Page 65 of 401 FirstFirst ... 1555636465666775115165 ... LastLast
Results 641 to 650 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #641
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தெலுங்குல்ல எனக்குப் புடிச்ச படம் சப்த பதி.. ரொம்ப நாளைக்கு(வருஷங்களுக்கு) முன்னால விமர்சனம் எழுதியிருந்தேன்..தேடி எடுத்து சாயந்திரம் போடறேன்..நெமிலிகி நெரிதகி நடதளிரே.. ந்னு பாட்டு.. தெரியுமா..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #642
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இந்த நேரத்தில் எனது ஹிந்தி பாடல்களின் பரிச்சயத்திற்கு வழி வகுத்த ,தமிழின் மாபெரும் ஆளுமை ஒன்றை குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.



    விஸ்வநாதன் -ராமமூர்த்தி இருவருக்கும் இணைத்து இசைக்காக பாரத் ரத்னா கொடுப்பது அவசியம்.

    ஆனால் விஸ்வநாதன் அவர்களுக்கு தனியாக கொடுப்பதென்றால் ,தேசிய ஒருமைப்பாட்டு விருது கொடுக்க பட்டே ஆக வேண்டும். மத்திய அரசாலும் முடியாத சாதனையான , ஹிந்தி எதிர்ப்பாளர்களாகிய எங்களை போன்றவர்களை ஹிந்தி பட,பாடல் பிரியர்களாக மாற்றி ,ஹிந்தி பிரசார சபையை நோக்கி ஆரம்ப 70 களில் ஓட வைத்தவராயிற்றே?



    ஒரு ஜி.ராமநாதன் முடிவு பெரும் காலத்தில் தக்க சமயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி,கே.வீ.மகாதேவன் எழுச்சி பெற்ற மாதிரியோ, இளையராஜா சற்றே stale ஆன போது முற்றிலும் புதுமையாய் ரகுமான் எழுச்சியுற்ற மாதிரியோ இல்லாமல் 71 முதல் 76 வரை ஒரு பெரிய வெற்றிடம், தமிழ் இசை தரை மட்டம் தொட்டது.



    இதற்கு முழு பொறுப்பும் ,இரு திலகங்கள் மற்றும் அவர்களை தொங்கி கொண்டிருந்த ஒரு இசையமைப்பாளர், அவர்களால் ஆதரிக்க பட்ட ஒரு over -used நளினம் ,nuances அற்ற பாடகர். தமிழர்களின் தடித்த தோல்.அதில் ஒரு திலகமாவது கொஞ்சம் முழித்து, தன்னுடைய முனைவில் புதிய பாடலாசிரியர்கள்,பாடகர்கள் ,நடிகைகள் என்றாவது புது ரத்தம் பாய்ச்சினார். ஆனால் இன்னொரு திலகமோ, நடிப்பை தவிர வேறொன்றறியேன் பராபரமே ,என்று தனது 150 ஆவது படத்திற்கே டப்பிங் ரேஞ்சில் பாடல்கள் அமைந்ததை பொருட்படுத்தாமல் , தனது படங்கள் பாதிக்க பட விட்டார். மகாதேவன், முழு நேரம் தெலுங்குக்கு தாவ, சங்கர்-கணேஷ்,விஜய பாஸ்கர் என்று சில்லறைகளின் கொட்டம்.



    இளைய ராஜா வந்து,தமிழ் பட உலகையும், தமிழையும் முழுதாக ஹிந்தி பக்கம் தாவ விடாமல் ரட்சித்தார்.
    1970 - 76 வரை ( ஸாரி, 75 வரைதான், 76-ல்தான் ரட்சிக்க இசைக்கடவுள் வந்துவிட்டாரே) நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை, உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை (உங்களுக்கும் உங்களைப்போன்ற சிலருக்கும் மட்டும்)

    மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் டி.கே.ராமமூர்த்தி உயிருடன்தான் இருந்தார். ஏன் செத்துக்கொண்டிருந்த இசையைக் காப்பாற்ற முன்வரவில்லை?. (என்று யாரும் கெட்டுவிடக்கூடாது . அதற்கு ரெடிமேட் பதில் உண்டு. 'மார்கெட்டிங் தெரியாது'. தாஜா பண்ணத்தெரியாது என்று). நானில் துவங்கி தங்க சுரங்கம் வரை வாழ்வளித்த ராமண்ணாவையே ஏன் சொர்க்கத்தில் கோட்டைவிட்டார் என்று தெரியவில்லை. சங்கர்கணேஷ், வி.குமார், விஜயபாஸ்கர் இவர்களையே வளரவிட்டு வேடிக்கை பார்த்த விஸ்வநாதன் தன முன்னாள் நண்பருக்கு இடைஞ்சல் செய்திருப்பாரா?.

    சரி இந்த காலகட்டத்தில் விஸ்வநாதனின் குப்பைகளைப் பார்ப்போம். சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், எங்கள் தங்கம், குமரிக்கோட்டம், காவியத்தலைவி, பிராப்தம், சுமதி என் சுந்தரி பாடல்களை மனிதன் கேட்பானா. இருதுருவம் 50 நாட்களாவது ஓடியதற்கு முக்கிய காரணம் 'தேருபாக்க வந்திருக்கும் சித்திரப்பெண்ணே' என்று என்னைப்போன்ற சில கிறுக்கன்கள் சொல்வதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

    குலமா குணமா படத்தில் கே.வி.மகாதேவன் இசைத்த \மாத்தூரு ராமக்கா' மற்றும் 'சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்' பாடல்களுக்கு ஏன் ஆஸ்கார் தரவில்லையென்பது பில்லியன் டாலர் கேள்வி. இவற்றோடு ஒப்பிடும்போது சவாலே சமாளி, சுமதி என் சுந்தரி பாடல்கள் குப்பையில் வீசப்பட வேண்டியவையே.

    வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படங்களில் சிவந்த மண், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும் அளவுக்கு வேறு யாரும் சிறந்த இசையைத்தரவில்லை என்று சில பைத்தியக்காரர்கள் சொல்லக்கூடும். அதை சீரியசாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை. அல்லது வழக்கம்போல ரெடிமேட் பதில் "அவையெல்லாம் அவரது முன்னாள் நண்பர் 1958-லேயே போட்டுவைத்த ட்யூன்கள்".

    இந்த காலகட்டத்தில் (70-75) எத்தனை குப்பைகள். 'நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்' ஒரு நாராசம். 'என் உள்ளம் உந்தன் ஆராதனை' கேட்க சகிக்காது. 'மலரே குறிஞ்சி மலரே' தூ... பாட்டா அது.

    'அவளுக்கென்று ஓர் மனம்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'அவர்கள்', மன்மத லீலை' சிடிக்களைஎல்லாம் இப்போதுதான் நெருப்பில் போட்டுவிட்டு வருகிறேன்.

    ஆராதனா உள்பட பல ஹிந்தி ரீமேக் படங்களுக்கு இசையமைத்தும் அவற்றிலுள்ள ஒரு ட்யூனைக்கூட தொட்டதில்லை என்று சில பைத்தியங்கள் சொல்லும். அதையெல்லாம் காதில் வாங்கத் தேவையில்லை.

    தேசிய ஒருமைப்பாட்டு விருது வழங்குவதென்றால் முதலில் வேதா, பின்னர் சங்கர்கணேஷ், பின்னர் கே.வி.எம். என்று வழங்க வேண்டும். ஹிந்தி ட்யூன்களை அப்படியே இறக்குமதி செய்ததற்காக. (ஆராதனா வின் 'கும்-கு-நாரஹே' யை காப்பி பண்ணி 'எங்கவீட்டு தங்கத்தேரில் எந்த நாளும் திருவிழா') . இவர்தான் அனாதை ஆனந்தன் படத்துக்காக மயிரிழையில் ஆஸ்கரை தவறவிட்டவர். (அதிலும் கூட 'கேரவன்' பாடலை காப்பி பண்ணி 'கண்ணாடி முன்னாடி தள்ளாடி வண்டாக ஆடட்டுமா') . ஏ.பி.என்னின் புராணப்படங்களையே குன்னக்குடியிடம் கோட்டைவிட்டு நின்றவர். கேட்டால் தெலுங்கில் பிஸி என்ற காரணம்.

    ஆனால் கிறுக்கர் விஸ்வநாதன் செய்ததென்ன 'முத்துக்குளிக்க வாரிகளா' மெட்டை தமிழிலிருந்து ஹிந்திக்கு ஏற்றுமதி செய்தார். அது தப்பில்லையா?. .

    76-ல் தமிழ் இசையைக் காக்க வந்தவர், வந்தபின்னும் 'குர்பானி', ஹம கிஸிஸே கம் நஹி' பாடல்கள் தமிழகத்தை ஆளத்தான் செய்தன என்று யாராவது சொன்னால் ஒப்புக் கொள்ளக்கூடாது.

  4. #643
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கடவுளிடம் ஒரே ஒரு வரம் கேட்பேன்.அடுத்த பிறவியிலாவது,நல்லவர்களுடனும்,நண்பர்களுடனும் என்னை மோத வைக்காதே.

    ஆனால்,இப்பிறவியில்,வேறு வழியில்லை போல் இருக்கிறது.(கே.எஸ்.ஜி படம் போல இரு நல்ல சக்திகளுக்குள் மோதல்)



    1960-1965 (65 out of 80 very Good ones)-ஒப்பிடும்போது,1966-1969(25 out of 64) தேய்ந்து விட்டது. 1965-1969 ஒப்பிடும் போது 1970-1975(9 out of 90) தரைமட்டம். சராசரியாக வருடத்திற்கு 75-80 நேரடி தமிழ் படங்கள் வந்த பூமியில் 15 படங்களுக்கு சராசரியாக இசையமைத்த பழுத்த அனுபவஸ்தர்,6 வருடத்தில் 90 படங்களில் 10% ,அதாவது குறிப்பிடும் படி 9 படங்கள்.



    எங்கமாமா, ராமன் எத்தனை ராமனடி,குமரி கோட்டம்,சுமதி என் சுந்தரி,அவளுக்கென்று ஓர் மனம்,பட்டிக்காடா பட்டணமா,பொன்னூஞ்சல்,அபூர்வ ராகங்கள்,அவன்தான் மனிதன். (அம்புடுதேன். சிவந்த மண் -69. இன்னொன்று என்னை சுத்தமாக கவராத ஒன்று.மற்றொன்று 75க்கு அப்புறம்).சராசரி இசையில் இன்னும் நாலைந்து தேறலாம்.(ராஜபார்ட் ரங்கதுரை போல)



    இது அப்போது உச்சத்திலிருந்த ஹிந்தி இசையோடு போரிட போதுமா?



    1970-1975-ஏனோதானோ பின்னணி இசை. அவசரமாக ரெகார்ட் செய்தது போல பாடல்கள்.கற்பனையற்ற இசை. கத்திக் கொண்டு ட ட டா பாடி இசையமைப்பாளர்களின் கற்பனையை சிதைத்து கொண்டிருந்த வீண் கர்வியான பாடகர் திலகம்.அந்த மாதிரி ஒரு காலகட்டத்தில் தமிழ் நாட்டில் பள்ளி மாணவனாக இருந்தது துரதிர்ஷ்டம்.அவமானம்.
    Last edited by Gopal.s; 20th August 2014 at 05:19 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #644
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கடவுளிடம் ஒரே ஒரு வரம் கேட்பேன்.அடுத்த பிறவியிலாவது,நல்லவர்களுடனும்,நண்பர்களுடனும் என்னை மோத வைக்காதே.
    குதர்க்க வாதம் செய்வது என்ற கொள்கையை விடாவிட்டால் எந்தப்பிறவியிலும் இப்படித்தான்.

    Quote Originally Posted by Gopal,S. View Post
    1970-1975-ஏனோதானோ பின்னணி இசை. அவசரமாக ரெகார்ட் செய்தது போல பாடல்கள்.கற்பனையற்ற இசை. கத்திக் கொண்டு ட ட டா பாடி இசையமைப்பாளர்களின் கற்பனையை சிதைத்து கொண்டிருந்த வீண் கர்வியான பாடகர் திலகம்.அந்த மாதிரி ஒரு காலகட்டத்தில் தமிழ் நாட்டில் பள்ளி மாணவனாக இருந்தது துரதிர்ஷ்டம்.அவமானம்.
    இசையின் மறுவடிவமான டி.கே.ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோர் அப்போது இருக்கத்தானே செய்தார்கள்?. இசையென்றால் என்னவென்றே தெரியாத விஸ்வநாதன் பின்னால் ஓடவேண்டிய அவசியமென்ன?. இப்போது அவரை மட்டுமே குறைசொல்ல வேண்டிய தேவையென்ன?.

  6. #645
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    இசையின் மறுவடிவமான டி.கே.ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோர் அப்போது இருக்கத்தானே செய்தார்கள்?. இசையென்றால் என்னவென்றே தெரியாத விஸ்வநாதன் பின்னால் ஓடவேண்டிய அவசியமென்ன?. இப்போது அவரை மட்டுமே குறைசொல்ல வேண்டிய தேவையென்ன?.
    தனித்தியங்க முடியாதவர் தூக்கி எறிய பட்டு விட்டு பிறகு, அவருடைய தன்னம்பிக்கை அகன்றிருக்கும் .தங்க சுரங்கம் ,பெரு வெற்றி பெற்றிருந்தால் கதையே வேறு.(Like Sachin out of form)



    மாமா- ஏனோ தெலுங்கிற்கு ஓடி போய் ,தூள் கிளப்பி கொண்டு அகில இந்தியாவை தெலுங்கு தேசம் திருப்பினார்.
    Last edited by Gopal.s; 20th August 2014 at 04:53 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #646
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா...
    உங்களுக்காக சட்டுனு ஒரு பாட்டை போஸ்ட் செய்தேன். அது ஏற்கனவே போட்டாச்சு என்று நண்பர் சொன்னதால் மாற்றி விட்டேன்.

    அதனால் உங்களுக்குப் பிடிக்கும்னு இந்தப் பாட்டு


  8. Likes chinnakkannan, Russellmai, Gopal.s liked this post
  9. #647
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கார்த்திக்,மன்னிக்கவும்.இன்னிக்கு ஹிந்தி பட பாடல்கள் போட்ட flow வில் வயிற்றெரிச்சல் வெளியாகி பீரிட்டு விட்டது. இனி இந்த சப்ஜெக்ட் தவிர்த்து விடுகிறேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #648
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=madhu;1157990]சிக்கா.. சிக்கா..

    உங்களுக்காக பாவாடை தாவணியில் தலை பின்னி பூ வைத்து பொட்டு வைத்த ஜோதிலட்சுமியுடன் ரவிச்சந்திரன் ..

    ஆடி முடிந்து ஆவணி வந்தாச்சு இல்லையா.. அதனால்தான் தாவணி போட்டிருக்காங்களாம்.

    பட்டம் விட்டது போலே பறக்குதம்மா உன் மேலாடை
    குடை ராட்டினம் போலே சுற்றுதம்மா உன் பாவாடை

    டி.எம்.எஸ்ஸும் ஈஸ்வரியும் கலக்குறாங்க

    (QUOTE)

    pottachchu sir.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #649
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    தெலுங்குல்ல எனக்குப் புடிச்ச படம் சப்த பதி.. ரொம்ப நாளைக்கு(வருஷங்களுக்கு) முன்னால விமர்சனம் எழுதியிருந்தேன்..தேடி எடுத்து சாயந்திரம் போடறேன்..நெமிலிகி நெரிதகி நடதளிரே.. ந்னு பாட்டு.. தெரியுமா..

  12. #650
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    [QUOTE=Gopal,S.;1157992]
    Quote Originally Posted by madhu View Post
    சிக்கா.. சிக்கா..

    உங்களுக்காக பாவாடை தாவணியில் தலை பின்னி பூ வைத்து பொட்டு வைத்த ஜோதிலட்சுமியுடன் ரவிச்சந்திரன் ..

    ஆடி முடிந்து ஆவணி வந்தாச்சு இல்லையா.. அதனால்தான் தாவணி போட்டிருக்காங்களாம்.

    பட்டம் விட்டது போலே பறக்குதம்மா உன் மேலாடை
    குடை ராட்டினம் போலே சுற்றுதம்மா உன் பாவாடை

    டி.எம்.எஸ்ஸும் ஈஸ்வரியும் கலக்குறாங்க

    (QUOTE)

    pottachchu sir.
    மன்னிச்சுக்குங்க நண்பரே.. மாற்றி விட்டேன்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •