-
17th August 2014, 06:26 AM
#331
Junior Member
Platinum Hubber
1965-ல் "இதய கமலம்", "எங்க வீட்டு பெண்", "காக்கும் கரங்கள்",
"கன்னித்தாய்", "படித்த மனைவி", "சுமங்கலி". "தாழம்பூ". "திருவிளையாடல்", "வீர அபிமன்யு" போன்ற தமிழ் படங்களிலும், "Anthasthulu", "illalu", " kanne manasulu", "Raja drohi", "Sumangali", "tene manasulu", "todu needa", "veerabhimanyu" போன்ற தெலுங்கு படங்களிலும் கே.வி.எம்மின் இசையில் பாடினார் பி.சுசீலா அவர்கள்.
இதய கமலம் படத்தில் எல்லா பாடல்களும் காலத்தால் அழியாதவை. "உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல" பற்றி சொல்லவே வேண்டாம். 50 வருடங்கள் ஆகியும் அழியாமல் நிற்கும் பாடல் இது. "மலர்கள் நனைந்தன பனியாலே" பாடலை காலையில் எழுந்ததும் கேளுங்கள். அன்றைய தினம் மனம் அமைதியாகவும், பிரெஷ் ஆகவும் இருக்கும். அத்தனை இனிமையான பாடல். "என்ன தான் ரகசியமோ இதயத்திலே" பாடலைப்பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். இரு பெண்களுக்கும் பி.சுசீலாவே பாடி இருக்கும் பாடலில் இரு பெண்களின் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி குரலால் நடித்திருப்பார் பி.சுசீலா அவர்கள். கே.ஆர்.விஜயாவுக்கு காதல் மனைவியின் வேடமும், ஷீலாவுக்கு மனைவியை பிரிந்து வாடும் கணவனை அவர் பக்கம் இழுக்கும் வேடமும் கிடைத்தன. இருவருமே குடும்பப்பெண்கள் என்றாலும் ஒருவர் குரலில் காதலும், நிறைவும் ஒலிக்க இன்னொருவர் குரலில் கொஞ்சம் ஆசையும் கலந்து ஒலிக்க வேண்டும். காதலில் குழைந்து கே.ஆர்.விஜயா "நினைத்தால்....." என இழுக்க, "எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே" என ஷீலா துவங்கும் இடத்தில் குரலில், எக்ஸ்ப்ரஷனில் அப்படி ஒரு துரிதமான மாற்றம். Hats Off Susheelamma !! பி.பி.எஸ் உடன் இணைந்து பாடிய "தோள் கண்டேன் தோளே கண்டேன்", "நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" பாடல்களும் ஹிட் ஆகின.
காக்கும் கரங்கள் படத்தில் "திருநாள் வந்தது, தேர் வந்தது", "ஞாயிறு என்பது கண்ணாக", "அல்லித்தண்டு கால் எடுத்து" "அக்கா அக்கா அக்கா அக்கக்கா " பாடல்கள் சிறப்பாக அமைந்தன. "திருநாள் வந்தது" பாடல் சோகம் ததும்பும் அருமையான பாடல். கன்னித்தாய் படத்தில் "மானா பொறந்தா", "என்றும் பதினாறு வயது பதினாறு", "வாயார முத்தம் தந்து வண்ணப்பிள்ளை கொஞ்சுது" போல சில குறிப்பிடத்தக்க பாடல்கள் இடம் பெற்றன. படித்த மனைவி படத்தில் "அப்பா ஒரு கண்ணு", "அந்த முகமா இந்த முகம்" போன்ற பாடல்கள் இடம் பெற்றன. "எங்க வீட்டுப்பெண் படத்தில் "தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்", "கால்களே நில்லுங்கள்" "கார்த்திகை விளக்கு " போன்ற பாடல்கள் பிரபலம் ஆயின.
திருவிளையாடல் படம் தமிழ் திரை உலகில் ஒரு மைல்கல். இப்போது வெளியிட்டாலும் ஹிட் ஆகும். அப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே சிறப்பானவை. பி.சுசீலா பாடிய "தேவா மகாதேவா", "நீல சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப்பொண்ணு" பாடல்களும் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தன. தாழம்பூ படத்தில் "தாழம்பூவின் நறுமணத்தில்", "வட்ட வட்ட பாத்தி கட்டி", "தூவானம் இது தூவானம்", "ஏரிக்கரை ஓரத்திலே எட்டுவேலி நிலம்", "பங்குனி மாதத்தில் ஒரு இரவு" பாடல்கள் ஹிட் ஆனவை. "வீர அபிமன்யு" படத்தில் "பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்" பாடலை யாரால் மறக்க முடியும்? தேன் தேன் என ஒவ்வொரு வரியையும் கவிஞர் முடிக்க, தேன் குரலாள் சுசீலாவும், மதுரக்குரலோன் பி.பி.எஸ்சும் குழைந்து பாடியிருக்கும் பாடல். இப்பாடல் தவிர "வேலும் வில்லும் விளையாட", "நீயும் ஒரு பெண் ஆனால்", "போவோம் புது உலகம்", "தொட்ட இடம் குளிருது" போன்ற பாடல்களும் இடம் பெற்றன.
COURTESY - THIRU KALAIKUMAR
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th August 2014 06:26 AM
# ADS
Circuit advertisement
-
17th August 2014, 06:38 AM
#332
Junior Member
Platinum Hubber
எம்.ஜிஆர் நடித்த “குடும்ப தலைவன்” படத்தில் எல்லா பாடல்களும் பெரிய ஹிட்ஸ். “அன்றொரு நாள் அவனுடைய பேரை கேட்டேன்”, “கட்டான கட்டழகு கண்ணா”, “எதோ எதோ எதோ ஒருமயக்கம்”, “குருவிக்கூட்டம் போல நிக்கிற பூவம்மா”, “மழை பொழிந்து கொண்டே இருக்கும்” போல ஹிட் மேல் ஹிட் அடித்த பாடல்கள்.
அதைப்போல் இன்னொரு மியுசிகல் ஹிட் “தாய் சொல்லை தட்டாதே” திரைப்படம். “சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்”, “பட்டுசேலை காத்தாட”. “பாட்டு ஒரே ஒரே பாட்டு”, “ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்”, “காட்டுக்குள்ளேதிருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா”, “பூ உறங்குது பொழுதும் உறங்குது” என ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் சூப்பர்ஹிட் பாடல்கள் வரிசையாய் வந்தன.
அதைப்போல் எம்.ஜி.ஆர் படமான “தாயைக்காத்த தனயன்” படத்திலும் சூப்பர்ஹிட் பாடல்களாகவே அமைந்தன. “கட்டித்தங்கம்வெட்டி எடுத்து”, “காவேரிக்கரை இருக்கு கரைமேலே பூவிருக்கு”, “மூடித்திறந்த இமைஇரண்டும்”, “காட்டுராணி கோட்டையிலே”, “பேரை சொல்லலாமா கணவன் பேரை சொல்லலாமா”, “சண்டிக்குதிரை,நொண்டிக்குதிரை” மிக பிரபலமான, இப்போதும் மக்கள் கேட்டு ரசிக்கும் பாடல்களாக அமைந்தன. ராணி சம்யுக்தா படத்தில் “ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா” என மனதைக் குளிர்விக்கும் ஒரு டூயட். “நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்” என்ற ஒரு செமி-கிளாசிகல் பாடல். “நிலவென்னபேசும்” என இன்னொரு அழகிய டூயட். “பாவை உனக்கு சேதி தெரியுமா” , “மன்னவர் குலம்பாரம்மா” என இரு இனிமையான தனிப்பாடல்கள் என கே.வி.எம்மின் இசை ராஜ்ஜியம் படம் முழுவதும் வியாபித்து இருந்தது.
எம்.ஜி.ஆர் படமான “மாடப்புறா”வில் “மனதில்கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு” என்ற அருமையான பாடல் ஒலித்தது. “வருவார் ஒரு நாள்இருப்பார் இங்கே”, “வணக்கம் வணக்கம் அய்யா”, “கண்ணை பறிக்குதா, கருத்தை மயக்குதா” என குறிப்பிடத்தக்க பாடல்கள் படத்தில் இடம் பெற்றன.
இவ்வருடத்தில் வெளிவந்த “சாரதா”, “வளர்பிறை”, “வடிவுக்கு வளைகாப்பு”, “முத்து மண்டபம்”, “கவிதா”, “நீயா நானா”. “நான் வணங்கும் தெய்வம்” போன்ற படங்களிலும் சிறப்பான பாடல்கள் அமைந்தன. சாரதா படம் மிகப்பெரிய வெற்றிப்படம். அதில் “ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்” “கண்ணானால் நாயா இமைஆவேன்”, போன்ற பாடல்களை யாரால் மறக்க முடியுமா? ஜேசுதாஸ் அவர்களுக்கு பிடித்த தமிழ் பாடல்களில் “ஒருத்தி ஒருவனை” பாடலும் ஒன்று.
வடிவுக்கு வளைகாப்பு படத்தில் “சீருலாவும்இன்பநாதம் தேவ சங்கீதம்” என டி.எம்.எஸ். சுசீலா இணைந்து பாடும் பாடல் ஒரு தேவ சங்கீதம் தான். அவ்வளவு இனிமையாக பாடி இருப்பார்கள். “சாலையிலே புளிய மரம்ஜமீன்தாரு வச்ச மரம்” என ஜனரஞ்சகமான ஒரு கிராமியப்பாடல். “நில்லடியோ நில்லடியோ” “சில்லென பூத்து சிரிக்கின்ற” என இரு தனிப்பாடல்கள் என சிறப்பான இசை அமைந்த படம். வளர்பிறை படத்தில் “நான்கு சுவர்களுக்கும் எது நடந்தாலும்” என ஒரு சோகப்பாடல் மனதைக்கவரும். “சலசலக்குக்து காத்து” என டி.எம்.எஸ் உடன் ஒரு டூயட், “மௌனம் மௌனம்” “பச்சைக்கொடியில்” என இரு தனிப்பாடல்கள் அமைந்தன.
“அழகு நிலா” படத்தில் “அருவிக்கரை ஓரத்திலே” “காட்டுக்குயிலுக்கும்”, “மூங்கில் மரக்காட்டினிலே” போன்ற பாடல்களை பாடினார் பி.சுசீலா. கவிதா படத்தில் “அப்பாஉன் மகளை பார்த்தாயா” என மனதைப்பிழியும் ஒரு பாடல் இருக்கிறது. “கனவும் பலித்தது” என ஒரு இனிமையான பாடல் “நான் வணங்கும் தெய்வம்” படத்தில் இடம் பிடித்தது.
“முத்து மண்டபம்” படத்தில் “கொடியிலே பூங்கொடியவளே”, “என்ன சொல்லிப் பாடுவேன்”, “போர்க்களம் போர்க்களம்” பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை. “நீயா நானா” படத்தில் “பொன்னும்பொருளும் பெரிசல்ல”, “ஆத்தங்கரை மேட்டினிலே”, “உனக்காகவே இன்று எனை மறந்தேன்”, “கூகூகூகூ குயிலக்கா” போன்ற பாடல்கள் இடம் பெற்றன.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
17th August 2014, 06:43 AM
#333
Junior Member
Newbie Hubber
சின்ன கண்ணன்,
உங்கள் கவிதைகளை பார்த்ததும் ,நான் சிறு வயதில் எழுதிய ஒன்றிரண்டு ஞாபகம் வருகிறது.(சுமார் 15 வயது)
கண்ணே,
என்னை புரிந்து கொள்வாயா ?நானும் நீயும் சேர வேண்டும் என்ற பேராசை எனக்கில்லை. என் "தம்பி"யும் உன் "தங்கை"யும் சேர்ந்தாலே ,நிறைவடையும் பெறு மனம் கொண்டவன்.
இன்னொன்று.
நான் படித்த பழைய பள்ளி கக்கூசில் ,ஒன்னுக்கடிக்கும் சுகம். படம் போட்டு பாகம் குறிப்பதில் சிலபஸ் மாற்றமே இல்லாமல் சுவர்கள்.
-
17th August 2014, 06:56 AM
#334
Junior Member
Newbie Hubber
எஸ்வி,
கலை குமாரின் நெட் விஷயங்களுக்கு நன்றி. ஆனால் வழக்கம் போல அரை வேக்காட்டு நெட் கும்பல்களில் ஒரு ஜென்மம் போலிருக்கிறது.
குங்குமத்தையும் மறந்து (கே.வீ.எம் பாடல்களிலேயே சிறப்பானது என பலர் கருதும் "தூங்காத கண்ணென்று ஒன்று")ரத்ததிலகத்தையும் மறந்து, இந்த ஆள் என்னத்தை எழுதி கிழிக்கிறான்?
கே.வீ.எம் பற்றி எழுதியது மகிழ்ச்சியே. ஆனால் இந்த மாதிரி அரைகுறை எழுத்துக்களை பற்றி என்ன சொல்வது?
அது சரி, உங்கள் கருத்துக்களை சொந்தமாகவே எழுதினால் சுவையாக இருக்குமே தலைவா?
-
17th August 2014, 10:25 AM
#335
Senior Member
Senior Hubber
குட் மார்னிங் ஆல்
கோபால் ஜி.. பாராட்டறீங்களா திட்டறீங்களா புரியலை.. நன்றி..
பாட்டுக்குப் பாட்டு இழையில் இதயமலரில் இருந்து ஒரு பாட்டு..
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது
வீட்டுக்குப் போய்க் கேக்கணும்
-
17th August 2014, 10:43 AM
#336
Junior Member
Seasoned Hubber
Ennello Janmadha Bandam super song
-
17th August 2014, 10:44 AM
#337
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
பாட்டுக்குப் பாட்டு இழையில் இதயமலரில் இருந்து ஒரு பாட்டு..
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது
வீட்டுக்குப் போய்க் கேக்கணும்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th August 2014, 11:46 AM
#338
Senior Member
Veteran Hubber
டியர் முரளி சார்,
தங்களின் 'காதலிக்க நேரமில்லை' பொன்விழா தொகுப்பு பதிவு மிக மிக அருமை. எங்கள் முரளி சார் ஒருவிழாவில் கலந்துகொள்கிறார் என்றாலே எங்களுக்கு, குறிப்பாக தங்களின் தீவிர ரசிகனான எனக்கு மிகுந்த உற்சாகம். ஏனென்றால், நாம் நேரில் சென்று பார்ப்பதை விட அருமையான விழா தொகுப்பை எங்களுக்கு தருவார் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கை என்றைக்குமே ஏமாற்றம் தந்ததில்லை. இப்போதும் அதுபோலவே ஒரு அற்புத கவரேஜ் கிடைத்துள்ளது. நன்றியெல்லாம் சொல்லி நம்மிடையே உள்ள தூரத்தை அதிகப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
விழாவில் கலந்துகொண்டவர்களின் பட்டியல் மனதுக்கு இதமாக இருந்தது. குறிப்பாக இதுபோன்ற விழாக்களில் அதிகம் கலந்துகொள்ளாத தாஸண்ணா, அண்ணி தேவசேனா, அண்ணி விமலா ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தது கண்டு மகிழ்ச்சி. (கார்த்திக் என்று பெயர் வைத்தாலே அவர்கள் தொடர்பு கொள்ள முடியாதவர்களாகத்தான் இருப்பார்கள். என்ன செய்வது அந்த பெயர் ராசி அப்படி).
எம்.எஸ்.வி வரவில்லை என்பதைப்படித்ததும் நண்பர் கோபால் அவர்களைப்போல எனக்கும் முதலில் கோபம் வந்தது. ஆனால் விழாவில் பேசிய அனைவரின் பேச்சிலும் நடிகர்திலகம் நீக்கமற நிறைந்திருந்ததை படித்தபோது, இந்த ஆள் வராமல் இருந்ததே நல்லது என்று தோன்றியது. வந்திருந்தால் தேவையில்லாமல் "வேறு சிலர்" பெயர்களை சொல்லி குழப்பியிருப்பார். ஏனென்றால் ஸ்ரீதர் 'அங்கேயும்' கைவைத்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிகளை இங்கேயும் இழுத்து ஒருவழி பண்ணியிருப்பார். அவர் அரட்டைகள் சதுக்க பூதத்துடன் நிற்கட்டும்.
அதுசரி, சற்று தலையைத்தூக்கி 'மேல் காலரியைப்' பார்த்தீர்களா?. ஸ்ரீதர் அவர்கள் விழாவை ரசித்துக்கொண்டிருக்க, முத்துராமன், ரவிச்சந்திரன், பாலையா, நாகேஷ் நால்வரும் விழாவைப்பார்த்து உற்சாகமாக பேசிக்கொண்டிருக்க, பி.என்.சுந்தரம் தன் கேமராவில் விழாவைப் படம்பிடித்துக் கொண்டிருக்க, டி.கே.ராமமூர்த்தி அவர்கள் கையில் வயலினுடன், ஹென்றி டேனியல், ஜோசப்கிருஷ்ணா உதவியுடன் விழாவுக்கே ரீ-ரிக்கார்டிங் செய்துகொண்டிருந்த அழகைப் பார்த்தீர்களா?.
இதுபோன்ற அற்புத தருணங்களைத் தருவதில் (ஒய்.ஜி) மகேந்திரன் ஒரு மகா இந்திரன். அவருக்கு கைகொடுக்கும் நமது ராகவ்ஜி ஒரு மகா இயந்திரன்.
அதுசரி, இந்த கவரேஜை இந்த திரியில் பதிக்கலாமா என்று துவக்கத்தில் ஒரு சந்தேக அலையை எழுப்பியுள்ளீர்களே ஏன்?. இதைப்பதிக்க இதைவிட பொருத்தமான திரி வேறெது?.
அடிக்கடி உங்கள் பதிவுகள் இங்கு இடம்பெற வேண்டும். நேரமில்லைஎனினும் என் போன்ற ரசிகர்களுக்காக...
-
17th August 2014, 12:55 PM
#339
Junior Member
Newbie Hubber
விழா விவரணையில், முரளி,கார்த்திக்,சாரதா இவர்களை விட்டால் யார்?மூன்றுமே ,நம் திரிக்கு வாய்த்தது ,நமக்கு பேரதிர்ஷ்டம்.
எம்.எஸ்.வீ பற்றி நீங்கள் சொன்னது சரி.இவரை gentle ஆக நடத்தி மதிப்பு தந்தவர்களை விட,ஒரு சராசரி இந்தியன் போல சவுக்காலடித்து ,மோசமாக நடத்தி,,அவ்வப்போது இனாம் தந்தவர்கள் மேலே விசுவாசமாக இருக்கும் கடை நிலை மனிதர்.
-
17th August 2014, 02:34 PM
#340
Junior Member
Seasoned Hubber
The fantasitc melody from Silsila with the golden voice of Kishore & Lata. Enjoy the song.
Bookmarks