Page 155 of 401 FirstFirst ... 55105145153154155156157165205255 ... LastLast
Results 1,541 to 1,550 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1541
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒரு பாட்டு சொல்ல ஆசை..ஆனால் ஹீரோயினின் இந்தக்காலப் புகைப்படத்தைப் போடமாட்டேன் என்று வாசு சார், க்ருஷ்ணா சார் மற்றும் அனைத்து நண்பர்களும் சத்தியம் செய்தால் தான் சொல்வேன்..அந்த நடிகைபற்றிக் க்ளூ.. மதுரைக்காரி..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1542
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    யார் அந்த மதுரை மல்லி ?
    ரெட்டை ஜடை ரங்கம்மா வா அல்லது கோண வாய் கோகிலவா
    gkrishna

  4. Likes chinnakkannan liked this post
  5. #1543
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    நேற்றைய ஸ்பெஷலான 'ருத்ர தாண்டவம்' படத்தின் விஜயகுமார்-சுமித்ரா டூயட் பாட்டு ரொம்ப நன்றாக இருந்தது. நீங்கள் சொன்னதுபோல சுமித்ரா பல ஜாடிகளுக்கு ஏற்ற மூடி. குறிப்பாக ஜெய்கணேஷ் (இருவருக்கும் சில காலம் லடாய் இருந்தது எல்லோருக்கும் தெரிந்ததே)

    ருத்ர தாண்டவம் நல்ல நகைச்சுவை மற்றும் கருத்துப்படம். நகைச்சுவைக்காக என்றாலும் சிவன் வி.கே.ஆர். ஆங்கிலம் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம் (டி.ஆர். பாணியில் 'பூசாரி, ஐயாம் ஸாரி')

    முற்பாதியில் 'நான் கண்ட சொர்க்கம்' படத்தையும், பிற்பாதியில் 'ருத்ரதாண்டவம்' படத்தையும் கொண்டுதான் நடிகர்திலகத்தின் 'எமனுக்கு எமன்' வந்தது...

  6. #1544
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹையா… க்ருஷ்ணா ஜி கண்டுபிடிக்கலை..

    ஒரு பல்லாண்டுகாலம் வளர்ந்த பழைய மரம் மதுரையில் இருந்தது..அந்த இடம் பஸ் நிறுத்தமாக வைத்திருந்தார்கள்..டிவிஎஸ் ஸ்டாப்..அதையொட்டி ஒருமஹா பழைய பெரிய வீடும் இருந்தது..

    காலப் போக்கில் அந்த வீட்டை இடித்துஇரண்டு தியேட்டர் வந்தது – சக்தி ஏசி, சிவம் தியேட்டர்.. அந்த மரத்தையும் ஈவிரக்கமில்லாமல் வெட்டி விட்டார்கள்.. டி.வி.எஸ் ஸ்டாப்பும் இடம் மாறி சேதுபதி ஸ்கூலுக்கு ஆப்போஸிட்டாகப் போய் விட்டது (இப்போதும் அதே நிலைமையா தெரியாது நான் சொல்வது ரொம்ப காலம் முன்பு)

    அந்த சிவம் தியேட்டர் வந்த ஒரு வருடமோ ரெண்டுவருடமோ அப்போது பார்த்த படம் இது.. செல்லமாக க் கல்லூரியில் குதிரை எனச் சொல்வார்கள் அந்த ஹீரோயினை..ரொம்ப அழகெல்லாம் இல்லை சுமார் தான்..ஆனால் மதுரை நேட்டிவ்..எனில்..

    படம் காதல் கதை தான்..சர்ப்ரைஸாக எம்.எஸ். விஸ்வ நாதன் இசை (அப்போது இளையராஜா இசையில் நிறையப் படஙக்ள் வந்த காலகட்டம்..) இந்தப்பாட்டு சொய்ங்க்கென்று தேனாக காதுகளில் பாய்ந்து ஓடிவிடும்..

    மலேசியா வாசுதேவன் வாணி ஜெயராம்..படம் சரணாலயம்..பாடல் வாலிப க் கவிஞர் வாலி (வரிகள் அழகு)

    *

    இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
    கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்.

    நீல நதிக்கரையில் ஊர்க்கோலமாம்
    முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம்

    பாக்கு மரங்களின் நிழலோரம்
    நல்ல பவழ மல்லிகைபாய் போட
    மாலைப் பொழுது பனிதூவ
    மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற
    ரதி மாறன் விளையாட்டு அரங்கேற

    சோலை வனங்களின் வழியோரம்
    சின்னஞ்சிறியமின்மினிகள் விளக்கேற்ற

    போதை மேதுவாகத் தலைக்கேற
    வண்ணப் பாதம் பதியாமல் தடுமாற

    இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
    கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்.
    *
    http://www.inbaminge.com/t/s/Saranal...ukkum.eng.html

    இதிலேயே,

    நெடு நாள் ஆசை ஒன்று
    இந்த நெஞ்சினில் உதித்தது உண்டு..
    அதை நேரிடையாகச் சொல்ல
    நான் நாணமில்லாதவள் அல்ல
    எஸ்.பி.பி – அதை நேரிடையாகச் சொல்ல
    கண்ணைத் தூதுவிட்டேன் கொஞ்சம் மெல்ல..
    – அழகுப்பாட்டு எஸ்.பி.பி..சுசீலா. சுசீலாம்மாவின் குரல் வெகு அழகு..இதுவும் வாலி..

    http://www.inbaminge.com/t/s/Saranal...Aasai.eng.html

    எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
    இரு விழியால் இந்தப் பூங்கோதை..
    இதுவும் நல்ல பாட்டு..மலேசியா வாசுதேவன்..

    http://www.inbaminge.com/t/s/Saranal...kiral.eng.html

    *

    ஹச்சோ.. ஹீரோயின் பேர் சொல்லலியே நளினி.. தோடி ராகத்தில் சேஷ கோபாலனுடன் ஜோடியாக அறிமுகமாகி உயிருள்ள வரை உஷாவில் இந்திர லோகத்துசுந்தரியாக கனவினில் வந்து நூறாவது நாளில் அலறித்துடிக்கும் நங்கையாக நடித்து பின் பின்…… ராமராஜனை மணம் புரிந்து பின் பிரிந்து செட்டில் ஆனவர்..

    *

    ஹீரோ..ம்ம் மைக் மோஹன்..

    *

  7. #1545
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    சி கே சார்

    இவங்க தானா ? நீங்கள் சொல்ல வந்த நடிகை

    மன்னிக்கணும் சி கே சார்
    இரண்டாவது போட்டோ இப்ப உள்ள போட்டோ இல்லை
    gkrishna

  8. Likes chinnakkannan liked this post
  9. #1546
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கிருஷ்ணாஜி

    'எடுத்துப்போடும்' வேலையை ரொம்ப சிரத்தையாக செய்யத்துவங்கி விட்டீர்கள் போலும். நடத்துங்க.

    டியர் சி.க.சார்,

    மங்கம்மா சபத்தத்தில் இடம்பெற்ற 'சொர்க்கத்தின் வாசல் இங்கே' பாடலில்தான் முதன்முதலாக கம்ப்யூட்டர் எடிட்டிங் பயன்படுத்தப்பட்டதாக ஒரு இடத்தில் படித்தேன். உண்மையா என்று ஆன்றோர்கள்(??) தான் சொல்ல வேண்டும்.

    சத்யராஜின் சில டயலாக் டெலிவரி தவிர சிறப்பாக படத்தில் ஒன்றுமில்லை. சத்யராஜின் மகன் நளினிகாந்த் என்பது இன்னொரு கொடுமை...

  10. Likes chinnakkannan liked this post
  11. #1547
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஒரு பாட்டு சொல்ல ஆசை..ஆனால் ஹீரோயினின் இந்தக்காலப் புகைப்படத்தைப் போடமாட்டேன் என்று வாசு சார், க்ருஷ்ணா சார் மற்றும் அனைத்து நண்பர்களும் சத்தியம் செய்தால் தான் சொல்வேன்..அந்த நடிகைபற்றிக் க்ளூ.. மதுரைக்காரி..
    நளினியின் இன்றைய படத்தை எதுக்கு தேடிஎடுத்துப்போடனும்?. அதான் மடிப்பாக்கம் மாதவன் நகைச்சுவை சீரியலில் இப்போது தினமும் நம்வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறாரே.

  12. #1548
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    க்ருஷ்ணா ஜி கார்த்திக் சார்..

    க்ருஷ்ணா சார்.. சின்னவயசுல பார்க்கபிளாத் தான் இருக்காங்க.. நீங்க போட்ட ஃபோட்டோவே பழசுன்னா இப்போ...???!

    கார்த்திக் சார்..ஆன்றோர்க்கும் தெரியாத விஷயம் உண்டு என்பது இப்போது தான் தெரிந்தது மங்கம்மா சபதம் மேட்னி ஷோ அலங்கார் தியேட்ட்ர் என நினைவு..சைக்கிளில் மதியக்காட்சி சென்று தலைவலியோடு திரும்பி வந்ததோர் காலம்!

  13. #1549
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (65)

    'இன்றைய ஸ்பெஷலி'ல் நம், காதுகளில் மனதில் என்றும் ரீங்காரமிடும் 'பொன்வண்டு'



    படம்: பொன்வண்டு

    நடிகர்கள்: ஜெய்சங்கர், பாரதி, உஷாநந்தினி, சுபா, மனோரமா, ஜெயசித்ரா

    பாடல்கள்: வாலி, ஆலங்குடி சோமு

    கதை, வசனம், டைரெக்ஷன்: என்.எஸ்.மணியம்

    இசை: மெல்லிசை மாமணி வி.குமார்


    ஒரு ஜாலியான படம். அதிலிருத்து செம ஜாலியான ஒரு பாடல்.



    பணக்காரத் தந்தையின் பணத்தில் சொகுசாக வாழும் ஒரு ஊதாரி மகன் தன் தந்தையின் சவாலை ஏற்று சுயமாகச் சம்பாதிக்க கிளம்புகிறான். ஒரு சினிமாவில் கதாநாயகனாக நடிக்க அவனுக்கு சான்ஸ் கிடைக்கிறது. அதற்கு ஏகப்பட்ட தடங்கல்கள். அதனால் அவன் இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் இவர்களின் மகள்களை காதலிப்பது போல நடித்து, அவர்களை வைத்து தன் காரியத்தை சாதித்து, தன்னுடைய படத்தை வெற்றிகரமாக முடிக்கிறான். இறுதியில் தான் காதலித்த பெண்களின் துரத்தல்களில் இருந்து தப்பிக்க சாமியார் வேடம் பூண்டு ஏமாற்றி, தப்பிக்கிறான். வழியில் விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதியாகி, குணம் பெற்று, தான் இறந்து விட்டதாகக் கதை கட்டி, தான் காதலித்த பெண்களால் ஏற்பட்ட பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, தான் சம்பாதித்த பணத்தைத் தன் தந்தையிடம் தந்து, பணத்தின் அருமையை தான் உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறான். தன் உறவுக்கார நொண்டிப் பெண் ஒருத்தியை திருமணமும் செய்து கொள்கிறான் அந்த நல்மனம் படைத்த வாலிபன்.


    நாயகனாக ஜெய். அவர் தந்தையாக அசோகன். (நன்றாக நடித்திருப்பார்)

    ஜெய்யைக் காதலித்து ஏமாறும் நாயகிகளாக ஜெயசித்ரா, சுபா, பாரதி, உஷா நந்தினி என்று நாயகியர் கூட்டம் ஏராளம். இதில் வயதான தயாரிப்பாளர் நாயகி மனோரமாவும் அடக்கம்.

    (மனோரமாவிற்கு ஜெய்யைக் காதலித்து தோவியடைந்த நிலையில் 'வசந்தமாளிகை' டைப்பில் 'யாருக்காக' என்ற முழுநீளக் காமெடி பாடல் அவருடைய வசந்த மாளிகையில் சோகமாக உண்டு)

    இறுதில் நொண்டிப் பெண் நாயகிதான் கதையின் உண்மையான நாயகி. பி.ஆர்.வரலஷ்மி.

    இதுவல்லாமல் தேங்காய், சோ, சுருளி, ஐ.எஸ்.ஆர் என்று காமெடிப் பட்டாளம்.

    இதில் தன்னைக் காதலிக்கும் ஜெயசித்ரா, சுபா, உஷாநந்தினி, பாரதி ஆகியோருடன் தனித்தனியாக பிளேபாய் கணக்கில் ஜெய் பாடும் செம அமர்க்களமான, ஜனரஞ்சகமான பாடல்தான் இன்றைய ஸ்பெஷலில் வரும் 'வாடியம்மா' பாடல்.


    டி.எம்.எஸ்.பிரித்து மேய்ந்து அதகளம் பண்ணியிருப்பார். ஜெய்யும் அமர்க்களம். ரெண்டு ரெண்டு வரிகளுக்கு வந்தாலும் நாயகிகளும் சூப்பர்.
    ஈகோ, இமேஜ் எல்லாம் பார்க்காமல் படு கேஷுவலாக வந்து பாடி ஆடிவிட்டுப் போவார்கள் அவரவர்களின் தனித்தன்மையான முத்திரை கொஞ்சமும் கெடாமல்.

    இந்த மாதிரிப் பாடல்கள் என்றாலே மியூசிக் டைரக்டர்களுக்கு உற்சாகம் பீறிடும் போல. குமார் பட்டை கிளப்பியிருப்பார். இனிமை. ஒவ்வொரு சரணமும் வித்தியாசமான டியூன்களைக் கொண்டவை.
    சுசீலா, ஈஸ்வரி என்று அதகளம் நடக்கும்.




    நடிகர் திலகம் 'உத்தம் புத்திரனி'ல் பல நாயகிகளுடன் வெளுத்து வாங்கும்,

    'யாரடி நீ மோகினி'


    'தாயம் ஒண்ணு' படத்தில் இளையராஜா தூள் கிளப்பும், அர்ஜுனன் பல நாயகிகளுடன் பாடும்

    'நானே உன் காதலி'

    'உழைப்பாளி' படத்தில் ரஜனி ஸ்டைலில் வித வித நாயகிகளுடன் கலக்கும்

    'ஒரு மைனா மைனாக் குருவி'

    பாடல்கள் வகையைச் சார்ந்ததுதான் இப்பாடல்.



    கோடி முறை கேட்கச் சொனாலும் நான் இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவ்வளவு மனத்துக்கு பிடித்த ஒரு பாடல். ஒவ்வொரு பூவாக கதாநாயகியரை வர்ணித்து இளமையோடு வளமை பொங்கும் பாடல்.
    இப்பாடலைக் கேட்டுதான் குமார் அவர்களின் தீவிர ரசிகனானேன். 'பனி மலரோ' என்ற பாடகர் திலகத்தின் அற்புத பாடலும் இப்படத்தில் இடம்பெற்று உள்ளது.


    இனி பாடலின் முழு வரிகள்



    ஹெஹேஹே
    பொன் வண்டு பொன்வண்டு பொன்வண்டு

    ஹொஹோஹோ
    பொன் வண்டு பொன்வண்டு பொன்வண்டு

    ஹஹாஹா
    பொன்வண்டு பொன்வண்டு

    வாடியம்மா...


    (ஜெயசித்ராவுடன்)

    வாடியம்மா மல்லிகைப் பூ
    நீ வாடி விழாத வாசனைப் பூ
    வாடிக்கைக்காரன் நான்தான்
    உன் வாடிக்கைக் காரன் நான்தான்
    வந்திடுக தந்திடுக இன்பம் பொங்கும் சேர்ந்தால்

    தேவை தேவை என்று பூவை எதிர்பார்த்து
    வண்டு பறந்தாடுமோ
    கோவை இதழ் மீது கொத்தும் கிளி போல
    கோலம் வரைந்தாடுமோ

    வான் தொடும் மேகத்தைப் போலே
    உன்னை நான் தொடும் மோகத்தினாலே
    பனி மலர் கொண்ட கனி இதழ்
    கொஞ்சம் சிவந்துதான் போகுமோ

    மணிவிழி மெல்ல மயங்கியே
    தன்னை மறந்துதான் போகுமோ

    ஹெஹேஹே
    பொன்வண்டு பொன்வண்டு பொன்வண்டு

    வாடியம்மா


    (உஷாநந்தினியுடன்)

    வாடியம்மா தாமரைப் பூ
    புது வசந்தம் அம்மா உன் புன்சிரிப்பு
    வாடிக்கைக்காரன் நான்தான்
    உன் வாடிக்கைக் காரன் நான்தான்
    வந்திடுக தந்திடுக இன்பம் பொங்கும் சேர்ந்தால்
    வாடியம்மா

    இலையுதிர்க் காலம் நேற்று
    தளிர் விடும் காலம் இன்று
    இலையுதிர்க் காலம் நேற்று
    தளிர் விடும் காலம் இன்று

    பூவிரித்தக் கொடி காய் சுமந்தபடி
    வா வா வா
    நான் நினைத்தபடி பூப்பறிக்க இடம்
    தா தா தா

    மலர்த் தோட்டம் எங்கெங்கே
    வரும் வண்டு அங்கங்கே
    மலர்த் தோட்டம் எங்கெங்கே
    வரும் வண்டு அங்கங்கே

    ஒன்றல்ல இன்பங்கள் நூறாயிரம்

    ஹெஹேஹே

    பொன் வண்டு பொன்வண்டு பொன்வண்டு


    (சுபாவுடன்)

    வாடியம்மா செண்பகப் பூ
    தினம் வளருமம்மா நம் சந்திப்பு
    வாடிக்கைக்காரன் நான்தான்
    உன் வாடிக்கைக்காரன் நான்தான்
    வந்திடுக தந்திடுக இன்பம் பொங்கும் சேர்ந்தால்
    வாடியம்மா

    சிட்டுக்கள் தொட்டுத்தான் ஒன்றையொன்று கொஞ்சுது
    சிட்டுக்கள் தொட்டுத்தான் ஒன்றையொன்று கொஞ்சுது
    தென்னையும் தென்றலும் ஒன்னுக்கொன்னு பின்னுது

    உன்னோடு என் உள்ளம் பின்னோடு வருது
    என்னென்ன உண்டோ நீ கண்ணோடு எழுது

    பூவாட்டம் என்னை எடுத்து
    ஒரு வெள்ளோட்டம் மெல்ல நடத்து
    பூவாட்டம் என்னை எடுத்து
    ஒரு வெள்ளோட்டம் மெல்ல நடத்து

    பொல்லாத நாணம் இல்லாத நேரம்
    பாராட்டு என்னை அணைத்து

    ஹெஹேஹே

    பொன் வண்டு பொன்வண்டு பொன்வண்டு


    (பாரதியுடன்)

    வாடியம்மா ரோஜாப் பூ
    என்னை வாட்டுதம்மா உன் நினைப்பு
    வாடிக்கைக்காரன் நான்தான்
    உன் வாடிக்கைக்காரன் நான்தான்
    வந்திடுக தந்திடுக இன்பம் பொங்கும் சேர்ந்தால்
    வாடியம்மா

    வயது பதினேழு வளர்ந்த இளமாது
    உள்ளம் உனதல்லவோ
    விழிகள் நான்கோடும்
    வழிந்து புரண்டோடும் வெள்ளம் நமதல்லவோ

    நூறுதரம் கேட்டுத் தருவது உண்டு
    கேட்காமல் எடுத்துக் கொள்வது இன்று

    இன்று தொட்டு நாளை தொட்டு
    அள்ளி அள்ளி அணைக்க

    மிச்சம் என்று மீதம் என்று
    சொல்லி சொல்லிக் கொடுத்து

    இன்னும் இன்னும் பக்கம் வந்து
    என்னென்னவோ சொல்லவா

    வாடியம்மா
    பொன் வண்டு பொன்வண்டு பொன்வண்டு

    வாடியம்மா
    பொன் வண்டு பொன்வண்டு பொன்வண்டு


    Last edited by vasudevan31355; 30th August 2014 at 01:50 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai, chinnakkannan liked this post
  15. #1550
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //அதான் மடிப்பாக்கம் மாதவன் நகைச்சுவை சீரியலில் இப்போது தினமும் நம்வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறாரே.// கார்த்திக் சார்.. நான் தமிழ் சீரியல்கள் பார்ப்பதில்லை..பார்த்தால் உடலில் பாய்ல்ஸ் கொப்புளங்கள் எனக்கு வந்து விடும் ( ஹிந்தி சீரியல்கள் (வீட்டில் பார்ப்பதால்) அவ்வப்போது காதில் விழும்..சிலசமயம் பார்த்தால் முதுகுகள் .தான் கண்ணில் படும்..அதுவும் அந்த ஒப்பனை முகங்க்ள்..ஓ.என்ன சொல்ல எப்படி எழுத......

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •