-
19th September 2014, 05:22 PM
#2731
மூன்று மணிநேரம் திரையில் ஓடும் கதையின் அடிப்படை உணர்வை மூன்று நிமிடம் ஒலிக்கும் பாடல் வெளிப்படுத்த முடியுமா? சில திரைப்பாடல்கள் அதை அற்புதமாகச் சாதித்து விடுகின்றன. இவ்வகைப் பாடல்களை ‘உணர்வுகளின் ஊர்வலம்’ என்று கூறிவிடலாம்.
அன்புக்குரிய மனைவியுடன் கலப்படமற்ற பாசத்துடன் பழகும் நண்பனைப் பலர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. திரை மட்டும் விதிவிலக்காக இருக்குமா? நண்பனைக் கோபித்துக் கொள்ளாமல் தன் மனைவி மீது சந்தேகப்படும் கதாநாயகன், காலம் கடந்து வருந்தும் உணர்வும், அம்மாதிரி சந்தர்ப்பங்களில் தன்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாத நண்பனை எண்ணி வருந்தும் கதாநாயகனின் உணர்வும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
இவ்வாறான உணர்வுச் சங்கமத்தின் இரு அம்சங்களை அழுத்தமாக வெளிப்படுத்தும் இந்தி, தமிழ்த் திரைப் பாடல்கள் அற்புதமானவை.
ராஜேஷ் கன்னா, மும்தாஜ்-சஞ்சீவ் குமார் ஆகியோருடன் இணைந்து நடித்த ‘ஆப் கி கசம்’ (உன் மேல் ஆணை) என்ற வெற்றிப் படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. ‘வாழ்வே மாயம்’ என்ற மலையாள வெற்றிப் படத்தின் தழுவல் இது. இப்படத்தின் இப்பாடலை எழுதியவர் ஆனந்த் பக்ஷி. இசை அமைப்பாளர் ஆர்.டி. பர்மன்.
பாடல்:
ஜிந்தகி கா சஃபர் மே குஜர் ஜாத்தே ஜோ மகாம்
வோ ஃபிர் நஹீன் ஆத்தே, வோ ஃபிர் நஹீன் ஆத்தே
ஃபூல் கில்த்தே ஹைன் லோ மில்த்தே ஹைன்
லேக்கின் பர்ஜா மே ஜோ ஃபூல் முர்ஜாத்தே ஹைன்
வோ பஹாரோன் ஆனே ஸே கில்த்தே... நஹீன்
பொருள்:
வாழ்க்கைப் பயணத்தில் தொலைந்துவிட்ட
நொடிக் கண்ணிகள் மீண்டும் வருவதில்லை
மீண்டும் வருவதில்லை.
பூக்கள் மலருகின்றன.
மனிதர்கள் கிடைக்கின்றனர்
ஆனால், மொட்டிலேயே
கருகிவிடும் பூக்கள்
பூக்கும் பருவம் வருவதால் மலர்வதில்லை.
சிலர் ஒரு தருணத்தில் (மற்றவர்களுடன்)
பிணங்கிவிடுகிறார்கள்
ஆயிரம் பேர் பின்னர் (நம்மிடம்) வந்தாலும்
அவர்களின் சந்திப்பு (மீண்டும்) கிடைப்பதில்லை
வாழ்நாள் முழுவதும் அவர்களின் பெயரைக்
கூவி அழைத்தாலும் அவர்கள்
மீண்டும் வருவதில்லை.
மீண்டும் வருவதில்லை.
கண்கள் ஏமாற்றும். கண்ணை நம்பாதே.
கேள் நண்பன் மீது கொள்ளும் சந்தேகம்
நட்புக்கு விரோதமாகும்.
நம் உள்ளத்தில் இது குடி புக
இடம் அளிக்காதீர்கள்
நாளை அல்லல்பட நேரிடும்
தடுத்து நிறுத்த வேண்டியவர்களை (தடுக்காமல்)
நோகடித்துப் போகவிடாதீர்கள்
அப்புறம் விரும்பும்வரை
ஆயிரம் அன்பு வணக்கங்களை அனுப்பினாலும்
அவர்கள் வர மாட்டார்கள். வர மாட்டார்கள்
காலை வருகிறது. இரவு கழிகிறது.
இப்படியே காலம் சென்றுகொண்டிருக்கிறது
நிற்பதில்லை ஒரு நிலையில் அது
முன்னோக்கிப் புறப்பட்டுச் செல்கிறது.
மனிதர்கள் சரியாகப் பார்க்க முடிவதற்குள்
திரையில் காட்சிகள் மாறிவிடுகின்றன.
ஒரு முறை கடந்து செல்லுகின்ற பகல்-இரவு
காலை- மாலை மீண்டும் வருவதில்லை
அவை மீண்டும் வருவதில்லை.
வாழ்க்கைப் பயணத்தில் தொலைந்துவிட்ட
நொடிக் கண்ணிகள் மீண்டும் வருவதில்லை
மீண்டும் வருவதில்லை.
இதே உணர்வுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் சிவாஜி கணேசன் நடித்த ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தின் பாடல் வெளிப்படுத்துகிறது. கண்ணதாசன் எழுதி, எம்.எஸ்.வி. இசையில் டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல் இது.
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
தண்ணீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
தண்ணீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை.
இரண்டு பாடல்களுமே ஒரே விதமான கதைப் பின்னணியைக் கொண்டிருப்பதோடு, வாழ்வின் பல்வேறு தருணங்களுக்கும் மனச் சிக்கல்களுக்கும் பொருந்தும்வண்ணம் இருப்பதையும் உணர முடியும். திரைப்படத்துக்குப் பாடல் எழுதும் கவிஞன் வாழ்வோடு கொள்ளும் நெருக்கமான உறவுதான் இத்தகைய தன்மையைச் சாத்தியப்படுத்துகிறது.


Thanks Tamil Hindu
Last edited by gkrishna; 19th September 2014 at 05:24 PM.
gkrishna
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th September 2014 05:22 PM
# ADS
Circuit advertisement
-
19th September 2014, 05:46 PM
#2732
சென்னையில் விஜயா - வாகினி என்ற புகழ்பெற்ற ஸ்டூடியோவை உருவாக்கிய பி. நாகிரெட்டி தயாரிப்பில், கே.வி. ரெட்டி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான படம் ‘மாயா பஜார்’. 1957 ஏப்ரலில் வெளியான இந்தப் படம் மகாபாரதத்தின் கிளைக்கதை ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தைப் பார்க்காதவர்களிடம்கூட ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலை இரண்டு வரிகள் பாடினால் “ஓ அந்தப் படமா?” என்று ஆச்சரியப்படுவார்கள். அந்த அளவுக்கு அந்தப் பாடலில் இடம்பெற்ற மாயாஜாலக் காட்சிகள் பட்டிதொட்டியெங்கும் பிரபலம். நீங்கள் இதுவரை பார்க்காத நவயுகவாசி என்றால் ஒரு சிங்கிள் ‘ஜெல்லி பீன்’ தொடுதலில் உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் யுடியூபில் பார்த்து ஆச்சரியப்படுங்கள்.
அந்தப் பாடலில் “ஹா…ஹா… ஹா..” என்ற கனத்த சிரிப்பொலியுடன் கடோத்கஜன் என்ற அரக்கனாக நடித்திருப்பார் எஸ்.வி. ரங்கா ராவ். கருப்பு வெள்ளை காலத்தின் பணக்காரக் கதாநாயகியின் கண்டிப்பான அப்பா, பண்ணையார் என்று கலக்கினாரே அதே ரங்காராவ்தான். கல்யாண சமையல் சாதம் பாடலில் ரங்கா ராவின் கையசைப்பிற்கு விருந்து உணவுகள் சமைத்து வைக்கப்பட்ட அண்டா, குண்டா உள்ளிட்ட உணவுப் பாத்திரங்கள் வரிசையாக அவர் அருகில் ஓடி வரும். பருமனான உடலுடன் இருக்கும் அவர், மொத்த விருந்தையும் சாப்பிடுவதற்காகத் தன் உருவத்தைப் பல மடங்கு பெரிதாக்கிக்கொள்வார். பெரிய தாம்பூலத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான லட்டுகள் புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேலெழுந்து அவர் வாய்க்குள் போய் வரிசையாக நுழையும். இந்தக் காட்சிகளை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே வியந்து ரசித்தார்கள்.
கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வளர்ச்சியுறாத அந்தக் கால கட்டத்தில் இவற்றை எப்படிச் சாத்தியப்படுத்தினார்கள்? கேமரா நகர்வுகள், கேமரா லென்ஸுகள் மற்றும் ஆப்டிகல் முறை ஆகிய தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்தி, காகிதத்தில் எழுதிய கற்பனையைக் காட்சியில் சாத்தியப்படுத்தினார்கள்.
Thanks Tamil Hindu
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th September 2014, 05:54 PM
#2733
Senior Member
Diamond Hubber
Gopu sir please see my p.m
-
19th September 2014, 05:56 PM
#2734
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா ஜி..
ஆப் கி கசம், பார்த்தால் பசி தீரும் இரு பாடல்களுமே கொஞ்சம் மனசைக் கலங்கடிக்கும் வகை. நடந்து கொண்டே நம்மையும் நடக்க வைக்கும் பாடல்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th September 2014, 05:58 PM
#2735
-
19th September 2014, 06:02 PM
#2736
ஆப் கி கசம் 'ஜெய் ஜெய் சிவ சங்கர் ' அந்நாளைய மேடை பாடல். எ வ ரமணன் மெல்லிசை கச்சேரியில் தவறாமல் இடம் பெரும் பாடல் .
கிஷோர்,லதா ஜோடி குரல்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கலக்கிய பாடல்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th September 2014, 09:27 PM
#2737
Junior Member
Regular Hubber
Dear Vasu Sir,Have you received my p.m.?
-
19th September 2014, 09:34 PM
#2738
Senior Member
Seasoned Hubber
கிருஷ்ணா ஜி
ஜனனி ஜனனி பாடலை பற்றிய பதிவு அருமை ..
ஸ்ரீராகவேந்திரர் மற்றும் தாய் மூகாம்பிகை
வாலி ஐயா எழுதியதே .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th September 2014, 09:35 PM
#2739
Senior Member
Seasoned Hubber
கோபால் ஜி நான் நிறைய பாடல்களை பதிவிட்டுவிட்டேன் என்று சொன்னதால் இனி மற்றவர்கள் பதிவுகளை ரசித்து கருத்துக்கள் சொல்லலாம் என நினைக்கிறேன்.. கொஞ்ச நாட்களுக்கு நோ பாடல் பதிவுகள்
-
19th September 2014, 09:38 PM
#2740
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
சென்னையில் விஜயா - வாகினி என்ற புகழ்பெற்ற ஸ்டூடியோவை உருவாக்கிய பி. நாகிரெட்டி தயாரிப்பில், கே.வி. ரெட்டி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான படம் ‘மாயா பஜார்’. 1957 ஏப்ரலில் வெளியான இந்தப் படம் மகாபாரதத்தின் கிளைக்கதை ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தைப் பார்க்காதவர்களிடம்கூட ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலை இரண்டு வரிகள் பாடினால் “ஓ அந்தப் படமா?” என்று ஆச்சரியப்படுவார்கள். அந்த அளவுக்கு அந்தப் பாடலில் இடம்பெற்ற மாயாஜாலக் காட்சிகள் பட்டிதொட்டியெங்கும் பிரபலம். நீங்கள் இதுவரை பார்க்காத நவயுகவாசி என்றால் ஒரு சிங்கிள் ‘ஜெல்லி பீன்’ தொடுதலில் உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் யுடியூபில் பார்த்து ஆச்சரியப்படுங்கள்.
அந்தப் பாடலில் “ஹா…ஹா… ஹா..” என்ற கனத்த சிரிப்பொலியுடன் கடோத்கஜன் என்ற அரக்கனாக நடித்திருப்பார் எஸ்.வி. ரங்கா ராவ். கருப்பு வெள்ளை காலத்தின் பணக்காரக் கதாநாயகியின் கண்டிப்பான அப்பா, பண்ணையார் என்று கலக்கினாரே அதே ரங்காராவ்தான். கல்யாண சமையல் சாதம் பாடலில் ரங்கா ராவின் கையசைப்பிற்கு விருந்து உணவுகள் சமைத்து வைக்கப்பட்ட அண்டா, குண்டா உள்ளிட்ட உணவுப் பாத்திரங்கள் வரிசையாக அவர் அருகில் ஓடி வரும். பருமனான உடலுடன் இருக்கும் அவர், மொத்த விருந்தையும் சாப்பிடுவதற்காகத் தன் உருவத்தைப் பல மடங்கு பெரிதாக்கிக்கொள்வார். பெரிய தாம்பூலத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான லட்டுகள் புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேலெழுந்து அவர் வாய்க்குள் போய் வரிசையாக நுழையும். இந்தக் காட்சிகளை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே வியந்து ரசித்தார்கள்.
கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வளர்ச்சியுறாத அந்தக் கால கட்டத்தில் இவற்றை எப்படிச் சாத்தியப்படுத்தினார்கள்? கேமரா நகர்வுகள், கேமரா லென்ஸுகள் மற்றும் ஆப்டிகல் முறை ஆகிய தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்தி, காகிதத்தில் எழுதிய கற்பனையைக் காட்சியில் சாத்தியப்படுத்தினார்கள்.
Thanks Tamil Hindu
மார்க்கஸ் பார்ட்லி மற்றும் பாபுபாய் மிஸ்த்ரி விட்டலாச்சார்யா போன்றோர் அன்றைய காலத்திலேயே அழகாக மாயாஜால வித்தைகளை நம்பும்விதமாக அழகாக செய்தனர், இன்றைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சிரிப்பு மூட்டுகிறதே ஒழிய திறம்பட ஒன்றும் இல்லை.
Bookmarks