-
19th September 2014, 09:44 AM
#21
இல்லை சி கே .நிச்சயம் படிக்கிறேன்.
எந்த திரியில் உள்ளது
'வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் '
-
19th September 2014 09:44 AM
# ADS
Circuit advertisement
-
19th September 2014, 11:00 AM
#22
Senior Member
Senior Hubber
இதே செக்*ஷன் தான்.. கோள்கள் என்ன செய்யும்னு தலைப்பு!
-
20th September 2014, 01:12 PM
#23
Senior Member
Senior Hubber
பாசுரம் பாடி வா தென்றலே
சின்னக் கண்ணன்…
ஏழு..
இன்று புரட்டாசி சனிக்கிழமை.. என்ன செய்யலாம்..திருவேங்கடத்தில் இருக்கும் பெருமாளை ச் சற்றே நினைக்கலாமா..
வேர்முதல் உச்சிவரை ஆட்கொண்ட வேங்கடவா
கோர்வையாய் இங்கே கேட்டிடுவேன் - நேர்பட
நெஞ்சில் நினைந்துருகி நித்தமும் நினைக்குமென்
பிஞ்சுமனம் தான்தழைக்க வா
வாவென்றால் வந்திருந்தாய் வாகாகப் பாய்சுருட்டிப்
போவென்றால் போன பெருமாளே – நாவெங்கும்
ஆர்வமாய் உச்சரித்தே ஆழ மனம்பதிப்பேன்
தீர்த்திடு என்வலியைத் தான்..
(ஓரிருக்கையில் பாய்சுருட்டிச் சென்று பின் வந்த பெருமாள்)
தானால் குழம்ப தகுந்த ரசமாக்க
தானை எடுக்கவுன் தாள்பணிவேன் – ஆனாலும்
வீற்றிருக்கும் கோலத்தில் வேங்கடவா உன்கண்ணால்
தீற்றி அருள்புரிந்தால் தேன்..
தேனாய்த் திதிக்கும் திருவுருவம் கண்டதனால்
மானாகத் துள்ளும் மனமும் – வீணான
எண்ணங்கள் போக்கியே ஏற்றங்கள் செய்யுமுனை
திண்ணமாய் வேண்டுமே பார்..
பார்க்கும் விழிகளிலே பற்றும் கருணையதும்
ஊற்றிலே பொங்கி உயர்ந்துவிழும் நீராக
ஆற்றிலே வெள்ளம் அலையடித்துச் செல்வதுபோல்
தேற்றுமே நெஞ்சத்தைத் தான்
தான் தான் எனைவிட்டு தக்கபடி போய்விடும்
தீண்டும் விழியினால் திண்ணமாய் – மீண்டும்
இருளது நெஞ்சினில் ஏகாமல் நிற்க
உருகுவேன் உன்பதத்தில் நான்..
*
ஆக வேண்டும் அருள் தரும் வேங்கட நாதனைப் பற்றி திருமங்கையாழ்வார் பாசுரத்திற்குப் போகுமுன் நம்மைப் பற்றி அனலைஸ் செய்து கொள்ளலாமா..சரி..என்னை ப் பற்றி நான் அனலைஸ் செய்து பார்த்தால்…
ஆவதென்று மனிதனாக ஆகிவிட்ட போதினில்
…ஆடியாடி அங்குமிங்கும் உழைத்துபல சேர்க்கையில்
ஆவலுடன் அல்லிமலர் விழியமுதம் பருகியே
..அன்புமிக இல்லறத்தில் பாதிநாட்கள் போய்விட
பாவமெனப் பலபுரிந்து பணம்சேர்த்தே நின்றதில்
…பக்குவமும் மறைந்துமனம் பாழ்மனமாய் ஆகிட
போவதென்ற கால(ம்)வந்த பொழுதினிலே நெஞ்சமும்
…பேரின்பப் பரம்பொருளின் பதத்தினையே நாடுதே..
நாம் என் செய்கிறோம் மனிதனாகப் பிறந்து விட்டோம்.. என்ன செய்வது பிழைக்கணுமே எனப் படித்து பட்டம் பெற்று வேலைசேர்கிறோம்..பின் எத்தனை அலைச்சல்கள், எத்தனைபொய்கள், எத்தனை வேஷங்கள், எத்தனை துன்ப இன்பங்கள் என வாழ்க்கை நம்மைச் சுழற்றிச் சுழற்றி ப் போடுகிறது.. பின் என்ன செய்யவேண்டியிருக்கிறது.. சமயத்தில் எதற்கடா இந்த மனிதப்பிறப்பென்று கூடத் தோன்றும்..
திருமங்கை ஆழ்வாரும் இந்தப் பாசுரத்தில் அதையே சொல்கிறார்..
நோற்றேன் பலபிறவி நுன்னைக்காண்பது ஓர்ஆசையினால்
ஏற்றேன் இப்பிறப்பே! இடர் உற்றனன் எம்பெருமான்
கோற்றேன் பாய்ந்தொழுகுங்க் குளிர்சோலைசூழ் வேங்கடவா
ஆற்றேன்வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே”
திருவேங்கடமாமலை எனப்படும் திருப்பதி எப்படி இருக்கிறது..கண்ணுக்குக் குளிர்ச்சியான மலர்களைக் கொண்ட சோலைகள் பல கொண்டு இருக்கிறது..அதுவும் அந்த மலர்களில் இருந்து மிக நிறையத் தேன் எடுத்து தேனீக்கள் கூடு கட்ட அந்தத் தேன்கூட்டிலிருந்து கொம்புத்தேன் வழிந்தோடும் வண்ணம் இருக்கின்றதாம்..
அப்படிப்பட்ட திருவேங்கட மலையில் இருக்கும் திருவேங்கடத்தானே.. அடியேன் பலப் பல பிறவிகள் எடுத்துபலவிதமான துன்பங்களை அனுபவித்தவன்.. பலப் பல வினைகளையும் செய்தவன்.. இந்தப் பிறப்போ உன்னைப் பார்க்கவேண்டும் உன்னுடைய அருள் பெறவேண்டும் என்பதனால் உனக்கே என்னை அர்ப்பணித்துவிட்டேன்..
பற்பல துன்பங்களையும் அடைந்துவிட்டேன்.. இவையெல்லாம் என்னால் தாங்கவும் முடியவில்லை..உன் தாள்களைச் சரணடைந்தேன்.. அடியேனை ஆட்கொண்டு அருள் செய்வாயாக
என்கிறார் திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில்..
அடுத்த பாசுரத்தில் சந்திக்கலாமா
(தொடரும்)
-
20th September 2014, 03:19 PM
#24
திருவாலி திருநகரி மன்னன் திருமங்கை பாசுரம் அருமை சி கே சார்
ஆவதென்று மனிதனாக ஆகிவிட்ட போதினில்
…ஆடியாடி அங்குமிங்கும் உழைத்துபல சேர்க்கையில்
ஆவலுடன் அல்லிமலர் விழியமுதம் பருகியே
..அன்புமிக இல்லறத்தில் பாதிநாட்கள் போய்விட
பாவமெனப் பலபுரிந்து பணம்சேர்த்தே நின்றதில்
…பக்குவமும் மறைந்துமனம் பாழ்மனமாய் ஆகிட
போவதென்ற கால(ம்)வந்த பொழுதினிலே நெஞ்சமும்
…பேரின்பப் பரம்பொருளின் பதத்தினையே நாடுதே..
இது சொந்த சாகித்யமா ?
-
20th September 2014, 05:16 PM
#25
Senior Member
Senior Hubber
தாங்க்ஸ்.கிருஷ்ணா சார்...//இது சொந்த சாகித்யமா ? // ஆமாம்.. அதிலென்ன சந்தேகம் கிருஷ்ணா சார்.இன்று எழுதியது. வெண்பாக்களும் என்னுடையவையே..அவை சில மாதங்களுக்கு முன் எழுதியவை..இங்கு உபயோகித்தேன்..
-
20th September 2014, 08:44 PM
#26
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
20th September 2014, 09:38 PM
#27
Senior Member
Senior Hubber
ம்ம்ம்.... // இந்த ம்ம்ம்க்கு அர்த்தம் புரியலை..அது கவிதைக்காக எழுதியது.. நான் ரொம்பப் பாவம்லாம்பண்ணலை பி.பிக்கா
-
21st September 2014, 08:19 AM
#28
Senior Member
Platinum Hubber
சொந்த சாஹித்தியம்னு தெரியுமாக்கும்ம்மம்ம்ம்ம்.........
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
21st September 2014, 04:17 PM
#29
Originally Posted by
pavalamani pragasam
சொந்த சாஹித்தியம்னு தெரியுமாக்கும்ம்மம்ம்ம்ம்.........
அருமை சி கே
நீங்கள் எவ்வளவு புண்ணியமான செயல்களை செய்து கொண்டு இருக்கிறீர்கள் . நீங்களாவது பாவம் செய்வதாவது
-
22nd September 2014, 11:52 AM
#30
Senior Member
Senior Hubber
நன்றி கிருஷ்ணா சார் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கு..எங்கு போனாலும் என்னை புரிந்து கொள்ளும் நண்பர்கள் வாய்த்தது/வாய்ப்பது நான் செய்த புண்ணியம்..இன்று மறுபடி வருகிறேன் இங்கு..ஈவ்னிங்க் முடிந்தால்..
Bookmarks