-
14th October 2014, 06:04 AM
#321
Senior Member
Veteran Hubber
Chittibabu
I attended a concert by Chittibabu about 25 years back. I did not expect that his end would come so soon.
It is sad!
I also remember buying a Chitti Babu LP for my father long time back.
Here is 'Chinnanchiru KiLiye' by Chittibabu.
I like VeeNaa. We have one at home. But, there is no teacher here! 
First veena concert I attended was by S.Balachander when he played at the centenary celebrations of my college in Kumbakonam. Time flies !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
14th October 2014 06:04 AM
# ADS
Circuit advertisement
-
14th October 2014, 06:35 AM
#322
Senior Member
Seasoned Hubber
சிட்டிபாபுவை மறக்க முடியுமா... என் தந்தை அறிமுகம் செய்த இந்த கலைஞர் கலைத்தாயின் வரப்பிரசாதம்.
டி. நகரில் இவரது வீட்டில் தான் எங்களது குடும்ப நண்பர் வாடகைக்கு இருந்தார். அப்பொழுது இவரை பார்த்து பேசியும் இருக்கிறேன்..
மறைவு ரொம்பவே அதிர்ச்சி .
அவரது மகனும் இசையமைப்பாளர் ... வாழ்க வளர்க
-
14th October 2014, 06:38 AM
#323
Senior Member
Seasoned Hubber
அங்கிள் எஸ்.பாலச்சந்தர், சிட்டிபாபு போன்ற வீணை வித்வான்களின் வாசிப்பை நேரில் கண்டு களித்த நீங்கள் அதிர்ஷ்டசாலி
-
14th October 2014, 07:34 AM
#324
Senior Member
Seasoned Hubber
தேனிசை தென்றலின் முத்துக்கள் -1
இசையரசியின் பல்வேறு பாடல்கள் , மற்றும் மற்ற மொழிகளின் பாடல்கள் பதிவிடும் வேளையில் நான் ரசித்த மற்ற கானங்களையும் அதாவது கொஞ்சம் புதிய (எனக்கு 90’ஏ புதுசுதான்) பாடல்களையும் பதிவிடலாம் என நினைக்கிறேன்...
90 ‘களின் இசைப்பற்றி பேசும் வேளையில் தேனிசை தென்றல் தேவாவை பற்றி பேசாமல் இருக்க முடியாது. கானா பாடல்கள், காப்பியிடித்தார் என்ற என்ன சொன்னாலும் மனுஷர் சில அருமையான மெலோடி பாடல்களை தந்திருக்கிறார் என்பது சத்தியம் .. அப்படி தேனிசை தென்றலின் இசையில் நான் ரசித்த (சில பாடல்கள் உங்களுக்கு புது அறிமுகமாக கூட இருக்கலாம்)பாடல்களை பதிவிடுகிறேன்.. கேட்டு கண்டு ரசியுங்கள்

முத்துக்கள் - பாகம் 1
89’ல் மனசுக்கேத்த மகராசா மூலம் அறிமுகமான் இவர் பல படங்களில் மிக இனிமையான பாடல்களை வழங்கியுள்ளார்.
அதேபோல் பாடகி ஸ்வர்ணலதாவிற்கு ரகுமானுக்கு அடுத்து நிறைய வாய்ப்புகள் கொடுத்தது தேவா அவர்கள்.
முரளி ஒரு அதிர்ஷடக்கார நடிகர். பாடல்கள் இவருக்கும் சரி மைக் மோகனுக்கும் சரி லட்டு போல அமைந்துவிடும் .. 90’களில் தேவா முரளிக்கு அள்ளி அள்ளி கொடுத்தார். அப்படி ஒரு பாடல் இதோ
உன்னுடன் படத்தில் நல்ல பாடல்கள் கொடுத்தார்
ஹரிஹரன் குரலில் வானம் தரையில் வந்து நின்றதே பாடல் மிகவும் பிரபலம்
கண்டுபிடி அவனை கண்டுபிடி - ஹரினி,பாலு
என்னை மிகவும் கவர்ந்த பாடல் உண்ணி கிருஷ்ணனும், ஸ்வர்ணலதாவும் பாடிய கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சிக்கூடும் புறா
வெட்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடிப்புறா
ஸ்வர்ணலதா பாடும் வரிகள் அருமை
நெஞ்சோடு வார்த்தைகளோ முண்டியடிக்கிறதே
நாவோடு வந்தவுடன் தந்தியடிக்கிறதே ..
கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா
கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா
நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே
நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே
இனி இருவரா இல்லை ஒருவரா
சிங்கார பூம்பாவை சிந்திக்கிறா
கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
உன் வாய் மலர் பூத்தால் என்ன
ஒரு வார்த்தை சொன்னால் என்ன
நீ பாலைவனத்தில் ஐஸாய் கரைவதென்ன
நீ கூட நடந்தால் என்ன
என்னைக் கொள்ளை அடித்தால் என்ன
நீ கடலில் பெய்த துளி போல் ஒளிவதென்ன
கண்ணால் யாசிக்கிறேன் காதல் சொன்னால் என்ன
நானும் யோசிக்கிறேன் அதை நீயா சொன்னால் என்ன
உன் பார்வை என் கண்ணில் மோதிய செய்தி என்ன
கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
சின்னச்சிறியது பறவை
தன் சிறகில் சுமக்குது சிலுவை
இது வார்த்தை இழந்தது வாழ்வில் முதல் தடவை
சந்திர மண்டலம் வரையும்
நான் தவிப்பில் இருப்பது புரியும்
என் விடுகதைக்கெல்லாம் உனக்கே விடை தெரியும்
வார்த்தை இல்லாமலே நாம் பேசும் பாஷை பல
ஓசை இல்லாமலே நாம் பாடும் பாடல் பல
சொல்லாத சொல்லோடு அர்த்தங்கள் கோடி உழ
கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா
நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே
நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே
இனி இருவரா இல்லை ஒருவரா
சிங்கார பூம்பாவை சிந்திக்கிறா
http://www.dailymotion.com/video/x17...films?start=73
தொடரும்
Last edited by rajeshkrv; 14th October 2014 at 07:37 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2014, 08:11 AM
#325
Senior Member
Veteran Hubber

Originally Posted by
rajeshkrv
அங்கிள் எஸ்.பாலச்சந்தர், சிட்டிபாபு போன்ற வீணை வித்வான்களின் வாசிப்பை நேரில் கண்டு களித்த நீங்கள் அதிர்ஷ்டசாலி
You are right Rajesh. I used to drive about 120 miles to attend classical concerts and return home past midnight around 1 AM. Those days are gone. Now, I have to be happy with CDs and DVDs !
Nothing like attending a concert in person!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
14th October 2014, 09:46 AM
#326
அனைவருக்கும் காலை வணக்கம்
வீணை சிட்டிபாபு அவர்களின் இள வயது புகைப்படம் வழங்கிய வாசு சார் அவர்களுக்கு நன்றி
வீணை சிட்டிபாபுவின் பிறந்த நாள் பதிவிற்கு likes பட்டன் அமுக்கிய திரு கோபு சார் அவர்களுக்கும் திரு s.கோபால் அவர்களுக்கும் நன்றி
சிட்டிபாபுவின் சின்னஞ்சிறு கிளியே பாடலை பகிர்ந்து கொண்ட பேராசரியர் திரு ராஜ்ராஜ் அவர்களுக்கு நன்றி .அத்துடன் அவரது நினைவலைகளுக்கும் நன்றி .அதே போல் திரு ராஜேஷ் சார் அவர்களின் நினைவலைகளுக்கும் நன்றி .கர்நாடக சங்கீத கச்சேரியை நேரில் கேட்பது என்பது தனி சுகம் தான் சார்
இந்த சின்னஞ்சிறு கிளியே பாடல் காபி ராகம் அடிப்படையில் அமைந்த ஒன்று என்று நினைவு . திரு ராஜ்ராஜ் அவர்கள் உறுதி செய்யவேண்டும்
தேவாவின் பாடல் வரிசையை ஆரம்பித்துள்ள திரு ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி .
3000 பதிவுகள் கடந்த திரு எஸ் கோபால் அவர்களுக்கு வாழ்த்துகள்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2014, 10:45 AM
#327
Senior Member
Senior Hubber
-
14th October 2014, 11:31 AM
#328
நன்றி சகோதரி ஸ்டெல்லா அவர்களுக்கும் ,திரு சின்னகண்ணன் அவர்களுக்கும்
-
14th October 2014, 11:44 AM
#329
Senior Member
Senior Hubber
க்ருஷ்ணாஜி..கலைக்கோவில் தானே நாதஸ்வர ஓசையிலே பாட்டு வெகு அழகான ஒன்று..
வாசுசார் சிலேடை என்று சொன்னார்..களிப்பாக்கு களி பாக்கு.. அதையொட்டி இன்னொரு பாட் நினைவுக்கு வந்ததாக்கும்..
மஞ்சள் கலைந்தால் திலகம் கலைந்தால் வாழ்வைஇழந்தாளென்பார்
பள்ளி அறையில் இரண்டும் கலைந்தால் பாவை வாழ்ந்தாளென்பார்
பள்ளிக்கூடம் தானாக முடியும் பள்ளி முடியாதன்றோ
என் வாழ்வு உன்னோடு தான் ம்ம்ம் கல்யாணமே ஒரு பெண்ணோடு தான்..லலிதா கம்ல் சுமி என நினைவு..ஏற்கெனவே பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன்..தீபாவளிக்கு ஒரு வாரம் தான் இருக்கிறது..மக்கள்ஸ் தலை தீபாவளி அன்று ஏதாவது பார்த்த ப்டம் பற்றி எழுதலாமே..
-
14th October 2014, 11:55 AM
#330
Junior Member
Diamond Hubber
அட...நம்ம ஹேமமாலினி...ஒரு துக்கனூண்டு பாடல் காட்சியில் ....குரூப் டான்சில்....
’இது சத்தியம்’ படத்தில்
’சிங்காரத்தேருக்கு சேல கட்டி..
சின்னச்சின்ன இடையினில் பூவக்கட்டி தெருத்தெருவாக நடக்கவிட்டா சின்னச் சின்ன மனசுகள் என்னவாகும்’
இந்தப் பாடல் காட்சியில் ஹேம மாலினி ஆடிப்பாடுவதை அசோகன் பார்ப்பார்.அவருக்கு கதாநாயகி சந்திரகாந்தா ஆடிப்பாடுவது போல தோன்றும்.
உடனே அசோகன் முகம் பரவசமாக மலரும்.
இந்தப் படம் டூரிங் தியேட்டரில் ஓடும்போது ...
தமிழ் ரசிகர்கள் ஏற்கனவே ஹிந்தியில் ஷோலே உட்பட பல படங்கள் நடித்து புகழின் உயரத்துக்குப் போய் விட்ட கனவுக்கன்னி ஹேமா மாலினியை பார்த்து ரசித்திருந்த காலம்.!
கொட்டகையில் ’டே ஹேமா மாலினிடா !’ என்று சத்தம் போடுவார்களாம்.....
இந்தப் பாடல் காட்சியில் அசோகன் ... ஹேமமாலினியின் முகம் பார்த்து படு சோகமாகும்போது தரை டிக்கட் ரசிகர்கள் கத்துவார்களாம்...
“ டே அசோகா! உனக்கு ஹேமாமாலினி கசக்குதா !! என்னா ரசனைடா..”
தரை டிக்கட் ரசிகர்களில் புலவர்களும் உண்டு. “ டே.. கனியிருப்ப காய் கவர்ந்தற்று..! ஹேமா மாலினி தாண்டா சூப்பர் ..சரி..சரி.. ஒன் தலைவிதி..”
என்று புலம்புவார்களாம்...
[நண்பர் ராஜநாயகத்தின் பதிவில் படித்து ரசித்தது......யூ டியூபில் பார்த்து ரசித்தது..]
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks