Results 1 to 10 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    " நாடோடி மன்னன் " வெற்றிக் காவியம் !

    22-08-1958 அன்று மக்கள் திலகத்தின் வெற்றிக் காவியம் "நாடோடி மன்னன்" வெளியான போது எனக்கு வயது 2. எனவே முதல் வெளியீட்டில் பார்க்க முடியாத துர்பாக்கியசாலி ஆகி விட்டேன்.

    இருப்பினும், 1969-70 களில் இத்திரைக்காவியத்தை சென்னை அரங்கம் ஒன்றில், எனது வகுப்பு தோழர்கள் திரு. ரங்கராஜன், திரு. பார்த்தசாரதி, திரு. ஜெயக்குமார் ஆகியோருடன் ( இந்து உயர்நிலைப்பள்ளியில் படித்த நாங்கள் அனைவரும் மக்கள் திலகத்தின் அபிமானிகள்) ஒரு முறையும், மற்றும், சென்னை ராயபேட்டை முகம்மது உசேன் தெருவில், எனது வீட்டருகே குடியிருந்த, எனது நண்பர், நடிகர் சிவாஜி கணேசன் அபிமானி திரு. நடராஜன் ( நான் படித்து வந்த அதே வகுப்பு - ஆனால் இவர் கெல்லெட் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர்) என்பவருடனும், மறு முறை கண்டு களித்தேன். அதற்கு பிறகு இந்த காவியத்தை பல முறை கண்டு களித்திருந்தாலும், நானும் என் மனைவியும், எங்களுக்கு திருமணம் ஆன மறு நாளே ஆலந்தூர் விக்டோரியா அரங்கில் பார்த்தது தான் மறக்க முடியாதது. நாங்கள் இருவரும் இணைந்து பார்த்த முதல் காவியம் புண்ணியவான் மக்கள் திலகத்தின் "நாடோடி மன்னன்" என்பது நாங்கள் செய்த பாக்கியம்.

    இந்த காவியத்தை பற்றிய கருத்து, மக்கள் திலகத்தின் பக்தனாகிய நான் கூறுவதை விட, அன்றைய தினம் என்னுடன் இந்த மகத்தான காவியத்தை பார்த்து ரசித்த நடிகர் சிவாஜி கணேசன் அபிமானி திரு. நடராஜன் அவர்கள் தெரிவித்த கருத்தினை பதிவிட்டால் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


    இனி அவர் (நடிகர் சிவாஜி கணேசன் அபிமானி திரு. நடராஜன்) கூறுவதை பார்ப்போம் :

    உங்கள் எம்.ஜி. ஆர் நாடோடியாக தோன்றும் ஆரம்பக் காட்சியே அசத்தி விட்டார். . தமிழுக்கு முக்கியத்துவமளித்து " செந்தமிழே வணக்கம் " என்ற டைட்டில் பாடல் நல்ல காட்சியமைப்பு. மன்னனாக வரும் எம். ஜி. ஆர். ஸ்டைல், வித்தியாசமாகவும், ரசிக்கும்படியாகவும் உள்ளது.

    தூங்காதே தம்பி தூங்காதே, சும்மா கிடந்த நிலத்தை கொத்தி போன்ற தத்துவப் பாடல்களும், கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே என்ற காதல் பாடலும் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது- இசையமைப்பு அற்புதம்.

    நச்சென இருந்த கவிஞர் கண்ணதாசனின் வசனங்கள் மறக்க முடியாதவை.

    ஒரு புதுமுக நடிகையான சரோஜாதேவியை அறிமுகம் செய்யும் காட்சி அதுவும் தைரியாமாக வண்ணத்தில் அறிமுகம் செய்தது புதுமையாக இருந்தது .

    சண்டைக்காட்சிகள் வெகு அற்புதம். அதுவும் இறுதி காட்சி சண்டை பிரமிக்கும்படி இருந்தது.

    சந்திரபாபுவின் நகைச்சுவை காட்சியும் சோடை போகவில்லை.

    நீண்ட கதையை நேர்த்தியாக தொய்வில்லாமல் கொண்டு போய் இருக்கிறார் உங்கள் எம். ஜி. ஆர். திரையுலக நுணுக்கங்களை முழுமையாக அறிந்து வைத்திருப்பதன் காரணமாக பல வெற்றிப்படங்களை உங்கள் எம். ஜி. யாரால் அளிக்க முடிந்தது.

    1958லேயே இந்த மாதிரி பிரம்மாண்டமான படத்தை அளித்துள்ள உங்கள் எம்.ஜி. ஆர். உண்மையிலேயே, மிகவும் பாராட்டுக்குரியவர்.

    உங்கள் எம். ஜி. ஆர். சாமர்த்தியமானவர் - எப்படி எடுத்தால், மக்கள் விரும்புவார்கள் என்று நன்கு தெரிந்து வைத்துள்ளார்.

    திரையுலக நுணுக்கங்களை முழுமையாக அறிந்து வைத்திருப்பதன் காரணமாக பல வெற்றிப்படங்களை அளிக்க முடிந்தது.


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 22nd August 2014 at 12:06 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •