Page 309 of 401 FirstFirst ... 209259299307308309310311319359 ... LastLast
Results 3,081 to 3,090 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #3081
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். நடித்த ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் 49 ஆண்டுகளுக்குப் பின் மறு வெளியீடு செய்யப்பட்டது. இதன் வெள்ளி விழா கொண்டாட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடந்தது.

    ‘‘தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழக்கப்பட்டவன் நான்’ ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வில்லன் நம்பியாரைப் பார்த்து எம்.ஜி.ஆர். கூறும் வசனம்தான் இது. 49 ஆண்டுகளுக்கு பிறகு மறு வெளியீட்டில் வெள்ளி விழா கொண்டாடி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் ‘ஆயிரத்தில் ஒருவன்’. 1965-ம் ஆண்டில் பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் அப்போது பெரும் வெற்றி பெற்றது. ஆனால், அப்போது தமிழகத்தில் நிலவி வந்த இந்தி எதிர்ப்பு போராட்ட பதற்றத்தால் வெற்றிவிழா கொண்டாட முடியாமல் போனது.

    இப்போது, டிஜிட்டல் வடிவில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ‘அதோ அந்த பறவை போல…’, ‘ஏன் என்ற கேள்வி…’ போன்ற இன்றைய தலைமுறையையும் ஈர்க்கும் பாடல்களை கொண்ட இத்திரைப்படம் 49 ஆண்டுகள் கழித்தும் பெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கண்டுள்ளது. இதை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களுடன் சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.

    அதன் பின்னணியை விவரிக்கிறார் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட திரைப்பட விநியோகஸ்தர் ஜி.சொக்கலிங்கம். அவர், தி இந்து-விடம் கூறியதாவது:

    பொக்கிஷம்

    1965-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான ஆயிரத்தில் ஒருவன், 35எம்எம், மோனோ சவுன்ட் தொழில்நுட்பத்தில் வெளியான செல்லுலாய்ட் படைப்பாகும்.

    அதனை இக்காலத் தொழில்நுட்பத்துக்கேற்ப மாற்றி வெளியிட முடிவு செய்தோம். திரையரங்குகள் தற்போது “கியூப் பார்மட்” என்னும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், பழுதடைந்திருந்த அப்படத்தின் நெகடிவ் சுருள்களை அதற்கேற்ப சுத்தம் செய்து டிடிஎஸ், 5.1 சரவுண்ட், சினிமாஸ்கோப் உள்ளிட்ட பல நவீன மாற்றங்களுடன் வடிவமைத்தோம். இதற்கு 2 ஆண்டுகள் பிடித்தது. இது பொக்கிஷத்தை பாதுகாக்கும் முயற்சியாகும்.

    கடந்த மார்ச் 14-ம் தேதியன்று தமிழத்தில் 122 திரையரங்குகளில் முதல்வரின் வாழ்த்துக்களுடன் வெளியிடப்பட்ட அந்த வெற்றிச்சித்திரம், சென்னை ஆல்பட் திரையரங்கில் 175-வது நாளை கொண்டாடுகிறது. சத்யம் திரையரங்குகளில் 175-வது நாளை நெருங்கிவிட்டது.

    1965-ல் வெளிவந்தபோது சென்னை மிட்லண்ட், ஸ்ரீகிருஷ்ணா, மேகலா ஆகிய திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியது இப்படம். ஆனால், அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாக வெற்றிவிழா கொண்டாடப்படவில்லை. அப்படத்தின் 100-வது நாள் நாளிதழ் விளம்பரத்தில் அது பற்றிய அறிவிப்பினையும் வெளியிட்டார் பந்துலு. சுமார் 50 ஆண்டுகள் கழித்து அது மீண்டும் மறுவெளியீடு செய்யப்பட்டு, தற்போது வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.

    இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது அவர் பாராட்டியது மட்டுமின்றி, வாழ்த்து மடலை அளிப்பதாகவும் கூறியது எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியம்.

    இவ்வாறு சொக்கலிங்கம் கூறினார்.

    எம்.ஜி.ஆர் தீவிர ரசிகர்கள்

    திங்கள்கிழமை நடந்த இப்படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், அப்படத்தில் பணிபுரிந்த எம்.எஸ்.விஸ்வநாதன், பி.சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், இயக்குநர் பி.வாசு உள்ளிட்ட எம்.ஜி.ஆரின். ஏராளமான திரையுலக ரசிகர்கள் பங்கேற்று பேசினர். ஏராளமான ரசிகர்களும் பல்வேறு திரையரங்க உரிமையாளர்களும் வந்திருந்தனர்.

    முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    திரைவானிலும் அரசியல் வானிலும் எவராலும் வெல்லமுடியாத வரலாற்றுச் சாதனை படைத்த எம்.ஜி.ஆருடன் இணைந்து நான் நடித்த முதல் தமிழ் வெற்றித் திரைப்படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு மீண்டும் வெற்றிநடை போட்டு வெள்ளிவிழா கொண்டாட இருக்கிறது என்ற செய்தி பெருமகிழ்ச்சி அளிக்கிறது. 50 ஆண்டுக்கு பிறகும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல வாடாமல் இருக்கிற வாடா மலர் ‘ஆயிரத்தில் ஒருவன்’.


    the hindu tamil

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3082
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை, செப். 2 – ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை மறுவெளியீடு செய்த "திவ்யா பிலிம்ஸ்" ஜி.சொக்கலிங்கத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    முதல்வர் ஜெயலலிதா, திரையுலக வரலாற்றில் சாதனை படைத்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு, மறு வெளியீட்டில் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி கண்டு வெள்ளி விழா கொண்டாடப்படுவதையொட்டி "திவ்யா பிலிம்ஸ்" ஜி.சொக்கலிங்கத்திற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியின் விவரம் பின்வருமாறு:-

    "திரையுலக வரலாற்றில் முதன்முறையாக மறுவெளியீட்டில் மாபெரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும், காலத்தால் அழிக்க முடியாத காவியமான "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு என்னை நேரில் வந்து அழைத்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திரை வானிலும், அரசியல் வானிலும் எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு வரலாற்றுச் சாதனை படைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இணைந்து நான் நடித்த முதல் தமிழ் வெற்றித் திரைப்படமான "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு, மீண்டும் தமிழகத்தின் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு, வெள்ளி விழாவினை கொண்டாட இருக்கிறது என்ற செய்தி எனக்கு பெருமகிழ்ச்சியினை அளிக்கிறது.

    1965 ஆம் ஆண்டே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து இன்று வெள்ளிவிழா காணும் அளவுக்கு வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பது, காலத்தைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக விளங்குகிறது; லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் திரைப்படமாக திகழ்கிறது என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது. புதிய படங்கள் சாதிக்க முடியாததை "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் சாதித்துக் காட்டி இருக்கிறது. தற்போதைய தலைமுறையினரும்

    இந்தத் திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களிக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது என் மனம் பூரிப்பு அடைகிறது.

    ஒரு திரைப்படம், திரையரங்குகளில் ஒரு வாரம் ஓடினாலே அதனை வெற்றிப் படம் என்று சொல்கின்ற இந்தக் காலத்தில், "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் 100 நாட்களைக் கடந்து ஓடியதோடு, இன்றைக்கு மறுவெளியீட்டிலும் 175 நாட்கள் ஓடும் அளவுக்கு அதனை மக்கள் கண்டு களிக்கிறார்கள் என்றால், அந்தப் படத்தின் கதை, தரம், அந்தப் படத்தில் பங்கு பெற்றவர்களின் திறமை ஆகியவை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.

    கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகும் ‘சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை’ போல் வாடாமல் இருக்கின்ற வாடாமலர் """"ஆயிரத்தில் ஒருவன்"".

    இந்த விழாவில், """"ஆயிரத்தில் ஒருவன்"" திரைப்படத்திற்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், திரைப்பட பின்னணிப் பாடகி பி. சுசீலா, வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம், நடிகை எல். விஜயலட்சுமி, நடிகை மாதவி ஆகியோர் கௌரவிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்திற்கு அவர்கள் செய்த திருப்திகரமான பணியை, நிறைவை, நான் இந்தத் தருணத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து, இயக்கிய இயக்குநர், மறைந்த பி.ஆர். பந்தலு எனது தந்தையைப் போன்றவர். என் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் வைத்திருந்தார். தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் என்றென்றும் தங்கள் மனங்களில் நிலைத்து நிற்கக்கூடிய திரைக் காவியங்களை படைத்த ஒரு மிகச் சிறந்த படைப்பாளி தயாரிப்பாளரும், இயக்குநருமான பந்தலு.

    தயாரிப்பாளரும், இயக்குநருமான பந்தலுவின் படைப்பிற்கு இன்றளவும் உயிரோட்டம் கொடுக்கும் வகையில், "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தை எண்ணியியல் வடிவில் மறுவெளியீடு செய்து, அந்தத் திரைப்படம் மாபெரும் சாதனை படைக்க காரணமாக இருந்த பந்தலுவின் புதல்வி பி.ஆர். விஜயலட்சுமி மற்றும் புதல்வன் பி.ஆர். ரவிசங்கர் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். அவர்களது பணி தொடர எனது வாழ்த்துகள்.

    என்னைப் பொறுத்த வரையில், "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் எனக்கு ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவத்தை பெற்றுத் தந்தது. ஏனென்றால்,

    இந்தத் திரைப்படம் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நான் நடித்த முதல் தமிழ் திரைப்படம், வெற்றித் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் மூலம் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்கும் வாய்ப்பும், அவருடன் பேசுகின்ற வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. நான் அரசியலுக்கு வருவதற்கும் அடித்தளமாக அமைந்த படம் "ஆயிரத்தில் ஒருவன்" என்று சொன்னால் அது மிகையாகாது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் அதிகமான, அதாவது 28 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமையும் என்னையே சாரும்.

    மறுவெளியீட்டில் மாபெரும் சாதனை படைத்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தின் வெள்ளிவிழா குறித்து எனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தால், இந்த வெள்ளி விழா நிகழ்ச்சியில் நானே நேரில் வந்து பங்கேற்று இருப்பேன். முன்கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக என்னால் நேரில் வந்து கலந்து கொள்ள இயலவில்லை.

    திரையுலக வரலாற்றில் முதல்முறையாக மறுவெளியீட்டில் மகத்தான சாதனை புரிந்த "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தின் வெள்ளி விழா மிகச் சிறந்த முறையில் சீரோடும், சிறப்போடும் அமைய எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, தாங்கள் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் மனதார வாழ்த்துகிறேன்."

    இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது


    courtesy dina boomi

  4. #3083
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3084
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3085
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3086
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3087
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3088
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்,
    ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட வெற்றி விழாவின் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையில் நடந்த பிரம்மாண்ட வெள்ளி விழாவைத் தொடர்ந்து கோவையிலும் வெள்ளி விழா கொண்டாட்டம் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. விழாவை வெற்றிகரமாக்கிய புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். வெள்ளி விழா கொண்டாட்ட பணிகள் காரணமாக திரியில் பங்கேற்க முடியவில்லை.
    கொண்டாட்டம், விழா என்றால் திருஷ்டி பரிகாரம் வேண்டுமே? எதிர் முகாமில் புகைச்சலுக்கு பஞ்சமில்லை. ‘ஓட்டப்பட்ட படம்’ என்று தொடர்ந்து பொருமுகிறார்கள். ஒரு பெரியவர் சத்யம் தியேட்டரில் படம் எடுக்கப்பட்டு விட்டதாக நினைத்து தர்மத்தின் வெற்றி என்கிறார். ஆனால், காலை காட்சியாக படம் இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. கர்ணனை ஆயிரத்தில் ஒருவன் விஞ்சி விட்டது என்று நடுநிலையான இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டது. அந்த செய்தியை விழா நடந்த அரங்கில் பேனராக வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் சொல்லவில்லை. இந்து நாளேடு சொல்கிறது. அதை குறிப்பிட்ட அந்த வரியை எடுத்துப் போட்டு எந்த நூற்றாண்டில் நடந்தது? என்று கேள்வி எழுப்புகிறார் ஒருவர். கண்ணுக்கு எதிரிலேயே ஆயிரத்தில் ஒருவனின் வெள்ளி விழாவைப் பார்த்தும் இப்படி ஒரு கேள்வி.
    தடயங்களையும் ஆதாரங்களையும் உருவாக்கும் முயற்சி என்றும் அவர் கூறுகிறார். சாந்தி தியேட்டரில் அவர்களது அபிமான நடிகர் நடித்த படங்களை கல்வெட்டாக பொறித்து வைத்துள்ளனர். அதில் ஓடாத ராஜராஜசோழனுக்கு பக்கத்தில் 100 நாள் ஓடியது என்பதைக் குறிக்கும் வகையில் எச் என்று போட்டு வைத்துள்ளனர். எங்கே ஓடியது என்று கேட்டால் நைஜீரியாவில் என்று ஒரே போடாக போடுவார்கள். வெளிநாட்டில் இருந்து ஒருவர் (அந்த முகாமை சேர்ந்தவர்தான்)மனசாட்சியுடன் அப்படம் வெளியான மார்ச் 31ம் தேதி கருப்பு நாள் என்று அவர்கள் திரியில் பதிவிட்டால் அவரை மிரட்டி பதிவை நீக்கச் சொல்கிறார்கள். நமக்கு போலியான ஆதாரங்களை உருவாக்கி பழக்கம் இல்லை. தலைவரின் சாதனைகள் மக்கள் மனதில் பதிந்து விட்ட பிறகு கல்வெட்டுகள் எதற்கு?
    வெள்ளி விழாவில் தலைவரின் புகழை பாடிய நம் சத்யராஜ் அவர்களை 4 கால் பிராணியோடு ஒப்பிட்டு தடித்த வார்த்தைகளை அந்த ஒருவர் இன்று பயன்படுத்தியுள்ளார். இதற்காக, நாம் அவர்கள் மீது கோபம் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் வந்த வழி அப்படி. 1977 தேர்தலின்போது அவர்களது அபிமான நடிகர், தனது நண்பர் என்று கூறிக் கொள்ளும் திமுக தலைவரை 4 கால் பிராணியோடு ஒப்பிட்டு, பதிலுக்கு அவர் ‘நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்ததே நான்தான், எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று பதிலடி கொடுத்த கதை உலகத்துக்கே தெரியுமே.
    பேரறிஞர் அண்ணா அவர்கள் நாம் செல்லும் பாதை சரியா என்று பார்க்க ஒரு வழி காட்டியிருக்கிறார். ‘எதிரிகள் நம்மை திட்டுகிறார்கள் என்றால் நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று அர்த்தம்’ என கூறியுள்ளார். அதை உரைகல்லாக வைத்துப் பார்த்தால் எதிர் முகாமில் இருந்து வரும் தாக்குதல்கள் மூலம் (அவை முனை மழுங்கியவை என்பது வேறு கதை) நாம் சரியாகத்தான் செல்கிறோம் என்று தெரிகிறது. எனவே, பொறாமையால் பொருமும் அவர்களை புறந்தள்ளி விட்டு நமது பணி இன்று போல் என்றும் வாழ்க.
    ஆயிரத்தில் ஒருவனின் வார்த்தைகளிலேயே அவர்களுக்கு சொல்வதென்றால், ‘‘வீழ்ந்தது நீங்கள் அல்ல, உங்கள் ஆணவம், வென்றது நானல்ல, தர்மம்’.
    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

  10. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  11. #3089
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜராஜசோழன் பற்றி நாம் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்... ஒரு கேள்வி வேறு என்று அலுத்துக் கொள்கிறார் நண்பர். அவரது நிலைமை புரிகிறது..... போகட்டும்...

    கர்ணனை எந்த படமும் விஞ்சவில்லையாம்.. ஆயிரத்தில் ஒருவன் போன்ற பிரம்மாண்ட படம் கூட வேண்டாம். கர்ணனோடு வெளியான அதிக பொருட் செலவு இல்லாமல் எடுக்கப்பட்ட வேட்டைக்காரன் படமே கர்ணனை விட அதிக சென்டர்களில் அதிக ஊர்களில் ஓடி விஞ்சியதே... வடிவேலு பாணியில் ‘1000 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு இதெல்லாம் தெரியவா போகிறது’ என்ற நினைப்பு. ஆனால் நேரில் பார்த்த சாட்சிகளாக நாம் இருக்கிறோமே.

    திரைப்படங்களை அதிகம் பார்க்காத பெருந்தலைவர் காமராஜரையே, தேர்தல் பிரசாரத்தின்போது ‘வேட்டைக்காரன் வருவார், ஏமாந்துராதீங்க’ என்ற சொல்ல வைக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய படம் வேட்டைக்காரன்.

    இன்னொரு முக்கியமான விஷயம். ‘கர்ணன் வருவார் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்க’ என்று காமராஜரே கூட கேட்கவில்லை. ஏன்? காரணம் அவர்களுக்கும் தெரியும். சொல்ல வெட்கப்படுவார்கள். விட்டு விடுவோம் ..... பாவம்.

    அன்புடன் : கலைவேந்தன்

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  13. #3090
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Kalaiventhan,

    happy to see that you had fun time at AO function, but why are you dragging NT's name and his classic Karnan in this thread? this is totally absurd and avoidable.

    There are many reasons to prove AO was made to run:

    1) Times of India reported in last March that the rereleased AO was a flop and the movie was taken out in all theaters in TN within a week, except in these 2 theaters where it has been running for 1 show daily. For details: Jaya beats poll code, but 1965 film a superflop in 2014: http://timesofindia.indiatimes.com/n...w/32103777.cms
    2) The general public never had any interest in AO
    3) MGR's party AIADMK is now ruling the state and you can do any magic to run the movie

    Because you have dragged NT here, I want to give you a sample of Karnan re-release records: Ran 25 days in 27 theaters, 50 days in 14 theaters across the state, 100 / 150 days in 2 theaters in chennai. Details: http://www.maalaimalar.com/2012/08/0...rnan-film.html
    Plus, Karnan was top grosser for couple of weeks during rerelease. Unofficial Karnan collection was over 5 crores. Did AO achieve anything like these? if you show us, then the public could be convinced that AO did run, not made to run.

    Coming to Sathyaraj: What is the point of Sathyaraj saying about natural acting and emotionally challenging that nobody could act like this in AO function? Even a sensible MGR fan would be laughing out loud on listening this. Moreover, if an NT fan commented about Sathyaraj speech, it is the business of his fan to defend him in Sathyaraj thread, which doesn't exist here. So, don't act like a saint by defending Sathyaraj. Plus, since when Sarathkumar become MGR fan? Wasn't he a big family friend of Mu Ka before? Politics and chamchcha suddenly make Sarathkumar a big fan of MGR, sidelining others loyal fans.

    My sincere advice is not to drag NT here. Additionally, don't talk about Raja raja cholan - the whole world knows whose movie are made to run now. If you still insist comparison between Karnan and AO records, you may get bruised more, which is quite logical.

    Regards.


    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்,
    ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட வெற்றி விழாவின் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையில் நடந்த பிரம்மாண்ட வெள்ளி விழாவைத் தொடர்ந்து கோவையிலும் வெள்ளி விழா கொண்டாட்டம் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. விழாவை வெற்றிகரமாக்கிய புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். வெள்ளி விழா கொண்டாட்ட பணிகள் காரணமாக திரியில் பங்கேற்க முடியவில்லை.
    கொண்டாட்டம், விழா என்றால் திருஷ்டி பரிகாரம் வேண்டுமே? எதிர் முகாமில் புகைச்சலுக்கு பஞ்சமில்லை. ‘ஓட்டப்பட்ட படம்’ என்று தொடர்ந்து பொருமுகிறார்கள். ஒரு பெரியவர் சத்யம் தியேட்டரில் படம் எடுக்கப்பட்டு விட்டதாக நினைத்து தர்மத்தின் வெற்றி என்கிறார். ஆனால், காலை காட்சியாக படம் இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. கர்ணனை ஆயிரத்தில் ஒருவன் விஞ்சி விட்டது என்று நடுநிலையான இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டது. அந்த செய்தியை விழா நடந்த அரங்கில் பேனராக வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் சொல்லவில்லை. இந்து நாளேடு சொல்கிறது. அதை குறிப்பிட்ட அந்த வரியை எடுத்துப் போட்டு எந்த நூற்றாண்டில் நடந்தது? என்று கேள்வி எழுப்புகிறார் ஒருவர். கண்ணுக்கு எதிரிலேயே ஆயிரத்தில் ஒருவனின் வெள்ளி விழாவைப் பார்த்தும் இப்படி ஒரு கேள்வி.
    தடயங்களையும் ஆதாரங்களையும் உருவாக்கும் முயற்சி என்றும் அவர் கூறுகிறார். சாந்தி தியேட்டரில் அவர்களது அபிமான நடிகர் நடித்த படங்களை கல்வெட்டாக பொறித்து வைத்துள்ளனர். அதில் ஓடாத ராஜராஜசோழனுக்கு பக்கத்தில் 100 நாள் ஓடியது என்பதைக் குறிக்கும் வகையில் எச் என்று போட்டு வைத்துள்ளனர். எங்கே ஓடியது என்று கேட்டால் நைஜீரியாவில் என்று ஒரே போடாக போடுவார்கள். வெளிநாட்டில் இருந்து ஒருவர் (அந்த முகாமை சேர்ந்தவர்தான்)மனசாட்சியுடன் அப்படம் வெளியான மார்ச் 31ம் தேதி கருப்பு நாள் என்று அவர்கள் திரியில் பதிவிட்டால் அவரை மிரட்டி பதிவை நீக்கச் சொல்கிறார்கள். நமக்கு போலியான ஆதாரங்களை உருவாக்கி பழக்கம் இல்லை. தலைவரின் சாதனைகள் மக்கள் மனதில் பதிந்து விட்ட பிறகு கல்வெட்டுகள் எதற்கு?
    வெள்ளி விழாவில் தலைவரின் புகழை பாடிய நம் சத்யராஜ் அவர்களை 4 கால் பிராணியோடு ஒப்பிட்டு தடித்த வார்த்தைகளை அந்த ஒருவர் இன்று பயன்படுத்தியுள்ளார். இதற்காக, நாம் அவர்கள் மீது கோபம் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் வந்த வழி அப்படி. 1977 தேர்தலின்போது அவர்களது அபிமான நடிகர், தனது நண்பர் என்று கூறிக் கொள்ளும் திமுக தலைவரை 4 கால் பிராணியோடு ஒப்பிட்டு, பதிலுக்கு அவர் ‘நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்ததே நான்தான், எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று பதிலடி கொடுத்த கதை உலகத்துக்கே தெரியுமே.
    பேரறிஞர் அண்ணா அவர்கள் நாம் செல்லும் பாதை சரியா என்று பார்க்க ஒரு வழி காட்டியிருக்கிறார். ‘எதிரிகள் நம்மை திட்டுகிறார்கள் என்றால் நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று அர்த்தம்’ என கூறியுள்ளார். அதை உரைகல்லாக வைத்துப் பார்த்தால் எதிர் முகாமில் இருந்து வரும் தாக்குதல்கள் மூலம் (அவை முனை மழுங்கியவை என்பது வேறு கதை) நாம் சரியாகத்தான் செல்கிறோம் என்று தெரிகிறது. எனவே, பொறாமையால் பொருமும் அவர்களை புறந்தள்ளி விட்டு நமது பணி இன்று போல் என்றும் வாழ்க.
    ஆயிரத்தில் ஒருவனின் வார்த்தைகளிலேயே அவர்களுக்கு சொல்வதென்றால், ‘‘வீழ்ந்தது நீங்கள் அல்ல, உங்கள் ஆணவம், வென்றது நானல்ல, தர்மம்’.
    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

  14. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •