Page 236 of 401 FirstFirst ... 136186226234235236237238246286336 ... LastLast
Results 2,351 to 2,360 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2351
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வண்டிப் பாடல்கள்.

    நண்பர்கள் சில தினங்களுக்கு முன்னால் வண்டிப் பாடல்கள் வழங்கி கலக்கியிருந்தார்கள்.

    இதோ இன்னும் சில.

    'சம்சாரம்' படத்தில் 'கட கட கட லொட லொட வண்டி' ஸ்ரீராம் மாட்டு வண்டியிலும், ஹீரோயின் (தெரியல) மற்றும் கோஷ்டியினர் காரிலும். துணை நடிகைகள் முகபாவங்கள் அடி தூள்.

    மாடு ரெண்டும் சண்டி... ஓ........வண்டிக்காரன் நொண்டி. மகா ரம்யம்.

    Last edited by vasudevan31355; 16th September 2014 at 08:21 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2352
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வண்டிப் பாடல்கள்

    உலகம் பெரிது
    சாலைகள் சிறிது
    ஒலி கொடுத்தால்
    வழி கிடைக்கும்

    காக்கி உடுப்புடன், கழுத்தில் மப்ளருடன், அழகான நடிகர் திலக ஓட்டுனர் லாரி ஓட்டிக் கொண்டே பாடும் அற்புத கருத்துள்ள அழகுப் பாடல். நம் பம்மலார் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.

    'வழிகள் தோறும் தலைகளைப் பார்த்தால் பொதுக் கூட்டம் போல் தெரியுதடா

    படைக்கும் தொழிலை கொஞ்சம் நிறுத்திக் கொண்டால் என்ன பரந்தாமா'

    படைப்பை கொஞ்ச நாள் நிறுத்தக் கோரும் நடிகர் திலகம்.

    அவசியம் பார்த்து மகிழவும்.

    Last edited by vasudevan31355; 16th September 2014 at 08:23 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai liked this post
  6. #2353
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    தாங்கள் பங்கு கொள்ளாமல் குறையாக இருந்தது. இப்போது தங்கள் வருகையினால் அது சரியாகி விட்டது.

    வண்டி பாடலைத் தலைவர் பாடல் மூலம் கலக்கி விட்டீர்கள்.

    இன்னொரு வண்டிப் பாடல்

    இல்லறமே நல்லறம் படத்திலிருந்து

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #2354
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வண்டிப் பாடல்கள்

    'நானும் கூட ராஜாதானே நாட்டு மக்களிலே
    அட நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே'

    ரயிலில் பாடியபடி பிச்சை எடுக்கும் நாகேஷ். 'புன்னகை' வரவழைக்கும் பொருள் பொதிந்த பாட்டு. ('ஓட்டுப் பிச்சை வாங்க என்கிட்டதானே வரணும்' என்ற ரீதியில் வம்பளந்து பிச்சை எடுப்பார் நாகேஷ்)

    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes Russellmai liked this post
  10. #2355
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வாருங்கள் ராகவேந்திரன் சார். வெற்றிகரமாக 'புதிய பறவை' யை பறக்க விட்டதற்கு தங்களுக்கு வாழ்த்துக்கள். முரளி சாருக்கும் சேர்த்து. கூட்டம் நிரம்பி வழிந்ததைக் கேட்டவுடன் மிக்க சந்தோஷமாய் இருந்தது. வாசு சாரும், கிருஷ்ணா சாரும் விவரித்தார்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2356
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    கோபால் சார். நான் ஸ்வர்ணலதா, ஈஸ்வரியம்மா மற்றும் ஜிக்கி, லீலா, சுஜாதா பாடல்களை தந்துள்ளேன்
    இசையரசி பாடல்கள் நிறைய வரத்தான் செய்யும்..


    வாசு ஜி வாங்கோ வாங்கோ


    உன்னிமேனன் எனக்கு மிகவும் பிடித்த குரல். இன்னும் நிறைய பாடியிருக்க வேண்டியவர்..

    இதோ தேவா அவரை வித்தியாசமாக பயன்படுத்தினார்

    சுஜாதாவும் சரி உன்னிமேனனும் சரி அருமையாக பாடியிருப்பார்கள்
    அதுவும் வரிகளும் ரொம்ப அழகாக இருக்கும்


  12. #2357
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    காலையில் கலை கட்டியாச்சு .
    சில தலைகளும் தளைகளும் களைகளும் தொந்தரவு தான்.
    நடிகர் திலகத்தின் 'உலகம் பெரிது ' பாடல் வரிகளை போல் தான்
    பரந்தாமனும் படைப்பை நிப்பாட்ட போறது இல்லை
    இங்கும் பதிவு எழுதாமல் யாரும் இருக்க போறது இல்லை
    தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம் என்பது சுயநல கூட்டம்
    இதுவும் கவிஞர் வரிகள் தான்

    வண்டினு சொல்றதுக்கு பதிலாக வாகன பாடல்கள் என்று சொல்வோம்
    ms பிள்ளை படத்தில் ஒரு பாடல் நினைவு
    நாகேஷ் பாடுவார் - 'குபு குபு நான் எஞ்சின் டக டக நான் வண்டி '
    இங்கேயும் வண்டினு தான் வருது .

    காலையில் நல்ல பாசுரம் சொல்ல முடியலே . எங்கே பாசுரம் பாடும் தென்றல் சி கே சார்
    gkrishna

  13. #2358
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்
    அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை இயக்கம் r சுந்தர்ராஜன் என்று நினைவு
    கபில்தேவ் சுலக்ஷனா நடித்து வந்த படம்
    இந்த கபில்தேவ் என்ன ஆனார் என்று தெரியவில்லை
    இவர் 1 நிமிஷம் வர நடிகர் இல்லை. இந்த படத்தின் ஹீரோ
    பின்னாளில் ஒரு பேய் படத்தில் வந்த நினைவு .(அதிசய மனிதன் )
    செந்தில் காமெடி கொஞ்சம் பேசப்பட்ட படம்
    ஒரு பெரிய கல்லை தூக்கி கொண்டு எலி செய்ய புறபடுவார்
    பிறகு நிலவை காட்டி 'இதே நிலவை நேற்று எங்க ஊரில் பார்த்தேன் '
    அப்படின்னு வரும் . மாமா இசை
    இளையராஜா கூட முறைத்து கொண்டு இயக்கனுர் சுந்தர்ராஜன்
    மாமா, மெல்லிசை மன்னர்,தேவேந்திரன் என்று ரவுண்டு அடித்து விட்டு பின்னர் மீண்டும் ராஜாவிடம் அடைக்கலம்.
    இன்னொரு பாட்டு நினைவு உண்டு 'சுமை தாங்கி' என்று ஆரம்பிக்கும்
    gkrishna

  14. #2359
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மணியோசையும்
    கை வளையோசையும்
    ஆனந்த ராகம் சொல்ல
    நான் கேட்கிறேன்
    உன்னை ஆகாயம் பூமி எங்கும்
    நான் பார்க்கிறேன்

    இதுவும் அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை பாலாவின் நல்ல பாடல்
    gkrishna

  15. #2360
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இயக்கனுர் ர.சுந்தர்ராஜன் 80 களில் அந்த வேளையில் தமிழ் சினிமாவில் புதுமையையும் தரத்தையும் புகுத்திய மகேந்திரன், பாலுமகேந்திரா,ஆபாவாணனின் (உடனே ஒரு கூட்டம் ஆபாவாணனை எப்படி மகேந்திரன்,பாலு மகேந்திரா கூட சேர்கலாம் அப்படின்னு கிளம்பும் ) அறிவு ஜீவித்தனம் இல்லாத ஆனால் எப்படியான படம், எவருடன் சேர்ந்தெடுத்தால் ஓடும் என்ற பட்டுணர்வைக் கொண்டு ஜெயித்தவர். . இவரின் வெற்றிக்கு இசைஞானி எவ்வளவு உறுதுணையாக இருந்தாரோ அவ்வளவுக்கு கவுண்டமணியும் இருந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.

    ஆனால் ஆர்.சுந்தரராஜனின் பலம், இளையராஜா மட்டுமன்றி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் (சரணாலயம் உள்ளிட்ட பல படங்கள்), கே.வி.மகாதேவன் (அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை, தூங்காத கண்ணின்று ஒன்று), தேவேந்திரன் (காலையும் நீயே மாலையும் நீயே), தேவா (என் ஆசை மச்சான் உள்ளிட்ட பல படங்கள்) என்று இவர் சேர்ந்து பணியாற்றிய ஒவ்வொரு படங்களிலும் அட்டகாசமான பாடல்களைத் தருவித்திருப்பார். எண்பதுகளிலே இளையராஜா கோலோச்சிக்கொண்டிருந்த வேளை, "எதிர்பார்த்தேன் இளங்கிளியை காணலையே", "சுமைதாங்கி ஏன் இன்று",'மணி ஓசையும் '(அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை), "எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை" (சரணாலயம்) , "ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்"(காலையும் நீயே மாலையும் நீயே) போன்ற பாடல்களை அன்றைய இலங்கை வானொலி ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். கூடவே தேவாவுடன் இவர் இணைந்து பணியாற்றிய என் ஆசை மச்சான் திரைப்படத்தில் வந்த பாடல்களையும் கூட.

    இணையத்தில் திரட்டிய தகவல்கள்
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •