-
20th September 2014, 09:29 AM
#2761
Junior Member
Newbie Hubber

Originally Posted by
esvee
முடிந்தால் உமக்கு தெரிந்த மனோராமாவை பற்றி விமர்சனம் செய்யவும் . அடுத்தவர் பதிவை
கண்டு மனம் வெதும்பி , புழுங்கி ,....பாவம் கோபால் . பரிதாப படுகிறேன் .
நான் மட்டும் இல்லையப்பா. வாசு போன்றவர்களுக்கும் சங்கடம்தான். எவ்வளவுதான் நாசுக்காக சொல்வது என்று பெருந்தன்மை காத்து வெதும்புகிறார்கள்.புழுங்குகிறார்கள்.நான் சொல்வது எப்போதுமே என் ஒருவனின் கருத்து மட்டுமல்ல நண்பரே. விஷயத்தை பாருங்கள்.சொன்னவனை விடுங்கள்.
-
20th September 2014 09:29 AM
# ADS
Circuit advertisement
-
20th September 2014, 09:32 AM
#2762
Senior Member
Veteran Hubber
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
20th September 2014, 09:48 AM
#2763
Junior Member
Platinum Hubber
நடிகர் திலகம் அனுப்பிய செய்தி ;

என் உயிர் ரசிகன் கோபால் . என் அண்ணன் எம்ஜிஆர் புகழ் பாடும் ரசிகர்களை கண்டால் ஏனோ
தேவை இல்லாமல் பதறுகிறான் . துடிக்கிறான் . தவிக்கிறான் தனிமையில் .. அது மட்டுமா என்
கோபாலுக்கு ஜெய்சங்கர் - விஸ்வநாதன் - ஜானகி - இன்னும் பலர் பிடிக்கவில்லை என்றால் தரமற்ற
முறையில் எல்லோரிடமும் வம்புக்கு சென்று வருவது வாடிக்கை .
பராசக்தி அருளால் விரைவில் என் கோபால் பூர்ண குணமடைய வாழ்த்துகிறேன்
கோபாலுக்காக என் விருப்ப பாடல் .
-
20th September 2014, 09:56 AM
#2764
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ராஜ்ராஜ் சார்.. தருணி யான். எந்துசெய்ய.. அழகாய் இருக்கிறது அல்லல் தீர்க்கும்பத்மனாபனோடு அன்போடு நீ செல்லு.. பாடல்..அர்த்தம் முழுக்கப் புரியவில்லை..படப்பாடலா அல்லது தனிப்பாடலா .. தாங்க்ஸ் க்ரீன் டீ எல்லாம் ஓகே.. ப்ராஜக்டப் படிச்சீங்களா இல்லையா..விட்டுப் போன வெண்ணிலா கொடுத்தீங்கன்னா பார்ட் டூ எழுதிடுவேன்!
புரட்டாசி சனிக்கிழமை என நினைவு படுத்தியமைக்கு நன்றி..பானுமதி குரல் வெகு இனிமை..ஒரு வேளை இளமையென்பதால் இருக்குமோ.. (பிற்கால ராமனுக்கு மன்னன் முடிபாட்டில் லாம் கொஞ்சம் கனத்த குரல் இருக்கும்) தாங்க்ஸ் மதுண்ணா..
இன்னொரு ஸ்ட்ராங்க் வாய்ஸ் கே.பி.எஸ் பாடல் நினைவுக்கு வருகிறது..
ஏழு மலையிருக்க நமக்கென்ன மனக்கவலை
மஞ்சள் உடை தரித்து நெற்றியில் நாமம் இட்டு மஞ்சள் உடையில் வெங்கட்ரமணா கோவிந்தா எனக் குரலிட்ட படியே செல்லும் கோஷ்டிகள் ம்ம் பார்த்தது எல்லாம் ஒருகாலத்தில்..
//கண்ணுக்குள் நூறு நிலவோ, மந்திரம் சொன்னேன், புத்தம்புது ஓலை, மாட்டு வண்டி சாலையிலே, சந்திக்கத் துடித்தேன்// வெங்க்கிராம்.. எனக்குப் பிடித்த பாட்டு கண்ணுக்குள் நூறு நிலவா (பிக்சரைஸேஷன் ஹாரிபிள்) புத்தம்புது ஓலைவரும் (பா..ச..தா சொர்ண புஷ்பம் அழகு!).. ஆனால் படம் நிஜம்மாகவே சொதப்பல் தான்.. பாரதிராஜா மேல் கோபம் தான் வந்தது.. இன்னும் கூட இருக்கிறது..சத்யராஜ் நன்றாகவே நடித்தாலும் விழலுக்கு இறைத்த நீர் தான்..
பாரதி ராஜாவின் மற்ற படங்கள் கண்களால் கைது செய், தாஜ்மகால் அன்னக் கொடிவேணாம் நான் அழுதுடுவேன்
மனோரமா லிஸ்ட் கொடுத்தீங்க ஓ.கே எஸ்வி சார்..ஆனா அதுக்காக எனக்குத் தெரிந்த மனோரமான்னுல்லாம் கட்டுரை எழுதணுமா.. நான் ஆட்டைக்கே வரலை! வேணும்னா எனக்குத்தெரிந்த ப்ரியா ஆனந்த், க்ருஷ்ணாஜிக்குத் தெரிந்த அஷா ந்னு வேணும்னா எழுதலாம்! 
கோபால் சார்.. நன்றி..மீண்டும் கூட்ட முயற்சிக்கிறேன்..
வாசு ஜி.. கோபுவுக்கு பி.எம் லாம் அனுப்பறீங்க.!...நாளைக்கு ப் ப்ரோக்ராம் ல நீங்க எப்படி இருப்பீங்க..என்ன கலர் சட்டை.. ஒன்பது மணி என்றால் இங்கு ஏழரை.. ஆஃபீஸிலிருந்து வந்துவிடுவேன்.பட் பார்க்க முடியுமா எனத் தெரிய்வில்லையூட்யூபில் தான்பார்க்கணும்..
ஹப்பாடி..இத்துடன் இன்றைய ஹோம் ஒர்க் முடிந்தது..
இந்த கத்ரிங்கற வாத்யம் டூயட்ல வந்ததுக்கப்புறம் தான் கத்ரி பத்தியே தெரியும் எனக்குஇதற்கு முன் பழைய படங்களில் உபயோகப் படுத்தப் பட்டு இருக்கிறதா..
Last edited by chinnakkannan; 20th September 2014 at 09:59 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th September 2014, 10:19 AM
#2765
Senior Member
Veteran Hubber
chinnakkaNNan: It was nice write up about veNNilaa. We are getting ready to leave for California. I will give you a few more veNNila songs later.
Tharuni jnan is a composition by Swati Tirunal. Meaning is available in swathithirunal website. It is the usual pleading - What will I do tharuni. He has forgotten me. You can guess the rest !
I don't think it was in any movie.
Since we are going to spend time with our grandchildren " paappaa paattu" may be appropriate for the next assignment beginning with Odi viLaiyaadu paappaa !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th September 2014, 11:26 AM
#2766
காலையில் வெங்கட நாராயணா ரோடு திருப்தி தேவஸ்தானம் செம கூட்டம் வண்டி ஓட்டவே முடியல (ஸ்கூட்டர்). புரட்டாசி சனிகிழமை
வந்து பார்த்தல் எஸ்வி சார் ஆரம்பித்து இருக்கிறார் . வாழ்க நீ எம்மான் .பொன்னியின் செல்வன் ஆழ்வார்கடியான் நினைவு வருகிறது .மது சார் வெங்கடசலபதி பாடலுக்கு நன்றி
எங்காத்து காரரும் கச்சேரிக்கு போறார் அப்படின்னு சில பேர் சொல்வாள் .
நானும் ஒரு பாட்டு அதை மாதிரி போடறேன்
Last edited by gkrishna; 20th September 2014 at 11:31 AM.
gkrishna
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th September 2014, 11:33 AM
#2767
எஸ்வி சார்
நடிகர் திலகம் போட்டோ அருமை அதை விட அருமை அதில் உள்ள தகவல்கள். நகைச்சுவையில் உள்ளம் கவர்ந்த மனோரமா பற்றிய தொகுப்பு செய்திகள் பழைய ஆவணகளுடன் தரும் போது ஒரு சுகம் தான்
-
20th September 2014, 11:42 AM
#2768

வேன்கிராம் sir ,சி கே சார்
கண்ணுக்குள் நூறு நிலவா பாடல் - ஷன்முகப்ரியாவின் இன்னொரு தளத்தை தெரிந்து கொள்ள வாய்த்த பாடல் .
'மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன' நயம் அக்மார்க் உடன் சுசீலாவின் கந்தர்வ குரல்
ஆண் பாவம் 'காதல் கசக்குதையா ' ராஜாவின் ஷன்முகப்ரியவை இன்னொரு தளத்தில் பயணிக்க வைக்கும் பாடல்
சாருலதா மணி அவர்கள் சென்னை காமராஜ் அரங்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திரு பாலசுப்ரமணியம் அவர்களுடன் இந்த பாடலை பாடிய நினைவு வந்தது .
-
20th September 2014, 11:43 AM
#2769
Senior Member
Senior Hubber
கறுப்பு உருவம்.. திடகாத்திரமான தேகம்..கண்களில் கொஞ்சம் அனுபவ அறிவு..இருபது வயதுக்கு அதிகம் தான்.. நான் சொல்வது என் கல்லூரி சினேகிதன் ரகுராமனைப் பற்றி..செல்லமாய் ஆர்க்யூப் என்றழைப்பேன்.(ஆர்.ரகுராம்)..
அந்த ரகுராம் ஒரு நாள் கல்லூரியில் “வாடா.. அபிராமின்னு புதுசா ஒரு தியேட்டர்..அதுல ஒரு நல்ல ஹிந்திப் படம் போகலாம்” எனக் கேட்க லவ்லெட்டர் கொடுத்த இளைஞனை முறைக்கும் இளைஞியைப் போல் முறைத்தேன்..
“டேய்.. எனக்கோ ஹிந்தி சுட்டும் வராது..உனக்குத் தெரியும்.. தியேட்டர்ல நான் என்ன பண்ண” “ச்சும்மா வாடா..பிகு பண்ணாம”என மூன்றாம் பீரியட் தமிழை வெட்டி விட்டு, தரதரவென்று பஸ்ஸில் இழுத்துச் சென்று கல்லூரியிலிருந்து 45 நிமிஷப் பயணத்தில் பெரியார் பஸ்ஸ்டாண்ட் வந்து அரக்கப் பரக்க 4ம் நம்பர் பெரியார் பேருந்து நிலையம் டு தெப்பக்குளம் பஸ் ஏறி அலங்கார் தியேட்ட்ருக்கு அடுத்த ஸ்டாப்பான அபிராமி என இறங்கி இருந்தபெட்டிக்கடையில் ‘அபிராமி’ என விசாரிக்க(அப்போ குணாவெல்லாம் வரவில்லை) புது தியேட்டராப்பு என எதிர் தெரிந்த சந்தினைக் காட்டினார் பெட்டிக்க்டைக்காரர்..
வாடா என ரகு அவசரப் படுத்த வேக வேகமாக சந்துகளில் புகுந்துபுறப்பட்டு தியேட்டரில் நுழைந்து ‘என்ன படம்டா..எனக்குப் பசிக்குதே” எல்லாம் உள்ள வாங்கித் தரேன் வா – படம் பேரு கர்ஸ் எனச் சொல்ல ஏண்டா என்னை சபிக்கிறே எனச் சொன்னதும் என்னை ரகுமுறைத்தது இன்னும் நினைவிருக்கிறது..
உள் நுழைந்து சந்தோஷமாய் சூடாய்க் கிடைத்த ஏதோ வடையோ சமோசாவோ உள்ளே தள்ளி தியேட்டரில் நுழைந்தது முதல் அவனைக் கலாய்த்துக் கொண்டுதானிருந்தேன்..
மூக்கும் முழியுமாய் குட்டிப் பெண்ணாய் லட்சணமாய் அவ்வப்போது குட்டைப் பாவாடையில் டினா முனிம், செவேலென்று வார்த்த ஸ்பெஷல் ரோஸ்ட் தோசை நிற்மாய் ரிஷிகபூர் என படம் புரிவதற்கு ஒன்றும் கஷ்டமில்லை தான்..இருந்தாலும் து சோல பரஸ்கி மே சத்ர பரஸ்கா என பாட ஆரம்பிக்க என்னடா அவ சோழ தேசத்தவ இவன் பல்லவன் கறானா என அப்பாவியாய் நான் கேட்க வெகுசீரியஸாய் படத்திலிருந்துகண்ணெடுக்காமல் ரகு பதில் சொன்னான்..- அவளுக்கு பதினாறு வயசு இவனுக்குபதினேழு வயசுங்கறாண்டா.. ஓம் சாந்தி ஓம் பாடலின் போது யாருடா அந்த சாந்தி..அதுபாட்டுடா.. இப்படியே பல விஷயங்கள் வாரிக்கொண்டிருந்தேன்..
பிற்காலத்தில் ஒருவருஷமோ இருவருஷமோ கழித்து எனக்குள் ஒருவன் பார்த்தபோது கர்ஸ் பார்த்த திருப்தி ஏற்படவில்லை..
முந்தா நாள் ஸீ க்ளாஸிக் சினிமாவில் கர்ஸ் பார்த்த போது இந்த நினைவெல்லாம் வர, கண்ணில் நீர் முட்டியது..ஏனெனில் நான்கு வருடம் முன்பே ரகு சடன் ஹார்ட் அட்டாக்கில் இறந்ததாய்க் கேள்விப் பட்டேன்..அதுவும் அவனைப் பார்த்தே பல வருடங்கள் இருக்கும்..என்றாவது ஒரு நாள் பார்க்கலாம் என்றிருந்த போது அந்த எ ஒ நா வராமலேயே போய்விடும் என நினைத்துக் கூட ப் பார்க்கவில்லை..
(சில மாதங்களுக்கு முன் முக நூலில் எழுதியது)
-
20th September 2014, 11:47 AM
#2770
Senior Member
Senior Hubber
யாருமே இல்லியா..அதான் இந்த சோக வெடி.. டினா முனிம் பாட்டுல்லாம் வருமே.
தேடி எடுத்துப் போட்டால் கிருஷ்ணா ஜி வந்துவிட்டார்..வாங்கோ..திருப்பதி சென்று..பாட்டு நல்லபாட்டு...
Bookmarks