-
25th September 2014, 05:10 AM
#1731
Junior Member
Veteran Hubber
நீயா நானா - என் பார்வையில்
சிவாஜி என்கிற அணு சக்தியை ஒன்றரை மணி துளி என்கிற மாத்திரையில் அடக்க முடியமா ?
ஆயிரம் பகுதி ஒளிபரப்பினாலும் முடியாது ...
சிவாஜியை இன்றைய இளைய சமுதாயத்துக்கு கொண்டு செல்வது குறித்து பதிவு செய்தது ..
redicover சிவாஜி....
இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து அனைத்து பரிமாணங்களை தொகுத்து ஆவணப் படுத்துவது , அதற்கான முயற்சியை இந்த தமிழ் சமூகம் செய்ய வேண்டும் என்பதை எடுத்து சொன்னது
சிவாஜிக்கும் அவரது ரசிகர்களுக்கும் நடிப்பு என்பதைத் தாண்டி அவர்கள் வாழ்க்கையில் சிவாஜி ஏற்படுத்திய பந்தம் பற்றி சொன்னது .....
நடிகர் திலகத்தை எப்படி ஆவண படுத்தி அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல போகிறோம்... என்பதை ..
இந்த பிறந்த நாளில் அறிவிப்பு வருமா என ஏங்கவைத்துள்ளது..
by SSS
Dear SSS. Your impressive posting is a reflection of the minds of millions of NT fans even as the birthday celebrations of the legend are getting geared up.
Ever since Paraasakthi was released, NT was a real star born to rule the arena of acting, became the legend by his inimitable acting traits and remains the Pole Star of World Cinema Galaxy for acting reference and guidance!
The Limelight thrown on many of his contemporaries like Marlon Brando and Charlton Heston or his predecessors like Charlie Chaplin, Ronald Coleman or Humphrey Bogart or any of the 'acting thirsty' present generation stars ....have been for a certain period only and there upon their memories got faded out but glimpses come and go only when some news about their era are published or telecast! Only very few stars continue to have the power of limelight even after their death, becoming legends forever and guiding the generations to come! NT remains the Pole Star and the guiding beacon forever, irrespective of the generation barriers....as established by such programmes like NEEEYA NAANAA a 'small step but a giant leap' kind of tribute to our legend at a right time. It is a good beginning, a potential seed sown and again a role model like the victorious KARNAN to be envied upon and be emulated by other fan bases too
Last edited by sivajisenthil; 25th September 2014 at 08:18 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
sss thanked for this post
-
25th September 2014 05:10 AM
# ADS
Circuit advertisement
-
25th September 2014, 07:21 AM
#1732
Junior Member
Newbie Hubber
நமது உலகத்திலேயே unique &Best product சரியாக marketing செய்ய படவில்லை.
அவருடைய வெவ்வேறு பாணியிலான,.நடிப்பு மற்றவர்களால் புரிந்து கொள்ள படாமல் ,பல குற்ற சாட்டுகள் சுமத்தி கொண்டிருந்தனர். அதை இந்த மாதிரி வெவ்வேறு school of Acting உலகம் தழுவிய அளவில் உள்ளது என்று சொல்லி, அவரை ,அவரது நடிப்பின் அளவற்ற எல்லைகளை கோட்பாடுகளின் படி விஞ்ஞான விளக்கம் கொடுத்தே ஆக வேண்டிய அவசியம்.Einstein கோட்பாட்டை அனைவரும் புரிந்து கொள்ள முடியாதே?
மற்ற நடிகர்களை ,sampling முறையில் ஒரே படத்தில் திறமையை அளந்து விடலாம்.ஆனால் நடிகர்திலகத்தை தொடருபவர்கள் மட்டுமே அவரை புரிந்து கொள்ள முடியும் .
அவ்வாறு தொடர நினைப்பவர்களுக்கு நமது shoddy way of movie making ஒரு தடை.அவருக்காக மட்டுமே படம் பார்க்கும் பொறுமை நமக்கு மட்டுமே இருக்கும்.
அவருடைய ஆற்றலுக்கு ஈடு கொடுக்கும் இயக்குனர்களோ,கதாசிரியர்களோ நம்மிடையே இல்லை.(தில்லானா தவிர) அவருடைய மிக சிறந்தவை பெங்காலி,கேரளா ,hollywood இலிருந்து வந்தவையே.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
25th September 2014, 07:55 AM
#1733
Senior Member
Seasoned Hubber
எந்தக் கோணத்தில் அணுகினாலும் சிறந்த பரிமாணத்தைக் கொடுக்கக் கூடிய படைப்பு...
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் சிறந்த தோற்றத்தை அளிக்கக் கூடிய அமைப்பு...
எந்தப் பாத்திரமானாலும் அதனுடைய தன்மையில் அணுகக் கூடிய நடிப்பு...
இலக்கணம் என்பதற்கே இலக்கணம் வகுத்தவர்..
கோபால் சொல்வது போல் நடிப்பிற்கென்று பல பள்ளிகள் பல நாடுகளில் இருந்தாலும் அவற்றில் ஏதாவத Orientation இருக்கும்... ஏதாவது ஒரு நாடு, மொழி, கலாச்சாரம் இவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வகைக்கு மட்டும் பொருந்தும் வகையில் இருக்கும்..
ஒவ்வொரு School of Actingகும் unconditional, uniform என்று பரவலாக பொதுவாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஆனால்
Sivaji Ganesan School of Acting மட்டுமே பொதுவானது. அவருடைய நடிப்பு பாத்திரம் சார்ந்தது. ஏற்ற பாத்திரத்தின் கலாச்சாரம், சமூக நெறி, வாழ்க்கை முறை, பொருளாதார அடிப்படை என பல்வேறு செறிவுகள் நிறைந்த காரணத்தால் அது ஒரு இலக்கணமாகிறது. ஒவ்வொரு நடிகனும் ஏன் நடிகர் திலகத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கான விடையும் அந்த நடிப்பிலேயே இருக்கிறது.
வேற்று மொழிக் கதையானாலும் வேற்று மொழிப் பாத்திரமானாலும் அதனை localise ஆக உருமாற்றி அந்தப் பாத்திரம் சார்ந்த பல்வேறு கூறுகளை அதனுள் புகுத்தி அதன் மூலம் அந்தப் பாத்திரத்தை ஆடியன்ஸுடன் ஒன்றிப் போக வைக்கும் சாத்தியத்தை அளிப்பது நடிகர் திலகத்தால் மட்டுமே முடிந்த ஒன்றாகும். இந்த இலக்கணத்தைப் பின்பற்றினாலே ஒரு நடிகன் தன்னுடைய நடிப்பில் வெற்றி பெற்று விடலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
25th September 2014, 08:55 AM
#1734
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகம் ஒரு உளவியல் அதிசயம்
சிவாஜி கணேசன் ஒரு நடிப்புப் பள்ளி ... அதுவும் அவருடைய நடிப்பிலக்கணம் யூனிவெர்சல் எனப்படும் உலக அடிப்படையிலானது என்பதற்கு ஓர் உதாரணம் இதோ இந்த கட்டபொம்மன் காட்சி..
ஒரு சில நிபந்தனைகள் அல்லது அணுகுமுறைகளுடன் இக்காட்சியைப் பார்க்கவும்.
குறிப்பு- காட்சி 0.50 நிமிடத்திலிருந்து துவங்குகிறது.
1. இதில் நடித்திருப்பது சிவாஜி கணேசன் என்பதை முதலில் மறந்து விடவும். இது நிபந்தனை என்றாலும் இந்த நிபந்தனை தங்களுடைய முயற்சி இல்லாமலேயே தானாகவே நிறைவேறிவிடும்.
2. எந்த உணர்ச்சியையும் வலுக்கட்டாயமாக கொண்டு வரவேண்டாம். அதற்காக முயற்சிக்க வேண்டாம். ஒரு விமர்சகராக இருக்க வேண்டும் என்கிற பிரயத்தனத்தை நீங்கள் எடுத்தீர்களானால் தோற்றுப் போவீர்கள்.
இப்போது இக்காட்சியைப் பாருங்கள்.
கட்டபொம்மன் வரும்போது அந்த நடையை கவனியுங்கள். ஒரு ஆணவம் இதில் வெளிப்படும். இதில் சராசரி மனித இயல்பு வெளிப்படுகிறது. இது உலகத்தில் அத்தனை மொழிகளுக்கும் பொருந்தும் அத்தனை கலைகளும் இதில் பிரதிபலிக்கும், சினிமா உள்பட.
அவருக்கு இருக்கையில்லை. வெள்ளைக்காரன் நிற்க வைத்துப் பேசுகிறான்.
இப்போது அவர் முகததை கவனியுங்கள். அங்கும் இங்கும் பார்க்கிறார். அவர் தேடுவது ஆசனத்தை மட்டுமல்ல. மனிதாபிமானத்தையும் தான். அதுவும் அந்தக் கண்களில் யாராவது பார்க்கிறார்களா என்கிற சுயமரியாதை கலந்த எச்சரிக்கை உணர்வும் வெளிப்படும்.
பரங்கியன் எழுந்திருக்கிறான். இது தான் சமயம் என சமயோசிதமாக அந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அவன் சொல்லும் வரையில் காத்திருக்காமல் அமர்கிறார்.
இந்த இடத்தில் அந்த மன்னனுடைய சுய கௌரவம் நிலை நிறுத்தப்படுகிறது. அவனுடைய ஆளுமை எடுத்தியம்பப் படுகிறது.
உடனே அந்த துரை தன் பணியாளிடம் ஆசனத்தை கொண்டு வரச் சொல்லி அமர்வதோடு, மறக்காமல் நன்றியும் சொல்கிறான். இந்த இடத்தில் அந்தப் பாத்திரத்தின் தன்மை வெளிக்காட்டப் படுகிறது. தன் பணியாளுக்கு நன்றி சொல்வதன் மூலம் அவனை மனிதாபிமானம் உள்ளவனாகக் காட்டுவதோடு கட்டபொம்மனை அவமானப் படுத்த வேண்டும் என்கிற அவன் நோக்கமும் இயக்குநரால் சொல்லப் படுகிறது.
இப்போது தான் இந்த உலகப் புகழ் பெற்ற உரையாடல் தொடங்குகிறது.
இந்த உரையாடல் ஏன் எதுகை மோனையுடன் இலக்கண சுத்தியாக சொல்லப் பட வேண்டும்... சாதாரணமாக சொல்லி விட வேண்டியது தானே என்ற கேள்வி உடனே எழும்.
இதற்கு விடை தான் இந்தப் படமே... கட்டபொம்மன் காலத்தில் நிலவிய மொழியில் colloquialism இருந்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் ராஜ பரம்பரையில் வந்தவர்கள் மொழி சுத்தமாக பேசுவார்கள். கொச்சை மொழி வழக்கு அவர்களிடத்தில் இருக்காது என்பது தான் தமிழ் வரலாறு என பல நூல்களில் படித்திருக்கிறோம். அந்த அடிப்படையில் பார்த்தால் இது கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு எனக் கொள்ளலாம்.
வெறுமனே வந்து subtle ஆக விவாதம் இல்லாமல் சொல்லி விட்டுப் போய் விடலாம். ஆனால் அந்தப் பாத்திரம் மனதில் நிற்காது. அதனுடைய குணங்கள் வலியுறுத்தப் படாது.
கைகளை அந்த மொழிக்கேற்றவாறு நீட்டியும் மடக்கியும் தன் கருத்தை ஆழமாக வெளிப்படுத்தும் அந்த நேரத்தில் நீங்கள் உங்களை மறந்து விடுவீர்கள். உங்கள் சுற்றத்தை மறந்து விடுவீர்கள். உங்களைச் சுற்றி என்ன உள்ளது என்பது மறந்து விடும். மொத்தத்தில் தாங்கள் பயணிக்கும் உலகமே வேறாக இருக்கும்.
இந்த உளவியல் தாக்கமே நடிகர் திலகத்தின் வெற்றி...
இந்த தாக்கத்தின் வெளிப்பாடு தான் இந்தியாவிலேயே முதன் முதலாக வெளிநாட்டில் சிறந்த நடிகருக்கான விருதாக அமைந்தது.
ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கான பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் திலகம் பெறக் காரணமாக அமைந்தது படம் மட்டுமல்ல.. அதனுள் நடிகர் திலகம் ஏற்படுத்திய ஒரு புதிய நெறி, பார்ப்பவர்களை தன்னிலை மறக்கச் செய்யும் உளவியல் தாக்கம், விமர்சகர் என்ற பார்வையை முற்றிலும் மறக்கச் செய்யும் Hypnotism.
இந்த ஹிப்னாடிஸத்தில் மூழ்காதவர்கள் யாருளர் இவ்வுலகில்..
This is why Sivaji Ganesan became a School of Acting in Himself
Last edited by RAGHAVENDRA; 25th September 2014 at 09:03 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
25th September 2014, 09:44 AM
#1735
Junior Member
Seasoned Hubber
Ondra Iranda Eduthu Solla. In Each and every film he had changed his body language, modulation,the appearance. That itself enough to showcase
why our NT school of acing is relevent forever. If we showcase the same properly in the world forum they will definitely amazed and astonished by
our NT's performance the best example is Deiva Magan.
Regards
-
25th September 2014, 10:01 AM
#1736
Junior Member
Regular Hubber
இராகவேந்தர் சார்,
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியம் என்றாலே உடன்
மனத்திரையில் ஓடும் காட்சியினை விழித்திரைக்கு அளித்திட்டமைக்கு பல
கோடி நன்றிகள்.
கோபு.
-
25th September 2014, 10:44 AM
#1737
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th September 2014, 10:55 AM
#1738
Junior Member
Senior Hubber
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 3 Thanks, 4 Likes
-
25th September 2014, 10:55 AM
#1739
Junior Member
Veteran Hubber
நடிகர் திலகம் அவர்கள் தனது நடிப்பில் ஒரு பகுதியாக வசன உச்சரிப்பில் அதன் காட்சியமைப்பில் இப்படி ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தினார் என்றால், அதே போல ஒவ்வொரு பாடகருக்கும் கூட இவர் வாயசைக்கும் விதம் இருக்கிறதே அது வசனத்தை விட ஒரு படி மேலாக இருக்கும்.
உதாரணமாக . நடிகர் திலகம் அவர்களின் ஆண்மை மிகுந்த குரல் கிட்டத்தட்ட TMS அவர்கள் குரலுடன் ஒப்பிடலாம்.
ஆகவே TMS என்ற தெய்வ பாடகரை விட்டுவிடுவோம்.
ஆனால் திரு SPB அவர்களின் பாடல்களை எடுத்துகொண்டோமே என்றால் ...அவர் நடிகர் திலகம் அவர்களுக்கு பாடிய முதல் பாடல் சிகரம் தொட்ட பாடல் போட்டு வைத்த முகமோ....!
அந்த பாடல் முதல் பல பாடல்கள் பாடியிருக்கிறார்...ஜல்லிக்கட்டு வரை ! வருடங்கள் ஆக ஆக நடிகர் திலகம் அவர்கள் திரு SPB அவர்கள் பாடலுக்கு வாயசைக்கும் விதம் SPB அவர்களின் குரல் மாற்றத்திற்கு ஏற்ப அமைந்திருக்கும்...!
கவனித்து பாருங்கள் ...அந்த அதிசய நடிப்பு புரியும் !
Sumathi En Sundari
RAJA
Gouravam
Paatum Bharathamum
Thirisoolam
Naan Vaazha Vaippen
Pattaakaththi Bhairavan
many more in between
VAAZHKAI
Anbulla Appa
Jallikattu
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
25th September 2014, 10:58 AM
#1740
Junior Member
Senior Hubber
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
Bookmarks