-
23rd September 2014, 07:58 PM
#11
Junior Member
Diamond Hubber
வியரசரின் வைரவரிகள்............
அக்காலத்தில் 1982ல் “இதயம் பேசுகிறது” இதழ் “கவியரசு கண்ணதாசனின் பாடல்களில் உங்களுக்குப் பிடித்தமான இரண்டு வரிகளை எழுதி அனுப்புங்கள்” என்று வாசகர்களைக் கேட்டுக் கொண்டது. உடனே எண்ணற்ற வாசகர்கள் இந்தப் பகுதிக்கு எழுதி அனுப்பி விட்டாரகள்.
அதில் எனக்குப் பிடித்த வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!!
1. அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதுமின்பம்
தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்........கவலை இல்லாத மனிதன்.
2.உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்---தலை
வணங்காமல் நீ வாழலாம் ....வேட்டைக்காரன்.
3.உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும். ....சூரியகாந்தி.
4.ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் அந்த நிலவு. ....ஆயிரத்தில் ஒருவன்.
5.ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விழைவது மழலையடா......வாழ்க்கைப்படகு
6.காலம் ஒருநாள் மாறும்--நம்
கவலைகள் யாவும் தீரும். ...பாவமன்னிப்பு.
7.சந்திரனைத் தேடிச்சென்று குடியிருப்போமா
தமிழுக்குச் சேதி சொல்லி அழைத்துக் கொள்வோமா..பறக்கும்பாவை.
8. சிரித்துச் சிரித்து என்னை சிறையிலிட்டாய்--கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய். ..தாய்சொல்லைத்தட்டாதே.
9. சொல்லென்றும் மொழியென்றும் பொருள்
..ஒன்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை..பாலும்பழமும்.
10.நீலவானம் போபங் கொண்டா நிலவு தேய்ந்தது..கண்ணா
நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது.....அவர்கள்
.................நிறைய வரிகள் உள்ளன. மீதி இன்னொரு நாளில்,,,,,
-
23rd September 2014 07:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks