-
9th September 2014, 10:52 AM
#2071
எல்லோருக்கும் காலை இந்த காளையின் காளியின் காலியின் வணக்கம்
அடேங்கப்ப்பா திருவனந்தபுரம் சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகம் . ஓணம் பண்டிகை சிறப்பு கேரளா விஜயம் வாசு சார் தெரியபடுதியமைக்கு மிக்க நன்றி
மழை கொட்டோ கொட்டு கேரளாவில் . இங்கு நம் திரியில் பதிவுகள் கொட்டோ கொட்டு .
தேர் திரு விழா பாடல் நினைவில் பாடகர் திலகம் இசையரசி குரல்களில்
திரை இசை திலகம் மாமா இசை
மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது ஹோ..
நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது ஹோ..
என்னம்மா பண்ணுது உள்ளதைச் சொல்லு
என்னமோ பண்ணுது என்னத்தை சொல்ல ..
மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது
நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது
கட்டுக் குலையாத அரும்பைத் தொட்டு விளையாட
நெருங்கி ஒட்டி உறவாட வந்தது காத்து
மொட்டுச் சிரிப்பாட இடையில் பட்டு விரிப்பாட
அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து
கட்டுக் குலையாத அரும்பைத் தொட்டு விளையாட
நெருங்கி ஒட்டி உறவாட வந்தது காத்து
மொட்டுச் சிரிப்பாட இடையில் பட்டு விரிப்பாட
அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து
பூவாகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாச்சி
அந்தக் கனியும் இப்போ கைக்கு வந்தாச்சி
மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது
நெஞ்சைத் தொட்டு தொட்டு ஆசைகளைப்
புட்டு புட்டு சொல்லுது
வெத்திலை பாக்கு வச்சி
விருந்து வீட்டுலே கூட்டி வச்சி
தாலி கட்டியே கை புடிச்சி
கலந்திட வேண்டும்
குத்து விளக்கு வச்சி குலுங்கும் மெத்தையில்
பூ விரிச்சிஇனிக்கும் வித்தை எல்லாம்
படிச்சி சுகம் பெற வேண்டும்
வெத்திலை பாக்கு வச்சி
விருந்து வீட்டுலே கூட்டி வச்சி
தாலி கட்டியே கை புடிச்சி
கலந்திட வேண்டும்
குத்து விளக்கு வச்சி குலுங்கும் மெத்தையில்
பூ விரிச்சிஇனிக்கும் வித்தை எல்லாம்
படிச்சி சுகம் பெற வேண்டும்
காலாட மேலாட கையாட முகம் சிவக்கும்
என் கைகளில் உன் பூ உடல் மிதக்கும்
மழை முத்து முத்துப் பந்தலிட்டு
கிட்டக் கிட்டத் தள்ளுது
நெஞ்சைத் தொட்டு தொட்டு
ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது

-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
9th September 2014 10:52 AM
# ADS
Circuit advertisement
-
9th September 2014, 10:57 AM
#2072
Senior Member
Seasoned Hubber
நிலவு பாடல் என்றால் சிரிவெண்ணிலாவில் இசையரசி, பாலு, வசந்தாவின் குரலில் ஒலித்த
சந்தமாமா ராவே ஜாபில்லி ராவே பாடல் தான்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th September 2014, 11:15 AM
#2073
சி கே சார்,முரளி சார்,வாசு சார்,எஸ்வி சார் எல்லோரும் வாணியின் அழகை குறிப்பிட்டு வர்ணித்த பதிவு மற்றும் கண்ணன் என் காதலன் ,தலைவன் பதிவு மனதில் சில எண்ணங்கள்
ஊருக்கு உழைப்பவன் 1977
கவிஞர் முத்துலிங்கம் என்று எல்லோரும் சொல்வார்கள்
ஆனால் புலவர் புலமை பித்தன் என்று கவிஞர் முத்துலிங்கம் ஒரு பேட்டியில் கூறிய நினைவு
ஜேசுதாஸ் சுசீலா குரல்களில்
மக்கள் திலகம் வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களும் பாடுவார்கள் படத்தில் . மெல்லிசை மன்னரின் இசை தனி தவில் போல் தனி தபேல உருளும்
அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில் -
கவி கம்பன் எழுதாத பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில்
முத்து சரங்கள் சிந்தாமல் சிறு நகையில் -
நான் மூன்றாம் தமிழை பார்கிறேன் கண்ணே உந்தன் இடையசைவில்
(அழகெனும் ஓவியம் )
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை -
நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை
(இலக்கிய காவியம் )
ஆடை விலக்கும் பூங்காற்றை நீ ஏன் அழைத்து வந்தாய்
நான் ஆட துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய்
நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய்
நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய்
(அழகெனும் ஓவியம் )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th September 2014, 11:24 AM
#2074
கோபால் அவர்களின் msv ஒரு சகாப்தம் எழுப்பிய நினைவு
May 5, 2008
இசை இல்லை என்ற நாளில்லை
இந்த வருடம் மே மாதம் 2 ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை. திருவான்மியூர் வால்மீகி நகரில் ஸ்ரீமயம் குடியிருப்பின் மூன்றாவது தளத்தின் மொட்டை மாடி. கடற்கரை காற்றுக்கு தடை போட்டுக்கொண்டிருந்தது கோடையின் சூடு. ஆனாலும் சூடு தெரியவில்லை. காரணம் எங்களுக்கு முன்பு இருந்தது ஒரு மெல்லிசை தென்றல்.அந்த தென்றலின் நெற்றியில் திருநீறு,நடுவில் வட்டமான குங்குமப் பொட்டு.அந்த வெண்மையான சட்டையிலிருந்து மணக்கும் அயல்நாட்டு வாசனை. கழத்தில் ரூத்திராட்சம். இடது கையில் பளபளக்கும் தங்க நிற கைகடிகாரம். உடல் மட்டும்தான் மெலிந்திருந்தது. அவரது கண்கள் காற்றில் கூட கானத்தை தேடிக்கொண்டிருந்தது.
எழத்தாளர் வாமனன் பாணியில் சொல்ல வேண்டுமானால்,` இசை மூலம் அமரத்துவம் நாடத்துடிக்கும் வித்தை அவருடையது! அது கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் சங்கமித்த சங்கீத காவேரி,மெல்லிசை தாமிரவருணி, நல்ல தமிழக்கு ஸ்வரம் பிடித்த தென்மதுரை வைகை நதி!
மலர்ந்தும் மலராத பாதி மலர்களை மலரச்செய்த மணி இதழ்கள்... ஆர்மோனியத்தின் கறுப்பு வெள்ளைக் கட்டைகள் மீது நூறாயிரம் வண்ணங்களை நூறாயிரம் நடைகளில் காட்டி, நடனமாடிய வைர விரல்கள் ... நட்சத்திரக்கூட்டங்களை மெல்லிசைத் தோரணங்கள் ஆக்கிவிட, சங்கீதக் கனவுகள் கண்ட கந்தர்வனுக்குரிய மின்காந்த விழிகள்...'' புரிந்ததா அவர் யாரென்று?
அவர்தான் 9.2.1932ல் கேரளாவின் எலப்புள்ளி கிராமத்தில் பிறந்த மனையங்கத்து சுப்ரமணியன் நாயர் விஸ்வநாதன். நமக்கெல்லாம் பின்னாளில் எம்.எஸ். விஸ்வநாதனாக அறியப்பட்டவர்.எனது பள்ளி நாள் தோழர் சி.பி, ராம்மோகன் ஒரு சங்கீத ரசிகர். மெல்லிசை மன்னரின் பாடலையும் எடுத்துக்கொண்டு அதன் பின்னனியில் இருக்கும் இசையை வாத்ய சுத்தமாக கொண்டு வரக்கூடியவர்.கடவுளுக்குப் பிறகு தன்னில் உள்ள நவரச குணங்களையும் தட்டி எழப்பியவர் எம்.எஸ்.வி. என்று நம்பக்கூடியவர்.அந்த ஒரு மணிநேரம் உணர்வுகள் சில்லிட்டுப் போனது. இன்னுமும் அந்த ராக அலைகள் உடலுக்குள் ஊடுருவிய உணர்வு. இத்தனைக்கும் அவர் எங்களுக்காக பாடவில்லை. அவர் ராக ராஜாங்கத்தின் ஆளுமையை பற்றித்தான் விவாதித்துக்கொண்டிருந்தோம்.
பேசப்பேச அவர் கண்களில் இருந்து மறைந்துபோனார், காற்றோடு கலந்து போயிருக்கும் கானங்கள் செவிப்பாறைகளை வருடிக்கொடுத்தது.கானங்களை சுமந்த கதாபாத்திரங்கள் காட்சிகளாக விரிந்தார்கள்.எத்தனை விதமான பாடல்கள்.
தனது மூன்றாவது வயதில் தந்தையை இழந்து, அதற்கு ஆறு மாதத்தில் தன் தங்கையையும் இழந்தவர். தாய்தான் ஒரே ஆதரவு. தாய் வழித்தாத்தா கிருஷ்ணன் நாயர்,மீட்காவிட்டால் இந்த இசைக் கடல் ஏதாவது ஒரு குட்டையில் கரைந்துபோயிருக்கும்.
கேரளத்தின் வடகிழக்கில் இயற்கை எழில் கொஞ்சும் ஊர் கண்ணனூர். அங்கே கிருஷ்ணன் நாயருக்கு மாற்றலாகியது. அங்கேதான் நீலகண்ட பாகவதரின் வடிவிலே விஸ்வநாதனுக்காக இசை காத்துக்கொண்டிருந்தது.
மாதம் மூன்று ரூபாய் கொடுத்து இசைப்பள்ளியிலே சேர வசதியில்லாத விஸ்வநாதனை, தனது பள்ளியில் எடுபிடி வேலையாளாக சேர்த்துக்கொண்டார் நீலகண்ட பாகவதர்.
விஸ்வநாதனுக்கு கற்பூர புத்தி என்பதை அவர் புரிந்து கொண்டார் காசு வாங்காமலே சங்கீதம் கற்றுக்கொடுத்தார் நீலகண்ட பாகவதர்.நான்கு ஆண்டுகள் கர்நாடக சங்கீத பயிற்சிக்குப்பின் கண்ணனூர் டவுன் ஹாலில் மூன்று மணி நேரம் கச்சேரி செய்ய வைத்தார் நீலகண்ட பாகவதர்.
வாழ்க்கை திசை மாறியது, விஸ்வநாதன் திரை உலகில் சம்பாதிக்க தொடங்கியவுடன் தனது குரு தட்சிணையை எடுத்துக்கொண்டு கண்ணனூர் திரும்பினார். அதை ஏற்றுக்கொள்ள அப்போது நீலகண்ட பாகவதர் உயிரோடில்லை.இவருடைய இசையை ஏற்றுக்கொண்டவர் இசையமைப்பாளர் சி.ஆர், சுப்புராமன். இவருக்கு குருவாக இருந்தவர் மறைந்த இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு. ஜீபிடர் பிகசர்சில் அவர்தான் இவரை சிபாரிசு செய்தார். பிறகு எம்ஜீஆர் நடித்த ஜெனோவா படத்தில்தான் வாய்ப்பு வந்தது. முதலில் இவரை ஏற்றுக்கொள்ள மறுத்த எம்ஜீஆர் பின்னார் இவரது இசையில் மயங்கி, ` இனிமேல் என் படங்களுக்கு நீங்கள்தான் இசை' என்றார். தனது பாடல்களை தனது ஆசான் சுப்புராமன் கேட்கவேண்டுமென்று விரும்பினார் எம்.எஸ்.வி. அவருக்காக காத்திருந்தபோது, அவர் இறந்துவிட்ட செய்திதான் விஸ்வநாதனுக்கு கிடைத்தது.
அவர் இறக்கும் தருவாயில் அவர் இசையமைத்துக்கொண்டிருந்த படம் தேவதாஸ். அந்த பணியை முடித்துக்கொடுக்கும் வேலை அவரது உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு இருந்தது.தேவதாஸ் படத்தில் கண்டசாலா பாடிய ` உலகே மாயம்' பாலசரஸ்வதி பாடிய `சந்தோஷம் வேணும் என்றால்' பாராமுகம் ஏன் அய்யா ' ஆகிய மூன்று பாடலகளையும் மெட்டமைத்தது இந்த இரட்டையர்கள்தான்.
இருவரும் தனியாக இசையமைத்த முதல் படம் கலைவாணரின் பணம்.மெல்லிசை மன்னருக்கும். இளையராஜாவுக்கு ஒரு ஒற்றுமை உண்டு, ஐம்பதுகளின் இறுதியில் தமிழ்நாட்டை இந்தி பாடல்கள் ஆக்ரமித்துக்கொண்டிருந்தது. அதை விரட்டி ரசிகர்களை தமிழ் பாடல்களின் பக்கம் இழத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. அதே நிலை 1976ல் இளையராஜாவுக்கு இருந்தது. ஆராதனா, பாபி, யாதோன் கீ பாரத் வெற்றிப் படங்களின் பாடல்கள் தமிழக்த்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. அதிலிருந்து தமிழ் இசையை மீட்டவர் இளையராஜா.
1960 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர்கள் இந்த இரட்டையர்கள். எத்தனை விதமான பாடல்கள்.பீம்சிங், சிவாஜி கணேசன் கலப்பில் உருவான `பா' வரிசை ப்டங்கள்,. கூடவே எம்ஜீஆரின் படகோட்டி, தெய்வத்தாய். ஆயிரத்தில் ஒருவன், ஸ்ரீதரின் நெஞ்சில் ஒர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை. என்று இரட்டையர்களின் சாம்ராஜ்யம் விரிந்து கொண்டே போனது. காலம் இரட்டையர்களை 1965ல் பிரித்தது. அதற்கு பிறகு விஸ்வநாதனின் நாத படைக்கு பலம் கூடியது என்றே சொல்லலாம்.அடுத்த பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவிற்கு விலாசமே விஸ்வநாதன் என்றானது. அவர் பாடல்களில் பட்டியலை இங்கே கொடுப்பது நோக்கமில்லை.
பொதுவாக தமிழன் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் நிச்சயமாக கண்ணதாசன் விஸ்வநாதன் கலந்த பாடல்கள் நிச்சயமிருக்கும். உலகெங்கும் இன்று அவருக்கு கோடான கோடி ரசிகர்கள். சமீபத்தில் கோவையில் நடந்த சம்பவம் இது. ஒரு ரசிகர் கோமாவில் இருந்தார். எந்த மருத்துவ முயற்சியும் பலன் தரவில்லை. வேறு முயற்சியில் இறங்கலாம் என்று அவருக்குப் பிடித்த விஸ்வநாதனின் பாடல்களை போடுங்கள் என்றார்கள். அதிசயம் ஆனால் உண்மை. அவர் விழித்துக்கொண்டார். அதோடு ஏன் `சட்டி சுட்டதடா' பாடலை போடவில்லை என்று கேட்டார். அவருடைய உறவினர்கள் இதை விஸ்வநாதனுக்கே தெரிவித்தார்கள்.
இந்த இசைக்குள் வெளியே தெரியாத ஒரு இன்னிசை ஒளிந்திருக்கிறது. அதுதான் நன்றி உணர்ச்சி, அடக்கம், எளிமை, பணிவு. நன்றி உணர்ச்சிக்கு ஒரு உதாரணம். இவரது குருநாதர் எஸ். எம். சுப்பையா நாயுடுவிற்கு குழந்தைகள் இல்லை. அவர் படமில்லாமல் இருந்த காலத்தில், தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தவர் மறைந்த எம்.ஜீ.ஆர். அவரது தலைமையில் நடிகர் திலகத்தையும் வைத்து ஒரு நட்சத்திர இசை விழா நடத்தி அவருக்கு நிதி திரட்டி கொடுத்தார். பிறகு அந்த தம்பதிகள் நோய்வாய்ப்பட்டபோது அவர்களை தன் வீட்டில் கொண்டு வந்து தங்க வைத்தார். எஸ்.எம்.எஸ். இறந்தபோது அவருக்கு மகனாக இருந்து கொள்ளிவைத்தார். அதற்கு பிறகு ஒன்பது வருடங்கள் கழித்து அவரது மனைவி இறந்தார். அவரும் இறுதிவரை விஸ்வநாதனோடு இருந்தார். அவருக்கும் கொள்ளி வைத்தவர் விஸ்வநாதன். அவருடைய பண்பிற்கு ஒரு உதாரணம்., ஸ்ரீதர் படங்களுக்கு ஆரம்பத்தில் இசையமைத்துக்கொண்டிருந்தவர் ஏ.எம். ராஜா. அவருக்கும் ஸ்ரீதருக்கும் கருத்து வேறுபாடு. ஸ்ரீதர் விஸ்வநாதனிடம் வந்தார். உடனே விஸ்வநாதன் ராஜாவை சந்தித்து, அனுமதி பெற்ற பிறகே ஒப்புக்கொண்டார்.
கர்ணன் படத்தை இந்தியில் எடுக்க முடிவானது. நடிகர்கள் கூட முடிவானது. ஆனால் அந்த முயற்சி இறுதியில் கைவிடப்பட்டது. காரணம் இந்த இசையை கொடுக்க அங்கே ஆளில்லாததால்!
இத்தனை சாதனை படைத்த ஒரு கலைஞனுக்கு, இன்று வரை ஒரு தேசியவிருது கிடைக்கவில்லை.இன்று டெல்லியை தாங்கி பிடித்துக்கொண்டிருப்பது திமுக. முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு தேசிய விருதை தீர்மானிப்பதும் அக்கட்சியின் தலைவர்தான்.விஸ்வநாதன் உருவாக்கிய பாடல்களுக்கு குரல் கொடுத்தவர்களுக்கெல்லாம் தேசிய விருது கிடைத்துவிட்டது. ஆனால் விஸ்வநாதனின் நினைவு இங்குள்ள தன்மான தமிழர்களுக்கு வரவில்லையா? அல்லது எம்.ஜீ.ஆர் மீதுள்ள கோபம் அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் மீது காட்டப்படுகிறதா? அப்படியானால் ஆஸ்தான இசையமைப்பாளர் இசைக்கு வரி கொடுத்த கவிஞர் வாலிக்கு மட்டும் அதுவும் காலதாமதமாக எப்படி பத்மஸ்ரீ கிடைத்தது.
உண்மையில் சொல்லப்போனால், தனக்கு தாமதமாக வந்த விருதை கவிஞர் வாலி திருப்பிக்கொடுத்திருக்க வேண்டும். காரணம் கவிஞர் வாலி கண்ணதாசனுக்கே சவால் விட்டவர். இப்போது எனக்கொரு ஆசை. விஸ்வநாதன் வாழ்நாளைக்குள் உலகமெங்கும் உள்ள அவரது கானத்தினால் கட்டுண்ட தமிழர்கள் உரக்க கம்பீர குரல் எழப்ப வேண்டும். அந்த குரல் கோபாலபுரத்திலிருந்து, குடியரசு தலைவர் மாளிகை வரை எட்ட வேண்டும். அந்த விருதை விஸ்வநாதன் நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும். காரணம் இது வெறும் தேசிய விருதுதானே, அவருக்குத்தான் ரசிகர்கள் என்கிற சர்வதே விருது ஏற்கெனவே கிடைத்துவிட்டதே.இது நமது பெருமித திருப்தி.
அவரைப் பொறுத்தவரையில் அவர் அடிக்கடி சொல்வது இதுதான் `இல்லை என்ற நாளில்லை; இன்னும் என்னும் ஆசையில்லை'.
பேட்டியாளர் சுதாங்கன் வரிகளில் இருந்து
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th September 2014, 11:36 AM
#2075
Senior Member
Senior Hubber
வாங்கோ கிருஷ்ணா சார்..அனந்த பத்மனாபன ஸ்வாமி தரிசனம் ஆச்சா.. கல்லூரி முடித்தசிலவருடங்களில் போயிருக்கிறேன்..மிகப்பெரிய பிரகாரம்..இரண்டு தடுப்பு கொண்டு நாராயணனனை மூன்று பகுதியாக தரிசித்தது மறக்க இயலாதஓன்று..
மழை முத்து முத்துப் பந்தலிட்டு பாடல் கேட்டிருக்கிறேன்.. நல்ல பாட்டு தாங்க்ஸ்
ராஜேஷ் ஜி சந்தாமாமா பாட்டு மாலை கேட்கிறேன்..நன்றி..
கவிஞர் புலமைப் பித்தன் பாட்டு வெகு நைஸ் கிருஷ்ணா சார்.. அவர் விதம் விதமாக இனிய தமிழ்ப் பாடல் கள் எழுதியிருக்கிறார். வாலியா கண்ண தாசனா எனப் புருவம் உயர்த்தி நினைக்க வைக்கும் பாடல்கள்..சமீபத்தில் கூட வடிவேலின் தெனாலி ராமனில் அவர் தான் பாடல்கள்..ஆணழகு இப்படித் தான் இருக்குமா..என்ற பாட்டு..கேட்டபோது எனக்கு அவரது பளிச் கண்கள் வெண்ணிற திக்க் மீசை தான் நினைவுக்கு வந்தது.. நல்ல இனிய கவிஞர்.அழகெனும் ஓவியம் இங்கே..காதுகளில் ரீங்கரிக்கிறது..
//பொதுவாக தமிழன் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் நிச்சயமாக கண்ணதாசன் விஸ்வநாதன் கலந்த பாடல்கள் நிச்சயமிருக்கும்// ஹெள ட்ரூ.. உண்மை..ஆனால் இன்றைய ஜெனரேஷனுக்குப் போய்ச் சேர்கிறதாஎன நினைத்தால் கொஞ்சம் யோசனை தான்..எம்.எஸ்வி பற்றி கோபாலின் அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்..சுதாங்க்ன் பேட்டிக்கு நன்றி கிருஷ்ணா சார்
-
9th September 2014, 11:41 AM
#2076

கவிஞர் கண்ணதாசன் ராஜபார்ட் ரங்கதுரை படத்துக்காக "மதனமாளிகையில் மந்திர மாலைகளாம்" என்ற அற்புதமான பாட்டை எழுதிவிட்டார். அவர் எழுதிக் கொடுத்த முதல் அடிகளிலேயே இயக்குனரும், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் மனதைப் பறிகொடுத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு விதமான மெட்டுக்களைப் போட்டும் திருப்தி வரவில்லை. தான் போட்ட எட்டு டியூன்களையும் ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. அங்கே அப்போது கவிஞரும் இருந்தார்.
நடுவில் அனைவருக்கும் காபி வந்தது. காபியைக் கொடுத்த பையன் விஸ்வநாதனிடம், "அண்ணே அந்த மூணாவது ட்யூனையும், ஏழாவது ட்யூனையும் மிக்ஸ் பண்ணிப் பாருங்க" என்று இயல்பாகச் சொன்னான். அவன் சொன்னது கவிஞரின் காதிலும் விழுந்தது.
"போடா...டேய்...போடா...இது என்ன காபி மிக்ஸ் பண்ற மாதிரி நினைச்சியா...போ...உன் வேலையைப் பார்" என்று விரட்டினார் கவிஞர்.
அடுத்து விஸ்வநாதன் இன்னொரு ட்யூனை வாசித்தும், பாடியும் காட்டினார். "ஒருமனதாக அந்த ட்யூனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். எம்.எஸ்.வி அமைதியாக அந்த காபி கொண்டு வந்த பையனைப் பார்த்தார். கடைசியாக எம்.எஸ்.வி பாடி அனைவரும் ஏற்றுக் கொண்ட அந்த ட்யூன் காபி பையன் சொன்னது போல் மூன்றாவது ட்யூனையும் ஏழாவது ட்யூனையும் கலந்தது தான். அதுவே பின்னாளில் பாடலாகவும் உருவெடுத்தது.
நன்றி - ராணி மைந்தன் எழுதிய "எம்.எஸ்.வி ஒரு சகாப்தம்" என்ற நூல்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th September 2014, 11:44 AM
#2077
கவிஞர் புலமைப் பித்தன் தீபம் பாடல் மறக்க முடியுமா ? சி கே சார்
'சங்கு வண்ண கழுத்துக்கு தங்க மாலை
அவள் சங்கமத்தின் சுகத்திற்கு அந்தி மாலை '
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் '
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th September 2014, 11:50 AM
#2078

Originally Posted by
chinnakkannan
வாங்கோ கிருஷ்ணா சார்..அனந்த பத்மனாபன ஸ்வாமி தரிசனம் ஆச்சா.. கல்லூரி முடித்தசிலவருடங்களில் போயிருக்கிறேன்..மிகப்பெரிய பிரகாரம்..இரண்டு தடுப்பு கொண்டு நாராயணனனை மூன்று பகுதியாக தரிசித்தது மறக்க இயலாதஓன்று..
சி கே சார்
கேரளாவில் சென்ற இடங்கள்
திருவனந்தபுரம்,
வர்கலை(கொல்லம் அருகில்),
திருகடிதானம்(செங்கனாசேரி அருகில்),
திருவல்லா (ஒரு அருமையான ஊர் )
(டயானா என்ற நயன் தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் பிறந்த ஊர் )
அம்பலப்புழா (உன்னி கிருஷ்ணன் )
அரண்முழா
செங்கன்னூர்
மற்றும் குமரகோம் போட் வீடுகள்
மிக அருமையான தேசம் .எளிமையான மக்கள் ,எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th September 2014, 12:08 PM
#2079
Junior Member
Platinum Hubber
கிருஷ்ணா சார்
கேரளாவின் இயற்கை அழகை கண்டு ரசித்து வந்து உள்ளீர்கள் . மிக்க மகிழ்ச்சி .
அந்தபுரத்தில் ஒரு மகராணி -இனிமையான பாடல் .நினைவூட்டலுக்கு நன்றி .

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th September 2014, 12:09 PM
#2080

Originally Posted by
vasudevan31355
மிக்க நன்றி மகேந்திர ராஜ் சார். இதுவரை நான் கேள்விப்படாத நியூஸ். நல்லவேளையாக அப்பாடல் இல்லாமல் போனது. அசோகன் அப்பாடலுக்கு நடித்திருந்தால் நிச்சயமாக கேட்கும்போது கிடைக்கும் இன்பம் பார்க்கும் போது இருந்திருக்காது.
உண்மை வாசு சார்
நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது அசோகன் கே ஆர் விஜயா ஜோடியில் -'கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே ' -
பார்க்க பார்க்க நெஞ்சு பதறுமே
Bookmarks