம்சிங்கும் வில்லன்களாக நடித்தனர்.
பிறகு "நாகநந்தினி'', "தோழன்'' ஆகிய படங்களில் ராம்சிங் நடித்தார். இதில் "தோழன்'' படத்தில் அவருக்கு மீண்டும் ஒற்றைக்கால் வேடம்!
இந்தி, தெலுங்கு முதலான மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள் தமிழில் "டப்'' செய்யப்பட்டபோது, முக்கிய நடிகர்களுக்கு குரல் கொடுத்தவர், ராம்சிங்.
ராஜ்கபூரின் "ஆ'' என்ற படம் தமிழில் "அவன்'' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டபோது, ராஜ்கபூரின் தந்தை பிருதிவிராஜ் கபூருக்கு ராம்சிங் குரல் கொடுத்தார்.
அவர் குரல் பிருதிவிராஜ் கபூரை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர் திலீப்குமார் - பிருதிவிராஜ்கபூர் நடித்த பிரமாண்டமான "மொகல் - ஏ - ஆஜாம்'' என்ற படம் தமிழில் "அக்பர்'' என்ற பெயரில் `டப்' செய்யப்பட்டபோது, தனக்கு குரல் கொடுக்கும்படி ராம்சிங்கிடம் பிருதிவிராஜ் கபூர் கேட்டுக்கொண்டார். அதன்படி அக்பராக நடித்த பிருதிவிராஜ் கபூருக்கு குரல் கொடுத்தார், ராம்சிங்.
இடையே "தாழம்பூ'', "ஆசை முகம்'', "அஞ்சல் பெட்டி 520'', "பாட்டொன்று கேட்டேன்'', "பாக்தாத் பேரழகி'', "அரசகட்டளை'', "ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது'', "துணிவே துணை'' முதலிய படங்களில் நடித்தார்.
பிறகு நடிப்பை குறைத்துக்கொண்டு, "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். நூற்றுக்கணக்கான "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுத்தார். விட்டலாச்சார்யா படங்களில், தெலுங்கு வில்லன் நடிகர் ராஜ்நளாவுக்கு பெரும்பாலும் குரல் கொடுத்தவர், ராம்சிங்தான்.
பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும், ஒற்றைக்கால் வில்லனாக, ஒரு காலை கயிற்றால் மடக்கிக் கட்டிக்கொண்டு நடித்ததால், அவரது இடது காலில் ரத்தம் உறைய ஆரம்பித்தது. சரியான சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல், தொழிலில் கவனமாக இருந்ததால், உடல் நலம்
குன்றியது.கோடம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் 1985 அக்டோபர் 18-ந்தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 70.
Courtesy malaimalar
-
31st July 2014, 07:06 PM
#1283
Junior Member
Veteran Hubber

Originally Posted by
MGRRAAMAMOORTHI
அருமை திரு ரூப் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Thanks Ramamurthy Sir, Sailesh and Vinod sir for the comments.
-
31st July 2014, 08:10 PM
#1284
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st July 2014, 08:14 PM
#1285
Junior Member
Diamond Hubber
-
31st July 2014, 08:19 PM
#1286
Junior Member
Diamond Hubber
Who Is Your Favorite Yesteryear Actor In Tamil Cinema?
Facebook Share on Google+
Result as per date 22-07-2014
M G R
49.32%
684 Votes
Sivaji Ganesan
39.22%
544 Votes
Gemini Ganesan
5.98%
83 Votes
Major Sundararajan
2.02%
28 Votes
Muthuraman
3.46%
48 Votes
Total Votes: 1,387
This Poll is Closed !
-
31st July 2014, 08:20 PM
#1287
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர். தான் சினிமாக்காரர்களுக்கு மரியாதை ஏற்படுத்திக்கொடுத்தார்! - கேயார் பேச்சு
எச்3 சினிமாஸ் என்ற புதிய படநிறுவனம் தயாரித்துள்ள படம் சாய்ந்தாடு சாய்ந்தாடு. ஆதர்ஷ், அனுகிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இந்த விழாவில் கேயார் பேசுகையில், இந்த படத்தின் பாடல்கள் ரொம்ப இனிமையாக உள்ளன. பாடலாசிரியரின் வரிகள்கூட சிறப்பாக உள்ளன.
மேலும், அந்த காலத்தில் சினிமா கலைஞர்களுக்கு குடிக்க தண்ணீர் தரகூட தயங்கினார்கள். அந்த அளவுக்கு சமுதாயத்தில் கலைஞர்களின் நிலை பரிதாபமாக இருந்தது. ஆனால், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சினிமாவில் பெரிய நடிகராகி முதலமைச்சர் ஆன பிறகு சினிமாக்காரர்களுக்கு சமுதாயத்தில் மரியாதை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் அனைவருக்குமே இந்த மரியாதை கிடைத்தது. அதன்பிறகே சமுதாயத்தில் கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து.
எம்.ஜி.ஆர் செய்த அந்த பெரிய காரியம் தான் இன்றைக்கும் சினிமாக்காரர்கள் மதிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால் சினிமாக்காரர்கள் என்றென்றைக்குமே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை மறக்கவே முடியாது என்றார்.
-
31st July 2014, 08:28 PM
#1288
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st July 2014, 08:34 PM
#1289
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Yukesh Babu
Nice Photo - Thank u Mr.Yukesh Babu for uploading in our thread.
Regds,
S.Ravichandran
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st July 2014, 08:51 PM
#1290
Junior Member
Platinum Hubber
நடிகர் சிவகுமாரின் பதில் மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் மாண்புகள் பற்றி சிவகுமார் கூறிய கருத்துக்கள்
அத்தனையும் வைர வரிகள் . எம்ஜிஆர் ரசிகர்கள் ஏன் அவர் மீது இந்த அளவிற்கு பைத்தியமாக இருக்கிறார்கள்
என்பது உண்மை .
அருமையான பதிவை தந்த இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .
Bookmarks