எதிரிகள் ஜாக்கிரதை, மணமாலை, வேதா என்று கலக்கும் எஸ்வி சார்,
அரிய ஆவணங்களுக்கு நன்றிகள்.
நடிகர் திலகமே தெய்வம்
சூப்பர் வாசு சார்
வந்து விட்டான் விட்டல் ப்ரோடக்ஷன் மதுரை மன்னன்
வடநாட்டு mgr காந்தா ராவ் ஜோடி யாரு வாசு சார்
வசனம் பாடல்கள் புரட்சிதாசன்
இயக்கம் பி v ஆச்சார்யா
மீசை பென்சில் மீசை
இன்று ஒரு கேள்வி
தமிழ் படத்தில் முதன் முதலில் ஒரிஜினல் மீசைவைத்து நடித்த நடிகர் யாரு வாசு சார்
Last edited by gkrishna; 17th September 2014 at 10:52 AM.
gkrishna
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
எழுபதுகளின் இறுதி.. சினிமாவை ஒரு விஷுவல் ஊடகமாக பெரிதும் பயன்படுத்தத் துவங்கிய காலக் கட்டம் என்பேன். கவியரசரும் அதற்கு அச்சாணியாக இப்படி பாடலை ஆரம்பிக்கிறார்.. கவிதையின் கட்டமைப்பே ஒரு புதிய உடை உடுத்திவந்து நிற்கிறது. இந்த ஒரே அடியில் கேட்போரின் மனதில் அழகான ஒரு காட்சியினை உருவகப்படுத்தி விடுகிறார். கற்பனை வானத்தில் வர்ணம் தீட்டும் கவித்துவமான தூரிகை வரிகள. படத்தில் நாயகி நாயகனைப் பார்த்து பாடுவதாக இவ்வரிகள் இருந்தாலும், நாம் தனியாக இதைக் கேட்டுரசிக்கும்போது, ஒரு பறவையாக மாறி மலையின் எழிலை ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். ஒரே கல்லில் இரு மாங்காய் போல இசைக் கண்ணாடியில் நிறப்பிரிகை நடத்திய ராஜா-கவியரசர்-ஜென்சி.
Last edited by venkkiram; 17th September 2014 at 11:05 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
வரவேண்டும் வெங்கிராம் சார் உங்களை வெங்கி என்று அழைக்கலாமா?
நிறம் மாறாத பூக்கள் பாடலை வழங்கி உள்ளீர்கள் .அருமையான பாடல் .ஜென்சி மலையாளமும் தமிழும் கலந்த ஸ்லாங் .
78-79 களில் இப்படி ஒரு கலவை தமிழுக்கு புதிது.
மாதுரி கூட மலையாள பாடல்கள் நிறைய பாடி இருக்கிறார் . ஆனால் தமிழுக்கு பாடும் போது தமிழ் ஸ்லாங் தான் வரும். உதாரணம் 'வெள்ளி ரதங்கள் அழகு மேனி ','தேடி வந்த கண்களுக்கு ஓடி வரும் சாமி'
பாடலின் சில வரிகள் கண்ணதாசனின் கவித்துவத்தை பறைசாற்றும்
இலை மறைவினில் இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
gkrishna
கிருஷ்ணா ஜி
தேடுகின்ற கண்களுக்குள் பாட்டை பாடியது அம்பிலி என்று நினைக்கிறேன்.
Last edited by madhu; 17th September 2014 at 11:13 AM.
madhu: Here is a song for you and others:
aasai koLLum meesai uLLa aambaLaiya paathiyaa ....... from vazhkkai(1949)
It was popular in the early 50s.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
//ஜோடி யாரு வாசு சார்//
வேற யாரு கிருஷ்ணா சார்?
சௌகாரின் தங்கச்சிதான்.
நடிகர் திலகமே தெய்வம்
இன்றைய ஸ்பெஷல் (73)
'இன்றைய ஸ்பெஷலி'ல் ஒரு மாற்றத்திற்காக 'கங்கா கௌரி' (1973) திரைப்படப் பாடல்.
கதை உரையாடல்: ஏ.எஸ்.நாகராஜன்
பாடல்கள்: கண்ணதாசன்
இசை: 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்.
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்
இயக்கம்: பி ஆர்.பந்துலு
சிவன், 'பர்வத ராஜகுமாரி' பார்வதி திருமணத்திற்கு சனீஸ்வரனை அழைக்கவில்லை என்று சனி பகவானிடம் தூபம் போடுகிறான் நாரதன். ஏற்கனவே சிவன் மீது கடுப்பு கொண்டிருக்கும் சனி பகவான் கல்யாணத்தை தடுத்து நிறுத்துகிறேன் என்று கிளம்புகிறான். ஆனால் அதற்குள் சிவன் பார்வதி திருமணம் நடந்து முடிந்து விடுகிறது. திருமணத்தை பிரம்மா முன்னின்று புரோகிதராக நடத்தி வைக்கிறார்.
சனியும், நாரதனும் தங்கள் திருவிளையாட்டைத் தொடங்குகிறார்கள். தட்சப் பிரம்மன் மூலம் சிவனுக்கு இடர் வர திட்டம் தட்டுகிறார்கள். புரோகிதம் செய்து வைத்த பிரம்மாவின் தலைகள் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு திசையில் இருந்தும் சிவன் தட்சணை அளிக்க வேண்டும் என்று நாரதன் யோசனை கூறுகிறான். சிவனும் அப்படியே சம்மதித்து பிரம்மனின் ஒவ்வொரு தலைக்கும் ஒவ்வொரு திசையிலிருந்தும் புரோகித தட்சணை அளிக்கிறான்.
சனி இப்போது விதி வடிவில் விளையாடுகிறான். பிரம்மன் நான்கு தலைகளுக்கும் தட்சணை பெற்றுக் கொண்டு தனது ஐந்தாவது தலைக்கும் தட்சணை கேட்கிறான் அதுவும் இதுவரை கொடுக்காத திசையிலிருந்து. விவரமறியாத சிவன் "அதற்கென்ன கொடுத்தால் போகிறது" என்று அப்பாவியாய் கூறுகிறான்.
தனது ஈசான திக்கிலிருந்து தட்சணை தருவதாக சிவன் கூற, அதற்கு பிரம்மன் "கிழக்கும், வடக்கும் சேர்ந்தது ஈசான திசை... அதனால் அது புது திசை ஆகாது" என்று மறுக்கிறான் சனியின் சதியால். "அப்படியானால் அக்கினி திசையிலிருந்து தருகிறேன்" என்கிறான் சிவன். அதற்கு திருமாலோ "அக்கினி திசை கிழக்கும் தெற்கும் சேர்ந்தது. வாயு திக்கு மேற்கும் வடக்கும் சேர்ந்தது. பிரம்மா சொல்வது போல இதுவெல்லாம் புது திசை ஆகாது" என்று எடுத்துரைக்கிறார்.
"என்ன செய்வது?" என்று சிவன் விழிக்க, பிரம்மா "திருமால் அடிகாணாமல் அழிந்தான் என்றும், நான் முடி காணாமல் மயங்கினேன் என்றும் கேலி செய்தார்களே.... அந்த சிவன் இப்போது திசை காணாமல் திக்கற்று திகைக்கிறாரே.... திருமணம் செய்து வைத்த புரோகிதருக்கு தட்சணை கொடுக்க வழியில்லாமல் திக்கற்று நிற்கும் இவர் புவனங்கள் அனைத்தையும் படைத்த என்னை விட எவ்விதத்தில் உயர்ந்தவர்? இவரைப் போய் பரம்பொருள் என்கிறார்களே" என்று சிவனை அவமானப்படுத்தி கேலி பேசுகிறான் பிரம்மன்.
இதைக் கேட்டு பெரும் கோபம் கொள்கிறான் சிவன். ஐந்தாவது தலைக்கு புது திக்கிலிருந்து தட்சணை கேட்டதால் பிரச்சனைக்குரிய அந்த பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவன் கிள்ளி எடுத்துவிடுகிறான் அதுமட்டுமல்ல. "ஐமுகன் நீ இனி நான்முகன் என்றே அழைக்கப் படுவாய்... இதுவே உன் கடைசி புரோகிதமாய்ப் போகட்டும்... உலகில் உனக்கு கோவில்களே இனி இல்லாமல் போகட்டும்" என்றும் சாபமிட்டு விடுகிறான்.
இதனால் ஆத்திரமுற்ற பிரம்மன் பதில் சாபமிடுகிறான். "நீ கிள்ளி எடுத்த எனது ஐந்தாவது தலை பிச்சை ஓடாக மாறி உன் கையிலேயே ஒட்டிக் கொள்ளட்டும். அதற்கு பிச்சை எடுத்து ஜீவிப்பதே உன் தொழிலாகும் அந்த ஓடு அதில் இடப்பட்ட பொருள்களை பாதி தின்றுவிட்டு நிரம்பாமலே போகும். அது எப்போது நிரம்புகிறதோ அப்போதுதான் உனக்கு சாப விமோசனம்" என்று சிவனுக்கு கடுமையாக சாபம் இட்டு விடுகிறான்.
கையில் பிச்சை கபால ஓடுடன் பரிதாபமாக நிற்கிறான் சிவன். அதைக் கண்டு சனி மௌனமாகக் கொக்கரிக்கிறான்.
பிச்சை ஓடுடன் எல்லோரிடமும் பிச்சை எடுக்கிறான் சிவன். ஆனால் பிச்சைப் பாத்திரம் நிரம்பியபாடில்லை.
இந்த சூழ்நிலையில் ஒலிக்கும் அற்புத பாடல். சிவன் மேல் பரிதாபம் கொள்ள வைக்கும் கவிஞரின் பாடல்.
சிவனாக காதல் மன்னன் ஜெமினி கணேசன். பிரம்மாவாக ஜெமினி மகாலிங்கம். திருமாலாக சிவக்குமார். சனி பகவானாக ஓ..ஏ.கே தேவர் நாரதராக 'துகளக்' ஆசிரியர். பார்வதியாக ஜெயந்தி.
பாடகர் திலகத்தின் அற்புதமான குரல் பாவங்களில் ஒலிக்கும் பாடல். இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாகப் பாடிவிட முடியுமோ!
பிச்சை ஓடு நிரம்புவது எப்போது? சிவன் சாபம் தீருவது எப்போது? எல்லாம் அந்த 'கோபாலனு'க்குதான் வெளிச்சம்.
'இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்' என்று சிவன் கதறும் ஒரு வரியிலேயே அவனின் துன்ப நிலையை நம் மனதில் அப்படியே பதிய வைக்கும் கவிஞரின் வரிகள். அதற்கேற்றவாறு அருமையான இசை அமைத்த 'மெல்லிசை மன்னர்' அவர்கள்.
இனி பாடலின் முழு வரிகள்
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்
இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்
இந்த ஈசனுக்கும் சாபம் உண்டு கண்டு கொள்ளுங்கள்
இந்த ஈசனுக்கும் சாபம் உண்டு கண்டு கொள்ளுங்கள்
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள்
இப்போது திருவோடு ஏந்திய கைகள்
எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள்
இப்போது திருவோடு ஏந்திய கைகள்
கட்டி வைத்த பொன்னரிசி கொட்டி விடுங்கள்
கையில் ஒட்டி உள்ள ஓடு தன்னை தட்டி விடுங்கள்
கையில் ஒட்டி உள்ள ஓடு தன்னை தட்டி விடுங்கள்
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
ஆண்டவன் என்று சிலர் என்னை அழைத்தார்
ஆண்டி இவன் என்றே பிரம்மன் அழைத்தான்
சாத்திரத்தில் வந்ததில்லை இந்த பாவம்
என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்
என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
Last edited by vasudevan31355; 17th September 2014 at 11:45 AM.
நடிகர் திலகமே தெய்வம்
இன்றைய ஸ்பெஷல்
ஒரு அபூர்வமான பாடல் வாசு சார்
கங்கா கௌரி படத்தின் கதை முழுவதையும் விளக்கி விட்டீர்கள்
விஜய் டிவி காலை பக்தி ஸ்பெஷல் பார்த்த நிறைவு
gkrishna
Bookmarks