-
12th August 2014, 12:45 PM
#3751
வாசு மது chella சார்
என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை,அன்பு,பாசம் எல்லாவற்றிற்கும் நன்றி சார்
ஒரு சின்ன விண்ணப்பம்
இது ஒரு பெரிய பொறுப்பு
நான் 3வது பாகத்தை தொடங்குகிரேனே . கொஞ்சம் பக்குவம் வரணும் னு நினைக்கிறன் . ஒரு சீனியர் யாரவது தொடங்கினால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து . please
ஆனால் தினமும் நான் திரியில் பங்கு கொள்வேன்
இது உறுதி
-
12th August 2014 12:45 PM
# ADS
Circuit advertisement
-
12th August 2014, 12:50 PM
#3752
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (51)

இன்றைய ஸ்பெஷலில் மிக அற்புதமான அரிதான ஒரு பாடல். 'கவிக்குயில்' படத்தில் மேஸ்ட்ரோவின் இசையில் 'கண்ணியப் பாடகி' கலக்கிய பாடல். 'சின்னக் கண்ணன்' 'குயிலே கவிக்குயிலே' என்று அழைத்ததால் 'மான்' பார்க்கப் படமால் போய் விட்டது.
அதனாலென்ன?

மான் மான்தானே! எங்கள் மானின் குரல் என்றும் தேன் தேன்தானே!
என்ன ஒரு உச்சரிப்பு! என்ன ஒரு உற்சாகம்! என்ன ஒரு உற்சாகத் துள்ளல்!
சுசீலாம்மாவின் பிற்காலப் பாடல்களில் என்னுடைய முதல் இடம் இப்பாடலுக்கே. ரஜனி கருப்பு வெள்ளையில் அழகாகத் தெரிவார். 'படாபட்' ஜெயலட்சுமி வழக்கம் போல பட் பட். சிம்பிள். புடவையில் அழகு.
இளையராஜா பின்னி இருப்பார். ஆள் பார்த்து கொடுத்தார் பாருங்கள் பாடுவதற்கு. அவருக்கு யார் யாருக்கு எதை எதைக் கொடுக்க வேண்டும் என்று தெரியுமே! அதனால்தான் இசையரசி அவர்களுக்கு இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்து பாடக் கொடுத்திருக்கிறார்.
இந்தப் பாடல் ஹிட் ஆகாமல் போனதற்கு அப்போது தமிழக மக்களுக்கு சாபமே கொடுத்திருக்கிறேன். நிறைய பேருக்கு இப்பாடல் தெரியாது.
நமது திரி மூலம் இனியாவது தெரிந்து ஹிட்டடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
கன்னம்கருத்த கட்டழகா
கருநாவல் பழம் போல் கண்ணழகா
கற்கண்டு போலே சொல்லழகா
ஆஹா சொல்லழகா
ஆவாரங் காட்டுக்குள்ளே
ஒரு ஆதாயம் தேடி வந்தேன்
முத்தாடும் பெண்மை கொண்டாடு அங்கே
சொல்வேன் இன்பம் ஓராயிரம்
('முத்தா... டும் பெண்மை' யை சற்றே அவர் இழுத்து உச்சரித்துப் பாடும் போது நாம் அனுபவிக்கும் இன்பத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
ஆளான பொண்ணு நாளாக ஆக
பாலாடை மேனி தேமல் உண்டாக
ஆளான பொண்ணு நாளாக ஆக
பாலாடை மேனி தேமல் உண்டாக
ஏக்கத்தில் ஓடும் அத்தானைத் தேடும்
நெஞ்சோடு அள்ளிக் கொண்டாலே தீரும்
ம்ஹூஹூஹூம் ம்ஹூஹூஹூம்
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
தேனாடும் பூவில் நீ ஆட வேண்டும்
சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தேனாடும் பூவில் நீ ஆட வேண்டும்
சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தாளத்தைப் போடு ராகத்தைப் பாடு
சந்தோஷமாக பொன்னூஞ்சல் ஆடு
ம்ஹூஹூஹூம் பொன்னூஞ்சல் ஆடு
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
ம்ஹூம் ம்ஹூம்
Last edited by vasudevan31355; 12th August 2014 at 10:48 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th August 2014, 12:59 PM
#3753
Senior Member
Senior Hubber
//சேலாடும் பூவில் நீ ஆட வேண்டும்
சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்// அழகிய பாடல் வரிகள் வாசு சார்.. நன்றி..நான் கேட்டதில்லை இனி தான் கேட்க வேண்டும்.. இந்த சேல் என்பது மீன் தானே..
ராகவேந்திரர் சார்.. இந்த விஜய் டிவிப் புகைப்படம் இப்போது தான் ந.தி இழையில் பார்த்தேன்..க்ருஷ்ணாஜியை த் தெரிந்தது.. நீங்கள் முரளிசார் எந்தப் படம் எனப் புரியவில்லை..
-
12th August 2014, 01:04 PM
#3754
அருமையான பாடலை நினைவு கூர்ந்து உள்ளீர்கள் வாசு சார்
இசை ஞானியின் ஆரம்ப கால பாடல்
சின்ன கண்ணன் அழைக்கிறான் -பாலமுரளி மற்றும் ஜானகி குரலில் மீண்டும் வரும்
குயிலே கவி குயிலே - ஜானகி
உதயம் வருகின்றதே - ஜானகி
ஆயிரம் கோடி - பாலமுரளி
ஆனால் இந்த பாட்டு மட்டும் சுசீலா ஏன் இளையராஜா கொடுத்தார்
நீங்க சொன்ன பிறகு தான் புரிகிறது
என்ன ஒரு உச்சரிப்பு! என்ன ஒரு உற்சாகம்! என்ன ஒரு உற்சாகத் துள்ளல்!
-
12th August 2014, 01:06 PM
#3755

Originally Posted by
chinnakkannan
//சேலாடும் பூவில் நீ ஆட வேண்டும்
சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்// அழகிய பாடல் வரிகள் வாசு சார்.. நன்றி..நான் கேட்டதில்லை இனி தான் கேட்க வேண்டும்.. இந்த சேல் என்பது மீன் தானே..
கெண்டை மீன் செல்லா சார்
நிறைய பழைய பாடல்களில் இந்த வார்த்தை நிறைய உபயோக படுத்தப்பட்டு இருக்கும்
-
12th August 2014, 01:09 PM
#3756
Senior Member
Diamond Hubber
vasu ji...
சுப்பர்ப்... சுசீலாவின் குரல் எப்படித் துள்ளி குதிக்குது ?
ம்ம்... அதெல்லாம் சரி.. "கன்னங்கருத்த கட்டழகா" என்றதும் கந்தனை கண்ணன் ஆக்கிட்டீங்களே !
ஒப்புக்கொள்ள மாட்டேன்.
மருகன் இருக்கும் இடத்தில் மகனை வைப்பது not acceptable...
-
12th August 2014, 01:12 PM
#3757
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
கெண்டை மீன் செல்லா சார்
நிறைய பழைய பாடல்களில் இந்த வார்த்தை நிறைய உபயோக படுத்தப்பட்டு இருக்கும்
சிக்கா, கிருஷ்ணா ஜி.. அது "தேனாடும் பூவில் நீயாட வேண்டும்" என்று வரும்.
சேல் என்பது மீன்தான்... "பாலாற்றில் சேலாடுது" மற்றும் "சேலாடும் நீரோடை மீது" என்று வருவதை கவனியுங்க.
-
12th August 2014, 01:21 PM
#3758
Senior Member
Senior Hubber
நன்றி க்ருஷ்ணா ஜி.. கெண்டை மீனோன்னு ஒரு டவுட்ட்..பழையபாடல் சங்கப் பாடல்களில்
செவ்வரியோடய கண்களிரண்டினில் சேலொடு வேலாட - துலாபாரம் சங்கம் வளர்த்த தமிழ் பாட்டு
நீல மலையை நிஜதேவ தெய்வமதை,
சேல் விழியில் கண்ட திருக்கட்சியை யான் மறவேன்,
தோராத உச்சிவட்ட தேனாறு பாயுகின்ற பார ரகசியத்தின் பழம் பொருளை யான் மறவேன்,
பழ்ம் பாடல்..
வரும்பு னற்பெருங் கால்களை மறித்திட வாளை
பெருங்கு லைப்பட விலங்குவ பிறங்குநீர்ப் பழனம்
நெருங்கு சேற்குல முயர்த்துவ நீள்கரைப் படுத்துச்
சுருங்கை நீர்வழக் கறுப்பன பருவரால் தொகுதி.
நீர் ஓடி வரும் பெரு வாய்க்கால்களை வாளை மீன்கள் குறுக்கிட்டுத் தடுத்திட, அத்தன்மையால் அவ்விடத்து நீர் தேங்கிக் கரைகள் உடைபடும்படி நீருடைய அவ்வாய்க்கால்கள் நீர் நிறைந்து விலகிப் போகின்றன.
வயல்களில் நெருங்கி வரும் சேல் மீன்கள் பள்ளமாய வயல்களில், தம் தொகையால், கரையை உயர்த்துகின்றன. மதகுகளுட் புகுந்து வரும் நீர் வெளி வாராதபடி பெருத்த வரால் கூட்டங்கள் திரண்டு நின்று தடுக்கின்றன.
//பன்னிரண்டாம் திருமுறை
//
பொதுவா கெண்டை மீன் அதாவது சேல் மீன் மங்கையரின் கண்களுக்குத் தான் ஒப்புமை கூறப்பட்டிருக்கின்றன..
-
12th August 2014, 01:22 PM
#3759
Senior Member
Senior Hubber
//சிக்கா, கிருஷ்ணா ஜி.. அது "தேனாடும் பூவில் நீயாட வேண்டும்" என்று வரும்.// ஆஹா தாங்க்ஸ் மதுண்ணா.. என்னடா சேலாடும் பூ ந்னா இடிக்குதேன்னு நினைச்சேன்...
-
12th August 2014, 01:31 PM
#3760
Senior Member
Diamond Hubber
ரஜினியை ஃபடாபட் ஜெயலக்ஷ்மி சுசீலாவின் குரலில் பாடி மயக்கும் காட்சியைக் கண்டதும் காளி படத்தில் விஜயகுமாரை மயக்கும் காட்சி நினைவுக்கு வந்துடிச்சி..
அழகழகா பூத்திருக்கு ஆசை வைக்க தெரியலையே
ஆசை வைக்க தெரியாமே மீசை வச்சு லாபமென்ன
வாசு ஜி, கிருஷ்ணா ஜி.. வந்து விளக்குங்க.. சிக்கா .. வந்து குழப்புங்க
Bookmarks