-
17th September 2014, 05:59 PM
#2531
Senior Member
Senior Hubber
எல்லோரும் அனலைஸ் பண்ணி தோச்சு உலர்த்திக் காயப் போட்டிருப்பாங்க கீழ்க்கண்ட பாடல் வரிகளை..
வாயின் சிகப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே..
சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம்
ஒரு துன்பம் போன்ற இனப்த்திலே இருவரையும் மறந்தோம்..
ம்ம் எண்ணிரண்டு பதினாறுலயே இதையெல்லாம் படிச்சு, பார்த்துக் கண்ண தாசனை சிலாகிச்சு, கெட்டுப் போனதாலோ என்னவோ இப்போ மனம் பேரின்பத்தை நாடுதுங்காணும்!
-
17th September 2014 05:59 PM
# ADS
Circuit advertisement
-
17th September 2014, 06:22 PM
#2532
Senior Member
Diamond Hubber

'பணம் பெண் பாசம்' தகவல்களுக்கு நன்றி சி.க.சார், மதுஜி.
சி.க. அழகாக கதையை விளக்கி விட்டார். அதுவும்
//(சொல்ல விட்டுவிட்டேனே..தந்தை செய்த பாபங்களுக்கு இவள் பிராயச் சித்தம்செய்ய ஆரம்பிக்கும் போதே சக்ரபாணிக்கு நன்கு தூக்கம் வருகிறது..!)//
அருமை. வாழ்வின் யதார்த்தமான உண்மை. ஜாவரின் நாவல். நான் படித்ததில்லை. நன்றி சி.க சார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th September 2014, 06:46 PM
#2533
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணாஜி,
'ரங்கா' படக்கதை பற்றிய பதிவு படித்தேன். நன்றி! ஆனால் கலைஞானம் தூயவனிடம் கொடுத்த கதைக்கும், ரங்கா படத்தில் தூயவன் கொடுத்துள்ள ஸ்க்ரீன்பிளேவிற்கும் மலையளவு வித்தியாசம்.
கதையின் அடிப்படைக் கருவை மட்டுமே எடுத்துக் கொண்டு ரஜனிக்கேற்ப 'ரங்கா' கதை மாற்றப்பட்டுள்ளது. (பில்லா மாயை வேறு அப்போது ரொம்ப ஜாஸ்தி) ரங்கா படமே ஒரு அன்புத் தம்பதியரின் குழந்தையை மையமாகக் கொண்டு அதை ரஜனி கடத்த முயற்சிப்பது, கராத்தே மணி மனம் திருந்தி அந்த குழந்தைக்கு பாடிகார்டாக இருந்து காப்பாற்ற முயற்சி செய்வது எனப் போகும்.
நீங்கள் பதிந்துள்ள பதிவு சில மறைந்துள்ள உண்மைகளை உணர்த்துவதாகத் தெரிகிறது. இரண்டாவது எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கு என்றும் தெரியவில்லை.
நடிகர் திலகம் பற்றிய 'பாசமலர்' மோகன் பற்றிய பதிவுக்கு நன்றி கிருஷ்ணா சார். . மோகன் பற்றிய பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
-
17th September 2014, 06:59 PM
#2534
Senior Member
Diamond Hubber
மாலை மதுரம் (2)

பொற்சிலை என்றொரு படம். அபூர்வமான படமும் கூட. ஜெமினி ஹீரோ.
'அக்கரையில் அவன் இருக்க'
'அழகைப் பாட வந்தேன்'
போன்ற இனிமையான பாடல்கள். படமும் நன்றாக இருக்கும் என்று கோபால் அடிக்கடி சொல்வார்.
இந்தப் படத்தில் சீர்காழி பாடிய அருமையான பாடல். ஆர். கோவர்த்தனன் இசை. 1969-இல் வெளியான படம் என்று நினைவு. கண்ணதாசன் பாடல்களை எழுதி இருந்தார். இப்படம் பற்றிய அதிக தகவல்கள் இல்லை.
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா....
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா
பசியென்று வந்தவர்க்கு புசியென்று தந்தவரை பரமனும் பணிவானடா
கனிந்து பக்கத்தில் வருவானடா....
பசியென்று வந்தவர்க்கு புசியென்று தந்தவரை பரமனும் பணிவானடா
கனிந்து பக்கத்தில் வருவானடா
ஆணென்று பெண்ணென்றும் ஆண்டவன் செய்து வைத்த ஜாதியும் இரண்டேயடா
தலைவன் நீதியும் ஒன்றேயடா....
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும் ஈட்டியின் முனை போலடா
அதனை எய்தவன் மடிவானடா....
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும் ஈட்டியின் முனை போலடா
அதனை எய்தவன் மடிவானடா
சத்திய சோதனையை சகித்து கொண்டே இருந்தால் வெற்றியை காண்பாயடா
அதுவே வேதத்தின் முடிவாமடா....
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா
இறைவன் நம்பிக்கை தருவானடா இறைவன் நம்பிக்கை தருவானடா
http://www.inbaminge.com/t/p/Porchilai/
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th September 2014, 07:07 PM
#2535
Junior Member
Platinum Hubber
அன்பு கரங்கள் .....காக்கும் கரங்கள் --- உழைக்கும் கரங்கள் ... துடிக்கும் கரங்கள் ....
இப்படி கைகளுக்குதான் எத்தனை பட்டங்கள் .. கைகள் பற்றிய பாடல்கள்
அன்னமிட்ட கை ....... நம்மை ஆக்கி விட்ட கை
உழைக்கும் கைகளே .உருவாக்கும் கைகளே
இது நாட்டை காக்கும கை
இரண்டு கைகள் நான்கானால் ...
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ....
எனக்கு தெரிந்த சில பாடல்களை சொல்லியுள்ளேன் . நண்பர்கள் தொடரலாம் .....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th September 2014, 07:12 PM
#2536

Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணாஜி,
'ரங்கா' படக்கதை பற்றிய பதிவு படித்தேன். நன்றி! ஆனால் கலைஞானம் தூயவனிடம் கொடுத்த கதைக்கும், ரங்கா படத்தில் தூயவன் கொடுத்துள்ள ஸ்க்ரீன்பிளேவிற்கும் மலையளவு வித்தியாசம்.
கதையின் அடிப்படைக் கருவை மட்டுமே எடுத்துக் கொண்டு ரஜனிக்கேற்ப 'ரங்கா' கதை மாற்றப்பட்டுள்ளது. (பில்லா மாயை வேறு அப்போது ரொம்ப ஜாஸ்தி) ரங்கா படமே ஒரு அன்புத் தம்பதியரின் குழந்தையை மையமாகக் கொண்டு அதை ரஜனி கடத்த முயற்சிப்பது, கராத்தே மணி மனம் திருந்தி அந்த குழந்தைக்கு பாடிகார்டாக இருந்து காப்பாற்ற முயற்சி செய்வது எனப் போகும்.
நீங்கள் பதிந்துள்ள பதிவு சில மறைந்துள்ள உண்மைகளை உணர்த்துவதாகத் தெரிகிறது. இரண்டாவது எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கு என்றும் தெரியவில்லை.
நடிகர் திலகம் பற்றிய 'பாசமலர்' மோகன் பற்றிய பதிவுக்கு நன்றி கிருஷ்ணா சார். . மோகன் பற்றிய பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
வாசு சார்
ரங்கா பற்றி நீங்கள் சொல்லிய கருத்து 100% உண்மை
இதே மாதிரி தினத்தந்தி ஆரூர் தாஸ் அப்பஅப்ப அடிச்சு விடுறார்
நம்ம பார்த்த ரங்கா படம் வேறு .இரண்டாவது ரங்கா மிக பெரிய வெற்றி என்று வேறு சொல்லி இருக்கிறார் . மூன்று முகம் பெற்ற வெற்றியை விட ரங்கா பெற்ற வெற்றி சற்று குறைவு தான் .
உண்மைகள் வெளியில் வந்தால் நல்லது தானே
-
17th September 2014, 07:15 PM
#2537
Senior Member
Diamond Hubber
//உண்மைகள் வெளியில் வந்தால் நல்லது தானே//
கண்டிப்பாக கிருஷ்ணா சார்.
-
17th September 2014, 07:25 PM
#2538
Senior Member
Diamond Hubber
அவரே என் தெய்வம்
/Art-350.jpg)
விஜயகுமாரி, ஜெமினி, நாகேஷ், வரலஷ்மி நடித்தது.
அழகே உனக்கு குணமிரண்டு
என் அடிமை உனக்கு மனமிரண்டு
பி.பி.எஸ்.,ராட்சஸி பாடிய அருமையான பாடல். இப்பாடல் ஏற்கனவே இடம் பெற்றதா எனத் தெரியவில்லை.
பி.பி.எஸ் முதல் அடி பாடி முடித்தவுடன் ஈஸ்வரி ஹா ஹா ஹா என்று கொடுக்கும் ஹம்மிங் ஹல்லிக் கொண்டு போகும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th September 2014, 07:33 PM
#2539
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th September 2014, 07:35 PM
#2540
அருமை வாசு சார்
இசை அமைப்பு யாரு சார் பார்த்தசாரதி யா அல்லது மாமாவா
சி என் ஷனுமுகம் இயக்கம்
நல்ல முடிவு ,கற்பூரம் இப்படி படம் கொடுத்தவர்
Bookmarks