11.10.1972 நமது புரட்சி நடிகர் திமுக வில் இருந்து வெளியேற்றப்பட்டார் கருணாநிதியால் , அன்று மட்டும் தலைவரை அவர் வெளியேற்றமால் இருந்து இருந்தால் நமது தமிழகம் பத்தாண்டு பொற்கால ஆட்சி தனை இழந்து இருக்கும் . நாம் எல்லோரும் ஒரு சிறந்த முதல்வரை இழந்து இருப்போம் ,
எல்லாவற்றிக்கும் மேலாக அ இ அ தி மு க என்ற மாபெரும் மக்கள் கட்சி இந்த உலகத்திற்கு வராமல் போயி இருக்கும். இப்படி பட்ட பெருமைகளை கொடுத்த கருணாநிதிக்கு நன்றி சொல்வோம் .
11.10.1972 முதல் 29.06.1977 வரை அவர் பட்ட இன்னல்கள் வேறு ஒருவருக்கு நேர்ந்து இருந்தால் நாட்டை விட்டு போயிருப்பான் . மக்கள் துணையோடு வந்த சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி என்னும் இமயத்தில் தனி ஒரு ஆளாக நின்று எதிரிகளை சுமார் பத்து வருடம் கோட்டை பக்கம் தலை காட்டாமல் செய்த எங்கள் புண்ணிய தலைவரின் புகழ் இன்று போல் என்றும் இருக்கவேண்டும் .
Bookmarks