-
9th September 2014, 04:09 PM
#2101
Originally Posted by
chinnakkannan
யாருக்கு யார் காவல் படம் என்று தெரிந்தது.. (அது சுஜாதா எழுதிய ஜன்னல் மலர் என்ற குறு நாவலை பேஸ் பண்ணி வந்தது - வெளிவந்த தியேட்டர் மதுரை ஸ்ரீ தேவி.. படம் பார்க்கலை..
thanks to sarada madem
யாருக்கு யார் காவல் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சுஜாதா கூறுகிறார்……
என் பத்திரிகைத் தொடர்கதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டு எதுவும் வியாபார வெற்றி பெறவில்லை. எனக்கும் சில்லறை புரளவில்லை. ஆனால், ஒரு நன்மை நிகழ்ந்தது. ‘வேண்டாங்க.. ராசியில்லாத எழுத்தாளர். ஏதும் சரியாப் போகலை. படம் பாதில நின்னு போய்டுது. எடுத்தாலும் படுத்துக்குது. எதுக்குங்க எழுத்தாளரை நாடணும் ? நூறு கதை நாமளே செய்துக்கலாம். தேவைப்பட்டா….” என்று என்னை விட்டுவிட்டார்கள். பத்திரிகைத் தொடர்கதைகளை சினிமா எடுக்கும் வழக்கமே ஒழிந்து போனதற்கு, என் கதைகள் முக்கியக் காரணம்.
படிக்க நன்றாக இருப்பது நடிக்க நன்றாக இருக்கும் என்பது கட்டாயமில்லை. ஆனால் நான் வசனம் மட்டும் எழுதிய படங்கள் பெரும்பாலும் வெற்றி கண்டன.
‘ஜன்னல் மலர்‘ பற்றி சுஜாதா…..
ஜன்னல் மலர்
சினிமாவாக எடுத்துக் கெடுக்கப்பட்ட என் கதைகளில் மற்றும் ஒன்று ‘ஜன்னல் மலர்’.
விகடனில் நான் எழுதிய முதல் தொடர்கதை ‘ஜன்னல் மலர்‘. தொடர்கதை என்பதைவிட குறுநாவல் என்று சொல்லலாம். அப்போது விகடனில் துணை ஆசிரியராக இருந்த பரணீதரன் எனக்கு ஒரு முறை போன் செய்து, ‘இந்தக் கதையின் முடிவில் ஒரே ஒரு வார்த்தை சேர்த்துக்கொள்கிறேன்’ என்று சொன்னார். நான் ‘தாராளமாக‘ என்று அனுமதி கொடுத்தேன். அந்த ஒரு வார்த்தை கதைக்கு மெருகூட்டியது.
சிறையிலிருந்து திரும்பி ஆவலுடன் மனைவியைச் சந்திக்க வரும் கணவன், தான் உள்ளே இருந்தபோது மனைவி எப்படி உயிர் வாழ்ந்தாள் என்பதை அறிந்து, அதிர்ச்சியுற்று மீண்டும் சிறைக்குச் சென்று விடுவான். இந்தக் கதையுடன் எந்த விதத்தொடர்பும் இல்லாமல் ஒரு படம் எடுத்தார்கள். நடிகவேள் எம்.ஆர். ராதாவும். ஸ்ரீப்ரியாவும், ஸ்ரீகாந்தும் நடித்தார்கள். வேறு எதுவும் எனக்குச் சுத்தமாக ஞாபகம் இல்லை. அதில், கே. ஜே. ஜாய் என்கிற மலையாள இசையமைப்பாளரின் ஒரு பாடலை இன்னும் சிலர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர்கள் வைத்த பெயர் மட்டும்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ‘யாருக்கு யார் காவல்?’ யாராயிருந்தால் எங்களுக்கென்ன என்று ரசிகர்கள் விலகிக்கொண்டார்கள்.
ஜன்னல் மலர்
குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் குழந்தை, மீண்டும் பழைய குற்றத் தொழிலுக்கு அழைப்பு விடும் தோழர்கள். இவர்கள் மத்தியில் குற்ற உணர்வும், திருந்தி வாழும் ஆசையுமாக புறக்கணிக்கும் உலகத்துடன் அவன் நடத்தும் போராட்டமே கதை. விறுவிறுப்பாகச் செல்லும் இக்கதை ‘சிறைச்சாலை உண்மையிலேயே ஒரு குற்றவாளியைத் திருத்துகிறதா?’ என்கிற கேள்வியையும் அழுத்தமாக முன் வைக்கிறது.
-
9th September 2014 04:09 PM
# ADS
Circuit advertisement
-
9th September 2014, 04:17 PM
#2102
Senior Member
Veteran Hubber
1982 பாதை மாறி போகும்போது ஊரும் வந்தே சேராது - வைரமுத்து (பயணங்கள் முடிவதில்லை)
1975 பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை - புலமைப்பித்தன் (நீதிக்கு தலைவணங்கு)
1962 பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது - கண்ணதாசன் (படித்தால் மட்டும் போதுமா)
எந்த ஒன்றையும் முதலில் சொன்னவன் கண்ணதாசன்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th September 2014, 04:32 PM
#2103
Originally Posted by
mr_karthik
1982 பாதை மாறி போகும்போது ஊரும் வந்தே சேராது - வைரமுத்து (பயணங்கள் முடிவதில்லை)
1975 பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை - புலமைப்பித்தன் (நீதிக்கு தலைவணங்கு)
1962 பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது - கண்ணதாசன் (படித்தால் மட்டும் போதுமா)
எந்த ஒன்றையும் முதலில் சொன்னவன் கண்ணதாசன்....
எல்லாவற்றிற்கும் மூலாதாரம் அதாவது பிள்ளையார் சுழி கவிஞர் தான்
சந்தேகமே இல்லை கார்த்திக் சார்
நீங்கள் தகவல் பெட்டகம் மட்டுமல்ல கருத்து பெட்டகம் கூட
-
9th September 2014, 05:16 PM
#2104
Senior Member
Senior Hubber
//எந்த ஒன்றையும் முதலில் சொன்னவன் கண்ணதாசன்....// உண்மை கார்த்திக் சார்..
-
9th September 2014, 07:18 PM
#2105
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பி.யின் ஒரு அருமையான பாடல்.. காற்றுக்கென்ன வேலி படத்தில் மோகன், கீதா நடிப்பில் ( கதா நாயகி என்னவோ ராதா-தான் ) சிவாஜி ராஜா இசையில்..
இது போல ஒரு பாட்டுக்கு இது மாதிரி டான்ஸை அமைத்தவர் எந்த மகானுபாவனோ ?
சின்னச் சின்ன மேகம் என்னைத் தொட்டு போகும்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்
( சின்ன )
பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள்
மழைக்கால பூவின் மீது இருக்கின்ற ஈரங்கள்
கன்னி இளம்பூக்கள் கையெழுத்து கேட்கும்
உள்ளுறங்கும் சோகம் கண் திறந்து பார்க்கும்
ஞாபகங்கள் கண்ணில் இன்று முத்துக் குளிக்கும்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்
( சின்ன )
அனல் மீது பூக்கும் அந்த கொடிக்கின்று வேரில்லை
இதயத்தின் சுவரில் உந்தன் பெயரின்றி வேறில்லை
மேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை
பார்வைகளில் நூறு பந்தி வைக்கும் பாவை
கோதை மகள் பேரைச் சொன்னால் ராகம் இனிக்கும்
நினைவுகள் பூவாகும் கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்
( சின்ன )
-
9th September 2014, 07:54 PM
#2106
இரண்டு பாடல்கள் - இரண்டுமே ஏறத்தாழ லா லா என்றே முடியும்
இரு வேறு கவிஞர்களின் கற்பனை
ஒன்று மௌனம் சம்மதம் - புலவர் வரிகள் - இளையராஜா இசை
முதல் பாடல் காதலனும் காதலியும் இணைந்து பாடுவது
காதலன் காதலியை வர்ணிப்பது காதலி காதலனை வர்ணிப்பது
இரவு நேர வேளையில் விருந்தினர் விடுதியில்
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர்ப்பலா
உன் சொல்லிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
மற்றொன்று
சற்றே பின்னோக்கி செல்வோம் ஒரு 13 ஆண்டுகள் 1977 கால கட்டம்
மாலை வேளை கடற்கரை மணல் வெளியில்
பட்டின பிரவேசம் - கவியரசர் வரிகள் - மெல்லிசை மன்னர் இசை
காதலன் தனித்து பாட காதலி அதை வாத்திய இசையாக்கி மகிழ
வான் நிலா நிலா
அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
நீ இல்லாத நாள் எல்லா(ம்)
நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா
அல்ல உன் வாலிபம் நிலா
மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா ?
பூ இல்லாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா ?
வான் நிலா நிலா..
தெய்வம் கல்லிலா ?
ஒரு தோகையின் சொல்லிலா ?
பொன்னிலா? பொட்டிலா?
புன்னகை மொட்டிலா ?
அவள் காட்டும் அன்பிலா ?
இன்பம் கட்டிலா ?அவள் தேகம் கட்டிலா ?
தீதிலா காதலா ? ஊடலா? கூடலா ?
அவள் மீட்டும் பன்னிலா ?
வான் நிலா நிலா ..
வாழ்க்கை வழியிலா ?
ஒரு மங்கையின் ஒளியிலா ?
ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ?
அவள் நெஞ்சின் ஏட்டிலா ?
சொந்தம் இருளிலா ?
ஒரு பூவையின் அருளிலா ?
எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ?
கொண்டது ஏன் ?
அதைச் சொல்வாய் வெண்ணிலா ..
வான் நிலா நிலா ..
இரண்டுமே வெற்றி பெற்ற அமரத்துவம் வாய்ந்த பாடல்கள்
Last edited by gkrishna; 9th September 2014 at 07:56 PM.
gkrishna
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th September 2014, 08:00 PM
#2107
Senior Member
Veteran Hubber
Originally Posted by
gkrishna
சி கே சார்
சிவகாமியின் செல்வன் படத்தில் லத்து இடம் பெற்றதே நடிகர் திரு மனோகர் அவர்களால் தான் என்று கேள்வி பட்டேன்.
எம்.ஜி. ஆரிடம் லட்டுவை அறிமுகப்படுத்தியதும் மனோகர்தான்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எம்.ஜி.ஆர். புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்தபோது, ராமநாதபுரம் ராஜா சேதுபதியின் மகளான குமாரி நளினியை எம்.ஜி.ஆருக்கு 'விஸ்வம்' மனோகர் அறிமுகப்படுத்த உடனே எம்.ஜி.ஆர். 'கண்டேன் என் கம்பெனியின் கதாநாயகியை' என்று நாகேஷ் பாணியில் கமெண்ட் அடித்து, குமாரி நளினியின் பெயரை 'லதா' என்று மாற்ற, ஜொள்ளு ரசிகர்களால் 'லட்டு லதா' ஆக்கப்பட்டார்...
-
9th September 2014, 08:07 PM
#2108
Senior Member
Veteran Hubber
கிருஷ்ணாஜி
முதலில் வந்த படம் மற்றும் பாடல் என்ற வகையில் 'பட்டினப்பிரவேசம்' பாடலைத்தான் நீங்கள் முதலில் பதிவிட்டிருக்க வேண்டும். 'மௌனம் சம்மதம்' பாடல் அதைப்பார்த்து காப்பி. இருப்பினும் பதிவு அருமையோ அருமை.
எங்கும் எதிலும் முதல்வர்கள் கவியரசரும், மெல்லிசை மன்னரும்தான்...
-
9th September 2014, 09:19 PM
#2109
Junior Member
Newbie Hubber
தமிழுக்கும் ,பக்தி பாடல்களுக்கும் அப்படி ஒரு பொருத்தம். என்னை கவர்ந்த மிக சிறந்த பக்தி பாடல்கள்.
விநாயக துதியோடு.(சீர்காழி )
முருகனின் அருள் பெற.(டி.எம்.எஸ்)
முத்தை தரு பத்தி திரு நகை
அத்திக்கு இறை சத்தி சரவண
முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்
முக்கண் பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண
பத்து தலை தத்த கணை தொடு
ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு
பட்ட பகல் வட்ட திகிரியில் இரவாக
பத்தற்கு இரதத்தை கடவிய
பச்சை புயல் மெச்ச தகு பொருள்
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே ?
தித்தித்தெய ஒத்த பரிபுர
நிர்த்த பதம் வைத்து பயிரவி
திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட
திக்கு பரி அட்ட பயிரவர்
தொக்கு தொகு தொக்கு தொகுதொகு
சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத
கொத்து பறை கொட்ட களம் மிசை
குக்கு குகு குக்கு குகுகுகு
குத்தி புதை புக்கு பிடி என முது கூகை
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை
வெட்டி பலி இட்டு குலகிரி
குத்துப்பட ஒத்து பொர வ(ல்)ல பெருமாளே.
சுசீலாவின் மாயீ மகமாயி
எஸ்.பீ.பியின் ஆயர்பாடி மாளிகையில்
L .R ஈஸ்வரி முத்துமாரி அம்மனுக்கு
பொம்ம பொம்ம தா ,பெங்களூர் ரமணி அம்மாள்
பள்ளி கட்டு சபரி மலைக்கு, வீரமணி
ஜனனி ஜனனி ,இளைய ராஜா
Last edited by Gopal.s; 9th September 2014 at 09:30 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th September 2014, 09:41 PM
#2110
Senior Member
Senior Hubber
Originally Posted by
chinnakkannan
//எந்த ஒன்றையும் முதலில் சொன்னவன் கண்ணதாசன்....// உண்மை கார்த்திக் சார்..
கவிஞர் சொன்னார் தான் ஆனால் அதற்கு முன்பும் கா.மு ஷெரிப், மருதகாசி ஐயா, தஞ்சை ராமய்யா தாஸ் மற்றும் கு.மா.பா போன்றோரும் பல தத்துவ பாடல்களையும் ஆழமான சிந்தனைகளையும் சொல்லத்தான் செய்தனர்.
Bookmarks