-
12th August 2014, 05:13 PM
#3801
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
நல்ல பாட்டு தானே..
அது சரி சிக்கா.. அது ஆனந்தனா ? உதயகுமாரா ?
-
12th August 2014 05:13 PM
# ADS
Circuit advertisement
-
12th August 2014, 05:17 PM
#3802
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பெண்மணி அந்தப் படத்திற்கு என்னை துணைக்கு அழைத்துச் சென்றார்கள்..அப்போது அவருக்கு மணமாகவில்லை ... எனக்கும் தான் (ஏனெனில் நான் எட்டாம் க்ளாஸோ ஒன்பதாவதோ)..
ம்ம்... ம்ம்... அந்தப் பெண்மணி எந்த கிளாஸ் ? ஆறாவதோ ஏழாவதோவா ?
வீ..கா..வுக்கு இந்த விஷயம் தெரியுமா ?
இன்னைக்கு செவ்வாய்... ம்ம்.. சிவப்பு நிறமான வாய்... ஓகே !!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014, 05:22 PM
#3803

Originally Posted by
chinnakkannan
ம்ம் நன்றி க்ருஷ்ணா ஜி அண்ட் ராகவேந்தர் சார் ஃபார் இனிய பாடல்களுக்காக..
மன்னார் குடி ராஜகோபாலனுக்காக்த் தான் மதுண்ணா..:
எனக்கும் தான் (ஏனெனில் நான் எட்டாம் க்ளாஸோ ஒன்பதாவதோ).)
அண்ணா
சீர்காழி சுசீலா அம்மாவின் இணையில் வந்த அருமையான பாடல்
சின்ன கண்ணனிடம் ஒரு சின்ன கேள்வி (கேட்கலாமா ?)
பதிவு ஆரம்பிக்கும் போது 'ம்ம்' அப்படின்னா என்ன அர்த்தம்
எட்டாப்பு படிக்கும் போதே 'கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா '
-
12th August 2014, 05:51 PM
#3804
Senior Member
Senior Hubber
-
12th August 2014, 06:09 PM
#3805
Senior Member
Senior Hubber
டி.ஆர். எம்மின் சோலோ..அந்தக் குரல் அதைவிட அந்த லிரிக்ஸ் மனதை அள்ளுமாக்கும்.. படம் மாலையிட்ட மங்கை..படம் பார்த்ததில்லை..பாடல் பார்த்திருக்கிறேன் வெகுகாலம் முன்..யாராக்கும் ஆடுவது..
*
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…
*
ப்ளூ ஐஸ் இருந்தாக்க கண்களில் நீலம் விளைத்தவளோ..அப்புறம் அதைப்பயிர் பண்ணி கடல்ல கரைச்சுட்டாளாம் அதான் ஸீ இஸ் ப்ளூவாம்..என்னா இமாஜினேஷன்..
அந்தப் பழரசம் பருக இவன் தானே தலைகுனியணும்.. கன்ஃப்யூஷன் 
இந்த கண்கள் ப்ளூ, ப்ரெள்னா இருந்தா தனிக் கவர்ச்சி தானே..(காண்டாக்ட்லாம் இல்லாம)
//பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…// ம்ம் பிற்காலத்தில இத வெச்சுத்தான் உன்னழகைக் கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்னு பிபிஎஸ் முத்துராமன் மூலமாப் பாடினாரோ..
-
12th August 2014, 06:59 PM
#3806
Junior Member
Platinum Hubber
காதலர்கள் ஏக்கத்தில் தங்களை மறந்து பாடும் பாடல் .
எத்தனை உவமைகள் - வார்த்தை விளையாட்டுக்கள் - அமுத கானம் .
தென்றலிலாடும் கூந்தலில்ககண்டேன்
மழைக்கொண்ட மேகம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
இனி என்ன நாணம், இனி என்ன நாணம்
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பாவை உடல் பார்க்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ
பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ மாலை வரும் நேரமெல்லாம்
மன்னன் வர காத்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்து
பார்த்த விழி பூத்திருந்தேன்
ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும்
காதல் மனம் பார்ப்பதுண்டோ
கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம்
காலை வரை கேட்பதுண்டோ
காலை வரை கேட்பதுண்டோ
கற்பகத்து சோலையிலே
பூத்த மலர் நீ அல்லவோ
விழிஎன்னும் கருவண்டு
பாட வந்த பாட்டென்னவோ
காவியத்து நாயகனின் கட்டழகு மார்பினிலே
சுகம் என்ன சுகமென்று
மோஹன பண் பாடியதோ
மோஹன பண் பாடியதோ
-
12th August 2014, 07:01 PM
#3807
Junior Member
Platinum Hubber
என்னை மறந்ததேன் தென்றலே
இன்று நீ என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கனியாக மாறாதோ
கலையாத காதல் நிலையானதென்று
அறியாமல் சொல்லிவைத்தாயோ -
உன்னைஅறியாத பெண்ணின் மனவாசல் கண்டு
திறவாமல் எங்கே சென்றாயோ
நிழலான தோற்றம் நிஜமானதென்று
நீயாளும் நாளும் வருமோ - இந்த
நிலமாளும் மன்னன் நீயானபோதும்
நானாளும் சொந்தம் இல்லையோ
கண்டாலும் போதும் கண்கள்
என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போதும் நெஞ்சம்
கனியாக மாறாதோ(என்னை)
-
12th August 2014, 07:04 PM
#3808
Junior Member
Platinum Hubber
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
நினைத்தேன் உடன் பார்த்தேன்
மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
களித்தேன் சுகம் குளித்தேன்
கதை படித்தேன்என்னை மறந்தேன்..
என்னை மறந்தேன்..என்னை மறந்தேன்
பாலும் புது தேனும் பனி போல்
என் மேலே படர்ந்தோட இடம் தேட
அமுதாகவே பாய்ந்தாய்
என்னைக் கொடுத்தேன்..
என்னைக் கொடுத்தேன்..என்னைக் கொடுத்தேன்
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே
என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே
உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே
-
12th August 2014, 07:21 PM
#3809
கண்ணா,
LDC முதல் வருஷம்னா 17-18. நீங்க 9th-ன்னா 13-14. அதுவும் போனது கணேஷா தியேட்டர்னு சொல்லும்போது எங்கோ இடிக்குதே! ஒரு வேளை கூட வந்தவருக்கு ஹெல்ப் பண்ண (அதாவது அவர் யாரையேனும் சந்திக்க) நீங்கள் துணைக்கு போனீர்களா என்று கேட்டேன்.
வாசு என்னை பிய்க்க போகிறார். பாட்டைப் பத்தி பேச வரல்லை. சைட்டை பத்தி பேச வந்துட்டார்-னு ஓகே எஸ்கேப்!
அன்புடன்
-
12th August 2014, 08:30 PM
#3810
Senior Member
Seasoned Hubber
ஒரு தூக்கம் போட்டுட்டு வரதுக்குள்ள எத்தனை பக்கங்கள் ...
வாசு ஜி, குலமகள் ராதை , மானோடும் பாதையில பாட்டெல்லாம் போட்டு பட்டய கிளப்பிட்டீங்க
கூடவே கிருஷ்ணா ஜி, மது அண்ண இன்னிக்கு புல் ஃபார்ம்ல இருந்தார் போல (என்னவோ என்னவோ ????)
சி.கா கேட்கவே வேண்டாம் ஆயிரம் கேள்விகள் ஆயிரம் பதில்கள்னு தூள் கிளப்பிட்டார்
ராகவ் ஜி கடைசி வரைக்கு ஓடி ஓடி வந்து பஸ் கிளம்பியவுடன் படிக்கெட்டில் ஏறுபவர்கள்போல அடுத்த பாகம் தொடங்குவதற்குள் பாட்டுக்களை பதிவிட்ட விதம் அபாரம்...
அதே போல் எஸ்.வியின் படங்கள் என நான் வருவதற்குள் எத்தனை களேபரம்... பிரம்மாண்டம்.. ராட்சசி பாடி நம்மை அசத்தினால் இந்த ராட்சசர்கள் பதிவில் அசத்துகிறார்கள் ..என்னே நான் செய்த பாக்கியம்
Bookmarks