-
30th August 2014, 10:07 AM
#1491
Junior Member
Platinum Hubber
FLIMALAYA - MAGAZINE
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th August 2014 10:07 AM
# ADS
Circuit advertisement
-
28th September 2014, 06:27 PM
#1492
Senior Member
Seasoned Hubber
ஃபிலிமாலயா பத்திரிகையில் வெளிவந்த நடிகர் திலகத்தின் நிழற்படங்களுக்கு மிக்க நன்றி வினோத் சார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th September 2014, 06:27 PM
#1493
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Filmography Series
103. Santhi சாந்தி
தணிக்கை 15.04.1965
வெளியீடு 22.04.1965
தயாரிப்பு ஏ.எல்.சீனிவாசன் ஏ.எல்.எஸ்.ப்ரொடக்ஷன்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, நாகேஷ், நாகையா, ஆர். விஜயகுமாரி, தேவிகா, சந்தியா, கே.மனோரமா, தாம்பரம் லலிதா, சீதாலக்ஷ்மி, கௌரவ நடிகர் எஸ்.வி.சஹஸ்ரநாமம் மற்றும் பலர்
கதை வசனம் எம்.எஸ்.சோலைமலை
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், உதவி பஞ்சு அருணாசலம்
பாடியவர்கள் டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா
ஒலிப்பதிவு டைரக்டர் டி.எஸ்.ரங்கசாமி
ஒளிப்பதிவு ஜி.விட்டல்ராவ்
ஒலிப்பதிவு கே.துரைசாமி, உதவி வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ், கிருஷ்ணமூர்த்தி
கலை ஹெச்.சாந்தாராம், அலங்காரம் டி.வி.அண்ணாமலை
செட் பிராபர்டீஸ் சினி கிராஃப்ட்ஸ்
ஸ்டில்ஸ் சி.பத்மனாபன்
விளம்பர டிசைன் ஜி.ஹெச்.ராவ்
பத்திரிகை விளம்பரம் அருணா அண்ட் கோ
ஸ்டூடியோ நிர்வாகம் டி.வி.வைத்தியநாதன்
மேக்கப் ஆர். ரங்கசாமி, டி.டி.சுந்தரம், எம்.கஜபதி, ஆர்.ராமசாமி, பி.கிருஷ்ணராஜ், வி.பத்ரையா, பி.செல்வராஜ்
உடைகள் பி.ராமகிருஷ்ணன், வி.கங்காதரன், என்.விவேகானந்தம்
தயாரிப்பு நிர்வாகம்- பிஎல்.ராமநாதன், ஏ.வி.சுந்தரம்
ப்ராசஸங் ஏவிஎம் ஸ்டூடியோஸ் லாபரட்டரி
ஸ்டூடியோ சாரதா [லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்]
ஆர்சிஏ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது
எடிட்டிங் ஏ.பால்துரைசிங்கம்
அசோஸியேட் டைரக்ஷன் ஆர்.திருமலை, ஜி.எஸ்.மகாலங்கம், உதவி எஸ்.எஸ்.தேவதாஸ், சீனிவாசன்
இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, உதவி கோவர்த்தனம்-ஹென்றி டேனியல்
டைரக்ஷன் ஏ.பீம்சிங்
இன்று முதல் விளம்பர நிழற்படம் நன்றி இதயவேந்தன் வரலாற்றுச் சுவடுகள்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th September 2014, 06:28 PM
#1494
Senior Member
Seasoned Hubber
சிறப்பு செய்திகள்
தணிக்கையில் சர்ச்சை ஏற்பட்டு மறுபரிசீலனைக்குப் பிறகு சான்றிதழ் வழங்கப்பட்ட படம். கௌரி என்ற பெயரில் ஹிந்தியில் நடிகர் திலகத்தின் திரைப்பட நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டது.
எம்.எஸ்.சோலைமலையின் ஏற்றிய விளக்கு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.
தனி நடிப்பு உத்தியில் மனப்போராட்டக் காட்சியில் நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பு தமிழ்த்திரையுலகில் நிலைத்த புகழ் பெற்றதாகும். இக்காட்சிக்கு உரையாடலை எழுதியவர் தஞ்சைவாணன்.
சென்னையில் வெளியான திரையரங்குகள் சாந்தி, மஹாராணி சயானி
நூறு நாட்கள் ஓடிய திரையரங்குகள்
சென்னை சாந்தி – 100 நாட்கள்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th September 2014, 06:29 PM
#1495
Senior Member
Seasoned Hubber
சாந்தி - பாடல்கள்
1. வாழ்ந்து பார்க்க வேண்டும் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ்
2. நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் – பி.சுசீலா, எம்.எஸ்.ராஜு (விசில்)
3. செந்தூர் முருகன் கோவிலிலே – பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ்
4. செந்தூர் முருகன் கோவிலிலே – பி.சுசீலா
5. ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் – பி.சுசீலா
6. யாரந்த நிலவு – டி.எம்.சௌந்தர்ராஜன்
காணொளிகள்
யார் அந்த நிலவு
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
செந்தூர் முருகன் – விஜயகுமாரி நடிகர் திலகம்
செந்தூர் முருகன் விஜயகுமாரி தேவிகா எஸ்.எஸ்.ராஜேந்திரன்
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th September 2014, 06:46 PM
#1496
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகம் - ஓர் உளவியல் அதிசயம்
சாந்தி...
நடிகர் திலகம் என்னும் நடிப்புச் சுரங்கத்தை அள்ள அள்ளக் கிடைக்கக் கூடிய ஏராளமான நடிப்புப் புதையலில் இன்னும் ஒரு குவியல். பல காட்சிகளில் மிகவும் நுட்பமான நுண்ணசைவுகளில் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு காட்சியைப் பற்றியுமே ஏராளமான ஆய்வேடுகளைப் படைக்கலாம். நடிப்புப் பள்ளி நடிப்பிலக்கணம் என இவருடைய பரிமாணங்களுக்கு இன்னொரு சான்று.
தன் தாயிடம் தன் காதலை வெட்கத்தோடும் அதே சமயம் தீர்மானமாகவும் சொல்லும் காட்சி. இக்காட்சியில் ஒவ்வொரு வசனத்திலும் அவர் தரும் nuances உரையாடல் உணர்விற்கு எவ்வாறு பயன்படுத்தப் படலாம் என்பதற்கான உதாரணம்.
தனியே மனப் போராட்டத்தில் அல்லாடும் காட்சி...
கனவு என்றாலே கதாநாயகியை அரைகுறை ஆடைகளோடு ஆடவிட்டு காதல் என்ற பெயரில் அந்த ஒரு உணர்வைத் தவிர மற்ற அனைத்து உணர்வுகளையும் வெளியிடுவது தான் பொதுவாக தமிழ்த்திரைப்படங்களில் காணப்படும் கசப்பான நிகழ்வு. ஆனால் நாயகனின் மனப் போராட்டத்தையும் அவனுடைய சோகம், கோபம், ரௌத்திரம் போன்ற இதர உணர்வுகளும் ஒரு மனிதனின் கனவுகளில் இடம் பெறும் என்பதை எடுத்துக் காட்டியவர் நடிகர் திலகம். புதிய பறவை, நிச்சய தாம்பூலம் போன்ற படங்களில் அந்தக் கதாநாயகனின் உணர்வுகள் பாடலாக வெளிப்பட்டன. இப்படத்தில் உரையாடலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
கனவுக் காட்சியில் உணர்ச்சி மயமான உரையாடல் காட்சியில் அதுவும் மோனோ எனப்படும் தனிநபர் மனப் போராட்டக் காட்சியில் நடித்து உலக அளவில் இலக்கணம் படைத்தவர் நடிகர் திலகம் மட்டுமே.
இன்னொருவனின் மனைவியுடன் சந்தர்ப்ப சூழ்நிலையால் கணவனாக நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.. உறவு முறையில் பெரிய அளவில் தடுமாற்றம் ஏற்படக் கூடிய, கத்தி மேல் நடப்பது போன்ற கதாபாத்திர அமைப்பில் சற்றும் வழுவாமல் மிகச் சிறப்பாக இப்பாத்திரத்தைத் திரையில் வடித்த நடிகர் திலகத்திற்கு இதற்காகவே நூறு முறை பாரத ரத்னா வழங்கலாம். உலக அளவில் இதைப் போன்ற மிகச் சிறந்த நடிப்பை யாராலும் தந்ததில்லை தர முடியாது என்பது நிதர்சனம்.
இதே போல நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடல் காட்சி...
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் விசில் அடித்துக் கொண்டே படிக்கட்டில் இறங்கவேண்டிய காட்சி. கீழே சற்றும் பார்க்காமல் அந்த டைமிங்கை வைத்தே அவளைப் பார்த்துக் கொண்டே விசிலடித்துக் கொண்டே டக்கென இறங்குவது..
தலைவா... நீ சரித்திர நாயகனய்யா..
ஓங்கி உரக்கக் கத்த வேண்டும் போலிருக்கிறது..
ஒவ்வொரு ஃப்ரேமிலும் கலக்கும் சாந்தி திரைப்படம் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்ததற்கு இன்னொரு காரணம்...
இன்னும் பல படங்கள் நடிகர் திலகம் தேவிகா இணையில் வந்திருக்கக் கூடாதா... என ஏங்க வைக்கும் கெமிஸ்ட்ரி...
இவற்றோடு தமிழ்த்திரையுலக இசைக்குப் பொற்காலம் அமைத்துத் தந்த மெல்லிசை மன்னர்கள் இணையில் வெளிவந்த உன்னத இசைக்காவியம்.
பாடல்கள் மட்டுமா... நடிகர் திலகத்தின் தனி நடிப்புக் காட்சியில் ட்ரம்ஸ் பயன்படுத்தியிருக்கும் உத்தி... ட்ரம்ஸ் மட்டுமே பயன்படுத்தியிருக்கும் உத்தி..
கவியரசரின் பாடல்கள் வரிகளிலேயே கதையைச் சொல்லும் தனித்துவம்..
தொய்வடையாத வகையில் படத்தை எடுத்துச் சென்றிருக்கும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும்..
எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து தந்த பீம்சிங்கின் இயக்கம்..
சாந்தி மறக்கமுடியாத படம் மட்டுமல்ல, இதுவரை பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டிய படம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th September 2014, 07:40 PM
#1497
Junior Member
Newbie Hubber
சாந்தி- 1965
ஒரு சிக்கலான முக்கோணம்.அது வரை பழைய காதலன் (அ) காதலி ,கணவன்(அ) மனைவி ,மனைவியான காதலி (அ) கணவனான காதலன் என்று பயணித்த பாதையில் புத்தம் புதுசாக இன்னொரு கல்யாணமான பெண்ணிற்கு கணவன் போல் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படும் நண்பன்.
பீம் சிங் இன் பா இல்லாத அறுபதுகளின் படம்.நிறைய சென்சர் பிரச்னையுடன் வந்து ஹிட் ஆன நல்ல படம்.சிவாஜி சுமாராக இளைக்க ஆரம்பித்து கற்றை முடி நெற்றியில் புரள(பின்னாளில் ரவி இதை நிறைய படங்களில்)புரள கியூட் ஆக இருப்பார்.எனக்கு மிக மிக பிடித்த சுசிலாவின் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடலும் ,மிக மிக பிடித்த டி.எம்.எஸ். இன் யாரந்த நிலவு பாடலும் இடம் பெற்ற காவியம்.
கம்பி மேல் வித்தை போன்ற கதைக்கு நல்ல திரைகதை அமைத்து (லாஜிக் மீறல் ஏராளம்)பீம் சிங் நன்கு இயக்கி ,ஏ.எல்.எஸ். தயாரிப்பு. விஸ்வநாதன் -ராமமூர்த்தி அருமையான இசை.காமெரா ரொம்ப சுமார் (நிறைய இடங்கள் வெளிரும்).Seperation lighting மிக மோசம்.
உற்சாகமாய் நண்பர்களுடன் வாழ்ந்து பார்க்க வேண்டும் என ஆரம்பித்து ,சீராக சென்று ,உணர்ச்சி கொந்தளிப்பில் ,இடை வேளை க்கு பிறகு சூடாகவே செல்லும்.தேவிகா உடன் மெல்லிய காமம் ததும்பும் நெஞ்சத்திலே காதல் காட்சி எனக்கு பிடித்த ஒன்று.அதில் ரெட்டை பின்னலை பிடித்து முகத்தோடு இழைவார் பாருங்கள்.காமத்தில் தோய்ந்த கவிதை.அம்மாவிடம் தனது காதலை கொஞ்சம் வெட்கம்,நிறைய ஆசை,சிறிது தயக்கம்,சிறிது எதிர்பார்ப்பு,சிறிது பரபரப்பு என்ற நடிப்பு கும்பமேளா ஒரு இடம் என்றால், யார் இந்த நிலவில் டி.எம்.எஸ் ஐ விழுங்க துடிக்கும் பாவங்கள். மனசாட்சி காட்சி(உபயம் தஞ்சை வாணன்)நடிகர் திலகத்தின் favourite காட்சி.அருமையாய் நடிக்க வேண்டிய இடத்தில் நடித்து அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி -இனிமேலும் உங்களுக்கு விளக்க என்ன இருக்கிறது?
எஸ்.எஸ்.ஆர். எப்போதும் போல் நல்ல சப்போர்ட்.தேவிகா தான் ஏ.பீ.என் படத்து கே.பீ.எஸ். போல் வந்து வந்து மாயமாகி விடுவார்.விஜயகுமாரி கு நானும் ஒரு பெண், பூம்புகார் வரிசையில் மற்றுமொரு முக்கிய படம்.ஆனால்........ எனக்கு என்னவோ விஜயகுமாரியை அசோகன் இன் பெண் உருவாகவே தெரியும்.என்ன உணர்சிகளை காட்டினாலும் செயற்கையான அருவருப்பை மூட்டி ,காமெடி ஆக தெரியும்.அவரை எஸ்.எஸ்.ஆறே விரும்பி இருப்பாரா என்பது சந்தேகம்.இந்த படத்தில் ஓரளவு தேறுவார்.
மற்றவர்கள் எம்.ஆர்.ராதா உட்பட வழக்கம் போல்.முடிவு எதிர்பார்த்தது.மக்கள் ஏற்றார்கள்.
பார்க்க வேண்டிய படம் என்பதை விட பார்க்க கூடிய படம் என்றே நான் தீர்ப்பு சொல்வேன்.
Last edited by Gopal.s; 28th September 2014 at 07:46 PM.
-
28th September 2014, 07:41 PM
#1498
Junior Member
Newbie Hubber
Last edited by Gopal.s; 28th September 2014 at 07:45 PM.
-
6th October 2014, 10:10 AM
#1499
Junior Member
Regular Hubber
டியர் இராகவேந்தர் சார்,
நடிகர் திலகத்தின் 104வது திரைக் காவியப் பதிவுடன் உங்களது
திருவிளையாடலைத் துவங்குங்கள் இந்த திரியில்.
கோபு.
-
7th October 2014, 11:39 PM
#1500
Senior Member
Seasoned Hubber
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கோபு சார். நிச்சயம் தொடரும்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks