-
11th October 2014, 02:54 PM
#181
Junior Member
Diamond Hubber
சொல்லடி அபிராமி - வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ...”
ஆதிபராசக்தி படத்தில் வரும் இந்தப் பாடலை
அபிராமி அந்தாதியை அடிப்படையாகக் கொண்டு எழுதியிருப்பார் கண்ணதாசன்...
ஆனால் இந்தப் பாடலின் இடையில் திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலக் குறவஞ்சி யில் இருந்தும் சில வரிகளை அழகாக எடுத்துக் மிக்ஸ் செய்திருக்கிறார் கண்ணதாசன்...
இதோ...இதில் முதல் ஆறு வரிகள் குற்றாலக் குறவஞ்சி ..
கடைசி நான்கு வரிகள் கண்ணதாசன்..
செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
ஜெயம் ஜெயம் என்றாட - இடை
சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனமென்று
குழைந்து குழைந்தாட – மலர்ப்...//
பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ..
# அழகாக கலந்திருக்கிறார் கண்ணதாசன்...
எதை எங்கே எப்படி மிக்ஸ் செய்ய வேண்டும் என்பதை அழகாக ...அளவாக செய்வதில் வல்லவர் கண்ணதாசன் ....
courtesy net
-
11th October 2014 02:54 PM
# ADS
Circuit advertisement
-
11th October 2014, 02:59 PM
#182
Junior Member
Diamond Hubber
மதுவின் தீமைகளை விளக்கி ஒரு பாடல் எம்.ஜி.ஆருக்கு தேவைப்பட்டது....பாடல் எழுத அவர் அழைத்தது
...........கண்ணதாசனை..!!!
கண்ணதாசன் எழுதினார் இப்படி..
மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !
அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே
நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது ந*ல்ல*வ*னும் தீய*வ*னே
கோப்பை ஏந்தும் போது..
எம்.ஜி.ஆருக்காக மதுவை குறை கூறி அப்படி எழுதிய
அதே கண்ணதாசன்தான்
இப்படியும் ஒரு காலத்தில் எழுதி இருந்தார்..
ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிரிய வேண்டும் - இல்லையென்றால்
என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான் ...
கண்ணதாசனுக்கு எப்படி வந்தது இந்த தமிழ் ஆளுமை..?
இந்த செட்டி மகனுக்கு இப்படி ஒரு சீர் கொடுத்த சீமாட்டி யார்..?
இதோ ..கண்ணதாசனின் காவிய வரிகள்...
வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி!
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே
உன்னைத் தவிர
உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!
courtesy net
-
11th October 2014, 03:16 PM
#183
சகோதரர் யுகேஷ் பாபு சார்
நன்றி நன்றி
மேலே சொல்ல வார்த்தைகளே இல்லை
நல்ல பல தகவல்களை சொல்லி திரியை சிறப்பு செய்து விட்டீர்கள்
மீண்டும் மீண்டும் நன்றி
-
11th October 2014, 03:30 PM
#184


இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி பாலிவுட்டை சேர்ந்த பல்துறை பிரபலங்கள் நேரிலும், தொலைபேசி, கைபேசி, இ-மெயில், டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் வாயிலாகவும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், மத்திய அரசின் உயரிய விருதகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ள அமிதாப் பச்சன், 1969-ம் ஆண்டில் இந்தி திரைப்பட உலகில் காலடி பதித்தார்.
அந்நாளின் இந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து 1971-ம் ஆண்டு இவர் நடித்த ‘ஆனந்த்’ திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம் அமைந்ததையடுத்து, 1973-ல் வெளியான ‘ஜஞ்சிர்’ படத்தில் அதிரடி கதாநாயகனாக அமிதாப் பச்சன் அறிமுகமானார்.
அதே ஆண்டில் நடிகை ஜெயாவை திருமணம் செய்த இவர், பாலிவுட் கதாநாயகர்களில் மிகவும் பிரபலமானவராக உலகளாவிய அளவில் அறியப்பட்டார். குடும்ப நண்பரான முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நெருக்கமாக நட்பு பாராட்டிய இவர், காங்கிரஸ் கட்சிக்காக பல தேர்தல்களின்போது தீவிர பிரசாரமும் செய்துள்ளார்.
190-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அமித்தாப் பச்சன் தற்போது, ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு நம் வாழ்த்துகள்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th October 2014, 03:31 PM
#185


இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி பாலிவுட்டை சேர்ந்த பல்துறை பிரபலங்கள் நேரிலும், தொலைபேசி, கைபேசி, இ-மெயில், டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் வாயிலாகவும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், மத்திய அரசின் உயரிய விருதகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ள அமிதாப் பச்சன், 1969-ம் ஆண்டில் இந்தி திரைப்பட உலகில் காலடி பதித்தார்.
அந்நாளின் இந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து 1971-ம் ஆண்டு இவர் நடித்த ஆனந்த் திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம் அமைந்ததையடுத்து, 1973-ல் வெளியான ஜஞ்சிர் படத்தில் அதிரடி கதாநாயகனாக அமிதாப் பச்சன் அறிமுகமானார்.
அதே ஆண்டில் நடிகை ஜெயாவை திருமணம் செய்த இவர், பாலிவுட் கதாநாயகர்களில் மிகவும் பிரபலமானவராக உலகளாவிய அளவில் அறியப்பட்டார். குடும்ப நண்பரான முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நெருக்கமாக நட்பு பாராட்டிய இவர், காங்கிரஸ் கட்சிக்காக பல தேர்தல்களின்போது தீவிர பிரசாரமும் செய்துள்ளார்.
190-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அமித்தாப் பச்சன் தற்போது, ஒரு தனியார் தொலைக்காட்சியில் கோன் பனேகா க்ரோர்பதி என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு நம் வாழ்த்துகள்
-
11th October 2014, 04:24 PM
#186
Junior Member
Diamond Hubber
வாலி ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருந்தார் ...
"தரை மேல் பிறக்க வைத்தான் "[படகோட்டி] பாடலின் சரணத்தை ,
முதலில் எழுதும்போது
"ஒருநாள் போவார்..ஒருநாள் வருவார்..ஒவ்வொரு நாளும் மரணம்..."என்று எழுதி இருந்தாராம்..
எம்.எஸ்.வி.கொஞ்சம் யோசித்து விட்டு "கவிஞரே...ஒரு வார்த்தை வெல்லும்..ஒரு வார்த்தை கொல்லும்..இந்த மரணம் என்ற வார்த்தையை கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாமா.?"எனக் கேட்டாராம்...வாலியும்.." ஒவ்வொரு நாளும் மரணம்.."என்பதை "ஒவ்வொரு நாளும் துயரம்.."என்று மாற்றிக் கொடுத்தாராம்..
ஆம்..மரணம் என்பதை வார்த்தைகளில் கூட , நாம் எல்லோரும் தவிர்க்கவே நினைக்கிறோம்...
ஆனால் வாழ்க்கையில்...?
courtesy net
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th October 2014, 04:27 PM
#187
Junior Member
Diamond Hubber
மஞ்சுளாவை ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு விதமாக வர்ணித்து பாடியிருக்கிறார்கள் ..
"உனை ரவிவர்மன் காணாமல் போனானடி
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலந்தானடி.."என்று முத்துராமன் பாடினார்...
[படைத்தானே பிரம்ம தேவன்/எல்லோரும் நல்லவரே]
"இலக்கிய ரசத்தோடு இலை மறை கனியோடு
ஒதுங்கிய உடையோடு குலுங்கிய வளையோடு
ஓவிய சீமாட்டி உரு வந்ததோ..."இது சிவாஜி ..[ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ..அவன்தான் மனிதன் ]
எல்லோரிலும் உச்சம் தொட்டவர் எம்ஜியார்தான்...
"மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்..."
//சில நடிகைகளின் கல்யாணம் கேலிக்குரியதாகவும்...கேள்விக்குறியாகவும் ஆகும் நிலையில் , முழுமையாக விஜயகுமாரோடு வாழ்ந்து முடித்த மஞ்சுளாவை பாராட்டியே ஆக வேண்டும்
courtesy facebook
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th October 2014, 04:31 PM
#188
Junior Member
Diamond Hubber
தி.நகரில் ஒரு ரெஸ்டாரண்டில் மாலை நேர அரையிருளில் அமர்ந்து நண்பன் ரவியோடு உணவு அருந்திக் கொண்டிருந்தேன்..எதிர்மேஜையில் ... அட..கவிஞர் முத்துலிங்கம்...நண்பன் ரவி ஆர்வமானான்...
" ஜான்....பிளீஸ்..அவர்கிட்ட கொஞ்சம் பேசுவோமே..."
கவிஞர் முத்துலிங்கம் அருகில் நாங்கள் அமர இடம் இல்லை...எங்கள் அருகே நிறைய இடம் இருந்தது...நான் கவிஞர் அருகே சென்று ,சற்று தயக்கத்துடன் கேட்க அவர் தயக்கமின்றி உடனே எங்களுடன் வந்து அமர்ந்தார்...நான் உண்மையை ஒத்துக் கொண்டேன்.."ஐயா ..உங்களை எங்களுக்குத் தெரியும்..ஆனா ..உங்க பாட்டெல்லாம் அவ்வளவா தெரியாது.."
"பரவாயில்லை "என்ற முத்துலிங்கம் அவர்கள் ,தாம் எழுதிய சில பாடல்களை நினைவுபடுத்தி சொன்னார்...
"மணி ஓசை கேட்டு எழுந்து(பயணங்கள் முடிவதில்லை)..ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ(பயணங்கள் முடிவதில்லை)..சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் (உதய கீதம்).."
அவர் பாடல்களை சொல்ல சொல்ல நண்பன் ரவி உற்சாகமானான்...ஒரு புதிய நூறு ரூபாய் நோட்டை எடுத்து .."சார்...இதில உங்க கையெழுத்து வேணும்.."என்று கவிஞரிடம் நீட்ட ,அவர் தடுத்து..இன்னும் சில தன் பாடல்களை சொன்னார்..
"சின்னஞ்சிறு கிளியே சித்திரப் பூவிழியே (முந்தானை முடிச்சு)
ஆறும் அது ஆழமில்லை (முதல் வசந்தம்) .. செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா (செந்தூரப்பூவே).."
நண்பன் ரவி உணர்ச்சிவசப்பட்டு மேலும் உற்சாகமாகி ,இப்போது ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து,மறுபடியும் கையெழுத்து கேட்க ,முத்துலிங்கம் இப்போதும் மறுத்து இன்னும் தன் பாடல்களை தொடர்ந்தார்....
"இதயம் போகுதே எனையே பிரிந்தே (புதிய வார்ப்புகள்).. டாடி டாடி ஓ மை டாடி (மவுன கீதங்கள்)... .தேவன் கோயில் தீபம் ஒன்று (நான் பாடும் பாடல்)...பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் (ஊருக்கு உழைப்பவன்)...மாஞ்சோலை கிளிதானோ (கிழக்கே போகும் ரயில் ).."..இப்போது நண்பன் ரவி எல்லை கடந்த உற்சாகத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அதில் கையெழுத்து இடச் சொன்னான்..கவிஞர் முத்துலிங்கம் அமைதியாக சொன்னார்..."நண்பரே..எம்ஜியார் எனக்கு அன்பை கொடுத்ததோடு ... சில பதவிகளும் கொடுத்து அழகு பார்த்தவர்..நான் முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.அதனால் சொல்கிறேன்..சட்டப்படி ரூபாய் நோட்டில் கையெழுத்து போடக் கூடாது ...ஒரு துண்டுக் காகிதம் கொடுங்கள்.."....கொடுத்தோம்...அவர் எழுதிய பாடலையே எழுதி கையெழுத்து இட்டுக் கொடுத்தார்..."அன்புக்கு நான் அடிமை ..தமிழ் பண்புக்கு நான் அடிமை.."
ரூபாய் நோட்டின் மதிப்பு மட்டும் அல்ல...கவிஞர் முத்துலிங்கத்தின் மதிப்பும் எங்களுக்கு முழுமையாக தெரிந்தது....
அன்புக்கு நாங்களும் அடிமை...!
courtesy net
-
11th October 2014, 04:36 PM
#189
Junior Member
Diamond Hubber
“அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை….”
யாருக்கும் வெட்கமில்லை படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் இவை...
நாத்திகத்தின் எல்லையைத் தொட்டு விட்டு வந்த ஒருவன் மீண்டும் ஆத்திகனாக மாறும்போது
ஆண்டவனிடம் அதிகமாய் உரிமை எடுத்துக் கொள்வான்....
நம் கண்ணதாசனைப் போல...
“க*ட*வுள் என் வாழ்வில் க*ட*ன்கார*ன்
க*வ*லைக*ள் தீர்ந்தால் க*ட*ன் தீரும்
ஏழைக*ள் வாழ்வில் விளையாடும்
இறைவா நீ கூட* குடிகார*ன்..”
தான் நாத்திகனாதைப் பற்றி கண்ணதாசன் வெளிப்படையாகவே இப்படிக் கூறினார்...
“மேடைகளில் நடைபெறும் வார்த்தை விளையாட்டுகளில் மயங்கி நாத்திகர்களானவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன்... `கருப்புச் சட்டைக்காரன்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டவன்..”
கண்ணதாசன் ..தி. கிரேட்...!!!
:” தெய்வம் என்றால் அது தெய்வம் ..
அது சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை...”
courtesy net
-
11th October 2014, 04:37 PM
#190
Senior Member
Senior Hubber
வாசு சார்.. சபதம் கதை, பற்றிய விவரிப்பு ஜோர். அதுவும் பாடல் கிடைக்காமல் கஷ்டப்பட்டு முழுப்படத்தையும் இட்டதற்கு தாங்க்ஸ்.. நான் நீங்கள் இட்ட பாட்டிலிருந்து முழுப் படத்தையும் பார்த்தேன்.. நன்றி..( இது வரை பார்த்தேனா என்றும் நினைவிலில்லை..இருந்தாலும் என் ஜாய்ட் த மூவி..
Last edited by chinnakkannan; 11th October 2014 at 08:43 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks