Page 223 of 401 FirstFirst ... 123173213221222223224225233273323 ... LastLast
Results 2,221 to 2,230 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2221
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உள்ள(த்)தை அள்ளித்தா

    இன்று நாம் பகிர்ந்து கொள்ள இருப்பது..

    https://www.mediafire.com/?vsrxqwcb4wqdcn9

    தெய்வாம்சம் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் அற்புதமான வளைகாப்புப் பாடல், ஈஸ்வர மற்றும் ஜானகியின் குரல்களில்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2222
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mesmerising voice of the one & only Dr Yesudoss from the movie Swami. Enjoy the beautiful melody.



  5. #2223
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    These are all the songs which are called Madura Ganam. The one & Only voice of Dr Yesudoss. What a melody.


  6. #2224
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாழ்க்கையில் சில அவஸ்தையான தருணங்கள் தமிழில் அன்கம்ஃபர்டபிள் சிச்சுவேஷன்ஸ் எப்போதும் உண்டு.. உடல் உபாதையால் வரும் அவஸ்தையை விடுங்கள்…வேறு என்ன அவஸ்தைகள்..பெரிய லிஸ்டேபோடலாம்..

    உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் ..போன்ற பாடலகள் மனதிற்கு என்ன கொடுக்கின்றன....யா மோடிவேஷனல் தாட்ஸ்.. சற்று மனதை உயர்த்தி விடுகின்றன..உயர்த்தி? யெஸ் லிஃப்ட். செய்கின்றன தானே..அதுவும் இந்த லிஃப்டில் செல்லும் தருணங்கள் இருக்கிறதே..வெகுகுறுகிய நிமிடங்கள்..

    உடன் வருவது யார் என்று தெரியாது..யாரும் புன்னகைக்கக் கூட மாட்டார்கள்..அதுவும் நேரத்தைப் பொறுத்து.. காலை நேரம் என்றால் என்னவோ உலகமே இவர்கள் தலையில் இயங்குவது போன்ற நினைப்பு..ஆணென்றால் டையை அட்ஜஸ்ட் செய்துகொண்டு லிஃப்ட் எண்களில் கண் இருக்கும்.. பெண் என்றால் என்னவோ கண்ணகியின் ஒன்று விட்ட அக்கா அல்லது தங்கை போல கொஞ்சம் ஒதுங்கி.. நீயார் நான்யார் என்று அலட்சியப்பார்வை..அலலது என்ன விதமான எண்ணங்கள் எனக் கண்டே பிடிக்க முடியாது..

    ஒரு பெண் என்ன சொல்கிறாள்..

    நீ யாரோ என்னவோ
    தெரியாது..
    நீ என்னைப் பார்க்கிறாயா..
    நான் உன்னைப் பார்க்கவில்லை..
    மேலிருக்கும் விளக்கில் எவ்வளவு தூசி..
    நடுவில்
    சரியாய் அழுத்திய
    ஆறு புன்னகைக்க, ஓ
    நீ எட்டா.
    . நல்ல எண் இல்லையேப்பா..
    கீழே பார்த்தால்
    கறுப்பு ஷூ தான் சற்றே வெளுப்பாய்..
    சோம்பேறியோ..
    என்ன செண்ட் பார்ஷேவா பாய்சனா..
    நம் மூச்சுக் காற்றுக்கள்
    நட்புடன் சற்றுத் தள்ளியே கலந்து
    ககன வெளியில் செல்கின்றன..

    ஓரக்கண்ணால் நீலச்சட்டை எனத் தெரிகிறது..
    கடங்காரா
    தனியாக வந்திருந்தால்
    கண்ணாடியில் முகம் திருத்தியிருப்பேன்..
    லேசாய் முகம் பார்க்கையில்
    கடுகடுவென இருக்கே..
    ஆஃபீஸ்ல நல்ல டோஸா..
    வேணும் உம்மணா மூஞ்சிக்கு..
    டபக்கென லிஃப்ட் திறக்க
    தொலைந்து போடா டெம்ப்ரவரி நண்பா..!


    *

    மனக் குதிரையைப் புல்மேயவிடாமல் ஷ்ஷீ வா பா பா எனக் கூப்பிட்டு சமர்த்தோன்னோ கொஞ்சம் பின்னால் ஓடுப்பா என வேலை வாங்கி பல வருடங்கள் பின்னால் சென்றால்…

    மதுரை அபிராமி தியேட்டர்..அந்த ஹிந்திப் படம் .. ஹிந்திப் படமெல்லாம் வம்படியாய்ப் பார்க்க வைத்தது என் நண்பன் ரகுராமன்.. அழைத்துச் சென்ற படம் இது..அதற்குப் பிறகு அதே படத்தை க் குறைந்த பட்சம் இருபது தடவையாவது பார்த்திருப்பான் ஓரிரு வருடங்களில்.. ஏனெனில் அவன் அப்போது காதல் வயப்பட்டிருந்தான்..

    அதில் வரும் லிஃப்ட் பாட்டு..

    இளம் இளம் வாலிப கமலஹாசன்.. கொஞ்சம் ஷார்ப் மூக்கு ஷார்ப் கண்ணு ஷார்ப்… ம்ம் உடல் என இருந்த ரத்தி அக்னிஹோத்ரி..ஏக் துஜே கேலியே.. (ஹப்பா பாட்டுக்கு வந்தாச்சு..)

    மேரே ஜீவன் ஸாத்தி ப்யார்கியே ஜாய் ஜவானி திவானி
    கூப் சூரத் ஸித்தி படோசன் சத்யம் சிவம் சுந்தரம் பென்ஹர்..(ஓ இங்க்லீஷ்)

    என அவன் பாடிப் பாடி எனக்கு மனப்பாடம் ஆகி விட்டது..! விடேண்டா என்று நழுவி ஓடியிருக்கிறேன்..

    பாட்டு நன்றாகத் தான் இருந்தது சல்திகா நாம் காடி பர்திகா நாம் தாடி மேப்யார்கிஸிஸோ..ஹோகயே ஜானேமன் பந்தன் ..எனப் பாடும் போது விழுந்து விழுந்து கண்ணாடித் தம்ள்ர்களில் விழுந்த பனிக்கட்டிகளைப் போலக் குலுங்கிக் குலுங்கி ரத்திப்பெண் சிரிக்கும் சிரிப்பு.. அழகு தான்..

    பாடலில் ஒன்ற முடிந்ததற்கு இன்னுமொரு காரணம் எஸ்.பி.பி.. படம் ஏக் து ஜே கேலியே..பாலச்சந்தர் டைரக்ஷ்ன்..


    ஆனால் அந்தப் படத்தில் எனக்கு ஹம்தும் தோனோ ஜப் மில் ஜாயேங்கே பிடிக்கும் நயா இதி ஹாஸ் பனாயேங்கே எனப் பாடி நிறுத்தி இதுல ஏண்டா ஹார்ஸ் வருது அதுவும் இதி ஹார்ஸ்னா என்ன என ரகுவிடம்கேட்டு அவன் தலையில் அடித்துக் கொண்டு..ஹார்ஸ்லாம் இல்லை இதிஹாஸ்..இதிகாசம் நயா இதிகாஸ் புது இதிகாசம் எனச் சொல்லியிருக்கிறான்..!

    லிஃப்ட் பாடல்கள் என்று பார்த்தால் விரல் தான் விட முடியும்..எண்ணுவதற்கு.. போன டிகேட் பஞ்ச தந்திரம் என்னோடு காதலென்று சொல்லி வைத்தது நீயா இல்லை நானா வில் கொஞ்சூண்டு லிஃப்ட் வரும்..பாடலிலும் வரும். பாடல் வெகுசுமார்..

    தேரேமேரே பீச் மே.. மே ப்யார்கலி..சலாம், எல்லாம் நல்ல பாடல் ஏக்துஜே கேலியேவில்.. ஆனால் சிலமாதங்க்ளுக்கு முன் அதைப் பார்த்த போது ஏனோ முழுக்கப் பார்க்கத் தோன்றவில்லை..ஒருவேளை எனக்கும் ரத்திக்கும் வயதானது காரணமாய் இருக்கலாம்!

    எஸ்.வாசுதேவன் சாரா, எஸ்.வி சாரா மதுண்ணாவா பாடல்களைத் தரப் போவது யார்?

  7. #2225
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கா.மு.ஷெரீப்., தே..வி..கா பற்றிய இடுகைகளுக்கு நன்றி கிருஷ்ணா சார்..

    மஞ்சள் வெயில் மாலையிலே அண்ட் அதர் மஞ்சள் வெயில் லிரிக்ஸ்க்கு கிருஷ்ணாசாருக்கு நன்றி.. வீடியோவிற்கு எஸ் எஸ் எஸ் சாருக்கு நன்றி..
    உசிலம்பட்டிப் பகக்த்துல பேயம்பட்டி சீமா ஊராமா.. (சந்திர ஜோதி கிளம்பிய மாதிரி பாடல்.. அகெய்ன் எஸ் எஸ் எஸ் சாருக்கு நன்றி..

    மஞ்சள் வெயில் மாலையிலே தாங்க்ஸ் மதுண்ணா ராகவேந்தர் சார்..எப்படி மறந்தேன்..

    //"அந்தி வெயில் பட்டு உடல் பொன்னாகட்டும் - கண்டு
    ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்"

    அப்படின்னு உங்களுக்காகவே பாடி இருக்காங்களே !// மதுண்ணா நா ரொம்ப சமர்த்தாக்கும்!

    எஸ்வி சார்.,. மஞ்சள் முகமே வருகவிற்கும் சீதா சீதா மற்ற பாடல்களுக்கும் தாங்க்ஸ்..

    கிருஷ்ணா ஜி.. என்னோடு பாடுங்கள்.. அது எஸ்.பி.பி தான் எனக்குப் பிடித்திருக்கிறது..

    க்யாக்ரூ ஸஜினி.., சாந்த் ஜைஸே முகிடே பே பிந்தியா.. இரு பாடல்க்ளுக்கும் நன்றி எஸ்.வாசுதேவன் சார்..

  8. #2226
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post

    க்யாக்ரூ ஸஜினி....
    chinnakkaNNan: Listen to Bade Ghulam Ali Khan singing 'Kaa Karun Sajani Aaye Na Baalam...'
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  9. Likes chinnakkannan liked this post
  10. #2227
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ''பூலோகம் '' தந்த '' சின்ன கண்ணன் '' - தமிழில் ''யானை '' பலத்துடன் கவிதைகள் படைத்து தமிழ் நடையில் ரசனைகள் நிறைந்த கவிதைகள் - காதல் மொழிகள் -இலக்கியம் - சினிமா - பாடல்கள் என்று ஆயிரமல்ல .......
    5000 பதிவுகளை அள்ளி தந்த வள்ளல் . என்று மையம் திரி பெருமை பட்டு கொள்கிறது . கண்ணனின் இந்த சாதனைக்கு
    இனிய வாழ்த்துக்கள் .மதுர கானம் திரிக்கு இன்று ''சின்ன கண்ணன் - 5000'' என்பது பொருத்தமாக உள்ளது .


  11. #2228
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சின்ன கண்ணன் ,

    பாராட்டுக்கள். நிறைய பாட்டுக்கு பாட்டு ஜல்லி என்பதை கழித்தாலும்(சுமார் 3000), சும்மா cut &Paste ,பாடலை திருப்பி lyrics முழுக்க எழுதுவது என்றெல்லாம் ஜல்லி அடிக்காமல் ,அத்தனை பதிவுகளும் அசல்,சுவை,நகைச்சுவை,இலக்கிய தரம்,எதிர்பாரா தன்மை கொண்டவை. நான் ரசித்தே வந்துள்ளேன். (என்ன ஒன்று ,திடீரென்று ,ஹா காந்தியடிகள் செத்துட்டாரா ரீதியில் பதிவுகள் மட்டும் கொலை வெறி தூண்டும்)

    வாழ்த்துக்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #2229
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சின்னக்கண்ணன் சார்,
    இந்த திரியில் 5000 பதிவுகள் மேற்கொண்டமைக்கு எனது
    பாராட்டுக்கள்.
    கோபு

  13. #2230
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்-4.


    ஒரு நிர்வாகியின் திறமை என்பது teamwork என்பதில்தான் உள்ளது என்பது நிர்வாக சூத்திரம்.அத்தனை பேரின் திறமையும் உழைப்பும் தரும் பலன் தலைமை நிர்வாகிக்கே போய் சேரும். ஆனாலும் தலைவன்,தனக்காக உழைத்தவர்களை பெருமை படுத்தி ,அவர்கள் முன்னேற விரும்பினால் உதவ வேண்டும்.அத்தனை பலங்களையும் நமதாக்கி பெருமையும் அடைந்து ,புகழும் பெற்று மற்றவரையும் பெருமை படுத்தலாம்.ஆனால் அதற்கு தலைமை நிர்வாகி ,தன் பொருளை விற்பனை (நல்ல விலைக்கு)செய்ய தெரிந்தவராகவும் ,தொடர்ச்சியாக சந்தையில் நிலைக்க எல்லோரையும் அணைத்து ,நல்லுறவை பேண வேண்டும்.

    எம்.எஸ்.வீயை விட இதற்கு சிறந்த உதாரணம் ஏது?வேறு எந்த இசை குழுவிலாவது தனி தனி இசை கலைஞர்கள் ,இந்த அளவு கவனம் பெற்று போற்ற பட்டார்களா?உலக அளவில் பார்த்தாலும் சொற்பமே.யோசித்து பாருங்கள்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி தலைமையில் ஜி.கே.வெங்கடேஷ்,சங்கர்,கணேஷ்,கோவர்த்தனம்,ஹென் றி டேனியல்,ஜோசெப் கிருஷ்ணா,ஷ்யாம் பிலிப்,டி.என்.மணி,சத்யம்,பிரசாத்,மங்கள மூர்த்தி,எம்.எஸ்.ராஜு,சதன்,கோபாலகிருஷ்ணன்,நோய ல் க்ராண்ட்,நஞ்சுண்டையா,ஆகிய இசை கலைஞர்கள் ,உதவியாளர்கள் மட்டுமின்றி,ரெகார்டிங் engineer சம்பத் கூட கவனிக்க பட்டார். இவர்களுக்கு தனி வாய்ப்பு வந்த போது எம்.எஸ். வீ தடுத்ததே இல்லை. திரும்பி தன்னுடன் வந்து பணியாற்றிய போதிலும் வரவேற்றுள்ளார்.
    புது இசையப்பாளர்கள் வந்த போது இவர் அவர்களை வரவேற்ற விதம்,பெருந்தன்மை, அவர்கள் தன கோட்டை என்று நினைத்த எல்லா இடத்திலும் புகுந்த போதும் வன்மம் காட்டி சுடுசொல் கூறாத பண்பு அதுதான் எம்.எஸ்.வீ. (அதற்கென்று ராமமூர்த்திக்கு செய்ய பட்ட துரோகத்தை நான் ஒப்பு கொள்ளவே மாட்டேன் )

    எம்.எஸ்.வியின் அற்புத பண்புகளுக்கு மூன்று உதாரணங்கள் .

    1)ஸ்ரீதர் ,தன் ஆஸ்தான ஏ.எம்.ராஜாவை விட்டு சில கருத்து வேறுபாடுகளினால் ,நெஞ்சில் ஓர் ஆலயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி புக் பண்ண வந்த போது ,உடனே "ஞானி" போல ஒப்பு கொள்ளாமல் ,நிஜ ஞானியாய் ,தான் genova காலத்திலிருந்து கருத்து வேறுபாடு,மனத்தாங்கல் கொண்டிருந்த ஏ.எம்.ராஜாவை சந்தித்து அனுமதி கேட்டார்.ராஜாவின் பதில் (பெயர் விசேஷமோ?)படு கீழ்த்தரமானது. நான் தூக்கி போட்டு விட்டேன். எவன் எடுத்து கொண்டால் எனக்கென்ன?

    2)தேவர் ,கே.வீ.மகாதேவனை விட்டு தன்னிடம் தாவ நினைத்த போது ,தான் குருவாக நினைத்த கே.வீ.எம் இற்கு துரோகம் செய்யாமல் ,தன் அன்னையின் ஆணையை ஏற்றவர் எம்.எஸ்.வீ. தேவரின் வேண்டுகோளை நிராகரித்தார்.

    3)தன் நண்பர் கண்ணதாசன் ,சிலசொந்த படங்களுக்கு கே.வீ.எம்முடன் பணி புரிந்த போதும்,இவர் சுணக்கம் காட்டியதில்லை.தடுத்ததில்லை.

    4)ஒரு முறை தபேலா இசை கலைஞருடன் ,பாடகர் ஜேசுதாஸ் மன வேறுபாடு கொண்ட போது ,இவர் தபேலா கலைஞர் பிரசாத்துக்கு ஆதரவாக நின்றார். ஜேசுதாஸ் ,அப்படியானால் நான் தங்களுடன் பணியாற்ற மாட்டேன் என்று சொன்ன போது சரி ,வேண்டாம், எனக்கு பிரசாத் முக்கியம் என்று சொன்ன தலைவர் எம்.எஸ்.வீ. (அவர் நினைத்தால் வேறு தபேலா ஆளா கிடைக்காது?)

    எம்.எஸ்.வீ யின் குழுவினரை அணைத்து சிறப்பான பணி வாங்கும் தலைமை குணம், வியாபார திறமை,அதிலும் நேர்மை,பெருந்தன்மை என்பதை விளக்கவே இந்த பகுதி.

    இனி எம்.எஸ்.வியின் அபூர்வ இசை வெள்ளத்தில் நுழைவோம்.

    (தொடரும்)
    Last edited by Gopal.s; 13th September 2014 at 10:38 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Thanks chinnakkannan thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •