-
7th August 2014, 09:59 AM
#1571
Junior Member
Diamond Hubber
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் - ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம்
மொத்தமாய் வாழுதடா !
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போகப் மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது !
பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது - ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்த்து
திருடனென்றே உதைக்குது !
காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்பிடிச்சி ஆட்டுது - வாழ்வின்
கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது !
புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை - பச்சை
புளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை - இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை !
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் - நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம்
உளறி என்ன,கதறி என்ன?
ஒன்றும் நடக்கவில்லை தோழா - ரொம்ப நாளா !
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th August 2014 09:59 AM
# ADS
Circuit advertisement
-
7th August 2014, 10:00 AM
#1572
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆர் நடிகர் மட்டுமல்ல, சிறந்த அரசியல்வாதி., இல்லையன்றால் மூன்று முறை முதல்வராக இருந்திருக்கமுடியாது, இதற்க்காக எதிரிகளுக்கு நன்றி சொல்லவேண்டும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th August 2014, 10:00 AM
#1573
Junior Member
Diamond Hubber
மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும், நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்...
எதிரிகளை.,நண்பராக்கும் வாழ்க்கை கலை தெரிந்தவர் எம்ஜிஆர்.
மும்மதத்திற்கும் சொந்தக்காரர் எம்ஜிஆர், முஹம்மதியர்களுக்கு m,, ஜீசசை வணங்குபவர்களுக்கு g, இந்துக்களின் ராமனுக்கு r,இதுதான் mgr.
Last edited by Yukesh Babu; 7th August 2014 at 10:03 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th August 2014, 10:05 AM
#1574
Junior Member
Veteran Hubber

Originally Posted by
yukesh babu
பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது - ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்த்து
திருடனென்றே உதைக்குது !
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் - நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம்
உளறி என்ன,கதறி என்ன?
ஒன்றும் நடக்கவில்லை தோழா - ரொம்ப நாளா !
excellent lyric yukesh sir !!
Please post more like this !!!
Regards
rks
-
7th August 2014, 10:06 AM
#1575
Junior Member
Diamond Hubber
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி !
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே !
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு !
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு !
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே !
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே !
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே ,
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே !
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே !
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th August 2014, 10:19 AM
#1576
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி !
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே !
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு !
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு !
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே !
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே !
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே ,
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே !
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே !
Pattukoattayaar ezhudhiyadha paadal from the film MAHADEVI...
Excellent Song Sir !
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையடிப்பதில் வல்லமை காடும் திருட்டு உலகமடா..
தம்பி தெரிந்து நடந்துகொள்ளடா...இதயம் திருந்த மருந்து சொல்லடா...
இருக்கும் அறிவை மடமை மூடியே ..இருட்டு உலகமடா...
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா...தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா...
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
-
7th August 2014, 10:33 AM
#1577
Junior Member
Veteran Hubber
Yukesh Sir,
அதே போல...இந்த பாடலும் எந்த காலத்திலும் நடைமுறையில் நடப்பதை அப்படியே படம் பிடித்து காட்டுவதை போல அமைந்திருக்கும் பாடல்...
திரு MGR அவர்கள் மலை கள்ளன் திரைப்படத்தில் மிக லாவகமாக அழகாக நடந்து வந்தபடி பாடும் பாடல்...
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...
சொந்த நாட்டிலே..நம் நாட்டிலே ...
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் ..சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் ..
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி ..பாமர மக்களை வலையினில் மாட்டி...இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இதில் இன்னொரு உயர்ந்த எண்ணம் தெரியும் வகையில் அமைந்த வரிகள்..
தெருவெங்கும் பள்ளியை கட்டுவோம்...
கல்வி தெரியாத பேர்களை இல்லாமல் செய்யுவோம்....
கருத்தாக பல தொழில் பயிலுவோம்..
ஊரில் கஞ்சிக்கு இல்லை என்ற சொல்லினை போக்குவோம்..
ஆளுகொரு வீடு கட்டுவோம்...அதில் ஆடல் கலைகளை சீராக பயில்வோம்
கேளிகயாகவே நாளினை போக்கிட..
கேள்வியும் ஞானமும் ஒன்றாக திரட்டிட ..
இன்னும் எத்துனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...
RKS
-
7th August 2014, 10:43 AM
#1578
Junior Member
Veteran Hubber

Originally Posted by
yukesh babu
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே ,
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே !
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே !
அதே போல மூட நம்பிக்கையை சாடும் வரிகள்..நன்றாக எளிய நடையில் பாடபட்டிருக்கும்
வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு
விளையாட போகும்போது சொல்லிவேப்பாங்க...உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வெப்பாங்க....!
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பிவிடாதே...நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிண்டந்து வெம்பிவிடாதே...நீ வெம்பிவிடாதே..!
Rks
-
7th August 2014, 10:50 AM
#1579
Junior Member
Veteran Hubber

Originally Posted by
yukesh babu
மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும், நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்...
[
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு என்ற வரிகள் கூட மிக அற்புதமான உண்மையான வரிகள் yukesh sir !
அதே போல மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் பாடலில்...
பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகும் மனம் வேண்டும் தோழா ..
இந்த மேற்கூறிய வரிகளுக்கு ஏற்பவா நடக்கிறார்கள் பதவியில் உள்ளவர்களும் அவர்களை சார்ந்தவர்களும்..
நடந்துகொண்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும் இந்த வையகம் !
RKS
Last edited by RavikiranSurya; 7th August 2014 at 10:56 AM.
-
7th August 2014, 10:52 AM
#1580
Junior Member
Veteran Hubber
திரு. ரவி கிரண் சூர்யா!
தாங்கள் செய்வது சரியாக இருக்கிறதா என்று முதலில் யோசியுங்கள். இந்த நீண்ட விவாதத்தின் மூலமே நீங்கள் தேவையில்லாமல் பதிவு செய்து பின்னர் நீக்கப்பட்ட இரண்டு பதிவுகள். ஆகவே பிரச்சினையை கிளப்பியது யார். இதில் யாருக்கு வேலையில்லை என்பது அனைத்து நடுநிலையாளர்களுக்கு புரியும். மேலும் இத்திரியை எந்த வித பிரச்சினையின்றி எடுத்து செல்ல பாடுபடும் திரு. வினோத் அவர்களையும், பிரச்சினையை எழுப்புபவர்களையும் தாங்கள் சொன்ன அதே நடுநிலையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், தாங்கள் இந்த திரியில் மிகவும் தொந்தரவு செய்கிறீர்கள் என்பதே உண்மை.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Last edited by kaliaperumal vinayagam; 7th August 2014 at 10:54 AM.
Bookmarks