-
31st August 2014, 10:46 AM
#2841
Junior Member
Regular Hubber
-
31st August 2014 10:46 AM
# ADS
Circuit advertisement
-
31st August 2014, 10:47 AM
#2842
Junior Member
Regular Hubber
-
31st August 2014, 11:10 AM
#2843
Junior Member
Regular Hubber
-
31st August 2014, 11:48 AM
#2844
Junior Member
Diamond Hubber
சென்னை - 31-Aug-2014
திரைப்படங்களில் நகைச்சுவை என்பது கடந்த 30 ஆண்டு காலமாக அநாகரீகமாக, அர்த்தமற்றதாக, கதாபாத்திரங்களை இழிவு செய்வதாக அமைந்து விட்டது. கலைவாணர், அவருக்குப்பின் கே. ஏ. தங்கவேலு, அடுத்து நாகேஷ், சோ என்று வரிசையில் நகைச்சுவை நடிப்பு முகம் சுளிக்காத வகையில் இருந்தது. இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய கலைவாணரின் நகைச்சுவை நாகரீகமுடன், அர்த்தமுடன், பகுத்தறிவுடன் விளங்கியது. பாடல் காட்சிகளும் அப்படியே. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா வரலாறு ஒரு வரலாறு என்றால் அதற்கு அடித்தலமிட்டத்தில் முக்கியமானவர் கலைவாணர். அதனால் அவரது புகழ், நினைவுகள் இன்றும் போற்றப்படுகிறது.
கலைவாணரது வள்ளல் தன்மை அளப்பரியது. அந்த வழியில் வந்தவர் தான் கொடை வள்ளல் என்று பெயர் விளங்கிய எம்.ஜி.ஆர். காலம் இவர்களை என்றும் மறக்காது.
-
31st August 2014, 01:01 PM
#2845
Junior Member
Diamond Hubber
ஆண்அழகன் திரைபடத்தில் நடிகர் பிரசாந்த் பெண் வேடம் போட்டு வரும் காட்சியில் பிரஷாந்த் தலைவரின் காதல் வாகனம் திரைபடத்தில் போடும் பெண்வேஷம் பார்த்து தானும் பெண் வேஷம் போட்டு கொள்ளுவார் . அப்பொழுது காதல் திரைபடத்தின் banner தலைவர் பெண் வேடம் போட்டு கொண்ட கட் அவுட் உள்ள தலைவரின் பாதத்தை தொட்டு கும்பிட்டுவிட்டு பெண் வேடம் போடுவார் .
கிளிப் 1.22 டு 1.50 வரை பார்க்கவும்
-
31st August 2014, 01:06 PM
#2846
Junior Member
Diamond Hubber
அதே போல் பிரசாந்த் அவர்களின் அறிமுக படத்தில் வரும் முதல் சண்டை காட்சியில் தலைவரின் போஸ்டர்ஸ் பார்த்து வீரம் கொண்டு சடை போடும் காட்சி சுவாரசியம் . ( பெரிய இடத்து பெண் , முகராசி கம்பு சண்டை காட்சிகள் காட்டுவார்கள் .
கிளிப் 6.16 முதல் 7.30 வரை
-
31st August 2014, 01:45 PM
#2847
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
Courtesy -old is gold
962_ல் "ராணி சம்யுக்தா", "மாடப்புறா", "தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்", "பாசம்", "விக்ரமாதித்தன்" ஆகிய 6 படங்களில் நடித்தார். அதாவது 2 மாதங்களுக்கு ஒரு படம்! மேற்கண்ட 6 படங்களில் "மாடப்புறா", "பாசம்" தவிர மற்ற படங்கள் வெற்றிப்படங்கள். பி.வள்ளிநாயகம் என்பவர் "பி.வி.என்" புரொடக்ஷன்ஸ் என்ற படக்கம்பெனியைத் தொடங்கித் தயாரித்த படம் "மாடப்புறா". நாராயணசாமி என்பவர் வசனம் எழுத, எஸ்.ஏ.சுப்பு ராமன் டைரக்ட் செய்தார். எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த இந்தப்படம் ஓடாததற்குக் காரணம், கதை அம்சம் சரி இல்லாததுதான். "பாசம்" படத்தை தயாரித்து இயக்கியவர் டி.ஆர். ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, ஷீலா நடித்த இந்தப்படம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். இறந்து விடுவது போல படத்தை முடித்திருந்தார்கள். எம்.ஜி. ஆர். ரசிகர்கள் இதை ஏற்பார்களா? எம்.ஜி.ஆர். படத்தை பத்துப் பதினைந்து முறை பார்க்கும் அவரது ரசிகர்கள், ஒரே தடவையுடன் நிறுத்திக் கொண்டார்கள்! படம் சரியாக ஓடவில்லை. இன்னொன்றை கவனிக்க வேண்டும். எம்.ஜி. ஆர். படங்களில் சில படங்கள் 100 நாள் வரை ஓடாவிட்டாலும், அது தோல்விப்படம் என்று அர்த்தமல்ல. மற்ற எம். ஜி.ஆர். படங்களைவிட வசூலில் குறைவாக இருக்கலாமே தவிர, பட அதிபர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ நஷ்டத்தை ஏற்படுத்தி விடாது. "யானை படுத்தால் குதிரை மட்டம்" என்று கூறுவதுபோல், நஷ்டம் ஏற்படாத அளவுக்கு வசூலித்துக் கொடுத்துவிடும். "தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்" இரண்டும் தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்கள். எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரு படங்களைத் தயாரித்தவர் தேவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். இரண்டு படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. இரண்டு படங்களுக்கும் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்; இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தவர் தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம். இரு படங்களுமே வெற்றிப் படங்கள். "ராணி சம்யுக்தா", ஏ.சி.பிள்ளையின் "சரஸ்வதி பிக்சர்ஸ்" தயாரிப்பு. எம்.ஜி.ஆரும், பத்மினியும் இணைந்து நடித்தனர். யோகானந்த் டைரக்ட் செய்தார். வசனங்களை கண்ணதாசன் எழுதினார். இசை: கே.வி.மகாதேவன். ஏற்கனவே பி.யு.சின்னப்பா _ஏ.சகுந்தலா நடித்த "பிருதிவிராஜன்" படத்தின் கதைதான் "ராணி சம்யுக்தா." சின்னப்பா வின் படம் கூட, சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. எம்.ஜி. ஆரின் "ராணி சம்யுக்தா" வெற்றிப்படமாக அமைந்தாலும் "சூப்பர் ஹிட்" படம் அல்ல.ஜெயபாரத் புரொடக்ஷன்ஸ் அதிகப்பொருட்செலவில் தயாரித்த படம் "விக்ரமாதித்தன்". டி.ஆர்.ரகுநாத்தும், என்.எஸ்.ராமதாசும் இணைந்து டைரக்ட் செய்த படம். இசை: ராஜேஸ்வராவ். இதில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக பத்மினி நடித்தார். இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியும், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக பத்மினியும், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக சாவித்திரியும் நடித்து வந்தனர். இந்த ஜோடிப் பொருத்தத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். படங்கள் மிக நன்றாக ஓடின. ஆனால், ஜோடி மாற்றத்தை ஏனோ ரசிகர்கள் விரும்பவில்லை. ஜோடி மாற்றப்பட்ட படங்கள், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எதிர்பார்த்ததற்கு சற்று குறைவாகவே ஓடின! அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம் "விக்ரமாதித்தன்"!
எம்ஜியாரின் திரைப்படங்கள் எல்லாமே பொக்கிஷம்/பெட்டகம். அது வெற்றி படங்கள் ஆகட்டும், இல்லை சில தோல்வி படங்கள் ஆகட்டும், அவை எல்லாமே நல்வழி பாடங்கள் இவ்வுலகதினருக்கு. அவரின் வாழ்க்கையும் காலத்தால் அழியாத ஒரு சரித்திரம். வெற்றியின் இலக்கணம் எம்.ஜி.ஆர். திருப்புகழ் இலக்கியம்-திருமயம் கொண்டவனாம் எம்.ஜி.ஆர்., பாட்டுடைதலைவன் வழி வந்தவன் எம்.ஜி.ஆர்., வேந்தன் என்னும் வீரம் எம்.ஜி.ஆர்., அற்புதம் என்னும் அதிசயம் எம்.ஜி.ஆர்., நாயகன் என்னும் நல்லவன் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர் ஒரு வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்.
Last edited by Tenali Rajan; 31st August 2014 at 02:21 PM.
-
31st August 2014, 02:00 PM
#2848
Junior Member
Regular Hubber
நீதிபதி பி.சதாசிவம் கவர்னராக நியமனம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
----------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவருடன் நீதிபதி பி.சதாசிவம்
( புரட்சிதலைவர் அப்போதே வாழ்த்து.தெரிவித்து விட்டார்போலும்)
-
31st August 2014, 02:02 PM
#2849
Junior Member
Devoted Hubber
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st August 2014, 02:47 PM
#2850
Junior Member
Diamond Hubber
Bookmarks