Page 164 of 401 FirstFirst ... 64114154162163164165166174214264 ... LastLast
Results 1,631 to 1,640 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1631
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்
    47 நாட்கள் மனதை பிழிந்த படம் மற்றும் பாடல்
    படத்தில் பிட் பிட் ஆக வரும் (பிட் என்று தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை ) . காட்சிகளுக்கு நடு நடு வே வரும்

    வைஷாலி ஒரு முறை தப்பி செல்லும் போது வழிகாட்டி போர்டு அருகில் நின்று கொண்டு இருக்கும் போது கவிஞர் ஒரு வரி எழுதி இருப்பார் .பிறகு சிங்கப்பூரில் உள்ள அம்மன் கோயில் ஒன்றை காட்டுவார் இயக்கனர் பாலச்சந்தர் . பாடலின் ஊடே கதை சொல்லும் பாங்கு

    தன் வழி செல்கின்றாள்
    சஞ்சலம் கொள்கின்றாள்
    எவ்விடம் செல்வாளோ
    எவ்விதம் செல்வாளோ
    சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
    தாய் வீட்டுத் தெய்வங்கள்
    துணையாக வாராதோ இப்போது
    gkrishna

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1632
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கிருஷ்ணாஜி,

    தோட்டா தரணி மற்றும் சகஸ்ரநாமம் பற்றிய பதிவுகள் மிகவும் அருமை. எனக்கு போலீஸ்காரன் மகள், பேசும் தெய்வம், படித்தால் மட்டும் போதுமா என பல படங்களில் அவர் நடிப்பு பிடிக்கும்.

    'நான் படைத்த செட்கள் அழிக்கப்படும்போது நான் அங்கு இருக்க மாட்டேன்' என்று தோட்டா தரணி சொல்லியிருப்பது தொழிலில் அவருள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. பார்த்துப்பார்த்து படைத்தவை அல்லவா?. மனது வலிக்கத்தானே செய்யும். ஒருமுறை ஒரு இயக்குனர் சொன்ன தகவல். பானை செய்பவர் ஒருவரிடம் ஒரு சண்டைக்காட்சிக்காக பானைகள் விலைக்குக் கேட்டபோது மறுத்துவிட்டாராம். எவ்வளவு கஷ்டப்பட்டு நான் பார்த்து பார்த்து உருவாக்கியவை அநியாயமாக உடைந்து சிதறுவதை என்னால் பார்க்க முடியாது என்று அவர் மறுத்ததில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட இயக்குனர், பானைகள் இல்லாமலே சண்டைக்காட்சியை படமாக்கினாராம்....

  5. Thanks gkrishna thanked for this post
    Likes gkrishna liked this post
  6. #1633
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மணியனின் இதயம் பத்திரிகையில் வெளி வந்த சிவசங்கரி யின் 47 நாட்கள் தொடர் கதை பாலச்சந்தர் இன் கை வண்ணத்தில் திரை கதை ஆயிற்று . திருமணம் முடிந்து சிரஞ்சீவி உடன் வைஷாலி (ஜெயப்ரதா இவருக்கு கால் பாதத்திற்கு (மன்னிக்கவும் பரதத்திற்கு) முலாயம் சிங்க் மச்சான் அமர்சிங் அடிமை ) பாரிஸ் சென்று இறங்கும் போது அந்த விமான நிலையத்தில் ஒரு குழந்தை கொடி காட்டி கொண்டு இருக்கும் காட்சி அமைத்து இருப்பார் .அதற்கு ஒரு விளக்கம் படித்த நினைவு
    ராமாயணத்தில் சீதா ராமரை மணந்து கொண்டு அயோத்திக்கு முதன் முதலில் செல்லும் போது அங்குள்ள மக்கள் கொடி அசைத்து வரவேற்பார் . ஆனால் கம்பன் கற்பனை மட்டும் மாற்றி இருந்தது. இநத நகருக்கு வராதே நிறைய கஷ்ட பட போகிறாய் என்பது போல் இருந்ததாம் .அது போல் வைஷாலி கஷ்ட பட போகிறாள் என்பதை சொல்லாமல் சொல்லுவார் இயக்குனர்
    gkrishna

  7. #1634
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    47 நாட்கள் என்ற படத்தில் வரும் மிக நீண்ட பாடலான "மான் கண்ட சொர்கங்கள்" மிகவும் அருமையானது. இதன் இசை அப்போதைய கலப்பிசைக்கு சவாலாக அமைந்திருக்கும். ஆனால் இந்தப் பாடல் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பது ஒரு வருத்தமான நிகழ்வு.
    gkrishna

  8. #1635
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    47 நாட்கள் என்ற படத்தில் வரும் மிக நீண்ட பாடலான "மான் கண்ட சொர்கங்கள்" மிகவும் அருமையானது. இதன் இசை அப்போதைய கலப்பிசைக்கு சவாலாக அமைந்திருக்கும். ஆனால் இந்தப் பாடல் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பது ஒரு வருத்தமான நிகழ்வு.
    இனி மேலாவது பேசப்பட வேண்டும் என்றுதான் இவ்வளவு மெனக்கெடல். சரியாக 4 மணி நேரப் பதிவு இது. ஒவ்வொன்றையும் கவனித்து பார்த்து பார்த்து செதுக்கிய பதிவும் கூட.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks chinnakkannan thanked for this post
  10. #1636
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    47 நாட்கள் - ஜெயப்பிரதாவின் அழகும் திறமையும் சேர்ந்து வெளிப்பட்டது -
    மான் கண்ட சொர்கங்கள் பாலுவின் குரலில் ரீங்காரமிடும் பாடல்

    by our beloved rajesh krv sir in another site
    gkrishna

  11. #1637
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    இனி மேலாவது பேசப்பட வேண்டும் என்றுதான் இவ்வளவு மெனக்கெடல். சரியாக 4 மணி நேரப் பதிவு இது. ஒவ்வொன்றையும் கவனித்து பார்த்து பார்த்து செதுக்கிய பதிவும் கூட.
    உண்மை வாசு சார்
    1977 அவர்கள்,
    1978 நிழல் நிஜமாகிறது
    1979 நினைத்தாலே இனிக்கும்
    1980 வறுமையின் நிறம் சிகப்பு ,தண்ணீர் தண்ணீர்
    1981 கால கட்டத்தில் 47 நாட்கள்

    பாலாவின் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டு உடன் மெல்லிசை மன்னர் கவி அரசர் இவர்கள் எல்லோரும் சேர்ந்து கொடுத்த முத்து சரங்கள் எத்துனை எத்துனை
    gkrishna

  12. #1638
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    From maalaimalar

    பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

    வெளிநாட்டில் வசிப்பவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து நல்லவர்கள் போல் நடித்து அழகிய பெண்களை திருமணம் செய்து அழைத்து செல்வது, பிறகு சித்ரவதை செய்து விரட்டி விடுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாகின்றன அல்லவா?

    இதை மையமாக வைத்து, ஏற்கனவே எழுத்தாளர் சிவசங்கரி "47 நாட்கள்'' என்ற நாவலை எழுதினார். இது, பாலசந்தர் டைரக்ஷனில் 1981-ல் படமாக வெளிவந்தது.

    இதுபற்றி சிவசங்கரி எழுதியிருப்பதாவது:-

    "முதன் முதலாக பாலசந்தரை சந்தித்த நிமிஷத்தில் கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் பயம், கொஞ்சம் படபடப்பு என்று நான் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தது நிஜம்.

    நான் எழுதிய "47 நாட்கள்'' கதையை பாலசந்தர் திரைப்படமாக்கப்போகிறார் என்ற சந்தோஷம், இத்தனை பெரிய டைரக்டருக்கு சமமாய் உட்கார்ந்து விவாதிக்கப் போகிற அளவிற்கு சினிமாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்ற பயம், படபடப்பு. ஆனால் அந்த பயமும், படபடப்பும் சரியாய் இரண்டு நிமிடங்களில் மாயமாய் மறைந்து போனதுதான் ஆச்சரியம்.

    தன்னோடு பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமான காரியம். என்னைப் பொறுத்தவரையில், அந்த சிலரில் பாலசந்தரையும் நான் சேர்க்க விரும்புகிறேன்.

    பாலசந்தர் என்னிடம், "47 நாட்கள் ரொம்பவும் பிரபலமான கதை. நான் அதைப்படம் எடுக்கும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். படம் நன்றாக அமையாவிட்டால், சிவசங்கரியின் கதையை பாலசந்தர் கெடுத்துவிட்டார் என்றுதான் சொல்வார்கள். அதனாலே, அந்த பயம் எனக்கு இருக்கிறது'' என்றார்.

    திரைப்பட உலகிற்கு முன்னோடியாக, ஒரு வழிகாட்டியாக திகழ்பவருக்கு பயமா!

    என் வியப்பை நான் வெளியிட்டதும், பாலசந்தர் "ஆமாம்'' என்று தலையசைத்தார்.

    "ஆம். அந்த பயம் அடிமனதில் உறுத்திக்கொண்டே இருந்தால்தான் கவனத்துடனும், சிரத்தையுடனும் என்னால் வேலை பார்க்க முடியும். படம் சிறப்பாக அமைய இந்த பயமும், தவிப்பும் முக்கியம்'' என்றார், பாலசந்தர்.

    "47 நாட்கள்'' படத்தில் கதாநாயகனாக நடித்தவர், சிரஞ்சீவி. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இதுதான். அவர் இப்போது ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார்.

    கதாநாயகியாக நடித்தவர் ஜெயப்பிரதா.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் எல்லாம் நடந்தது. படம் நன்றாக அமைந்தும், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

    gkrishna

  13. Likes Russellmai liked this post
  14. #1639
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஒவ்வொரு காட்சியிலும் செயபிரதாவும் சரி சிரஞ்சீவியும் சரி அப்படி ஒரு போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கும் படம் இது.

    நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது சிரஞ்சீவி மேல் அனைவருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வரும். அந்த அளவிற்கு அந்த பாத்திரபடைப்பு.

    அனந்துவின் கதையாக இருந்து இருந்தால், செயபிரதா பேசி இருக்கும் வசனங்களில் சீற்றம் இருந்திருக்கும். ஆனால் சிவசங்கரியின் வசனமானதால், அந்த வசங்கள் எல்லாம் மகேந்திரனின் வசனங்களில் வருவது போல் இயல்பாகவும், உண்மையில் பேசினால் எப்படி பேசுவார்களோ அப்படி இருந்தது.

    அதிகபடியாக அந்த செயபிரதா பேசும் வசனம் இது ஒன்று தான் 'போடா, பாரீசு தான பரவாயில்லை' அவ்வளவு தான். இதுவே அனந்துவாக இருந்திருந்தால், சுகாசனி அதிக படங்களில் பேசி நடித்த அத்தணை வசனங்களும் இந்த ஒரு படத்திற்கு மட்டுமே வந்திருக்கும்.

    தப்பிக்க நினைக்கும் அத்தனை சந்தர்பங்களும் அடிபட்டு போகும் போது, ஆதிச்ச நல்லூருக்கு நாமளே ஒரு எட்டு போய் சொல்லிட்டு வந்தால் என்ன என்று தோன்றும் அளவிற்கு கதையும் சம்பவங்களும் அருமையாக இருக்கும்.

    எல்லா பாலசந்தரின் படங்களிலும் வருவது போல் ஒரு வல்லுரவு காட்சியை அதுவும் ஒரு கடிதத்தை படிப்பதற்காக என்ற நச்சு விதையை மெல்ல தூவி இருப்பார் இந்த படத்திலும். அதாவது அந்த வல்லுரவு காட்சியில் அவர் சொல்ல நினைப்பது இது தான். பெண்களுக்கு கரியம் என்று வந்துவிட்டால், மற்றது எல்லாம் ஒரு கணக்கும் இல்லை வழக்கும் இல்லை என்று சொல்வது.

    From panimalar website
    gkrishna

  15. #1640
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //மூக்குத்தி பற்றிய ஆராய்ச்சிப்பதிவு உண்மையிலேயே அசர வைத்தது// நன்றி கார்த்திக் சார்..அடுத்தது தண்டை (இதைப் பற்றி எழுதும் போது கார்த்திக் சார் ஓடி வந்து விடுவார் என எழுதலாம் என நினைத்திருந்தேன்!

    கிருஷ்ணா ஜி..எஸ்வி சகஸ்ர நாமம் தோட்டா தரணி பற்றிய பதிவுகளுக்கு நன்றி..

    எஸ்.வி.எஸ்.ன் நாடக அனுபவங்கள் என என்னவோ தலைப்பு அவரது சுயசரிதை படித்திருக்கிறேன்..எங்கேயோ காணாமற் போய்விட்டது.. நன்றாக இருக்கும்..அவரது ட்ரூப்பில் தான் ப்ரிமளா என்ற ஒரு நடிகை நடித்திருந்தார்..முன்பே எழுதியிருக்கிறேன் என நினைவு..அவர் தான் பிற்காலத்தில் தேவிகா என அழைக்கப் பட்டார்..

    தோட்டா தரணியின் கலையை நேரில் காணும் அனுபவம் இங்கு -மஸ்கட்டில்- எனக்கு ஏற்பட்டது..அவரும் வந்திருந்தார் ..எதற்கு..கல்கியின் சிவகாமியின் சபதம் நாடக்த்திற்கு..இங்கு இரண்டு நாட்களில் நான்கு காட்சிகள் போட்டிருந்தார்கள்.. நான்காவது காட்சிக்குத் தான் நான் சென்றிருந்தேன்..அவர் செய்த ப்ராஜக்ட்ஸ் எல்லாம் ஒரு குறும்படமாய்ப் போட்டுக் காட்டி விட்டே தான் நாடகமே ஆரம்பித்தார்கள்.. செட்டிங்க்ஸ் அவர் தான்..வாவ். கோட்டை கொத்தளங்கள்.. கோட்டைகள் பூஞ்சோலைகள் மதில் சுவர் என வெகு அழகு..ஆறோ ஏழோ தான்..ஆனால் இறுதிக்காட்சி என்பதால் சீன்களைக் குறைத்து விட்டார்கள் எனக் கேள்விப் பட்டேன்.. தோ.த. நினைவூட்டலுக்கு அகெய்ன் நன்றி க்ருஷ்ணா சார்..

    மான் கண்ட சொர்க்கங்கள் நல்ல பாட்டு தான்..ஆனால் படம் பார்த்ததில்லை..47 நாட்கள் தொடர் படித்திருக்கிறேன்..அந்தக் காலத்தில் மினிப்ரியாவில் வந்த படம்.. அப்புறம் டவுனுக்கெல்லாம் வரவில்லை எனில் பார்க்கவில்லை! அழகிய பதிவுக்கு மிக்க்க்க நன்றி வாசு சார்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •