-
25th August 2014, 08:44 PM
#591
Junior Member
Newbie Hubber
Gopal sir.
Gopal Sir. There is another movie "Magalukkaga" in which Ravi sir acted with A.V.M Rajan.
Originally Posted by
Gopal,S.
From RPRajanayahem Blog on Ravi chandran
அவர் காலத்தில் வந்த மற்ற நடிகர்கள் மிகுந்த சிரமப்பட்டுத்தான் சினிமாவில் கதாநாயகனாக ஆக முடிந்தது.ஆனால் ரவிச்சந்திரன் மட்டும் முழுக்க அதிர்ஷ்டம் காரணமாக காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் அறிமுகமானார்.
காதலிக்க நேரமில்லையை அடுத்து இதயக்கமலம்(1965)அதேகண்கள்(1967), நான்(1967), மூன்றெழுத்து(1968) போன்ற கலர்ப்படங்களில் நடித்து கலர் கதாநாயகன் என்று கிராமத்தார் மத்தியில் பிரபலம்.
நடிகை காஞ்சனா ரசிகர்களால் கலர் காஞ்சனா என்றே அழைக்கப்பட்டார்.
ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன் இரண்டு பேரும் அன்றைக்கு இருமை எதிர்வுகள்!
ஜெய்சங்கருக்கு நடிக்க வந்து இரண்டு வருடத்தில் ஒரே ஒரு படம் பட்டணத்தில் பூதம்(1967) தான் அப்போது கலர் படம்.
அன்று வண்ணப்படம் என்பது கொஞ்சம் அபூர்வம்!
காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம் படங்களுக்குப் பிறகு இவரை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஒரு குழப்பம் இயக்குனர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும்.ராமண்ணாவின் படம் குமரிப்பெண்(1966) ரிலீஸ். ராணி பத்திரிக்கை ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு ரவிச்சந்திரனா? ராமச்சந்திரனா? என்று எம்.ஜி.ஆர் படம் பார்த்த பரவசம் ஏற்பட்டதாக எழுதி விட்டது!
அப்புறம் என்ன?
காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம், அதே கண்கள், நான் ஆகிய படங்கள் எப்போது பார்த்தாலும் சலிக்காதவை.
இதயக்கமலம் சீரியஸ் படம் தான்.
ஆனால் பி.பி.ஸ்ரீநிவாஸின்
நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ
தோள் கண்டேன், தோளே கண்டேன்
பி.சுசிலாவின் மோகன ராக மலர்கள் நனைந்தன பனியாலே போன்ற அற்புதமான பாடல்கள். எல்.வி.பிரசாத் இயக்கம். கே.ஆர்.விஜயா தான் நடித்த படங்களில் பிடித்த படமாக இதயக்கமலத்தை தான் சொல்வது வழக்கம்.
மதராஸ் டூ பாண்டிச்சேரி(1966),நினைவில் நின்றவள்(1967), உத்தரவின்றி உள்ளே வா (1971)முழு நீள நகைச்சுவைப் படங்கள்.
1971 வருடம் தான் ஜெய்சங்கருக்கு இரண்டாவது வண்ணப்படம் ரவிச்சந்திரனுடன் நடித்த நான்கு சுவர்கள், மூன்றாவது வண்ணப்படம் வீட்டுக்கு ஒரு பிள்ளை!
ஜெய்சங்கர் வில்லன் ரோல் செய்து முரட்டுக்காளை யிலிருந்து வேறு நடிகர் ஆன பின்னும் ரவிச்சந்திரன் அதே பாணியில் மாறிய போதும் ஜெய்சங்கருக்கு தான் அதிக வாய்ப்புகள் வாய்த்தன.
வில்லனாக ரவிச்சந்திரன் ஊமை விழிகளில் நடித்ததை மறக்கமுடியாது.அதே படத்தில் ஜெய்சங்கருக்கு குணச்சித்திர வேடம்- பி.பி.எஸ் பாடல் தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை நினைக்கலாமா?
காதலிக்க நேரமில்லை படத்தை 100 தடவை சித்ராலயா கோபுவும்,ரவிச்சந்திரனும் பார்த்தார்களாம்.
முத்துராமன்,ஏ.வி.எம்.ராஜன் போல கடுமையாய் போராடாமல், ஜெய்சங்கர் போல சிரமப்படாமல் ஒவர் நைட் ஹீரோ வான பிரமிப்பு ரவிச்சந்திரனை விட்டு கடைசி வரை நீங்கவில்லை.
சிவாஜியுடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை,கவரிமான்
ஜெமினி கணேசனுடன் காவியத்தலைவி,மாலதி,சினேகிதி, ரங்கராட்டினம்,
ஏ.வி.எம் ராஜனுடன் ஏன் ஜீவநாடி, புகுந்த வீடு.
நடன அசைவுகள் ரவிச்சந்திரன் நன்றாகச் செய்வார்.
கண்ணிரெண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
பூவைப்போலே சூடவா போர்வையாலே மூடவா
காதல் என்றால் என்னவென்று கண்ணை மூடி காணவா.....
ஆசை வெள்ளம் போகும்போது ஓசை கொஞ்சம் கேட்குமோ
டப்பாங்குத்து,குத்தாட்டம்
கண்ணுக்கு தெரியாதா நெஞ்சுக்குப் புரியாதா
பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பாத்து பயந்தாளாம்.
ராஜா கண்ணு போகாதடி நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி
சண்டைக் காட்சிகளில் உணர்ச்சி வசப்பட்டு அடித்தே விடுவார் என்று ஸ்டண்ட் நடிகர்கள் சொல்வார்கள்.
ரவிச்சந்திரன் நடித்த படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியிருக்கின்றன்.
காதலிக்க நேரமில்லை இந்தியில்ப்யார் கி ஜா -சசிகபூர், (முத்துராமன் ரோலில் கிஷோர்குமார்)
நான் இந்தியில் வாரிஸ்-ஜிதேந்திரா,
மதராஸ் டூ பாண்டிச்சேரி இந்தியில் பாம்பே டூ கோவா-அமிதாப் பச்சன்!
ரவிச்சந்திரன்முதல் மனைவி விமலாவுக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.
ஷீலா இரண்டாவது மனைவியான பின் மஞ்சள் குங்குமம்(1973) ரவிச்சந்திரன் அவர் டைரக்*ஷனில் நடித்தார். எஸ்.பி.பி யின் என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ சொல்லாமல் மறைத்தாளோராதா ராதா ராதா பாடல் இந்தப்படத்தில்.
ஷீலாவுக்கு ஒரு மகன்.ஜார்ஜ்.இந்த உறவு நீடிக்கவில்லை.
ஷீலாவின் உறவு காரணமாக ரவிச்சந்திரன் அன்று சில மலையாளப்படங்களில் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. முத்துராமனுக்கோ,ஜெய்சங்கருக்கோ,ஏவிஎம் ராஜனுக்கோ மலையாளப்பட கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்ததில்லை.
ரவிச்சந்திரனின் வாரிசுகள் ஜார்ஜும்,ஹம்ஸவர்த்தனும் சினிமாவில் முயற்சி செய்தும் நிலைத்து நிற்க முடியவில்லை.
ஹம்ஸவர்த்தனை திரையில் நிறுத்த பெரு முயற்சி ரவிச்சந்திரன் செய்தார். இவரே மகனுக்காக படம் தயாரித்தது சரி.ஆனால் இவரே அந்தப்படத்தை பிடிவாதமாக இயக்கியது தான் மிகப்பெரிய தவறு.
........
October 10, 2008
ரவிச்சந்திரன்
திருச்சி பீமநகர் ராஜா காலனி வீடு .
இங்கே நான் குடியிருந்த போது ( இந்த வீடு தான் சிலவருடம் கழித்து கார்கில் தியாகி மேஜர் சரவணன் குடும்பம் குடியேறி தேசியகல்லூரியில் படித்து பின்னால் அவர் மேஜர் ஆகி உயிர் துறந்த போது பிரபலமானது ) எதிரே கணபதி புரத்தின் பின் பகுதி .
அங்கே குடியிருந்த மாமிக்கு என் ஒரு வயது மகன் கீர்த்தியின் மீது மிகவும் பிரியம் . எந்நேரமும் குழந்தை அவர் வீட்டில் தான் .
குழந்தை கீர்த்தியை அவர் சீராட்டினார் . அப்போது அங்கே உள்ளவர்கள் சொல்வார்கள் . சென்ற வருடம் வரை அந்த மாமி அந்த தெருவில் குடியிருந்த நடிகர் ரவிச்சந்திரன் ( காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்தான் ) அவர்களின் இரண்டாவது மகன் ஹம்சவர்த்தனை தான் கொஞ்சி சீராட்டிகொண்டிருந்தார் . ரவிச்சந்திரன் குடும்பம் எதிரே யானை கட்டி மைதானம் தெருவில் குடி புகுந்தது .
அதன் பின் அந்த மாமிக்கு சீராட்டி பாராட்ட கிடைத்த குழந்தை தான் கீர்த்தி . மாமியும் 'எப்படியோ ரவிச்சந்திரன் குடும்பம் எதிர் தெரு போன பின் குழந்தை ஹம்சவர்தன் போய்விட்டானே என தவித்து போய் இருந்த போது ராஜநாயஹம் மகன் கீர்த்தி வந்து கவலையை தீர்த்து விட்டான் 'என சொல்வார்கள்.
பீம நகரில் கிருஷ்ணன் கோவிலுக்கு போனால் 'இப்போ தான் ரவிச்சந்திரன் வந்து பகவானை சேவிச்சிட்டு போறார் .' என அய்யர் சொல்வார் . மெயின் கார்ட் கெட் போனால் பர்மா பஜாரில்' இப்போ தான் நடிகர் ரவிச்சந்திரன் வந்துட்டு போனார் 'என்பார்கள் . நான் பார்த்ததில்லை.
ஆனால் நான் சிறுவனாய் இருக்கும்போது( 14 வயது )
கரூரில் ஒரு நாடகமொன்றிற்கு தலைமை தாங்கினார் நடிகர் ரவிச்சந்திரன் .
சரியான கூட்டம்.
அந்த நாடகம் பார்க்க ரவிச்சந்திரன் உட்கார்ந்த போது அவருக்கு பக்கத்தில் நான் தான் உட்கார்ந்தேன் .உட்கார வைக்கப்பட்டேன்.
ஒரு இரண்டு மணி நேரம் அவர் பக்கத்தில் நான் அமர்ந்திருந்தும் நடிகர் ரவிச்சந்திரன் என்னிடம் திரும்பி ஒரு வார்த்தை கூட பேசவில்லை .
' 'என்ன தம்பி , என்ன படிக்கிறே, உன் பேர் என்ன '-இப்படி கேட்பார் என சிறுவனாய் இருந்த நான் ரொம்ப ஏங்கினேன் .
ஆனால் ரவிச்சந்திரன் நிறைய சிகரெட் பிடித்துகொண்டே இருந்தார் .என்னிடம் பேசவே இல்லை!
-
25th August 2014 08:44 PM
# ADS
Circuit advertisement
-
28th August 2014, 11:13 AM
#592
Junior Member
Newbie Hubber
Courtesy-Mr.Vasudevan .
அன்று திரும்பிய இடங்களிலெல்லாம் எதிரொலித்த சூப்பர் ஹிட் பாடல். அனைத்து வானொலிகளிலும் தினம் தினம் ஒலித்த உற்சாகப் பாடல். பாகுபாடின்றி அனைவரும் ரசித்த ஒரு பாடல். பாலாவின் மணிமகுடத்தில் வைரமாய் பதிந்த பாடல். நம் நெஞ்சங்களில் நிறைந்த பாடல்.)[/b][/color][/size]
படம்: மஞ்சள் குங்குமம் (1973)
பாடல்: 'வாலிப கவிஞர்' வாலி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர் : பாலா )
கொள்ளை அழகு கொஞ்சும் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் பிளாக் அண்ட் ஒயிட்டில் ரொம்ப ரொம்ப சுந்தரனாகத் தெரிவார். உடம்பும் படு ஸ்லிம். சொந்த மனைவி ஷீலாவுடனான பாடல். ரவியைப் பொருத்தவரையில் இது டூயட். ஷீலாவைப் பொருத்தவரை இது சோகம்.
நர்ஸ் ஷீலாவை விரட்டி விரட்டிக் காதலிக்கும் ரவி. பிடி கொடுக்காத ஷீலா. ஆனால் தனக்கு ஏற்பட்ட நோயினால் மரண வாசலை எதிர் நோக்கும் ஷீலா. ஆனால் ரவியிடம் காதலை சூழ்நிலை காரணமாக சொல்லிவிட, ரவி மகிழ்ச்சித் தாண்டவம் ஆடி 'இதுவரை உன் காதலை என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தாயே' என்ற அர்த்தத்தில் பாட, ஆனால் அது ஷீலாவைத் தாக்கியுள்ள நோயை அவர் ரவியிடம் சொல்லாமல் மறைக்கும் அர்த்தத்தை நமக்கு உணர்த்தும் அருமையான வரிகள். ' என்னடா இது இப்படியா கதை'?! என்று படம் பார்த்தவர்கள் என்னை ஒரு பிடிபிடித்துவிடப் போகிறீர்கள்?
நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்தப் பாடலுக்கான காட்சியையும், பாடல் வரிகளையும் வைத்து என் மனதில் இப்படத்தின் கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தது. அது ஓரளவிற்கு சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். (கார்த்திக் சார் இருக்கும் போது எனக்கென்ன பயம்?))
நோயின் கொடுமை தாளாமல் தள்ளாடித் தள்ளாடி மயங்கி விழப் பார்க்கும் ஷீலா. ரவி தன்னிடம் நெருங்கி வரும்போது அதை மறைக்குமிடம் பரிதாபம். அது தெரியாமல் காதல் வெற்றி பெற்றதே என்று ரவியின் அளவு கடந்த உற்சாக வெள்ளம். 'பிளாக் அண்ட் பிளாக்' பேண்ட் ஷர்ட்டில் ரவி கண் கவருவார். அந்த நடையும், ஓட்டமும், துள்ளலும், சுறுசுறுப்பும் நம்மை 'ரவி ரவிதான்' என்று சந்தோஷக் கூப்பாடு போட வைக்கின்றன. முகம் வசீகரம். (ஷீலா ஏன் மயங்க மாட்டார்?)
நடிகர் திலகத்தை பாலோ பண்ணி அதே போல் விக், உடை வகையறாக்கள் என்றாலும் அது இவர் ஒருவருக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்த வில்லையே! அழகான நடிகர் திலக ஜெராக்ஸ். (திருப்பதி லட்டு கிடைக்காத பட்சத்தில் தி.நகர் லட்டு கிடைத்ததைப் போல)
பூங்காக்களிலும், மெரினாவிலும் படமாக்கப்பட்ட பாடல். உச்சி வெயிலில் படமாக்கியிருப்பார்கள். ரவி நிழலுருவம் மிகச் சிறியதாக விழும்.
பொலிவிழந்த ஷீலா பாடலுக்கு ஒரு மைனஸ் பாயிண்ட். கதை அப்படி இருக்கையில் ஒன்றும் செய்வதற்கில்லை.
வாலி கதை புரிந்து அதற்கேற்றவாறு பிளந்துகட்டியிருப்பார்.)
சங்கர் கணேஷின் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் இப்பாடலும் இடம் பெறலாம். அற்புதமான இசைக்கருவிகளை ஆர்ப்பாட்டமாக உபயோகித்து காலத்தால் அழியாத காவியப் பாடலாக இரட்டையர்கள் இதைத் தந்து விட்டார்கள். இசைக்கருவிகளின் உன்னத ஆர்ப்பாட்டம். முக்கியமாக பாடலினூடே நிறைந்து வரும் அந்த புல்லாங்குழல் ஓசை. பாடல் முடிவடைந்தவுடன் நிறைவு தரும் அந்த இனிய ஓசை.
(எப்படிப்பட்ட பாடல்களையெல்லாம் தந்த திறமைசாலிகள்! கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய பெருமை தேவருக்கே உண்டு. சும்மா ஆட்டுக்கும், மாட்டுக்கும் 'டொன் டொன் டொய்ங்' பின்னணி போட வைத்து உருப்பட விடாமல் செய்த புண்ணியம். அப்புறம் இளையராஜாவின் போட்டியை சமாளிக்க 'கன்னிப் பருவத்திலே' கொடுத்து அது ஹிட்டாகித் தொலைக்க, டிராக் மாறியதால் நமக்குத்தான் நஷ்டம் நிறைய.)
சரி! எல்லோரையும் சொல்லியாயிற்று. இப்பாடலின் ஹீரோ யார்? ரவியா? ரவி இரண்டாவதுதான்.)
'பாடும் நிலா' பாலுதான் இப்பாடலின் ஹீரோ. மனிதர் மனதை அப்படியே கொள்ளை கொண்டு விட்டார். வேகம், தெளிவு, வைப்ரேஷன்ஸ், கம்பீரம், உற்சாகம், சந்தோஷம், ஹைபிட்ச், குழைவு, நெளிவு, சுளிவு என்று அமர்க்களமோ அமர்க்களம். அதுவும் 'ராதா' என்று முடிக்கும் போது தரும் அதிர்வுகள் அருமை. 'சொல்ல நா... ணம் வந்ததோ' அந்த 'நா' வுக்குப் பிறகு சின்ன இடைவெளிவிட்டு 'ணம்' தொடருவது பிரமாதம். இது ரவியின் சொந்தப்படம் என்று சொல்வார்கள்.)
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
(இடையிசை அமர்க்களம்)
என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
வாடாத மலரே தேயாத நிலவே
வாடாத மலரே தேயாத நிலவே
நாள்தோறும் என்னோடு உறவாட வா
ராதா ஆஆ.......... ஆ
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
(ஷீலாவுக்கு வரப் போகும் ஆபத்தை முன்னமேயே அருமையாக உணர்த்தும் இசை)
கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே
காலத்தில் அழியாத எழில் வண்ணமே
கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
மாறாத நிலை கொண்ட மனம் உண்டு வா
ராதா ஆஆ.......... ஆ
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
உன் நெஞ்சம் பொன் நெஞ்சம் அறியாததோ
உனதெல்லாம் எனதென்று தெரியாததோ
பனி தூங்கும் விழியே
பால் போன்ற மனமே
பனி தூங்கும் விழியே
பால் போன்ற மனமே
வருங்காலம் நமதென்ற முடிவோடு வா
ராதா ஆஆ.......... ஆ
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th September 2014, 04:06 PM
#593
Junior Member
Veteran Hubber
An ideal teacher is one who continues to be a student in learning and updating his knowledge and wisdom for the ultimate benefit of a society. He acts as a candle that lights thousands of other lights to eliminate the darkness of illiteracy. Tributes to Dr.Servapalli Radhakrishnan, in whose memory we celebrate the Teachers' Day. Respectful Greetings to all our teachers who helped us reach this stage of our life!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th September 2014, 05:56 AM
#594
Junior Member
Newbie Hubber
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண் மீனால் பூவொன்று சீர்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை அணைக்க வேண்டும் கண்ணே
வானவீதி ஓரம் தெய்வ வீணை நாதம்
கேட்கும்போது மெல்ல கிள்ள வேண்டும் கன்னம்
தேவமாதர் கூட்டம் காம தேவன் ஆடம்
ஆடும்போது நாமும் ஆடிப் பார்க்க வேண்டும்
ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை
குளிக்கும்போது நானும் ஒளிந்து பார்க்க வேண்டும்
Last edited by Gopal.s; 8th September 2014 at 06:02 AM.
-
8th September 2014, 08:14 PM
#595
Junior Member
Newbie Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th September 2014, 08:17 PM
#596
Junior Member
Newbie Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th September 2014, 08:37 AM
#597
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th October 2014, 10:54 AM
#598
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th October 2014, 10:55 AM
#599
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th October 2014, 10:56 AM
#600
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks