-
22nd August 2014, 10:42 PM
#881
Senior Member
Diamond Hubber
வணக்கம் ராகவேந்திரன் சார். ஆரம்பமே அமர்க்களம்.
-
22nd August 2014 10:42 PM
# ADS
Circuit advertisement
-
22nd August 2014, 10:50 PM
#882
Senior Member
Seasoned Hubber
இரவின் மடியில்
ஹிந்திப் பாடல்களின் மெட்டுக்களைப் பயன்படுத்துவதில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்று நிரூபித்தவர்கள் சங்கர் கணேஷ் என்று அந்தக் காலத்தில் நண்பர்கள் பேசிக்கொள்வதுண்டு. அதற்கேற்ப அமைந்த பாடல், ஆசை மனைவி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த அழகான மேனி பாடல்...
சிலோன் ரேடியோவில் காலை 7.30 மணி எப்பொழுது ஆகும் இந்தப் பாட்டை எப்போது போடுவார்கள் என்று ஆவலுடன் ஏங்கிக் கிடந்த காலங்களும் உண்டு.
சில சமயம் ஆழ்கடலில் முத்தெடுத்து பாடலையம் நினைவூட்டும்.
http://www.inbaminge.com/t/a/Aasai%20Manaivi/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd August 2014, 10:52 PM
#883
Senior Member
Seasoned Hubber
இரவின் மடியில்
நன்றி வாசு சார்... தங்களின் அமர்களமான இன்றைய ஸ்பெஷலை விடவா..
சிதார் கலக்கும் இன்னோரு பாடல்.. இரவில் நம்மை வருடிக் கொடுக்கும் இசைக் கருவியில் சிதாருக்கு தனியிடம் உண்டு...
ஆசை மனைவி படத்திலிருந்து எஸ்.ஜானகி வாணி ஜெயராம் இருவருமே பாடியிருக்கிறார்கள் என எண்ணுகிறேன்.
http://www.inbaminge.com/t/a/Aasai%20Manaivi/
வரலாமோ.. சுகம் தரலாமோ...
வரலாமோ.. சுகம் பெறலாமோ..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd August 2014, 10:58 PM
#884
Senior Member
Seasoned Hubber
இரவின் மடியில்
இந்தப் பாடலும் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் பாடல்.. இந்த மகிமை விஜயபாஸ்கர் இசைக்கு அதிகம் உண்டு. ஆங்கிலத்தில் கூறுவதென்றால்.. Oh... what a melody.... சுகமான இரவில் இது போன்ற பாடல்களை மெமரி கார்டில் பதிவு செய்து கொண்டு ஒரு ஐபாடிலோ டேபிலோ ப்ளேயரில் இயங்க விட்டு கடற்கரை மணலில் இரவு 10 மணிக்கு மேல் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய பாடல்..
கோபால் சாரின் இரவின் மடியில் சூப்பர் தொடர்.. அவருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.. இந்த இனியை வாய்ப்பைத் தந்ததற்காக. மற்றும் என்னுடைய புதிய இணைய இணைப்பிற்கும் தான்..
காலமடி காலம் படத்திலிருந்து தொடங்கலாம்....
நான் பாட்டின் பல்லவியை சொன்னேன்..
http://www.inbaminge.com/t/k/Kaalamadi%20Kaalam/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd August 2014, 11:05 PM
#885
Senior Member
Seasoned Hubber
இரவின் மடியில்
1975ல் வெளியான இசைத் தட்டு மெல்லிசை மன்னரின் இசையில் மாமியார் விஜயம் என்கிற படப்பாடல்கள். இதில் நான்கு பாடல்கள். நான்கும் அருமையான பாடல்கள். பி.சுசீலா பாடிய சாண் பிள்ளை யானாலும் என்ற பாடலும், குழந்தை வேணும் குழந்தை வேணும் கோமதியக்கா என்கிற பாடலும் பிரசித்தம். ஒரே ஒரு பாடல் மட்டும் இணையத்தில் இசையரசியின் இணைய தளத்தின் புண்ணியத்தில் கிடைக்கிறது. மற்ற பாடல்கள் எங்காவது கிடைத்தால் நண்பர்கள் தர வேண்டும்.
இப்போது சாண் பிள்ளையானாலும் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
http://psusheela.org/audio/ra/tamil/...lai_aanalum.ra
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
22nd August 2014, 11:09 PM
#886
Senior Member
Seasoned Hubber
இரவின் மடியில்
என்னை அழைத்தது யாரடி கண்ணே...
உடனே தெரிந்திருக்குமே இப்பாடலைப் பற்றி..
சங்கறன் சொன்னான் சரவணன் கேட்டாண் என்ற பாடல் இடம் பெற்ற அதே ஒருவனுக்கு ஒருத்தி திரைப்படத்திலிருந்து தான் இப்பாடல்.
நடுவில் ஒரு இடத்தில் ஜானகி சபதம் படப் பாடலை நினைவூட்டும்.
http://www.inbaminge.com/t/o/Oruvanukku%20Oruthi/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd August 2014, 01:16 AM
#887
Senior Member
Senior Hubber
எஸ்.வாசு தேவன் சார்.. மொழியறியாமல் சின்ன வயதில் நான் மிகவும் ரசித்த ஆந்தி, பல்பல் தில் கே ப்பாஸ் பாடல்கள் இட்டமைக்கு மிக்க நன்றி..
பல்பல் தில் கே பாஸ் தும் ரஹ்தி ஹோ
தும் ஆகயேஹம்
தேரேபினா ஜிந்தஹி அகெய்ன் தாங்க்ஸ் எஸ்.வாசுதேவன் சார்..
வாசு சார்..மறுமுறை ஞாயிறு ஒளி மழையில் போட்டீர்களா இல்லையா தெரியவில்லை இப்போது தான் பார்த்தேன்..மிக்க்க நன்றி( இந்தப் பாட்டை இப்படி எடுக்கவேண்டுமென ரூம் போட்டு யோசித்திருப்பார்களோ)
க்ருஷ்ணா ஜி.. கைலாசம் அவர்களைப் பற்றிய பதிவுக்கு நன்றி..ம்ம் கொடியவன் காலன்..
இரவின் மடியில்.. காசிக்குப் போற சன்யாசி,மலர்களைப் போல் தங்கை கோபால்சார்க்குத் தாங்க்ஸ்..
ராகவேந்திரரின் இரவின் மடியில் பாடல்கள் அழகு..ஆனால் ஏனோ என் சிஸ்டத்தில் பாட மாட்டேன் என்கிறது..பொங்கும் பூம்புனலும்பாடல்களும் அப்படியே..லாப் டாப்பில் கொஞ்சம் ட்ரை செய்ய வேண்டும்..
க்ருஷ்ணா ஜி..புதுமுகமே அறிமுகமே வீடீயோ வொர்க் செய்யலை ஆதலின் என்ன..பாடல் நினைவு படுத்தியதற்கு தாங்க்ஸ்..
ஊடல் சிறு மின்னல்- எஸ்வி சேகர் ஹீரோவான படம் தேவி தியேட்டரில் தான் ரிலீஸ்..தேவையே இல்லாமல் ஹீரோ ஹீரோயினை சாகடித்திருப்பார்கள்..தேடிக் கண்டுபிடித்த மதுண்ணாவிற்கு ஒரு ஓ..
சந்த்ரபாபு லிஸ்ட் வேதா லிஸ்ட் தாங்க்ஸ் கோபால் சார்..
பாட்டுப்புத்தகம்- ஓ.. சின்ன வயதில் என் அண்ண(னும்)ன் ந.தி ரசிகர்.. அவர் ரா.ரா.சோழன்படம் ஃபர்ஸ்ட் டே பார்த்து விட்டு வந்து இரவில் கொடுத்த பாட்டுப் புத்தகம் இன்னும் நினைவில்..கொஞ்சம் நிறையக் கலரில்பளபள என்றிருந்தது.. நான் மறுவாரமோ என்னவோ படம் பார்த்துவிட்டு வந்து வீட்டில் வந்ததும் செய்த முதற்காரியம் கத்து திரைக்கால் சூழ் அவனிக்கொரு..பா.பு பார்த்து மனப்பாடம் செய்து பாடிப் பார்தது தான்.இன்னும் விதவிதமாய் வைத்திருந்தார் அவர்..எங்கு போயிற்றென்று தெரியவிலலை..அது ஒரு நிலாக் காலம்..ம்ம்..
-
23rd August 2014, 03:06 AM
#888
Senior Member
Senior Hubber
வாசு ஜி,
இன்று அருமையான பதிவுகள்... நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்
நினைவு சின்னப்பாடலை பதிவிடும்போது நான் நினைத்த மற்றுமொரு பாடல் கங்கை ஆற்றில் நின்று கொண்டு ... ஆஹா இதமோ இதம் .. என்ன அழகான பாடல்
-
23rd August 2014, 04:30 AM
#889
Senior Member
Diamond Hubber
பாட்டு புத்தகங்கள்... ஆஹா.. ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் பத்து பைசாவுக்கு கலர் அட்டை.. ஐந்து பைசாவுக்கு சாதாரண பேப்பரில் என்று வித்தியாசமாக விற்ற காலங்களும் உண்டு. அடுத்து வரப்போகும் தயாரிப்புகள் பற்றிய விளம்பரங்களும் பின் அட்டையில் இருக்கும்.
ஆசை அண்ணா அருமைத் தம்பி, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்று ஆரம்பித்து அவளுக்கென்று ஒரு மனம் ( டபுள் கலர் அட்டை ) வரை சேகரித்து வைத்திருந்தேன். வெளியூரில் வேலைக்கு சென்றிருந்தபோது பெட்டிக்குள் இருந்த எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர் கரையானார். அதனால் மொத்தத்தையுமெ வெள்ளித் திரையில்தான் காண வேண்டி ஆகிவிட்டது.
இன்றைய பதிவுகள் எல்லாமே சுப்பர்ப்.
-
23rd August 2014, 04:59 AM
#890
Senior Member
Veteran Hubber
Originally Posted by
madhu
வெளியூரில் வேலைக்கு சென்றிருந்தபோது பெட்டிக்குள் இருந்த எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர் கரையானார்.
madhura gaanam aachche ! adhaan!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks