-
4th August 2014, 08:40 AM
#2881
Senior Member
Seasoned Hubber
சில நாட்கள் வராவிடில் திரி வளர்ந்து விண்ணை தொடுகிறதே.. அருமை அருமை. நண்பர்கள் அனைவரும் அள்ளி வழங்கிய பதிவுகள் சபாஷ் போடவைக்கும் ரகம்..
வாழ்த்துக்கள்
சி.கா ..ராமண்ணாவிற்கு சரோஜா பெயர் மீது மோகம் முதலில் பி.எஸ்.சரோஜா பின்னர் ஈ.வி.சரோஜா... இருவருமே அவரது மனைவிகள் ..
-
4th August 2014 08:40 AM
# ADS
Circuit advertisement
-
4th August 2014, 08:46 AM
#2882
Senior Member
Seasoned Hubber
அடிக்கடி நாம் கேட்காத பாடல், இசையரசியும், பாடகர் திலகமும் அசத்தியிருக்கும் பாடல்
-
4th August 2014, 09:05 AM
#2883
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
கன்னட கதம்பம் தொடர்ச்சி
வாசு ஜி உங்களுக்காகவே....
அக்கமாதேவி என்ற பெண் கவி அவரது வரிகளை வீராங்கனை கிட்டூரு சென்னம்மா பாடுவதாக அமைந்த பாடல்
பி.ஆர்.பந்துலு அவர்களின் பத்மினி பிக்சர்ஸ் “கிட்டூரு சென்னம்மா” .. சென்னம்மா வேடத்தில் சரோஜாதேவி என்ன அழகு. பிரமாதமாக நடித்திருப்பார்
டி.ஜி.லிங்கப்பாவின் இசையில் இசையரசியின் குரலில் என்றுமே நம்மை மனம் மகிழ செய்யும் பாடல்
மெய் சிலிர்க்கும்
ராஜேஷ் சார்,
தாங்கள் அளித்த 'கிட்டூரு சின்னம்மா' படப் பாடல் ('தனுகரகதவரல்லி புஷ்பவ') மிக அற்புதம் சார். மிக மிக அழகான பாடல். சுசீலாவின் குரல் தேன் மதுரமாய் காதில் ஒலிக்கிறது. கேட்டு கிறங்கிப் போய்விட்டேன். 'மனதை மயக்கும் மதுர கானங்கள்' என்ற இந்தத் திரியின் பெயருக்கேற்ற அற்புதமான மதுரகானம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழில் பெரும்பாலும் கிளாமராகவே நடித்த சரோஜாதேவி பந்துலுவுடன் இணைந்து சாதனை படைத்துள்ளார். வேடப் பொருத்தம் கனகச்சிதம். சுசீலா குரல் அவ்வளவு அழகாக பொருந்துகிறது.
நன்கு கவனித்தோமானால் பெரும்பாலும் சுசீலாம்மா சரோஜாதேவிக்கு பாடும் போது சற்று 'கிறீச்' சென்று பாடுவது போல குரலை சிறிதே மாற்றிப் பாடுவது தெரியும். இது எல்லாப் பாடல்களிலுமே நன்றாகத் தெரியும்.
உதாரணமாக 'பாலும் பழமும்' படத்தில் வரும் 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடல்.
இதில்
'சொல்லென்றும் மொழியென்றும் பொருள் என்றும் இல்லை
பொருள் என்றும் இல்லை'
என்ற வரிகளில் 'இல்லை' என்று அவர் உச்சரிக்கும் போது சற்றே மூக்கால் பாடுவது போல இருக்கும் 'கன்னடப் பைங்கிளி'க்குத் தகுந்தாற் போல.
அது போல இந்தப் பாடலை சரோஜா தேவிக்கு ஏற்ற மாதிரி இனிமையாக, வெகு அழகாகப் பாடி அசத்தியிருக்கிறார் சுசீலா.
பாடலின் முடிவில் கண்களை சொக்க வைத்து 'மல்லிகார்ஜுனா' என்று அபிநயசரஸ்வதி பாடுவது அருமை. வீணையின் நாதம் வேறு நாடி நரம்புகளுக்குள் புகுந்து இன்ப சித்ரவதை செய்கிறது. ராஜ்குமாரும், ராஜம்மாவும் மெய்மறந்து ரசிப்பதும் அழகுதான். அதே நிலைமைதான் எனக்கும்.
ஜனாதிபதி அவார்ட் பெற்ற படம் என்றும் இணையத்தில் படித்து தெரிந்து கொண்டேன். படத்தையும் பார்ப்பதற்கு டவுன்லோட் செய்து விட்டேன்.
அமைதியான அற்புதமான பாடலை அளித்து நெஞ்சாங்கூட்டில் ஆழப் பதித்து விட்டீர்கள். இதற்கு தங்களுக்கு என்ன தண்டனை தருவது என்றுதான் புரியவில்லை.
Last edited by vasudevan31355; 4th August 2014 at 09:18 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
4th August 2014, 09:10 AM
#2884
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்,
அதே மாதிரி அதிகம் வெளியில் தெரியாத 'சங்கே முழங்கு' படப் பாடல்.
பாடும் நிலா பாலுவும், நம் 'சுகக்குரல்' சுசீலா அம்மாவும் பாடும் அட்டகாசமான பாடல்.
'இரண்டு கண்கள் பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை
முடிவதும் இல்லை'
இசையரசியில் குரல் வளம் வார்ரே வா ...
-
4th August 2014, 09:10 AM
#2885
Junior Member
Platinum Hubber
இன்று போல் என்றும் வாழ்க படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் .
நன்றி திரு ராஜேஷ் .
-
4th August 2014, 09:20 AM
#2886
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி,
கிட்டூரு சென்னம்மா பாடலை நீங்கள் எவ்வளவு அழகாக ரசித்து எழுதியுள்ளீர்கள். அபாரம். அதற்கு எனக்கு தண்டனையாக இன்னொரு இசையரசி பாடலை பரிசாக தந்துவிட்டீர்கள்.. அதற்கு நெஞ்சார்ந்த நன்றி ..
கிட்டூரு சென்னம்மா படத்தை பார்த்த சர்வபள்ளி ராதகிருஷ்ணன் அவர்கள் சரோஜாதேவியின் நடிப்பை பாராட்டி அந்த ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார்.
எஸ்.வி ஜி, ஆம் இப்படி பல முத்துக்கள் நிறைய வெளியே வராமல் அமுங்கியே போய் விடுகிறது.
வாசு ஜி, அந்த மிரஜாலகலடா பாடலையும் கேட்டு தங்கள் கருத்துக்களை தாருங்கள்.
-
4th August 2014, 09:27 AM
#2887
Senior Member
Seasoned Hubber
அதே போல் இந்த பாடலை கேட்டால் ஒருவித இன்பம்.. என்ன அழகான இசை, வரிகள் வாலி ஐயா, குரல்கள் இசையரசியும் பாடகர் திலகமும்
ஜமாய்க்கும் பாடல். திரையில் ரவியும் பாரதியும்...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
4th August 2014, 09:40 AM
#2888
கிஷோர் குமார் நினைவலைகள் மிகவும் அருமை
யாதோன் கி பாரத் படத்தில் அவர்,ஆஷா பர்மன் கலந்து கட்டும்
மேடை பாடல்
கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் ஓடும் ஒரு பாடல் . ஆனால ஒரு இடத்தில கூட மனம் சலிக்காது
பின்னாட்களில் அவர் பாலிவுட் நடிகை யோகித பாலியையும் திருமணம் செய்து கொண்டார் என்று கேள்விபட்டேன்
Kishore and Yogeeta Bali during their wedding which lasted for only a couple of years. KNOTTY AFFAIR!

-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th August 2014, 09:45 AM
#2889
Senior Member
Diamond Hubber
கிஷோர் லீனா சந்த்ரவரக்கர் என்ற நடிகையையும் மணந்து கொண்டார்.
-
4th August 2014, 10:24 AM
#2890
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
கிஷோர் லீனா சந்த்ரவரக்கர் என்ற நடிகையையும் மணந்து கொண்டார்.

Leena was so cute & beautiful & did so many movies. Saas bhi khabi bahu thi etc. My fav is honeymoon with anil dhawan
Bookmarks