Page 159 of 401 FirstFirst ... 59109149157158159160161169209259 ... LastLast
Results 1,581 to 1,590 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1581
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    MELODY SONG


  2. Likes Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1582
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    ஜஸ்ட் ரிலாக்ஸ் வரிசையில் நவாப் நாற்காலி படத்தில் இடம்பெற்ற 'சப்பாத்தி சப்பாத்திதான்' பாடலை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஒரு சாதாரண பாடலுக்கு கூட ரொம்ப சிரத்தையெடுத்து பதித்துள்ளீர்கள். படம் வந்த காலத்திலேயே ரொம்ப கேலி செய்யப்பட பாடல் இது. பாடல்தான் என்றில்லை, படத்தின் வசனங்கள் கூட தத்துபித்து டைப்தான் (உதாரணத்துக்கு நாகேஷ் பேசும் "வெள்ளை சாக்பீசில் கோடுபோட்டால் வெள்ளிக்கோடுதான் வரும். மஞ்சள் சாக்பீசில் கோடுபோட்டால் மஞ்சள் கோடுதான் வரும்" என்பன போன்ற அறுவை தத்துவங்கள்). சப்பாத்தி பாடலின்போது குளோப் தியேட்டர் ஸ்டால்களில் நல்ல விற்பனை. முக்கால்வாசி கூட்டம் வெளியில்தானே.

    தரமான நகைச்சுவைப் படங்கள் வந்துகொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில் நவாப் நாற்காலி, ஹலோ பார்ட்னர் போன்ற படங்கள் நகைச்சுவைப் படங்களின் ஆர்வத்தைக் குறைத்தன. இந்தப்படம் ஜெய்சங்கருக்கோ, சி.வி.ஆருக்கோ, நாகேஷுக்கோ எந்த விதத்திலும் கிரெடிட் தரவில்லை. அதிலும் அப்போது சி.வி.ஆர். சிறந்த பொழுதுபோக்குப் பட இயக்குனராக கொடிகட்டிப் பறந்த நேரத்தில் இப்படம் அவருக்கு சற்று சறுக்கியது உண்மை.

    இப்படத்திலும் கூட ஒரு பாடலை எடுத்து அதையும் சுவைபட பதிப்பிக்க முடியும் என்று காட்டியுள்ளீர்கள்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்...

  5. #1583
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் சின்னக்கண்ணன் சார்,

    நறுமுகையே பாடல் உதித்நாராயணன் அல்ல, உன்னிகிருஷ்ணன் பாடியது. ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இப்பாடலின் ஒரு வார்த்தையை தவறாகப்பாடிய ஒருவரைப்பார்த்து உன்னிகிருஷ்ணன், தானும் ரிக்கர்டிங்கின்போது இதுபோல தவறாக உச்சரித்ததாகவும், அருகிலிருந்த (அந்தப்பாடலை எழுதிய) வைரமுத்து தவறைத் திருத்தியதாகவும் சொன்னார்...

  6. #1584
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கார்த்திக் சார், நன்றி.. தவறாக எழுதி விட்டேன். .மாற்றி விடுகிறேன்..பெண் குரல் யார்..

    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் சின்னக்கண்ணன் சார்,

    நறுமுகையே பாடல் உதித்நாராயணன் அல்ல, உன்னிகிருஷ்ணன் பாடியது. ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இப்பாடலின் ஒரு வார்த்தையை தவறாகப்பாடிய ஒருவரைப்பார்த்து உன்னிகிருஷ்ணன், தானும் ரிக்கர்டிங்கின்போது இதுபோல தவறாக உச்சரித்ததாகவும், அருகிலிருந்த (அந்தப்பாடலை எழுதிய) வைரமுத்து தவறைத் திருத்தியதாகவும் சொன்னார்...

  7. #1585
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்,

    நன்றி! தாங்கள் சொல்வது உண்மைதான். நாற்காலி ஓட்டை நாற்காலிதான். அதுவும் பணத்தாசை பிடித்த கேரக்டராக சகஸ்ரநாமத்தைக் கேவலப்படுத்தி இருப்பார்கள். அவரும் இப்படி நடித்திருக்க வேண்டாம். குழந்தைகள் கல்லால் அடிக்க, துணியெல்லாம் கிழிந்து அரை நிஜாருடன் வேறு ஓடி... கொடுமைடா சாமி.

    ஆனால் ஒரே ஒரு ஆறுதல். பாடல்கள்.

    அப்போது கேட்டபோது பிடிக்கவில்லை. ஆனால் இப்போது என்னவோ பிடித்திருக்கிறது.

    'செஞ்சிக் கோட்டையை ஆண்டு கொண்டிருந்தான் தேசிங்கு மகராஜா.
    ராஜா நவாபு மகராஜா'

    என்ற பாடல் நன்றாகவே இருக்கிறது.



    கண்ணாமூச்சி விளயாடும் பாடல் ஒன்று இருதரம் வரும். லஷ்மி குழந்தைகளுடன் இணைந்து பாடுவது போல் அதே சாக்கில் ஜெய்யிடம் காதலை உணர்த்துவது போலவும்.

    'ஏண்டி கண்ணா அதிசயமா
    எங்கே போறே ரகசியமா'

    என்றும்,

    ஜெய்யை கலாய்த்து

    'ஏம்மா கண்ணா அதிசயமா
    எங்கே போறே ரகசியமா'

    என்றும்

    இருமுறை ராட்சஸி கலக்கியிருப்பார்.

    'கள்ள நகை புரிவதென்ன
    கொள்ளையிட நினைத்ததென்ன'

    என்ற வரிகளை குறிப்பாக அருமையாக பாடியிருப்பார்.

    அவசியம் கேட்டுப் பாருங்கள்.

    அப்புறம் நாகேஷின் அறுவை பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த வகையில் இன்னொன்று.

    நாகேஷ்.: மோதிரத்தை ஏன் விரலிலே போடறாங்க தெரியுமா?

    ரமாபிரபா: ஏன்?

    நாகேஷ்: கழுத்துல போட்டா மூச்சு திணறி செத்துப் போயிடுவாங்க.
    அதனாலதான் விரலிலே போடறாங்க.

    அப்புறன் ஏன் தியேட்டர் கேண்டீன்ல வியாபாரம் மும்மரமா நடக்காது?

    ஆனா எனக்கு பிடிச்சிருந்துது. படம் இல்லே. நாகேஷ் அறுவை.

    http://www.inbaminge.com/t/n/Nawab%20Narkali/
    Last edited by vasudevan31355; 31st August 2014 at 01:12 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes Russellmai liked this post
  9. #1586
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வினோத் சார்,

    அந்த லதா கருப்பு வெள்ளை புகைப்படம் ஜோர். வேறு லதாவுடையது இன்னும்....
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1587
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    வினோத் சார்,

    அந்த லதா கருப்பு வெள்ளை புகைப்படம் ஜோர். வேறு லதாவுடையது இன்னும்....


  11. #1588
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    குமுதம் இதழின் நடிகர் திலகம் புகழ்பாடும் வைரமுத்துவின் கட்டுரையைப் பதிபித்ததற்கு நன்றி! என்ஜாய் பண்ணி படித்தேன். சிங்கம் பற்றிய கட்டுரையாயிற்றே.

    அதே போல சின்ன வயது நளினி போட்ட்வுக்கு மட்டும் நன்றி!

    வினோத் சார் போட்டிருந்த லதாவும், ஷீலாவும் இணைந்திருந்த புகைப்படம் சினிமாப் பட ஸ்டில் அல்ல என்று நினைக்கிறேன். ஷீலா நடித்த 'யக்ஷகானம்' படத்தில் ஷீலாவின் ரோலை லதா தமிழில் நடித்தார் அல்லவா 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தில்? அந்தப் படத்தின் துவக்க விழாவிலோ அல்லது ஷூட்டிங் சமயத்திலோ எடுத்த ஸ்டில்லாக இருக்கலாம் என்பது என் கணிப்பு.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #1589
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    யப்பா! ஜெட் வேகம் வினோத் சார் நீங்கள். அருமை. இன்னும் கருப்பு வெள்ளையில் ஏதாவது இருந்தால் தேவலை
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #1590
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    'நீயும் நானுமா' பாடலுக்கு நடிகர் திலகம் எடுத்துக் கொண்ட சிரத்தை பற்றிய கட்டுரை சுவை. நன்றி1

    'பிள்ளையோ பிள்ளை' படப் பாடல்கள் அலசலும் மிக நன்று. எனக்கும் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் பிடிக்கும்.

    'ஏழையின் சிரிப்பில் இறைவன்'

    பாடலில்

    ஹிப்பி இளைஞர்க்ளைப் பார்த்து முத்து

    'வாலிபர்கள் முடியை வளர்க்கப் பாடுபட்டார்
    முகத்தில் இரண்டு தூண்கள் வைத்தார் (கிருதாவிற்கு கிண்டல்)

    என்ற வரிகள் வரும் என்று நினைவு.

    அப்படியே முத்து எம்ஜியார் ஜெராக்ஸ் பாடலும் சரி, நடிப்பும் சரி, படமும் சரி. ஏதோ ஓடித் தொலைத்தது. பாடல்கள் மட்டுமே அருமை.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •