-
5th October 2014, 12:32 PM
#3811
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
பொங்கும் பூம்புனல்
இன்றைய பொழுதைத் துள்ளல் மயமாக்கும் பாடல்.. கேட்ட உடனே எழுந்து ஆட வைக்கும்.. எப்பேர்ப்பட்ட சிடுமூஞ்சியையும் ஆடவைக்கும் பாடல்.. இன்றைய குத்துப் பாட்டுக்கெல்லாம் முன்னோடி.. ஆனால் இதில் ஒரு அர்த்தமிருக்கும்.. இனிமைய இருக்கும்.. உணர்விருக்கும்...
சீர்காழி கோவிந்தராஜன் இசையரசியின் குரலில் திரை இசைத்திலகம் இசையில் ... சூப்பர் டூப்பர் பாட்டு பிள்ளைக்கனியமுது படத்திலிருந்து.
முடிகிறதே என நீங்கள் வருத்தப்படுவது நிச்சயம்.
'பிள்ளைக்கனியமுது' படத்திலிருந்து
'காக்காய்க்கும் காக்காய்க்கும் கல்யாணமாம்'
கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்'
'சித்திரைத் திருநாளாம் மருதையிலே
நாம சுத்தி சுத்தி பார்த்திடலாம் குருதையிலே'
எஸ்.எஸ்.ஆர், ஈ.வி.சரோஜாவின் பொய்க்கால் குதிரை ஆட்டம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th October 2014 12:32 PM
# ADS
Circuit advertisement
-
5th October 2014, 12:36 PM
#3812
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்!
ஞாயிறு காலை வணக்கம். வாங்க வாங்க என் வாய் நிறைய வரவேற்கும்
வாசுதேவன்.
-
5th October 2014, 12:38 PM
#3813
அந்த காலங்களில் மகாபாரத கதை சொல்கிறேன் என்று ப்ரம்ஹஸ்ரீ ப்ரம்ஹசாரி ...... என்று ஒருவர் ஊர் ஊராக சென்று 'மக்களே கல்யாணம் பண்ணிகாதீங்க ப்ரம்ஹசாரியாக வாழுங்க திருந்துங்க இல்லையேல் நீங்கள் உருப்பட மாட்டர்கள்' என்று பிடி சாபம் கொடுத்து விட்டு வேறு ஊருக்கு சென்று அங்காவது மகாபாரத கதை சொல்கிறாரா என்று பார்த்தால் அங்கும் இது போன்று சாபத்தை கொடுத்து விட்டு இறுதியில் என்ன ஆனார் என்று பார்த்தால் கல்யாணம் செய்து கொண்டு 'குடியும்' குடித்தனமாக வாழ்ந்து நிம்மதியாக இருக்கிறார் .
-
5th October 2014, 12:39 PM
#3814
எல்லா பதிவர்களுக்கும் ஒரு சின்ன வேண்டுகோள்
இங்கே நான் கட் அண்ட் பேஸ்ட் பதிவு போடுவதில் திரு கோபால் அவர்களுக்கு உடன்பாடு இல்லை அது போல் வேறு சிலருக்கும் உடன்பாடு இல்லை என்று திரு கோபால் இன்று பதிவு இட்டுருக்கிறார் .இதுவாவது பரவாய் இல்லை 30/09/14 அன்று நான் இடும் பதிவுகள் எல்லாம் 'நரிக்குறவன் வாந்தி எடுத்த மாதிரி ' இருக்கு என்றும் மதுர கானம் பாகம் இரண்டு பலவீனம் ஆவதற்கு என்னுடைய பதிவுகள் காரணம் ஆகிவிட்டது என்று சொல்லி இருக்கிறார் .நிறைய சொந்த பதிவுகள் போட்டு உள்ளேன் இரண்டாவது பாகத்திலும் .
உண்மையில் நான் போடும் பதிவுகள் உங்களுக்கு ஏற்பு உடையது என்றால் தொடருகிறேன். இல்லையேல் விலகி கொள்ள தயாராக உள்ளேன் . தயவு செய்து இது மிரட்டல் அல்ல என்னுடைய வேண்டுகோள் தான். ஏற்கனவே திரு கோபு அவர்களும்,திரு எஸ்வி அவர்களும்,திரு ராஜேஷ் அவர்களும் தங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை என்று சொல்லி உள்ளார்கள் . இன்று திரு கோபால் அவர்கள் வாசு,முரளி,,சின்ன கண்ணன்,மது உட்பட என்று நால்வரின் பெயரை சொல்லி சொந்த சரக்கு தான் வேண்டும் இரவல் சரக்கு வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் . என்னால் எதை தர முடியுமோ அதை தான் தர முடியும். இந்த திரிக்கு வருவதே ஒரு நல்ல மனதை கவரும் மலரும் நினைவுகளுக்கு ஆக தான். இங்கும் வந்து stress தான் மிச்சம் என்றால் அந்த stress தேவை இல்லை தானே ?
மேலே உள்ள அனைத்தும் எனது சொந்த கருத்துகள் தான் . தமிழ் சங்கதியில் நானே டைப் அடித்தது
-
5th October 2014, 12:43 PM
#3815
வாசு சார்
அருமையான பாடல்களை நீங்களும் ராகவேந்தர் அவர்களும் வழங்கி இருக்கிறீர்கள் இன்று . இனிமேல் தான் ஒன்று ஒன்றாக கேட்கவேண்டும் .
கேட்டு விட்டு கருத்தை பதிவிடுகிறேன்
-
5th October 2014, 12:48 PM
#3816
Senior Member
Diamond Hubber
வண்டிப் பாடல்
காரு சவாரி ஜோரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
டிரைவரு சாரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
டி.ஆர்.ராமச்சந்திரனும், பத்மினி பிரியதர்ஷினியும் காரில் பயணித்து பாடும் உற்சாகப் பாடல்.
'விடிவெள்ளி' திரைப்படத்தில்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th October 2014, 12:51 PM
#3817
Senior Member
Diamond Hubber
நன்றி கிருஷ்ணா சார்!
நீங்கள் வருத்தப்பட வேண்டாம். தொடருங்கள். இதையெல்லாம் தாண்டித்தான் பலர் இங்கு வந்துள்ளோம். தங்கள் மனம் புண்பட்டிருப்பது தெரிகிறது. நண்பர்கள் அனைவருக்கும் நீங்கள் தொடர வேண்டும் என்பதே விருப்பம்.
-
5th October 2014, 01:02 PM
#3818
Senior Member
Diamond Hubber
'மாங்கலய பாக்கியம்'. 1958 ல் வெளிவந்த படம். இந்தப் படத்தில் மிக அபூர்வ பாடல் ஒன்று. விடுமுறை நாளில் அந்தக் கால அமிர்தப் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.
மாயமாகிய ஜாலம் தனிலே
வந்த மாது நானே உடனே மாறும் எந்தன்
உருவமாகுமே
ஆசையால் எனை யாரும் தொட்டால்
அருவமாகும்தானே
ஆனால் ஆடல் பாடல் எல்லாம் செய்குவேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th October 2014, 01:07 PM
#3819
நன்றி வாசு சார்
என் பதிவு உங்களை காயபடுத்தி இருந்தால் மன்னிக்கவும் . நிச்சயம் உங்கள் பாடல் தொகுப்புகளை ரசிக்கிறேன்
-
5th October 2014, 01:10 PM
#3820
vaasu sir
விஸ்வநாதன் ராமமூர்த்தி பற்றி திரு ஆரூர் தாஸ் தின தந்தி பத்திரிகையில் வெளியிட்டு இருந்த கருத்தை ஓட்டி ஒரு ஐயப்பாடு எழுந்தது அதை வெளியிட்டு இருந்தேன் . அவர்களது முதல் படம் ஜெனோவா என்று அதில் சொல்லி உள்ளார் . அவர்களது முதல் படம் பணமா(1952) ? அல்லது ஜெனோவா(1953) வா
Bookmarks